Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:01:18 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9871
#KOTW9871
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 27, 2012
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம்! தலைவர்கள் சிறப்புரை!! KEPAவை ஆதரித்து தீர்மானம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2976 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைவர்கள் சிறப்புரையாற்றினர். DCW ஆலைக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்பிற்கு ஆதரவளித்தும், நகர்நலன் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விபரம் வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் 25.12.2012 செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் - மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ நினைவு மேடையில் நடைபெற்றது.



கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவுற்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், கத்தர் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் பேசினர்.



கட்சியின் மாநில செயலாளர்களான ஆடுதுறை எம்.ஷாஜஹான், காயல் மகபூப், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில தலைவரும் - தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.











நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, செயற்குழு உறுப்பினர் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ மறைவுக்கு இரங்கல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தூத்துக்குடி மாவட்ட முதல் தலைவராகவும், மாநில துணைத்தலைவராகவும் திகழ்ந்து, மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வராக, தலைசிறந்த உலமாக்கள் பலரை உருவாக்கிய, கண்ணியத்திற்குரிய மார்க்க மாமேதை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்களின் மறைவுக்காக இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்கிறது.

தீர்மானம் 2 - சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான KEPAவுக்கு முழு ஆதரவு:
காயல்பட்டினத்திலுள்ள தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் (DCW) தொழிற்சாலையால், நகரின் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களால் பல்லாண்டு காலமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுத்திட, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டுவதோடு, அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஊரின் வாழ்வாதார பிரச்சினையாக இருக்கும் இவ்விஷயத்தில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அனைத்து ஜமாஅத்தினர், பொதுநல அமைப்பினர், காயல்பட்டினம் நகராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கைக்கு வலிமை சேர்க்க வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

இக்கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தி வரும் தாய்ச்சபையின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிப்பதுடன், இக்கோரிக்கை நிறைவு பெற தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் அவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 - தொடர்வண்டி நிலைய மேம்பாடு:
இரயில்வே துறை மத்திய அமைச்சராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் இருந்தபோது, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை மேம்படுத்த - கட்சியின் நகர கிளை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கட்சியின் மாநிலத் தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை நேரில் பார்வையிட்டு, மேல் நடவடிக்கைக்காக தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் மூலம் தூண்டுதல் செய்ததன் பலனாக, சுமார் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டு, பணிகளும் ஓரளவுக்கு நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒப்பந்தக்காரர்கள் பின்வாங்கிய காரணத்தால், நிறைவேற்றப்பட வேண்டிய பல பணிகள் நிலுவையில் உள்ளன.

குறுகிய - உயரம் குறைவான நடைமேடை காரணமாகவும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் இரயிலில் பயணிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முதியோர் - பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்வண்டி நிலையத்தில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, இடைநின்று போன நிலுவைப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி முடிக்கப்பட, துறைசார் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்களை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தென்னக ரெயில்வே பொது மேலாளரைத் தொடர்புகொண்டு வலியுறுத்தி, வாராந்திர ஜும்ஆ தொழுகைக்கு இடைஞ்சலாக இருந்த செந்தூர் எக்ஸ்ப்ரஸ் ரெயிலின் புறப்பாடு நேரத்தை - பாதிப்பில்லாத வகையில் மாற்றியமைக்கப்பட வழிகோலிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன், வாவு சித்தீக், மொகுதூம் கண் ஸாஹிப், வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எஸ்.டி.கமால், தூத்துக்குடி உவைஸ், பி.எஸ்.என்.அஹ்மத் ஜரூக், என்.டி.இஸ்மாஈல் உள்ளிட்ட - கட்சியின் மாவட்ட - நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.









கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான் தலைமையில், பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், எம்.கே.முஹம்மத் அலீ, அரபி எம்.எம்.ஷாஹுல் ஹமீத், மு.அப்துல் ரசாக், பெத்தப்பா சுல்தான், கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், ஜெ.உமர், எம்.டி.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், கே.அப்துல் ரஹ்மான், எம்.எம்.காஜா நவாஸ், நேஷனல் காஜா, கே.எம்.டி.சுலைமான், எம்.எல்.ஷேக்னா லெப்பை, எச்.எல்.அப்துல் பாஸித் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட - நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohmedyounus (muscat) [27 December 2012]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 24805

நமதூர் ரயில்வே சம்மந்தப்பட்ட பணிகளில் அன்று முதல் இன்று வரை குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு இந்தியா யூனியன் முஸ்லிம் லீக்தான். ஏனோ மற்ற அமைப்புகள் அதிக கவனம் கொள்வதாக தெரியவில்லை. நிலுவையில் இருக்கின்ற பணிகளையும் கூடிய விரைவில் முடித்து தர அதன் மத்திய அமைச்சரும்,பாராளு மன்ற உறுப்பினரும் பாடுபடுவர் என்று நம்புகிறோம் இன்ஷா அல்லா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...துணிச்சலான உரைகள்..
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24806

நானும் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து பேச்சாளர்களின் உரைகளை செவியுற்றேன். தீர்மானங்களுக்கு வலு சேர்ப்பது நமது ஊர் மக்களின் ஒற்றுமைதான் என்பதை தலைவர்கள் மிக அழுத்தமாக பதிவு செய்தார்கள்.

இருபக்கமும் இறங்கக்கூடியதாக நடைமேடை அமைந்துள்ளது கும்பகோணத்திலும் ஸ்ரீ ரங்கத்திலும் என்று முனீருல் மில்லத் சொன்னபோது ஒரு சூட்சுமம் புரிந்தது. ஞாலம் கருதினும் கை கூடும் காலம் கருதி ஒற்றுமையுடன் செயல்பட்டால்...

நாம் எங்கே தவறு செய்கிறோம் என்பதை பொது செயலாளர் அபூபக்கர் அவர்கள் கோடிட்டு காட்டியபோது நாம் ஒவ்வொருவரும் நம்மை கிள்ளி பார்த்து கொண்டோம். நகர சபை நரக சபையாக மாறிவரும் அவலத்தை அவர்கள் தொட்டுக்காட்டியபோது அந்த நாற்றத்துக்கு ஒட்டுமொத்தமாக ஊர் மக்கள் பெரியவர்கள் இளைஞர்கள் எல்லோரையும் குறிப்பிட்டார்கள்.

தோல்வியுற்றவர்கள் துவண்டு நிற்பதும் வெற்றிபெற்றவர்கள் வெறிகொண்டு அலைவதும் இந்த ஊருக்கு ஒரு சாபக்கேடாக ஆகிவிட்டதை நினைத்து அவர்கள் வேதனைப்பட்டபோதும். இருவர்களையும் ஒரு வட்ட மேஜை மாநாட்டுக்கு அழைக்கும் ஒரு சமத்துவ நாயகனாக இந்த மண்ணின் மைந்தன் எனக்கு காட்சி அளிக்கிறார்.

வயது குறைந்தவர்கள் என்று யாரையும் நினைத்து விட முடியவில்லை. ஒவ்வொரு வருடம் முடியும் போதும் ஒரு வயது அதிகரிக்கும். இதற்கு முயற்சிகள் தேவை இல்லை உழைப்புகள் தேவை இல்லை. ஆனால் "பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா, பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா" என்ற பொன்மன செம்மலின் மெல்லிசை மன்னனின் வைரவரிகளை அவர் ஞாபகப்படுதியபோது நான் மெய் சிலிர்த்தேன். காயிதே மில்லத்தே மறு பிறவி எடுத்து வந்திருக்கிறாரா. அல்ஹம்து லில்லாஹ்.

நீர் வெட்டி நீர் பிரிவதில்லை சகோதரர் அபூபக்கர் அவர்களின் முயற்சியை எண்ணங்களை அல்லாஹ் கபூல் செய்வானாக.

சிந்திப்போம் 2012பற்றி ... சந்திப்போம் 2013 இல்...வாழ்த்துக்கள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [28 December 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 24807

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது இ.யூ.முஸ்லிம் லீக்கை நினைத்து நாம் பெருமை படுகிறோம். நம் ஊர் பொது நலத்தின் மீது எப்போதும் அக்கறை கொண்டு இருக்கும்.

நம் ஊர் மக்கள் இந்த கொடிய விஷ தன்மை உள்ள >>DCW <<தொழிற்சாலையை எதிர்த்து போராட கூடிய ...நமது இந்த >>>KEPA <<<பொது நல அமைப்புக்கு தங்களின் தொடர் ஆதரவை ....வரவேற்கிறோம்..... இந்த அமைப்புக்கு மக்களின் ஆதரவும் / நம் ஊர் பல நற்பணி மற்றகளின் ஆதரவும் / தங்களின் ஆதரவும் ....பெருகி வருவதை நினைக்கும் போது ...நமது போராட்டம் வெற்றியின் வாசலை தொட்டு விட்டோம் ....என்றே படுகிறது.

ஆனால் இந்த >>DCW << போராட்ட விசயத்தில் நம் நகர் மன்ற உறுப்பினர்கள் சிலரின் செயல்பாடுதான் நம்மை கவலை கொள்ள வைக்கிறது ......?? இவர்களை நாம் தேர்வு செய்து அனுப்பிய தன்....பலனை நாம் அனுபவித்து தான் ஆகணுமா ?? என்ன ?? ஒன்றுமே நமக்கு புரிய வில்லை ?? நம் ஊர் மக்களின் மன / உடல் நல ...நிம்மதியாக இருக்க வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.

நமது ஊர் தொடர்வண்டி நிலையத்தை மேம்படுத்த பல நல்ல செயல்களை செய்திட .. எப்போதுமே ஒரு மனதாகவே.நம் இ.யூ.முஸ்லிம் லீக் கட்சி போராடி வருவது. நினைத்து நமக்கு மகிழ்சி அளிக்கிறது. நம் ஊர் பொது மக்களை பெருமிதம் படவைக்கிறது.

நமது ஊர் தொடர்வண்டி நிலையத்தை நாம் இன்னும் முழுமையாக சரி செய்ய முடியாமல் இருப்பது நமக்கு வருத்தத்தை தான் தருகிறது ... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் தொடர்மழை!  (31/12/2012) [Views - 2399; Comments - 1]
நேற்றிரவு சிறுமழை!  (27/12/2012) [Views - 2230; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved