Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:37:29 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9306
#KOTW9306
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 6, 2012
ரூ.2 கோடி செலவில் நலத்திட்டப் பணிகள் செய்திட நகர்மன்ற அவசர கூட்டத்தில் தீர்மானம்! விரிவான விபரங்கள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3393 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசின் நிதியுதவியுடன் 2 கோடியே ஏழு லட்சம் ரூபாய் செலவில் காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்திட, நேற்று நடைபெற்ற காயல்பட்டினம் நகராட்சியின் அவசர கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் பின்வருமாறு:-

தமிழக அரசின் - ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2012-2013இன் கீழ் ரூபாய் 1 கோடியே 95 லட்சம் தொகையும், நகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் தொகையும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் செலவு மதிப்பீட்டில், காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்வதற்கான நிர்வாக அனுமதி, சென்னையிலுள்ள நகராட்சிகள் நிர்வாக ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது:-

இதுகுறித்து தீர்மானமியற்றுவதற்கான அவசரக் கூட்டம், 05.10.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் நகர்மன்ற கூட்ட அரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது. 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தவிர அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



கூட்டப் பொருளை, காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் வாசித்தார்.



பின்வரும் 3 அம்சங்களைக் கொண்ட கூட்டப் பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது:-





பொருள் எண் 1:


இதுகுறித்து கருத்து தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், தொகைகள் குறித்து கூட்டப்பொருளில் வெறுமனே எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், “தொகைகள் லட்சத்தில்” என்று தலைப்பில் சேர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அதுபோல, 3ஆவது அம்சத்தில், “அவன் செயல் காலனி” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், நகராட்சியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத எந்தப் பெயர்களும் கூட்டப் பொருளில் இடம்பெறக் கூடாது எனவும், அவ்வாறு செய்வது முறைகேடுகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் தெரிவித்தார்.

தெருவிளக்குப் பணிகள் என்ற தலைப்பின் கீழ் “எல்.இ.டி. தெருவிளக்குகள் (பிலிப்ஸ்)” என்று ஒரு நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது யார் எடுத்த முடிவு என்று கேள்வியெழுப்பினார். பெறப்பட்ட அறிவிப்பின்படியே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலர் செந்தில் தெரிவித்தார்.

சாலைப்பணிகள் என்ற தலைப்பின் 6ஆவது அம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆஸாத் தெரு தார் சாலை குறித்து கருத்து தெரிவித்த - அப்பகுதியை உள்ளடக்கிய 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், இருக்கும் பழைய சாலையை முற்றிலுமாக தோண்டி அகற்றிய பின்னரே புதிய சாலை போடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அதுகுறித்து பேசிய நகர்மன்றத் தலைவர், அவ்வாறு செய்வதுதான் முறை என்றும், சாலைப் பணிகள் நடைபெறும்போது அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனத்துடன் செயலாற்றிடுமாறு கேட்டுக்கொண்டார்.

வாறுகால் பணிகள் என்ற தலைப்பின் கீழான முதல் அம்சத்தில் புதிய பேருந்து நிலையம் முதல் மேல நெசவுத் தெரு வரை மழை நீர் வாறுகால் அமைத்தல் என்றுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அங்கு ஏற்கனவே வாறுகால் உள்ள நிலையில் அதைப் பழுது நீக்குவதை விட்டுவிட்டு, புதிதாக அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கலாமா என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு மற்றும் 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் ஆகியோர், அங்குள்ள பழுதுகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு நாட்பட்டவை என்றும், அப்பகுதியில் கடை வைத்திருப்போர் ஆங்காங்கே கற்களைக் கொண்டு அடைத்துவிட்டதால் அந்த வாறுகால் பெரும்பாலும் அழிந்துவிட்டதாகவும், புதிய வாறுகால் அமைப்பதைத் தவிர வேறெதுவும் அங்கு சாத்தியமற்றது என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறாக கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்ற பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துறுப்பினர்களும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்ததையடுத்து, இப்பொருள் படி பணிகளை நிறைவேற்ற தீர்மானமியற்றப்பட்டது.

பொருள் எண் 2:


நகராட்சியால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பின்மையால் பாதுகாப்பற்ற நிலையிலும், ஒழுக்கக் கேடுகள் நடைபெறும் இடமாகவும், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறிவிட்டதாகவும், புதிதாக கட்டப்படும் கழிப்பறைகளையாவது முறைப்படி பராமரிக்க வேண்டும் என்றும் 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் கேட்டுக்கொண்டார்.

பொது கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்படும் முறை குறித்து 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேள்வி எழுப்ப, நகராட்சி உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் அதுகுறித்து விளக்கமளித்தார்.

இவ்வாறாக கருத்துக்கள் பரிமாறப்பட்ட பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துறுப்பினர்களும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்ததையடுத்து, இப்பொருள் படி பணிகளை நிறைவேற்ற தீர்மானமியற்றப்பட்டது.

பொருள் எண் 3:


கடந்தாண்டு மழை நீர் வெள்ள நிவாரணப் பணிகளின்போது ஒரு மணி நேரத்திற்கு 600 ரூபாய் என்ற கணக்குப் படி ஆயில் எஞ்சின் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பல நாட்களில் பல மணி நேரங்கள் எஞ்சின் பயன்படுத்தப்படாமலே இருந்தும் அதற்கான வாடகைத் தொகையைக் கொடுக்க வேண்டியதேற்பட்டதாகவும் தெரிவித்த 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அடிக்கடி தேவைப்படும் இதுபோன்ற கருவிகளை வாடகைக்கு எடுப்பதைத் தவிர்த்து, நகராட்சி நிதியிலிருந்து சொந்தமாக வாங்க முயற்சிக்கலாமே என்று கேள்வியெழுப்பினார்.

நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அக்கருத்தை வரவேற்றனர். அதனடிப்படையில் புதிதாக ஆயில் எஞ்சின் வாங்கலாம் எனவும், ஒருவேளை அதற்கான நடைமுறைப் பணிகள் தாமதமாகி, அதற்குள் மழைப் பருவம் வந்துவிட்டால் அவசரத்துக்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாமே என்றும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கருத்து தெரிவித்தார்.

இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துறுப்பினர்களும் கையுயர்த்தி, ஆதரவு தெரிவித்ததையடுத்து, இப்பொருள் படி பணிகளை நிறைவேற்ற தீர்மானமியற்றப்பட்டது.

கூட்டத் துளிகள்...

(1) இணையதள செய்தியாளர்களை வெளியேறுமாறு கூறிய ஆணையர்...
கூட்டம் துவங்க நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரமான 04.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் - நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் - இணையதள நிருபர்களை அனுமதிக்கக் கூடாது என நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (RDMA) தெரிவித்திருப்பதாகக் கூறி, கூட்ட அரங்கில் அமர்ந்திருந்த காயல்பட்டணம்.காம் இணையதள நிருபர் உட்பட இரண்டு இணையதள செய்தியாளர்களையும் நகராட்சி கூட்டரங்கிலிருந்து வெளியேறுமாறு கூறினார்.

கூட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்ய முறைப்படி கடிதம் வழங்கி, கடந்த நவம்பர் மாதம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், இணையதள செய்தியாளர்களை தடை செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கடிதம் கடந்த ஜூலை மாதம் 09ஆம் தேதியன்று வழங்கப்பட்டிருப்பதாகவும், அக்கடிதத்திற்கு இரு வாரங்களில் பதில் கூற மாவட்ட ஆட்சியரகம் அறிவுறுத்தி மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை எழுத்துப்பூர்வ பதில் - நகராட்சியால் வழங்கப்படவில்லை என்பதனையும் - காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளர் ஆணையரிடம் தெரிவித்தார்.

முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து இணையதள செய்தியாளர்கள் - கூட்ட அரங்கிற்கு வரக்கூடாது என எழுத்துப்பூர்வமாக தரும்படி காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளர் கேட்டார். எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் வழங்கப்படாததால், இணையதள செய்தியாளர்கள் - கூட்ட அரங்கில் வழமை போல் அமர்ந்து செய்தி சேகரித்தனர்.

(2) கூட்டம் துவங்க தாமதம்...
கூட்டம் துவங்க நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரமான மாலை 04.00 மணியிலிருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர் அரங்கில் 8 உறுப்பினர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். எஞ்சிய 9 உறுப்பினர்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். இணையதள செய்தியாளர்கள் வெளியே சென்றால்தான் அவர்கள் உள்ளே வருவதாக கூறுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920இன் படி, மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் 6 உறுப்பினர்கள் இருந்தால் கூட்டத்தை நடத்தலாம் என்றும், 8 உறுப்பினர்கள் அரங்கில் இருப்பதால் கூட்டத்தை உடனடியாகத் துவக்கலாம் என்றும், ஐந்து மணி வரை உறுப்பினர்கள் வருகையை எதிர்பார்க்கலாம் என்றும், அதற்குள் எஞ்சிய உறுப்பினர்கள் வரவில்லை என்றால் அரங்கினுள் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு கூட்டம் சட்டப்படி நடத்தலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்

(3) வருகைப் பதிவேட்டை வெளியே கொண்டு வர கோரிக்கை...
கூட்ட அரங்கிற்கு வெளியே இருந்த உறுப்பினர்கள், வருகைப் பதிவேட்டில் வெளியிலிருந்து கையெழுத்திட்டு, தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுவதாக, அலுவலர்கள் கூறினர். கூட்ட அரங்கிற்குள் வந்து கையெழுத்திட்டு, கூட்ட பொருட்களுக்கு ஆதரவோ / எதிர்ப்போ தெரிவித்தால்தான் அதனை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய முடியும் என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாலை 05.00 மணியளவில் எஞ்சிய உறுப்பினர்களும் கூட்ட அரங்கிற்குள் வரவே கூட்டம் துவங்கியது.

(4) உறுப்பினர் இ.எம்.சாமி கேள்வி...
கூட்டம் துவங்கிய சில மணித்துளிகளில் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, நகர்மன்றக் கூட்டத்தில் யார் யார் கலந்து கொள்ளலாம் என சில தினங்களுக்கு முன்னர் நகராட்சிக்கு வந்திருந்த RDMA கூறியது என்ன என வினவ, RDMA பல விஷயங்கள் பேசியதாகவும், எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் அனைத்து உத்தரவும் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அப்போது அவரிடம் தான் தெரிவித்ததாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

(5) ஒவ்வொரு கூட்டப்பொருள் நிறைவிலும் உறுப்பினர் ஆதரவு / எதிர்ப்பைப் பெறல்...
நகர்மன்றக் கூட்டத்தில் ஒவ்வொரு கூட்டப் பொருளும் வாசிக்கப்பட்ட பின்னர், ஆதரவு - எதிர்ப்பு என்பதை உறுப்பினர்களை கை உயர்த்தச் சொல்லி முடிவு செய்யுமாறு 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கருத்து தெரிவித்தார்.

அதனை வரவேற்றுப் பேசிய நகர்மன்றத் தலைவர், இக்கூட்டத்திலும், இனி வருங்காலங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் இம்முறையையே பின்பற்றலாம் என்றும் தெரிவித்தார். அதனடிப்படையில், நடப்பு கூட்டத்தின் 3 கூட்டப் பொருட்களும் வாசிக்கப்பட்ட பின்னர், அதுகுறித்த கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், உறுப்பினர்களை கை உயர்த்துமாறு நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொள்ள, 3 கூட்டப் பொருட்களுக்கும் அனைத்து உறுப்பினர்களும் கையுயர்த்தி ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். அதனையடுத்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



(6) புகைப்படங்கள்...
கூட்டம் துவங்கியவுடன், புகைப்படம் எடுக்கும் செய்தியாளர்கள், அவர்கள் பகுதியில் இருந்தே படமெடுக்கும்படி நகர்மன்றத் தலைவர் கூறினார். மேலும், கூட்டத்தில் பார்வையாளர்களாக வந்திருந்தோர் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

(7) கருப்புச் சட்டை...
திராவிட முன்னேற்றக் கழக மாநிலத் தலைமையின் அறிவுறுத்தல் படி, அக்கட்சியில் அங்கம் வகிக்கும் ஆண் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண் உறுப்பினர் ஒருவர் கருப்பு மேலாடை அணிந்தும் நகர்மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. இக்கூட்டத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை தலைவர் ‘ஹிதாயா’ அப்துர்ரஹ்மான், தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ.செய்யித் ஹஸன், காயல்பட்டினம் தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ (48) உட்பட சுமார் 20 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஆரோக்கியமான நகர்மன்றம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [07 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22658

சில மாதங்களாக சளி பிடித்திருந்த மூக்குக்கு சுகம் கிடைத்திருப்பது போல் இந்த நகர் மன்ற நிகழ்சிகள் ஆரோக்கியமான விவாதங்களுடன் நல்ல முடிவுகளுடன் நடை பெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இணைய தளங்களுக்கு கருத்து எழுதுபவர்கள் பழைய குப்பையை கிண்டாமல் இனி மேல் நடக்க வேண்டிய விஷயங்கள் பற்றி கோடிட்டு காட்டினால் நல்லது. தனி மனித விமர்சனங்களை தவிர்த்து கொள்ளுங்கள். ஊரிலுள்ள, வார்டிலுள்ள குறைகளை நீக்கி தருவதற்கு வேண்டுகோள் விடுப்போம்.

முதலாவதாக, 16 வது வார்டு புதுக்கடை தெருவையும் காட்டுதைகா தெருவையும் இணைக்கும் புதுக்கடை தெரு சந்தியில் கீழ்பகுதி ரோடு லைட் 15 நாட்களாக எரியவில்லை அதைப்பற்றி உறுப்பினரிடம் தெரிவித்தேன். அதை அவசரமாக கவனிக்கவும். அடுத்து, குடி நீர் 7 ,8 , நாட்கள் வரை தொடர்ந்து வராததால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதையும் அவசரமாக கவனிக்கவும். மோட்டார் வைத்து உறிஞ்சுவதை தடை செய்து, அதிரடி நடவடிக்கை எடுத்து இரண்டு தெருவில் மட்டும் நடந்து பின்னர் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது, அதையும் கவனியுங்கள்.

ஊரிலுள்ள இணைய தளங்கள் நகர்மன்றம் உள்ளே அனுமதித்தால்தான் நடக்கும் நிலைமை நகரமன்ற விவாதங்கள் பிரதி வாதங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது, பொது மக்கள் தங்கள் யோசனையை சொல்ல முடிகிறது. மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் facebook கில் ஒரு ஏற்பாட்டை செய்து மக்கள் குறைகளை அதில் பதிவு செய்யவும் அதை பார்த்து உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்யவும் புதிய ஒரு முறையை ஆரம்பித்துள்ளதாக புதிய தலைமுறை இதழ் தெரிவிக்கிறது. எனவே நமது நகரமன்ற தலைவரும் அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தால் நல்லது.

ஒவ்வொரு உறுப்பினரும் வாரத்தில் ஒரு நாள் மக்கள் குறை கேட்க அவர்கள் வீட்டில் ஒரு நேரத்தை ஒதுக்கினால் பொது மக்கள் அவர்கள் தேவைகளை கூற முடியும். குறை இல்லாமல் 100 விழுக்காடு எல்லாவற்றையும் சரி செய்து விட முடியாது என்றாலும் அன்றாட பிரச்சினைகளை சரி செய்து மக்கள் உள்ளங்களில் இடம் பிடிக்க முடியும். உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியவர்கள் உங்களிடம் மிகவும் எதிர்பார்கிறார்கள். இறைவன் உங்கள் பொது நல சேவைக்கு நற் கூலியை தருவானாக. ஊர் நமக்கு என்ன செய்தது என்று எண்ணாமல் ஊருக்காக நாம் என்ன செய்தோம் என்று நினைத்து சேவை செய்தவர்களை மக்கள் என்றும் நினைத்து பார்ப்பார்கள்.

சுமுகமான நகர் மன்ற கூட்டம் நடை பெற உதவிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நகர் மன்றம் நல மன்றமாய்த் திகழ வாழ்த்துக்கள்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா) [07 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22659

இப்படி ஒரு கருத்தை எழுதி விதண்டா வாதம் செய்பவர்களுக்கு முற்று புள்ளி வைத்து விட்டார் சகோதரர் மக்கி காக்கா அவர்கள். இவரது கருத்தை அச்சுபிரளாமல் அப்படியே நானும் ஆமோதிக்கிறேன்.

இனி, ஆ...மோதிக்கிறேன்னு யாரும் வர மாட்டாங்க! ஊரின் நன்மையை நாடும் பல நல்ல மனிதர்களின் பங்களிப்பு இது!

ஊடகங்களின் வரும் கருத்துப் பதிவின் மூலம் பல தரப்பட்ட யோசனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கி காக்காவின் யோசனையை நாம் நடைமுறை படுத்தலாமே? நகர் மன்றம் நல மன்றமாகத் திகழ வாழ்த்துக்கள்...!

- ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மீதம் உள்ள 48 மாதத்திற்கும் நகர மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெறுவோம் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்படுத்துங்கள்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [07 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22660

நகராட்சியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத “அவன் செயல் காலனி” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசியது இது வரவேற்க வேண்டிய ஒரு நல்ல விசியம்..!

இப்படித்தான் கடையக்குடி என்ற ஏரியாவுக்கு சிங்கதுரை என்றும் கொம்புதுரை என்றும்... குழப்பத்தில் உள்ளது.. மேலும் சிவன் கோவில் தெரு ஏரியாவில் தனி நபர் பெயர் கொண்ட தெருக்கள் பல உள்ளன - நாளைய தலைமுறைகளுக்கு குழப்பம் இல்லாமல் நகராட்சியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத எந்தப் பெயர்களும் கூட்டப் பொருளில் இடம்பெறக் கூடாது அவ்வாறு செய்வது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்...

இது ஆரம்பத்திலேயே தடுக்க பட வேண்டும்...

நல்ல ஒற்றுமையுடன் கூட்டம் நடந்து நகருக்கு தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றி தந்த உறுப்பினர் பெருமக்கள் மற்றும் தலைவி - ஆணையர் - அதிகாரிகள் அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்...

இந்த பாராட்டுக்களையும்...வாழ்த்துக்களையும்... நாங்கள் மீதம் உள்ள 48 மாதத்திற்கும் நகர மக்கள் மத்தியில் பெறுவோம் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்படுத்துங்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் செயல் வடிவம் பெற ............
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [07 October 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22661

மூன்று மாதங்களுக்கு பிறகு தற்பொழுது நடைபெற்ற நகரமன்ற அவசர கூட்டம் சுமூகமாக நடை பெற்றதை அறிந்தது மிக்க மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்......

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் செயல் வடிவம் பெற தலைவியும் அனைத்து உறுப்பினர்களும் இதுபோல் ஒன்றிணைந்து செயல்படுங்கள்.

சகோ. மக்கி அவர்கள் கூறியதுபோல பழையவற்றை கிளறாமல் இனி நடைபெறும் நிகழ்வுகளை பற்றி மட்டும் கருத்து பதியுங்கள்.

மீதமுள்ள நான்கு ஆண்டு காலம் நகர்மன்றம் சுமூகமாக நடை பெரும் என்று எதிர்பார்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by salai s nawas (singapore) [07 October 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 22662

அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்!!!!!!!!!!!!!!!

ஆனால் கட்சிகாரர்கள் ஏன் கருப்பு சட்டை அணித்து வந்தார்கள் என்பது தான் புலப்படமாட்டேன்கிறது?

எது எப்படியோ...கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

யாவருக்கும் பாராட்டுகள்.

அன்புடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rilwanullah (Bangalore) [07 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22671

All decisions are being welcome, further it is good to establish a solar power plant in Kayal, not wasting the natural sunlight that scorches round the year. At least we will get pollution free electricity.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பாராட்டுக்கள்
posted by Abdul Wahid S. (Kayalpatnam.) [07 October 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 22674

ஒரு வேலை கால அவகாசம் கொடுக்காமல் இந்த அவசரக் கூட்டம் நடந்தது மாதிரி வருகிற மாதாந்திரக் கூட்டங்களும் நடைபெற்றால் வெளிநடப்புகள் இல்லாமல் இருக்கும் போல் தெரிகிறது.

இவர்களுக்கு கால அவகாசம் இருக்கும்போதுதானே யார் யார் என்னென்ன காரணங்களை கூறி வெளிநடப்பு செய்யலாம் என்று ரூம் போட்டு யோசுச்சி முடிவெடுக்கிறார்கள்.

Anyway நன்றி கலந்த பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by HAMZA (Chicago) [08 October 2012]
IP: 98.*.*.* United States | Comment Reference Number: 22677

மூன்று மாதங்களுக்கு பிறகு தற்பொழுது நடைபெற்ற நகரமன்ற அவசர கூட்டம் சுமூகமாக நடை பெற்றதை அறிந்தது மிக்க மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்!

(அங்கு ஏற்கனவே வாறுகால் உள்ள நிலையில் அதைப் பழுது நீக்குவதை விட்டுவிட்டு, புதிதாக அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கலாமா என்று எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார்(Copy &Paste) நல்ல கேள்வி,

ஆனால் அதே வரி பணத்தை புதிய பேருந்து நிலையம் முதல் மேலநெசவு தெரு வரை நல்ல தார் சாலை அமைக்க பயன் படுத்தலாமே? பேருந்து விட்ட பின்பு, செய்வதாக நெசவு தெருவுக்கு நிறைய வாக்களித்ததை தலைவர் அவர்கள் தயவு செய்து பரிசீலிக்கவும்.

ஹம்ஸா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [08 October 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22683

நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெறப்போகின்றது என்றதும் ஒரே படபடப்பு.

நகர்மன்ற அவசர கூட்டம் அமைதியாகவும், பிரயோசனமாகவும் நடைபெற்றது என்றதும் ஒரே பூரிப்பு.

கண்டிப்பாக அனைவர்களுக்கும் நன்றி சொல்லுவது நம் கடமை. எங்கள் மஹலரா நகர் (ஊரில் பல புதிய நகர்கள், பலருக்கு எங்கு இருக்கின்றது என்றே தெரிவது இல்லை). ஐயா சாமி அவர்களே.

* எங்கள் வீட்டின் மாடியில் இருந்து காலையில் பார்த்தால், சுற்றிலும் மனிதத்தலைகள் தான், பூமிக்கு உரம் சேர்க்கும் வேலை தான். முடிந்ததும் அருகில் இருக்கும் அசுத்தம் நிறைந்த, கொசு உற்பத்தி நிலையமான சிறிய குட்டையில் அவர்களை சுத்தம் பண்ணுகிறார்கள்..!!! கொடுமை. இதை கொஞ்சம் கவனியுங்கள்.

* இந்த நகரில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ரோடு வசதி.. ஊஹூம்.. சுதந்திரத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே உள்ளதாம்.

நாங்கள் எங்களின் வீட்டிற்கு பிளான் அப்ரூவல் பண்ணும்போது,பிற்காலத்தில் ரோடு போடுவதற்கு என்று ஒரு அமௌன்ட் கூடுதல் கட்ட சொன்னார்கள். கட்டினோம். ரோடு...!!

* நாய்களை பிடித்தார்கள், ஆபரேஷன் பண்ணினார்கள், மீண்டும் விட்டார்கள். ஆனால் தொல்லைகள் தொடரத்தான் செய்கின்றன. முன்பு 5 அல்லது ஆறு நாய்கள் தான் எங்கள் பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்தன. தற்போது 15 இக்கும் அதிகம். வீட்டில் வளர்க்கும் கோழி வெளியில் சென்றால், திரும்பவும் நமக்கு கிடைக்குமா என்பது புதிர்தான்.

இரவில் கடையில் சாமான் வாங்க பசங்க போக பயம். சுபுஹு தொழுக செல்ல பயம். பெண்கள் தனியாக செல்ல பயம். நாய் பயம்.

* தெருவிளக்கு, தற்போது பரவாஇல்லை. தேங்க்ஸ். சாமி ஐயா.

சங்கை ஊதி விட்டோம். காதில் கேட்டால் சரிதான்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [09 October 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22719

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ். நாம் நினைத்ததை போன்று நம் நகர் மன்ற கூட்டம் சிறப்பாகவே நடந்ததை நினைத்து நம் எல்லோருக்கும் மற்றட்ட மகிழ்சியே .அல்ஹம்துலில்லாஹ்.

இப்பொழுது நிறைவேற்ற பட்ட அனைத்து தீர்மானங்களையும் மிக விரைவாகவே நிறைவேற்றினால்.மேலும் பொது மக்களாகிய எங்களுக்கு மகிழ்சியே.

தார் சாலை பற்றி பேசிய எங்கள் 6வது வார்டு உறுப்பினர் மரியாதையை குரிய A.K..முஹம்மத் முகைதீன் ஹாஜி அவர்களின் கோரிக்கை அருமையானது. சாலையை முற்றிலுமாக தோண்டி அகற்றிய பின்னரே புதிய சாலை போடபட்டால்தான். சாலையின் தரமும் கூடும் & சாலை ஓரம் இருக்க கூடிய வீடுகளின் பவுன்டேசனமும் பாதிக்காது. எங்கள் வார்டு உறுப்பினரை பாராட்டவேணும்.

இது போன்று மற்ற எல்லா உறுப்பினர்களும் அவர்களின் வார்டுகளில் புதியதாக சாலை போடும் போது கவனமாகவே இருந்து முற்றிலுமாக தோண்டி அகற்றிய பின்னரே புதிய சாலை போடவும்.

நகர் மன்ற கூட்டம் நடக்கும் சமையம். இணையதள செய்தியாளர்களை வெளியேறுமாறு கூறுவது கொஞ்சமும் சரி இல்லை. இவர்களை வைத்து தானே எங்களை போன்ற வெளி நாடு வாழ் மக்களுக்கு நம் ஊர் நகர் மன்ற செய்திகளை சுட ... சுட தருகிறார்கள். ஆதலால் இணையதள மீது கண்வைகாதீர்கள்.......

நம் நகர் மன்ற அவசர கூட்டத்தை சிறப்புடன் நடந்தை நினைத்து மன திருப்தியுடன்......................

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்று போல் என்றும் !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [10 October 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 22736

இந்த மீட்டிங்கும் வழமை போல வெளிநடப்பு செய்யப்பட்டிருந்தால் பொது மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமும் உறுப்பினர்களுக்கு பயங்கர பின் விளைவுகளையும் நிச்சயம் ஏற்படுத்திருக்கும். நல்லவேளை வெளிநடப்பு எதுவும் இல்லாமல் மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளதை அறிந்து சந்தோசம்.

இது போன்று 'சமத்தாக' எல்லா மீட்டிங்கையும் நடக்க விட்டு, மக்கள் நலப்பணிகளில் 'கையுயர்த்தி' ஆதரவு தெரிவித்து... ஒட்டு போட்ட மக்களுக்கு நல்லதொரு பணியாற்ற வாழ்த்துக்கள். இனிமேல் வேதாளம் முருங்கை மரம் ஏறாது என்ற நம்பிக்கையுள்ளது.

நகர்மன்றம் மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுவதாகும்! இங்கு 'அவர்களே எஜமானர்கள் அவர்கள் தான் உங்களனைவருக்கும் படியளக்கும் மகாராஜாக்கள்' என்பதனையுணர்ந்து கடமையாற்றுங்கள். வழிகாட்டும் வள்ளுவனை போல நாளை வரலாறு உங்களனைவரையும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கட்டும். முடிந்தால் வழிகாட்டும் வள்ளுவன் புத்தகத்தை படியுங்கள்.... படிப்பினை பெறுங்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved