Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:49:24 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9230
#KOTW9230
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 27, 2012
கோமான் தெருவில் மணல் லாரி கவிழ்ந்து இளைஞர் பலி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4956 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் மணல் இறக்க பின்னால் வந்த லாரி பள்ளத்தில் இறங்கி சரிந்ததில் சிக்கி வாலிபர் பரிதாபமாக பலியானார். இந்நிகழ்வு காயல்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

காயல்பட்டினம் கோமான்புதூரைச் சேர்ந்தவர் சிவசூரியன். இவர் ஹார்ட்வேர்ஸ் கடை மற்றும் பில்டிங் கான்ட்ராக்ட் நடத்தி வருகிறார். இவரது மகன் மகேஷ் (20). தந்தையுடன் கட்டிட பணி செய்துவந்தார். இவர்களுக்கு காயல்பட்டினம் கோமான் மேலத் தெருவில் வீடுகட்டும் பணி நடந்துவருகிறது.

இதற்காக இன்று மாலை 06.40 மணியளவில் லாரியில் மணல் வந்துள்ளது. மணலை கட்டிட பணி நடக்கும் வீட்டின் அருகில் உள்ள காலி நிலத்தில் இறக்குவதற்காக லாரி பின்னோக்கி வந்துள்ளது. லாரியின் பின்னால் மகேஷ் நின்று கொண்டு டிரைவருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த கழிவு நீர் தொட்டி மீது லாரி ஏறியதால் அது உடைந்து லாரியின் வலது பின்புற டயர் பள்ளத்தில் இறங்கி, லாரியின் பின்புறம் அருகில் உள்ள வீட்டின் படிக்கட்டோடு சரிந்துள்ளது.





இதில் லாரிக்கும் வீட்டின் படிக்கட்டிற்கும் இடையே சிக்கிய மகேஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். அடுத்த சில நிமிடங்களில் ஜெ.சி.பி. வாகனம் மூலம் சரிந்த லாரியை அகற்றி, உடலை பாதுகாப்பாக மீட்டனர்.







இந்நிகழ்வு குறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர்கள் ஷ்யாம் சுந்தர், ராஜகுமாரி ஆகியோர் மகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு குறித்து ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வு காரணமாக அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [28 September 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22479

எதிர்பாராது நிகழ்ந்துவிட்ட இந்த சம்பவத்தில் சகோ. மகேஷ் உயிரிழந்திருப்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. இது போன்ற செயல்களுக்கு ஓட்டுனரின் உதவியாளர் என்று ஒருவர் இருந்திருக்க வேண்டுமே? இருந்தும் அவர் தனது கடமையை செய்யவில்லையா?

கழிவுநீர் தொட்டிகள் அமைக்கப்படும்போது அவை சாலைகளில் தலைகாட்டாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். பல கழிவுநீர் தொட்டிகள் இன்றும் நமதூர் சாலைகளில் அமைந்திருப்பதை காண முடியும்.

இன்னொரு கொடுமை என்னவெனில் சில சாலைகளும், பல இடங்களில் அதன் இரு ஓரங்களும் தெரியாதபடி அகற்றப்படாத மணல்குவியல்களும் இது போன்ற விபத்துகளுக்கு ஒரு காரணமே.

அருமை மகனை இழந்திருக்கும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...லாரி கவிழ்ந்து இளைஞர் பலி
posted by Shahul Hameed (Hong Kong) [28 September 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 22481

இது போல் எத்தனை வீடுகளுக்கு முன்பு கழிவு தொட்டி உள்ளது என்று யாருக்கு தெரியும்? இதுவும் கொலை குற்றத்திருக்கு சமமே! திருந்துவார்களா நம் மக்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கழிவு நீர் தொட்டி சாலையோரத்தில் இல்லை!
posted by Moderator (Kayalpatnam) [28 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22485

இந்த கழிவு நீர் தொட்டி சாலைப் பகுதியில் இருக்கவில்லை. மாறாக, வீட்டின் வடபுறத்திலுள்ள காலி நிலத்தில்தான் உள்ளது. கருத்துப் பதிவு செய்வோர் இதையும் கவனத்திற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நெஞ்சு பதைத்து அதிர்ச்சியில் உறைந்தோம்....ஆண்டவனே...!!!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.) [28 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22488

விதி என்பது எந்த நேரத்தில்? எந்தரூபத்தில்? எப்படி வரும்? என்பது யாருக்கும் தெரியாது! விபத்தில் பலியான இளவயது வாலிபன் மகேஷ் என்பர் என்பவர் ஒரு சில வருடங்களுக்கு முன் நமதூரில் சதுக்கைதெருவில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தவர். சிறப்புக் குழந்தையான அவரது கடைசி தம்பியின் பெயர் குமரேசன். எனவே கடை மற்றும் வாகனங்களுக்கும் குமரேசன் என்றே பெயர் தான் வைத்திருந்தனர். எங்கள் பகுதியில் மகேஷ் கூட இந்த பெயரில்தான் அழைக்கப்பாட்டு வந்தார்.

சிறு வயது முதலே நம் சமுதாய மக்களோடு நெருங்கிப் பழகி நன்மதிப்பையும், தாய்மார்களின் அன்பையும் பெற்று ஒரு சகோதரனைப் போன்று திகழ்ந்தவர். பழக்க வழக்கம் மற்றும் பேசும் விதம் யாவும் நம்மவர் சாயலில்தான் இருக்கும். எல்லோரும் உரிமையுடன் அடெய்! தம்பி, வாடா, போடா என்றுதான் அழைப்பார்கள்.

தனது கடின உழைப்பாலும், அதீத சுறுசுறுப்பாலும் வேன் ஒன்றை விலைக்கு வாங்கி அதன் மூலம் தனது வருமானத்தைப் பெருக்கி பல வாகனங்களையும் சொந்தமாக வாங்கும் அளவிற்கு அவரது வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.
என் வீட்டில் தோப்பு, குற்றாலம் மற்றும் அருகிலுள்ள ஊர்களுக்குச் செல்ல அவரை அல்லது அவர் சொல்லும் டிரைவர்களை மட்டுமே அழைத்துச் செல்லுவோம்.

நம்பிக்கையும், மரியாதையும் உள்ள நல்ல குணம் கொண்டவர். ஏதேனும் தேவைக்கு அவருக்கு போன் போட்டால் “லாத்தா அஸ்ஸலாமு அலைக்கும். நீங்க வையுங்க! நான் போடுறேன் லாத்தா” என ஒரு முஸ்லிம் சகோதரனைப் போன்று தான் உரிமையோடு பேசுவார்.

சுற்றுலா செல்லும் போது தனது கலகலப்பான துடுக்கான பேச்சுக்களால் நம் யாவரையும் கவர்ந்து நம் வீட்டுப் பிள்ளை போல் நடந்து கொள்வார். ஓரிரு தினங்களுக்கு முன்பு என் தாயார் வீட்டில் தோப்புக்குச் சென்று அங்கிருந்து திரும்ப வருவதற்காக “அடெ! குமரேசா (மகேஷ்) சீக்கிரமா வேனை அனுப்பு! நாங்க வீட்டுக்குப் போகணும்” என என் தங்கை அழைத்தபோது, “அட! இருங்க லாத்தா இப்ப என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நேரம் பிள்ளைகளோடு நல்ல என்ஜாய் பண்ணிட்டு வாங்க… ஸ்கூல் லீவு தானே? நான் வேனை அனுப்பி வைக்கிறேன்” என்றவர். சம்பவ தினத்தன்று என் மூத்த தங்கை சதுக்கைத் தெரு (அமினாப் பள்ளி) அருகில் சுகக்குறைவுடன் இருக்கும் மதிற்பிற்குரிய பெருந்தகை உவைஸ் ஹாஜி அவர்களை நலம் விசாரித்து விட்டு வரும் போது, (சுமார் 6:00 மணியளவில்) அவ்வழியே சென்றுகொண்டிருந்த மகேஷ் பைக்கை நிதானித்து நிறுத்தி “என்ன லாத்தா தோப்பு எப்படி இருந்தது? என அவர் கேட்க “ அடெ! நீ 200 ரூபாய் கூட கேட்டியாமே? அதெல்லாம் தர மாட்டோம் என கேளியாகச் சொல்ல, “அதுக்கென்ன நீங்க தராட்டாலும் பரவாயில்லை லாத்தா! எங்க அப்பா போன் பண்ணி அவசரமா வா, மண் லாரி வந்திருக்குன்னு கூப்பிட்டாங்க நான் அதுக்குத்தான் அவசரமாப் போறேன். காசு அப்புறமா வாங்கிக்கறேன்” என கூறிச் சென்றுள்ளார்.

சற்று நேரத்திற்குள் வந்த செய்தி “குமரேசன் (மகேஷ்) இறந்து விட்டான்” பதறி போனது என் தங்கை மட்டுமல்ல! இச்செய்தியைக் கேட்டு உறைந்து போனது நானும் தான்!

தனது நற்குணத்தாலும் பழகும் விதத்தாலும் எங்கள் மனதில் இடம்பிடித்த மகேஷின் மறைவுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக வருத்தத்தையும், அவரது தாய், தந்தை மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஒரு நல்லவரை நல்லவர் என சொல்வதில் எனக்கு தயக்கமில்லை!

வருத்தத்துடன்,
-ராபியா மணாளன் மற்றும் குடும்பத்தினர்.
முத்தாரம்மன் கோவில் தெரு (வடக்கு),
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Posting the Photos.
posted by shaik noordeen (riyadh) [29 September 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22515

Assalamu Allaikkum,

First of all, I extend the heartfelt condolences to the family members for the sad demise of their relative.

Please don't post the photo's of such kind of incident here. Simply posting the matter is enough. I am asing the one who has taken the photo of such incident and sent to post it here. Is it worthwhile to be posted here? what is the use of posting such kind of photos. is it inspirational to others? It would make the viewers/reader shocked and remain in mind for few days. what is the difference between the newspaper daily thanthi and kayal patnam web site?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved