Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:47:55 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9225
#KOTW9225
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 27, 2012
அமைதியாக நடைபெற்றது விநாயக சதுர்த்தி ஊர்வலம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2820 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் வழியாக 22.09.2012 - சனிக்கிழமை மாலை 75 விநாயகர் சிலைகள் ஊர்வலம் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் எம்ராஜா ஆகியோர் முன்னிலையில் ஆன்மிகவாதி த.ஐ. சிவராஜா பேரணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அய்யப்பன், பக்த ஜன சபை செயலாளர் பி.கே.எஸ்.கந்தையா, வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவர் த.தாமோதரன்,நகர் நல மன்ற தலைவர் பூபால்ராஜன் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தி.செந்தமிழ் செல்வன் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சி.முருகேசன் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

22.09.2012 அன்று மாலை 04.15 மணிக்கு ஆறுமுகனேரி மெயின் பஜாரில் துவங்கிய 75 விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஜெயின் நகர், பேயன்விளை, அழகாபுரி, வழியாக காயல்பட்டினம் - இரத்தினபுரியை வந்தடைந்தது.

அங்கு காயல்பட்டினம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு புறப்பட்ட விநாயகர் சிலைகளுடன் இணைந்து காயல்பட்டினம் மகாத்மா காந்தி நினைவு வளைவிற்கு 06.00 மணிக்கு வருகை தந்தது.



விசாலாட்சியம்மன் கோயில் தெரு, மன்னராஜா கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக மாலை 06.30 மணியளவில் காயல்பட்டினத்தைக் கடந்து சென்ற ஊர்வலம் திருச்செந்தூரை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன், குற்ற ஆவணக் கூட துணை கண்காணிப்பாளர் தங்க துரை, ஆறுமுகனேரி ஆய்வாளர் டி.பார்த்திபன் உட்பட 10 ஆய்வாளர்கள், ஷியாம் சுந்தர், சண்முகவேல் உள்பட 30 உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பத்தப்பட்டிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இந்த புகைப்படம் வேண்டாம்
posted by Shaik Sadakathullah (Chennai) [27 September 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 22456

இந்த செய்தியை இவ்வளவு விரிவாக தர வேண்டிய அவசியம் இல்லை அத்தோடு அந்த புகைப்படங்களும் அவசியமற்ற ஒன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [27 September 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 22463

இந்த செய்தியை பொறுத்த மட்டில் தலைபோ செய்தியாக இருந்தால் பொதும் விவரம் தேவை இல்லை. புகைப்படமும் தேவை இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [27 September 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 22464

செய்தியும் படமும் அழகாக இருந்தது. kayalpatnam.com இனைய தளத்தை ஊரில் உள்ள ஆனைத்து மததவர்களும் பார்கிறார்கள் என்பதை புரிந்து அட்மின் இந்த செய்தியை கொடுத்து இருக்கீறீர்கள். இது புரிபவர்களுக்கு புரியும் இந்த இணைய தளம் மத சார்பற்ற இணையதளம் என்று நான் நினைகிரெயன்.

இப்படிக்கு
Seyed Mohamed Sayna
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Cnash (Makkah ) [27 September 2012]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22465

இந்த செய்தியே தேவை இல்லை ... இந்த செய்தியால் யாருக்கு எந்த நன்மையையும் இல்லை .. ஊரில் உள்ளவர்களையே பார்க்க வேணாம் என்று சொல்லி இருக்கிறோம்.. நீங்க இங்கே இருக்கிறவங்களுக்கு படம் பிடித்து வேற காட்டணுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S. ABDUL KADER (JEDDAH) [27 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22467

விநாயக சதுர்த்தி யாத்திரைக்கு, இந்தமுறை வரவேற்ப்பு அளிக்க வீதியில் நம்மவர்களை காணோமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அவசியமற்ற ஒன்று.
posted by Fazul Rahuman(Jeddah) (Saudiarabia ) [27 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22471

புகைப்படங்களும் அவசியமற்ற ஒன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஊடகத்தின் வேலை செய்திகளைத் தருவதுவே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [27 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22473

நிகழ்வுகளை நிதர்சணமாகக் காட்டும் கண்ணாடியே ஊடகம்! இதில் நமக்கு விருப்பமான, விரும்பத்தகாத செய்தி என்று எதிர்பார்ப்பது ஒரு தலைபட்சமாகி விடும்.

ஓர் நிகழ்வு!
அதும் நம்மவர்கள் வேடிக்கைப் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்ட நிகழ்வு!
அது செல்லும் பாதையில் உள்ள பள்ளிவாசலில் கூட ஆட்கள் நிற்பதற்குத் தடை!
கால்பந்தாட்ட மைதானத்தில் யாரும் இருக்கக் கூடாதென்று உத்தரவு!
இவை யாவும் நன்மை என்றே கருத வேண்டும்.

வேண்டாத வேலைகளைச் செய்வதற்கென்றே சிலர் உள்ளனர். அவர்களின் விஷமத்தனத்தால் நம்மைப் பார்த்ததும் அவேசப்பட்டு ஏசி, கல்லெறிந்து கலகத்தை ஏற்படுத்திய பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கின்றோம். எதற்கு இந்த வம்பு? “அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு” எனக் கூறும் குர்ஆனின் சிந்தனை மனிதனுக்கு வந்து விட்டாலே நீயா? நானா? என்கிற போட்டிக்கு இடமில்லை!

செய்தியை செய்தியாக மட்டும் பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. நம் இணைய தளத்தை சகோதர சமுதாய மக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். உண்மையை சொல்லப் போனால் சில நாளிதழ்கள் கூட நம் தளத்தில் வெளியான செய்தியைத்தான் தனது பதிப்புகளில் நம்பகத் தன்மையோடு பதித்து வருகின்றன.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:.ஊர்வலம்
posted by NIZAR AL (kayalpatnam) [28 September 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22474

இந்த ஊர்வலம் சிலவருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் ஊரைவிட்டு கடந்துவருகிறது. குறைந்த வாகன பேரணி தற்போது அதிக வாகனங்களையும் மக்கள் கூட்டத்தையும் கோசங்களையும் பெற்றிருக்கிறது. இப்படி ஊர்வலம் எடுக்கிற நடைமுறை சில இந்து அமைப்புகளால் திட்டமிட்டு உருவாக்கியவை. இதை மாற்று மத நண்பர்களுக்கே தெரியும். இது எப்பொழுதும் என்ன நடக்குமோ என்ற ஆபத்தான அசாதரண சூழ்நிலையாகவே உள்ளது. எனவே மக்கள் இதை கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதும் இதை போன்ற செய்திகள் போடுவதை தவிர்ப்பதும் மிகுந்த நல்லது .

YOURS
NIZAR AL
DEEVU STREET
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved