Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:00:42 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10154
#KOTW10154
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 8, 2013
1.5 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை சிறைவாசம்! DCW நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் விட்ட எச்சரிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3266 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலையால் ஏற்படும் மாசு குறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று நகரில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்தியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 10ஆம் தேதி - சென்னையில் திரளான காயலர்கள், DCW நிறுவனம் குறித்த பல கேள்விகளை - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டனர். அதற்கான பதில்கள் தற்போது, விண்ணப்பதாரர்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.



கடந்த ஆகஸ்ட் மாதம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை, DCW தொழிற்சாலையின் Ilmenite பிரிவினை மூடிட, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரைக்கு முந்தைய கடித போக்குவரத்து விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கிட டிசம்பர் 10 அன்று கோரப்பட்டிருந்தது. அதன் வாயிலாக கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், பல புதிய தகவல்களைத் தருகின்றன.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஜூலை 19 தேதியிட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை (Show cause notice) DCW தொழிற்சாலையின் Ilmenite தொழிற்சாலையை உள்ளடக்கிய Caustic Soda பிரிவை நடத்திட மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த இரண்டு நிபந்தனைகளை நினைவுகூர்கிறது. அதில் DCW தொழிற்சாலை, தொடர்ந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யவேண்டும் என்றும், அருகில் உள்ள நீர் ஆதாரங்களில் கழிவுகள் எக்காலத்திலும் கலக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கிறது.



அந்த குறிப்பாணை - ஜூலை 19 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது DCW தொழிற்சாலையில் காணப்பட்ட 6 விதிமீறல்களை சுட்டிக்காட்டுகிறது. உப்பளங்களில் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் நீரோடையில் கலப்பது, நீரோடை கடலில் கலக்கும் இடத்தில் தடுப்பணை அமைத்தது, நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தியில் உருவாகும் சாம்பலை நீரோடை அருகே கொட்டியது போன்றவை அதில் அடங்கும்.



இவை - Water (Prevention and Control of Pollution) Act, 1974 என்ற சட்டத்தின் பிரிவுகள் 25, 44 மற்றும் 45 A ஆகியவற்றின் கீழ் விதிமீறல்கள் ஆகும். மேலும் அதற்கான தண்டனை 18 மாதங்களுக்கு குறையாமல், அபராதத்துடன் 6 ஆண்டு வரையிலான சிறைவாசம் ஆகும் என்றும் அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 15 நாட்களுக்குள் பதில் வழங்கும்படியும் நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்தது.



தனது ஆய்வறிக்கையை தலைமை நிலையத்திற்கு அனுப்பிய மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரின் வலுவான பரிந்துரையையும் குறிப்பிட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் IAS - DCW நிறுவனம் முறையான சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வரை, குறிப்பிட்ட ஆலையை மூடிட பரிந்துரைத்திருந்தார்.



DCW நிறுவனம் ஆகஸ்ட் 3 தேதியிட்ட தனது பதிலை வழங்கியது. அதில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் DCW மறுத்தது. எந்தச் சூழலிலும் கழிவுகளை தொழிற்சாலைக்கு வெளியில் செலுத்தவில்லை என்று அந்நிறுவனம் கூறியது. மேலும் நிலக்கரி சாம்பலை, இலவசமாக - தன் சொந்த செலவிலேயே, தேவைப்படும் நிறுவனங்களுக்கு அனுப்பி வருவதாகவும் DCW நிறுவனம் பதில் வழங்கியது.





DCW நிறுவனத்தின் பதில் திருப்தியளிக்காததால் ஆகஸ்ட் 22 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை - DCW நிறுவனத்தின் Ilmenite பிரிவினை மூடிட பரிந்துரை செய்து, தலைமை அலுவலகத்தின் உறுப்பினர், செயலாளருக்கு கடிதம் அனுப்பியது.





அந்த கடிதத்தில் முக்கியமாக - DCW தொழிற்சாலை தனது கழிவை அப்புறப்படுத்தவில்லை என்றால், அக்டோபர் மாதம் பருவமழை துவங்கும்போது கடலில் கழிவு கலந்து, கடல் செந்நிறமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பரிந்துரையின் மீது, தலைமை அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அக்டோபர் மாதம் 20 ம் தேதி பருவ மழை காயல்பட்டினம் பகுதியில் துவங்கியது. அக்டோபர் 22 அன்று DCW நிறுவனத்தின் கழிவுகள் கடலில் கலந்தன.



ஜூலை 19, 2012 தேதியிட்ட காரணம் கேட்கும் குறிப்பாணை (Show cause notice) ...

















ஆகஸ்ட் 3, 2012 தேதியிட்ட DCW நிறுவன பதில் ...









ஆகஸ்ட் 22, 2012 தேதியிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை பரிந்துரை ...





தகவல்:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வாழ்த்துக்கள் பல!
posted by OMER ANAS (DOHA QATAR.) [08 February 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25436

அல்லாஹ்வின் உதவியால், KEPA அமைப்பு நமது சுற்று வட்டார எல்லா மக்களுக்கும் வேண்டி விடா முயற்சியுடன் இந்த ஆலையின் கொடும் செயலுக்கு எதிராக எடுத்து வைத்த ஒவ்வொரு புண்ணிய செயலும்,இன்று இவன்களின் கருத்த இதயத்தின் மேல் ஈட்டியாய் பாய்ந்துள்ளது!

இதற்காக இரவு பகல்பாரா உழைத்தோர், சொந்த செலவுகள் செய்தோர், வயோதிக உடல்நிலைபாராமல் இழமையோடு உழைத்த நல்லுள்ளம் கொண்ட கண்ணியவாளர்கள், தாய் நாட்டில் சில நாட்கள் குடும்பத்தோடு நிம்மத்தியாக இருக்கவந்த நேரத்திலும், இந்த நற்சேவைக்காக, தன் நேரத்தில் ஒருபாதியை இதற்காக செலவிட்ட இழைய சமுதாய தம்பிகள், இன்னும் ஊரில் இருந்தாலும், தனது சொந்த வேலைப் பளுவினையும் பாராமல் உழைத்த அனைவர்களுக்கும், இதற்காக ஆக்கமும் ஊக்கமும் தந்த பெரியோர்கள், ஊர்வாசிகள், முஸ்லிமல்லாத சகோதரர்கள், இதை முன்னெடுத்துச் சென்ற மாவட்ட கலக்ட்டர், மற்றும் எல்லோருக்கும் எனது கணிவான வாழ்த்துக்கள்!

எல்லாம் வல்ல இறைவன் இந்த நற்ச்சேவைக்கு, மறுமையில் உங்களுக்கு இதற்க்கான நற்கூலியை நிச்சயம் தருவான் என்று மனமுவந்து துஆ செய்கின்றேன். ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by salai s nawas (singapore) [09 February 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25439

உமர் அனஸ் காக்காவின் அழகிய கருத்து பதிவு KEPA உக்கு பாடுபட்ட அனைத்து நல் இதயங்களுக்கும் மருந்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நமது நகர் மக்களின் விட முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றி உறுதி
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [09 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25441

உமர் அனஸ் காக்காவின் அழகிய கருத்து 100 சதவீதம் உண்மையே... நமது நகர் மக்களின் விடா முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றி உறுதி - ஒரு சில நாட்கள் முன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் DCW நிறுவனத்திற்கு பின் புறம் மிக பெரிய ஆய்வை மேற்கொண்டு உள்ளார்கள் அதன் ஆய்வு குறித்து இன்சாஹ் அல்லாஹ்... விரைவில் நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் - ஓரிரு தினங்களில் ஒரு நல்ல செய்தியை DCW நிறுவனத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடமிருந்து நாம் எதிர்பார்ப்போம்....

குறிப்பு :- ஒரு நல்ல துணிச்சலான துடிப்பான ஆட்சியர் என்று நம் மாவட்டத்தின் அணைத்து மக்களாலும் போற்றி புகழப்படும் ஆட்சியர் இவரே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சமூக அமைப்புகளின் முயற்சிகள் !
posted by Salai. Mohamed Mohideen (Dallas) [09 February 2013]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25444

வல்ல இறைவன் அனஸ் ஓமர் காக்கா அவர்களின் உளமார்ந்த துஆவை கபூல் செய்வானாக ! அதுதான் நம் எல்லோருடைய... ஒவ்வொரு அடிமட்ட காயலானின் துஆவும் ! கேப்பாவின் கரங்கள் வலுப்படுத்த பட வேண்டும். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அந்த ஒரு லட்சம் கையெழுத்தை சேகரிப்பதற்காக, தன் சொந்த வேலைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு அதற்காக அவர்கள் சிந்தும் வியர்வைகள், DCW தரும் நெருக்கடிகள், பொருளாதார கஷ்டங்கள் & போராட்டத்தினை முழு முனைப்புடன் தொடர்ந்து ஊரில் நடத்துவதற்கான ஆள் (manpower) சப்போர்ட் இல்லாமல் தவிக்கும் தவிப்புகள் எதுவும் இங்கே பதிய படுவதில்லை. அதனால் தான் என்னவோ, சமூக சேவைகளும் & போராட்டங்களும் நமக்கு மிக எளிதாக தெரிகின்றது.

காலில் சக்கரம் கட்டாத குறையாக மிகவும் பரபரப்பாக மனிதன் தன் வாழ்க்கையை செலுத்தி கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், சமூக சேவை என்ற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் வருவதில்லை. அப்படியிருந்திருந்தால் ஊரிலே இருந்து கொண்டு நல்ல வியாபாரத்துடன், பொருளாதார தன்னிறைவு பெற்ற எத்தனையோ சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்களனைவரும் இது போன்ற விடயங்களில் களத்தில் குதித்திருப்பார்கள்.

எந்த ஒரு அமைப்பாக அல்லது சமூக சேவையாக இருந்தாலும் , விரல் விட்டு எண்ணக்கூடிய அதே பத்து (?) பெரியவர்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர் பட்டாளங்கள் தான் முன்னே வருகின்றார்கள். இவர்களாவது வருகின்றார்களே என்று அவர்களை ஊக்கப்படுத்துவோம் கண்ணியப்படுத்துவோம் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம் அவர்களுக்காக துஆ செய்வோம் !

சமூக அமைப்புகள் ஒன்றும் ஏதோ ஒரு அரசியல் ஆதாயத்திற்காக பொழைப்பை நடத்தும் கட்சிகள் இல்லை அல்லது நாமும் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கும் வைக்க வில்லை. அவர்கள் (அமைப்பினர்) என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று நம்மை நாமே கேட்பதை விட, இது போன்ற அனைத்து நற்காரியங்களுக்கும் நமதூர் அமைப்புகளுக்கு உதவ நிறைய சமூக ஆர்வலர்களை உருவாக்குவோம் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...சிறை வாசம்
posted by kayalhassankuthoos (abudhabi) [09 February 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25451

நமது ஊர் மக்கள் கூட்டு முயற்சி எடுத்து நல்ல பலனை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் துணை புரிவனாக ....!!!!

ஆமீன் ...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved