Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:59:33 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10159
#KOTW10159
Increase Font Size Decrease Font Size
சனி, பிப்ரவரி 9, 2013
டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு: தினகரன் செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3200 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் 07.02.2013 வியாழக்கிழமையன்று ஆய்வு நடத்தினார். இது குறித்து தினகரன் நாளிதழ் இன்று (பிப்ரவரி 9) வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:



கழிவுநீர் கடலில் கலப்பு விவகாரம்: தனியார் ஆலைக்கு நோட்டீஸ்!

ஆறுமுகநேரியில் தனியார் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலப்பது குறித்து விளக்கமளிக்க ஆலைக்கு நோட்டீஸ் அனுப்ப ஆர்டிஓக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக காயல்பட்டினத்தில் உள்ள பொதுநல அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் பகுதிகளையும் கடலில் கலக்கும் இடத்தை பார்வையிட கலெக்டர் ஆசிஷ்குமார் வந்தார். அப்போது அவரிடம் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் உப்பு உற்பத்தியாளர்கள், தனியார் தொழிற்சாலையால் உப்பளங்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தனியார் தொழிற்சாலையை சுற்றியுள்ள உப்பளங்கள் மற்றும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் ஓடை மற்றும் கடலில் கலக்கும் பகுதிகளை கலெக்டர் ஆசிஷ்குமார் ஆய்வு செய்தார்.

அவருடன் திருச்செந்தூர் ஆர்டிஓ கொங்கன், தாசில்தார் நல்லசிவம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் ஆபிதாஷேக், கவுன்சிலர்கள் சம்சுதீன், பத்ரூல்ஹக், ஹைரிய்யா, அஜ்வாது, சாமி, நகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆகியோர் இருந்தனர்.

கழிவுநீர் கடலில் கலப்பது தொடர்பாக தனியார் ஆலையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஆர்டிஓக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தகவல்:
முத்து இஸ்மாயில்,
ஸ்டார் ரெடிமேட்ஸ், பிரதான சாலை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Kader K.M (Dubai) [09 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25442

தமிழகத்தில் மீண்டும் ஒரு அப்துல் கலாம் ! நம் மாவட்ட ஆட்சியர் அவர்கள்!

இறைவன் நாடினால், இறைவனின் ஆசி என்றெண்டும் உங்கள் மீது உண்டாவதாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சாதிக்க முடியாது என்பது எதுவுமல்ல... நம் ஒற்றுமைக்கு (கிடைத்த பயன்) இதுவே உதாரணம்....
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [09 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25443

இன்று காலையில் இந்த செய்தி படித்தவுடன்...! சில மாதம் முன் நாம் நடத்திய நமது ஒற்றுமையான போராட்டத்தின் பலன் என உணர முடிந்தது.... உண்மையும் அதுவே...

மன தூய்மையான துடிப்புள்ள kepa அமைப்பினரின் டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு எதிரான ஆதாரபூர்வமான புகை படங்கள் - அவர்கள் திரட்டிய தகவல்கள் அடிப்படையில் இந்த நற்சேவைக்காக தன் நேரத்தில் ஒருபாதியை இதற்காக செலவிட்ட நகரின் பெரியவர்கள் - அதற்க்கு துணை நின்ற நம் சகோதரர்கள் - வெளி மாநில மற்றும் வெளி நாடு காயல் வாசிகள் - நகர அணைத்து சமுதாய மக்கள் அனைவர்களுக்கும் கிடைத்த மிக பெரிய வெற்றி...

சாதிக்க முடியாது என்பது எதுவுமல்ல... நம் ஒற்றுமைக்கு (கிடைத்த பயன்) இதுவே உதாரணம்....

இன்ஷாஹ் அல்லாஹ்... இனி அடுத்தடுத்து நாம் இன்னும் பல வெற்றிகளை ஒற்றுமையுடன் போராடி பெறுவோம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [09 February 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25445

மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

சிறியவர் முதல் பெரியவர் வரை
பேரவை முதல் இயக்கங்கள் வரை
அனைத்தையும் ஒன்றிணைத்த KEPA-க்கு கிடைத்த வெற்றி....
இந்த ஒற்றுமையை யாராலும் சீர்குலைக்க முடியாது.......
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது இந்த ஒற்றுமை......

தொடரட்டும் KEPA-வின் இந்த சீரிய பணி.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தீர்வுக்குண்டான வழியை திறக்க ஆரம்பித்து விட்டது!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [09 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25446

நேற்று ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொது குழு கூட்டம் பெருபாலான காயல் சகோதரர்ககளும், குடும்பத்தார்களும் கலந்து கொள்ள சிறப்புடன் நடைபெற்றது!

அக்கூட்டத்தில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பேசிய அனைவர்களின் கவலையான உணர்வு, நமதூரின் இந்த கொடிய நோய்க்கு ஒரு முடிவு வராதா? என்ற ஆதங்கமும், அக்கொடிய சூலில் இருந்து விடுபட வேண்டுமென்ற அனைத்து சகோதரர்களின் நெஞ்சம் நெகிழும் துவாவும் கூட்டத்தின் கடைசி நிகழ்ச்சிவரை பிரதிபலித்தது. அலஹம்திளில்லாஹ்!

அனைத்து மக்களின் துவாவின் பொருட்டால் வல்ல இறைவன் நமக்கு நல்ல தொரு தீர்வுக்குண்டான வழியை திறக்க ஆரம்பித்து விட்டான்!

இப்புண்ணிய வழி முற்றிலுமாக திறந்து, நம் மக்கள் கொடிய நோயற்ற வாழ்வை விரைவில் அடைந்திட அனுதினமும் அல்லாஹ்வை வேண்டிக்கொள்வோமாக!

ஒரு சில மனசாட்சியுள்ள மனிதர்களில் மாணிக்கங்கள் இம்மண்ணில் வலம் வருகிறார்கள் அவர்களில் ஒருவர்தான் நம் மாவட்ட ஆட்சித்தலைவர் என்று சொன்னால் அது மிகையல்ல. அவருடைய எல்லா நல்ல எண்ணமும் நிறைவேறி அவரால் பயனடைந்த மக்களின் ஆசியினால் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!

வாழ்த்தும் உள்ளம்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அமைதியான வழியில் நாம் அடைந்த (மக்கள் ஒற்றுமை)வெற்றி..!
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [09 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25448

ஊரில் உள்ள அணைத்து ஜமாத்துக்கள் - பொது நல சங்கங்கள் - பெரியவர்கள் - வாலிப சகோதரர்கள் - சிறுவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து KEPA விற்கு கொடுத்த மிக பெரிய வலுவான ஒத்துழைப்பே டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

அரை நூற்றாண்டை கடந்தும் இந்த தொழிற்சாலையின் தீய கொடிய இரசாயன கழிவின் தன்மை, அதன் விபரீதம் அறியாது இருந்து வந்துள்ளோம் - மக்கள் மத்தியில் மிக பெரிய பரப்புரை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்திய kepa அமைபிற்கு பாராட்டுக்கள்...

அமைதியான வழியில் நாம் அடைந்த (மக்கள் ஒற்றுமை)வெற்றி..! இந்த வெற்றிக்கு சொந்தகரார்கள் நம் நகர மக்களே...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...புகழ் எல்லாம் இறைவனுக்கே ,உலகெல்லாம்,,,,படைத்துபன் செய்வோம்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [09 February 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25452

மீண்டும் ஒரு தமிழ்தாய் வாழ்த்து!
புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
அவனின் நல் ஆசியால் எல்லாமே இனிவரும் காலங்களில், சமுதாய எதிரிகளுக்கு வீழ்ச்சியாகவும்,சோதனைமேல் சோதனையாகவும் அமைந்து நம் மாவட்டம் இந்த உத்தமன் ஆசிஸ் குமார் போன்றோரால் எழுச்சி பெற்ற மாவட்டமாக திகழ வாழ்த்துவோம்!

நோயற்ற வாழ்வே என்றும் குறையற்ற செல்வம்!
அதற்கு இந்த D C W வின் அழிவே நமக்கு நம்மில், நாளைய சரித்திரமாக பேசப்பட வேண்டும்! துஆச் செய்வோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by nizam (india) [10 February 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 25457

சம்பள வாங்காமல் ஊர் நலனை குறியாக கொண்டு உழைக்கும் கீபாவிர்க்கு வாழ்த்துகள். இந்த செய்தியை பார்க்கும்போது பல்லாயிரகனகான மக்களின் துஅவை இறைவன் கபூல் செய்துவிட்டான் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...படைத்துப் பான் செய்வோன்!
posted by kavimagan (qatar) [10 February 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25459

அன்பின் உமர் அனஸ் காக்கா!

தமிழ்த்தாய் வாழ்த்தல்ல. இறை வாழ்த்து!

புகழெல்லாம் இறைவனுக்கே.

உலகெல்லாம் படைத்துப் பன் செய்வோன்!

படைத்துப் பன் செய்வோம் என்பது தவறு.


முக்கியமான விஷயம் என்பதால் சுட்டிக்காட்டினேன்.

மறக்க முடியுமா நமது சென்ட்ரல் பள்ளியின் இறை வாழ்த்துப் பாடலை? நன்றி காக்கா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved