Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:29:00 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10118
#KOTW10118
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 4, 2013
மாவட்ட ஆட்சித் தலைவர் வருகையின்போது நடந்தது என்ன? நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் விளக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3354 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஸ் குமார் IAS பிப்ரவரி 1 அன்று காயல்பட்டினத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வந்திருந்தார். அது குறித்து காயல்பட்டினம் நகர்மன்றத்தின் வார்ட் 1 உறுப்பினர் ஏ.லுக்மான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அன்று 01.02.2013 வெள்ளிக்கிழமை பகல் சுமார் 11:30 மணியளவில் நான் திருச்செந்தூரிலிருந்து ஊர் திரும்பி வருகையில், K.M.T மருத்துவமனை அருகில் வந்ததும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் திருச்செந்தூர் நோக்கி செல்வதைப் பார்த்து அந்த இடத்தில் நின்றேன். அப்போது நகர்மன்றத் தலைவி அவர்களும், நகர்மன்ற ஆணையரும் தொடர்ந்து வந்தார்கள். எனவே சற்று நேரத்தில் நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன். வாவு வஜிஹா கல்லூரிக்கு சற்று முன்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், அவருடன் வந்த அதிகாரிகளும், நகர்மன்றத் தலைவி மற்றும் ஆணையர் ஆகியோர் அந்த இடத்தில் நின்று, பனை மர வாரிய இலாகாவுக்குச் சொந்தமான இடத்தில் குப்பை கொட்டுவதற்கான இடம் பார்ப்பது சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.



முதலாவதாக பனை வாரிய இடத்தைப் பற்றிப் பேசினார்கள். பிறகு ஓடக்கரை பகுதியில் சுடுகாட்டுப் பகுதி நிலத்தைப் பற்றிப் பேசினார்கள். இந்த இடங்கள் சரிவராது என்றதும், அதன் பிறகு அதனருகில் 40 அடி அகலத்தில் இடம் இருக்கின்றது, அதையாவது தாருங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நகர்மன்றத் தலைவி அவர்கள் கேட்டார்கள். அப்போது உடன் இருந்த அதிகாரி, அந்த இடத்தில் லாரிகள் திரும்ப முடியாது என அந்த இடத்தை நிராகரித்துவிட்டார்.

பிறகு பைபாஸ் ரோட்டில் உள்ள மத்திய அரசின் உப்பு இலாகா இடத்தைப் பற்றிப் பேசினார்கள். இவ்வாறு அவர்களின் ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போது நான் குறுக்கிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஐக்கிய பேரவையின் மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் கடையக்குடி பகுதியில் தருவதாகச் சொன்ன 5 ஏக்கர் நிலத்தைப் பற்றி நினைவூட்டினேன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவருடன் வந்திருந்த அதிகாரி ஒருவர், நம் நகர்மன்றத் தலைவி அவர்களை சுட்டிக்காட்டி, மேடம் அவர்கள் அது CRZ பகுதியில் வரும், ஆகையால் அது வேண்டாம் என்று கூறியதாக அந்த இடத்தில் சொன்னார். அப்போது தலைவி அவர்கள் என்னிடத்தில் அந்த இடத்தையும் கலெக்டரிடம் காட்டுவேன் என்றார்கள். இதன்பிறகு ஜூம்ஆ நேரம் நெருங்கிவிட்டதால் நான் கலெக்டர் அவர்களுடன் செல்லாமல் திரும்பிவிட்டேன்.

இதுதான் நடந்த உண்மை.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வல்லோனுக்கே வெழிச்சம்
posted by OMER ANAS (DOHA QATAR.) [05 February 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25379

உண்மையில் பல்வேறு குழப்பத்தில் மக்கள் மனம் வெதும்பி செய்வதறியாது இருக்கின்றார்ககள்! எடு சரி எது பொய்என்பதை, வல்லோன் இறைவனே உண்மையாலர்களையும், வஞ்சக எண்ணம் கொண்ட சூல்ச்சியாலர்களையும், நன்கறிந்து நாளை மறுமை நாளில் தீர்ப்பு வணங்குவான்!

நல்ல தீர்ப்பை இறைவன் தரும் நாள் வரும்போது, அங்கு சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by salai s nawas (singapore) [05 February 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25383

அப்பா!!!!!!!!!!! இப்போவே கண்ணை கட்டுதே

ஒன்றாம் வார்டு உறுப்பினர் அவர்களின் பல தன்னிலை விளக்கங்கள் உண்மைக்கு புறம்பாக இருந்த படியால், இதையும் எங்களால் ஏற்றுகொள்ள முடியாது.

ஏன் முந்திக்கொண்டு விளக்கம் கொடுக்க வேண்டும்?


Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அறிக்கை மன்னர்
posted by Salai Sheikh Saleem (Dubai) [05 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25397

சொல்லப்பட்ட அந்த நிலம் இலவசமாக நமதூருக்கு தருவதாக நமதூர் நகராட்சி ஆணையருக்கு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக போய் இருக்கா? (சகோதரர் சாளை பஷீர் அவர்கள் கேட்டுள்ளபடி)

சரி, அப்படியே அறிவிப்பு போனாலும் கூட, தலைவி அவர்கள் அது சம்பந்தமாக ஆட்சியாளரிடம் அல்லது அது சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளிடம் என்ன பேசி இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் மூக்கை நுழைப்பதுதான் நீங்கள் கற்ற நாகரீகமா?

அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத ஒரு நிலத்தை மாவட்ட ஆட்சியாளரிடம் போய் சுட்டிக்காட்டினால், அது தலைவின் அறைவேகட்டுத்தனம் ஆகாதா?

இப்படி அவசரகதியில் எத்தனை அறிக்கை விட்டு வாங்கி கட்டிக்கொண்டும் ஏறாததா இனி ஏறப்போகிறது ?

நல்லவேளை இப்போது அல்லாஹ் மீது ஆணை என்று எதுவும் சொல்லவில்லை எனபது நீங்கள் கொஞ்சமாவது கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை தெளிவாக்குகிறது.

தயவு செய்து, காயலர்களாகிய நாங்கள் உங்களை என்ன வேலைக்கு அனுப்பினோமோ அதை மட்டுமே நீங்கள் செய்தாலே நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய நன்றிக்கடன்.

அதை விட்டு விட்டு தலைவியின் பெயருக்கு எப்படி களங்கம் விளைவிப்பது அல்லது எப்படி வியூகம் அமைத்து கவுப்பது என்பதில் இவ்வளவு காலமும் உங்களின் பொன்னான நேரத்தை சீரழித்தது போதும்!

தயவுசெய்து, நீங்கள் இந்த ஊருக்கும் சமூகத்திற்கும் செய்த அல்லது செய்ய போகிற ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக இனி அறிக்கைகள் விடுங்கள் நாங்கள் மனப்பூர்வமாக பாராட்டுவோம்.

ஓன்று படுவோம் !!! வென்று காட்டுவோம் !!!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. உறுப்பினர் லுக்மான் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பாரா இதை...?
posted by Hameed Rifai (Yanbu KSA) [06 February 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25410

1ஆவது வார்டு உறுப்பினர் லுக்மான் அவர்களின் இந்த அறிக்கை முழுமையானது அல்ல என, நமதூரிலிருக்கும் சிலரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அறிந்துகொள்ள முடிந்தது.

மறைப்பு 1:

கே.எம்.டி. மருத்துவமனை அருகில் ஆளுங்கட்சி முக்கிய உறுப்பினர் ஒருவருடன் உறுப்பினர் லுக்மான் அவர்கள் நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே ஆணையருடன் சென்ற நகர்மன்றத் தலைவி அவர்கள், தனது வாகனத்தை நிறுத்தி, “கலெக்டர் ஆய்வு செய்ய ஊருக்கு வந்துள்ளார்... அவரது வண்டி இப்படியா போனது?” என்று கேட்க, திருச்செந்தூர் திசையை நோக்கி வண்டி சென்றதாக லுக்மான் கூறியிருக்கிறார்.

“நீங்களும் வாங்க காக்கா!” என்று தலைவி கூற, உறுப்பினர் லுக்மானும் ஆய்வு இடத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நடப்பை உறுப்பினர் லுக்மான் தனது அறிக்கையில் முழுமையாக மறைத்துள்ளார்.

மறைப்பு 2:

ஆய்வு நடந்துகொண்டிருந்தபோது தலைவி உறுப்பினர் லுக்மானிடம், “ஐக்கிய பேரவை தருவதாகக் கூறிய இடத்திற்கான ஆவணங்களைக் கொண்டு வாருங்களேன்... இங்கேயே கலெக்டரிடம் காண்பித்து விடுவோம்” என்று கூறியுள்ளார். ஆனால் உறுப்பினர் லுக்மான் அவர்கள், “ஜும்மாவிற்கு நேரமாகிவிட்டது” என்று கூறி மறுத்துள்ளார்.

(அது வரை தலைவி அவர்களுக்கு ஐக்கியப் பேரவை தரும் இடத்திற்கான ஆவணங்கள் எதுவுமே முறைப்படி சேர்ப்பிக்கப்படவில்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. இது ஒருபுறமிருக்க,) இந்தத் தகவலையும் லுக்மான் அவர்கள் தனது அறிக்கையில் மறைத்துள்ளார்.

மறைப்பு 3:

உறுப்பினர் லுக்மான் அவர்கள் தனது அறிக்கையில், ஐக்கியப் பேரவை தரும் இடம் குறித்து தானே முதலாவதாக கலெக்டரிடம் கூறியது போல் கூறியிருக்கிறார். ஆனால், தனது அறிக்கையில் ஒரு வாசகத்தை “வழமை போல” மறைக்க மறந்துவிட்டார் போலும்! (இதுதான் அல்லாஹ்வின் செயல்!)

உறுப்பினர் லுக்மான் அவர்களின் கூற்றுப்படி அவர்தான் ஐக்கியப் பேரவை இடம் குறித்து ஆட்சியரிடம் கூறினார் என்றால், கலெக்டரின் உதவியாளர் “மேடம் CRZ அருகில் உள்ள இடம் என்று சொன்னார்களே...? அந்த இடம்தானே??” என்று எப்படி கேட்டார்.

இவருக்கு முன்னரே அந்த இடம் குறித்து தலைவி ஆட்சியருடன் பேசியிருக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறதல்லவா? நடப்பு இப்படியிருக்க எப்படி தலைவியை உறுப்பினர் லுக்மான் குற்றம் சாட்ட முடியும்?

இந்த நடப்பையும் உறுப்பினர் லுக்மான் அவர்கள் வசதியாக மறைத்துவிட்டார்.

மறைப்பு 4:

சரி அது போகட்டும்! “ஐக்கிய பேரவை தருவதாக வாக்களித்த இடம் முன்னரே CRZ விதிமுறைகள் படி நிராகரிக்கப்பட்ட இடமா?” என பலமுறை உறுப்பினர்களிடம் தலைவி கேட்டுள்ளார். “இல்லை அது வேறு இடம்” என உறுப்பினர்கள் கூறியுள்ளனர். VAO / தலையாரி ஆகியோர் அது ஏற்கனவே CRZ விதிப்படி நிராகரிக்கப்பட்ட இடம் என உறுப்பினர்கள் முன்னிலையில்தான் தலைவியிடம், முன்னொரு தருணத்தில் கூறியுள்ளனர்.

இந்த முன் சம்பவமும் வசதியாக மறக்கப்பட்டுள்ளது.

மறைப்பு 5:

தலைவியைப் புறக்கணித்துவிட்டு, உறுப்பினர்களிடம் ஆவணங்களை ஐக்கியப் பேரவை தந்துள்ளது. அவ்வாறு ஆவணங்களைத் தந்த ஐக்கியப் பேரவை, அந்த இடத்தைப் பரிசீலிக்கக் கோரும் கூட்டப் பொருளை - அதற்குப் பிறகு நடைபெற்ற டிசம்பர் அல்லது ஜனவரி மாத நகர்மன்றக் கூட்டங்களிலாவது கொண்டு வர சொல்லியிருக்கலாம். பேரவை அதைச் செய்யவில்லை.

சரி, ஆவணங்களை பெற்றுக்கொண்ட (லுக்மான் உள்ளிட்ட) உறுப்பினர்களாவது அதனைச் செய்திருக்க வேண்டும். அவர்களும் செய்யவில்லை.

இவை எதையுமே தானும் செய்யாமல், தலைவியிடமும் அந்த இடம் குறித்த எந்த ஆவணத்தையும் முறையாகக் கொடுக்காமல் தலைவியைக் குற்றம் சாட்டும் இவர்கள் மனசாட்சி உள்ளவர்கள்தானா என எண்ணத் தோன்றுகிறது.

ஏற்கனவே பல அறிக்கைகளை விட்டு மக்களிடம் “நற்பெயர்” சம்பாதித்துள்ள உறுப்பினர் லுக்மான் அவர்கள், நான் சொல்லும் இந்தத் தகவல்கள் குறித்து தனது அறிக்கையை வெளியிடட்டும்! இதில் கூறப்பட்டவை உண்மையில்லை என நிரூபிக்கட்டும்! இவையனைத்தும் 100 சதவிகிதம் உண்மை என்பதை நானும் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்க தயாராக உள்ளேன் என்பதைக் கூறி, உறுப்பினர் லுக்மான் அவர்களின் அறிக்கையை எதிர்பார்த்து முடிக்கிறேன்.

ஊரில் புரட்சி செய்யப்போவதாக ஒரு மாயையை ஏற்படுத்தி பொறுப்பிற்கு வந்த லுக்மான் அவர்களே! உங்களால் ஊருக்கு நல்லது செய்ய முடியவில்லையெனில், குறைந்தபட்சம் அமைதி காத்தாவது நன்மைக்குத் துணை நிற்கலாமே...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. உறுப்பினர் லுக்மானும் விமர்சனமும்
posted by ansari (abu dhabi) [06 February 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25414

உறுப்பினர் லுக்மான் அவர்கள் குறித்து இந்த இனைய தளம் விமர்சித்தது போல வேறு யார் குறித்தும் விமர்சனம் செய்தது இல்லை. எதற்கு இந்த மாதுரியான ஒரு தலை பட்சமான விமர்சனம்? லுக்மான் அவர்களை மன நிலை பாதித்தவர் என்று கூட விமர்சனம் வந்தது .அங்கே லுக்மான் அவர்கள் மட்டும் தான் உறுப்பினரா? மற்றவர் எல்லாம்? எதற்கு அவர் உங்கள் ஜமாஅத் அல்ல அல்லது உங்களின் கொள்கை கோட் பாடுகளை விட்டும் வேறு பட்டவர் என்பதலா? இந்த முறை கெட்ட விமர்சனம் ?

நம் சமுதாய பெண்களை தர குறைவாக ஒரு உறுப்பினர் சொல்லிய பேசிய போது எல்லாம் அதற்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பை உம் காட்டாத இந்த வீரர்கள் (ஊரில் எதிர்ப்பு அல்லது போராட்டம் இனைய தளத்தில் பே சியதோடு சரி) இவருக்கு மட்டும் எதிராக எதற்கு தொடர்ந்து குறி வைத்து தாக்குதல்?

யாரும் எங்கள் பெண் களை ஏதும் சொல்லலாம் நங்கள் சும்மா இருப் போம் என்று ஒரு மோசமான முன் உதாரணத்தை ஊரில் உண்டாக்கி விட்டு (லுக்மானும் சேர்ந்துதான்) லுக்மான் மீதும் ஒரு சில தவறுகள் இருக்கலாம் யார் தவறு செய்ய வில்லை? சொல்லுங்கள் அந்த தவறுகளை அவருக்கு முறையாக சொல்லி சீர் படுத்த யாரும் தயாராக இல்லை. அதற்கு மாறாக அவரை தொடர்ந்து உதாசீனபடுத்தவும் விமர்சனம் பண்ணவும் தனிமைபடுத்தவும் இங்கே ஒரு சில கல வீரர்கள் இருப்பதும் அவர்கள் சொல்லுவதற்கு எல்லாம் ஒரு சிலர் குஜா துக்குவதும் இன்னும் எத்துனை நாட்களுக்கு?காலம் பதில் சொல்லும்

இது ம் ஏதோ ஒரு வகையில் சர்தார் ஜோக் போல் தான் -

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. விசுவரூபம் மீண்டும் தொடராமல் இருப்பது நல்லது...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [06 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25418

சகோதரர் ஹமீது ரிபாயின் கேள்விகள் அனைத்துமே...! சிந்திக்க தூண்டுகிறது... இருந்தாலும்...!

போதும்... போதும்... போதும்... விளக்க போர் இனி போதும்...! இனி இவர் மாற்றி அவர்...! அவர் மாற்றி இவர்...! ஒரு சிறிய சப்ப மேட்டர் இதற்க்கு எல்லாம் விளக்கம் - நடந்தது இது தான் உண்மை - இதோ எனது அறிக்கை - இப்படி நீண்டு கொண்டே போவதை தவிர்ப்பது நல்லது....

தொடருமானால்....!

ஆட்சியர் வருகையின் போது அதிகாரியின் அருகில் இருந்த 13 வது வார்டு உறுப்பினர் சம்சுதீன் அவர்களும் (நடந்தது இது தான் - என்று இனி அறிக்கை விட்டாலும் விடலாம்...

விசுவரூபம் (அறிக்கை) மீண்டும் தொடராமல் இருப்பது நல்லது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தொடரும் அறிக்கைகள் !!
posted by Salai.Mohamed Mohideen (Dallas) [06 February 2013]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25419

இது போன்ற அறிக்கைகள் வருவதும் வாசகர்கள் சரமாரிய கேள்விக் கணைகளை (லாஜிக் & தீர விசாரித்து) தொடுப்பதும் சாட்டையை சுழற்றுவதும் இதற்கு முன் வந்த தன்னிலை அறிக்கையிலேயே காண முடிந்தது. அதனை திரும்பவும் இங்கே காணமுடிகின்றது.

ஒரு வேளை இது மறதியாக - கவனக்குறைவாக இருக்கலாம் அல்லது (சகோ. ஹாமித் ரிபாய் குறிப்பிட்டுள்ள மறைப்புகள் உண்மையாயிருப்பின்) அது செலெக்டிவ் அம்னீசியா - வாக கூட இருக்கலாம். இக்காலத்தில் எல்லாமே அரசியல்தானே!

கொளுத்தியது என்னமோ ஒரு சிறு தீக்குச்சிதான். உண்மைகளை (?) மறைத்து குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்கும் & சகோதரத்துவத்தை கேள்விக்குறியாக்கும் அறிக்கைகள் இனிமேல் தேவைதானா என்பதனை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இது போன்று அறிக்கைகளினால் கேள்விக்கணைகளினால் முதுகுதான் பஞ்சர் ஆகுமே தவிர சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்க & மறுமைக்கு புண்ணியம் சேர்க்க போவதில்லை.

இனிவரும் காலங்களில், சிறு விடயங்களை பெரிதாக்காமல் (அரசியலாக்காமல்?) நல்லதொரு சகோதரத்துவத்தை நகர்மன்ற ஒற்றுமையை பறைசாற்றும்... நமதூரை வளப்படுத்தும் ரீதியில் எண்ணத்தில் அறிக்கைகள் வந்தால் நன்றாக இருக்கும். அதற்காக துஆ செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved