Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:05:24 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10314
#KOTW10314
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 28, 2013
நகர ஒற்றுமை குறித்து பதின்மர் சமாதானக் குழுவின் பரிந்துரை! நகர்மன்ற அங்கத்தினர், ஐக்கியப் பேரவை, ஊடகத்தினரிடம் கையளிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3973 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் அண்மைக் காலமாக நிலவி வரும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் குறித்து, அது தொடர்பானவர்களுடன் கலந்தாலோசனை செய்து, இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், பதின்மர் (பத்து பேர்) கொண்ட சமாதானக் குழு ஏற்படுத்தப்பட்டு, அக்குழு அனைத்து தரப்பினருடனும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது. நடத்தப்பட்ட கலந்தாலோசனைகளின் அடிப்படையில், சமாதானக் குழு பரிந்துரை ஒன்றையும் தயாரித்துள்ளது.

அப்பரிந்துரையை, காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இணையதள ஊடகங்களின் நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி, 27.02.2013 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சமாதானக்குழு உறுப்பினர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பின்னர், கூட்டத்தின் நோக்கம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொதுச் செயலாளரும் - சமாதானக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் விளக்கிப் பேசினார்.



அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில் அதன் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் துவக்கமாக பரிந்துரையைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான பரிந்துரையை ஹாஜி எம்.எம்.உவைஸ் வழங்க, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.





பின்னர், நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள், இணையதள ஊடகங்களின் பிரதிநிதிகளிடம் பரிந்துரை பிரதிகள் வழங்கப்பட்டது. பரிந்துரை வாசகங்கள் வருமாறு:-













சமாதானக்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் நன்றி கூற, ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹூத்தீன் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



இக்கூட்டத்தில், சமாதானக் குழு அங்கத்தினர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், நகர்மன்ற அங்கத்தினர், இணையதள ஊடகங்களின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மக்களின் பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [28 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25876

சமாதான முயற்சியில் களம் இறங்கி இருக்கும் பெரியவர்கள் அனைவர்களையும் மதிக்கிறேன்... யாரையும் புண் படுத்தும் நோக்கம் எனது கருத்துக்கு அல்ல... அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்...

நகராட்சியில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு கீழ்க்கண்டவைகள் முக்கிய காரணங்களாக இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறும் சமாதான குழு பெரியவர்கள்..

(1) நகராட்சி தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள். - (சரி படுத்துங்கள்) மக்களின் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்..

(2) நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கும் இடையே புரிந்துணர்வு இல்லாமை - (அதை சரி படுத்துங்கள்) மக்களின் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்..

(3) நகராட்சி நடவடிக்கைகளில் ஊடகங்களின் சில செயல்பாடுகளில் அதிருப்தி. - (அது என்ன செயல்பாடுகளில் (செய்தியில்) அதிருப்தி..? - அது எந்த ஊடகம்...? ) இவைகளை சமாதான குழு பெரியவர்கள் வெளி படுத்தலாமே... வெளி படுத்தினால் மட்டுமே.. மக்களின் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்..

(4) நகராட்சி நடவடிக்கைகளில் தனி நபர்களின் குறுக்கீடு. - (அந்த தனி நபர்கள் யார்.. யார்.. அந்த தனி நபர்கள் நகரில் ஏழ்மை உடையவராகவோ - பெரும் செல்வந்தராகவோ இருந்துட்டு போகட்டும் நகராட்சியில் வரி செலுத்தும் அணைத்து மக்களுக்கும் அந்த தனி நபர்களை அடையாளம் காட்டலாமே...? அடையாளம் காட்டினால் மட்டுமே - மக்களின் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்..

லஞ்சம் வாங்காத தலைவிக்கு நெருக்கடி...! என்று தலைப்பிட்டு செய்தி போட்ட நக்கீரன் நிறுவனர் கோபால் அவர்களுக்கு இதன் பிரதி அனுப்ப பட்டதா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஓன்று படுவோம் ..... வெற்றி அடைவோம்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [28 February 2013]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25878

இந்த சமாதானக் குழு பரிந்துரை செய்யப்பட்ட அணைத்து பரிந்துரைகளையும் , நமது நகரமன்ற தலைவர் , நகரமன்ற உறுபினர்கள் மற்றும் பொது மக்களாகிய நாம் அனைவரும் ஒத்து உழைக்க கடமை பட்டு உள்ளோம் .

நமது ஊரின் நன்மையையும் , நலன்களையும் மட்டுமே மனதில் கொண்டு , நடந்த பழைய கசப்பான அணைத்து நிகல்வுகலை நாம் அனைவரும் மறந்து, இனி வரும் நாட்களில் நமது ஊரின் வளர்ச்சி பாதையில் நல்ல பல திட்டங்களை உருவாக்க நாம் அனைவரும் ஓன்று இணைந்து செயல் படுவோம் .இது நமக்கு கிடைத்து உள்ள ஒரு அருமையான வாய்ப்பு . இதை நாம் இப்போது தவற விட்டால் , நஷ்டம் அடைய போவது நாம் தான்.

வல்ல நாயன் நமக்குள் ஒற்றுமையினை தந்து, நாம் நமது காயல் நகரை முன்னேற்ற பாதையில் வழி நடத்த செல்ல அவனின் அருளை நமக்கு தந்து அருள் வானக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Hameed Rifai (Yanbu KSA) [28 February 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25880

நல்ல முயற்சி ஒன்று நடக்கிறது. இனியாவது சுமூக நிலை ஏற்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது இந்தப் பரிந்துரைகள்.

இதில் என் மனதில் தோன்றிய சில கேள்விகளை சமாதானக் குழுவினருக்கு பணிவுடன் முன்வைக்க விரும்புகிறேன்:-

கேள்வி 1:

நகரில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களாக,
(1) நகர்மன்ற தலைவர் - உறுப்பினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு,
(2) நகர்மன்றத்தினர் - ஐக்கியப் பேரவை இடையே புரிந்துணர்வு இல்லாமை,
(3) நகராட்சி நடவடிக்கைகளில் ஊடகங்களின் சில செயல்பாடுகள்,
(4) நகராட்சி நடவடிக்கைகளில் தனிநபர் குறுக்கீடு
ஆகிய நான்கு விஷயங்கள் சமாதானக் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், முதல் மூவருக்கும் பரிந்துரை அளித்துள்ள சமாதானக் குழு ஆதிக்கம் செய்யும் தனி நபரைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?

கேள்வி 2:

சமாதானக் குழுவின் நகராட்சிக்கான பரிந்துரையில், லஞ்சம் - ஊழலுக்கு எதிராக நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் தலைவிக்கு, நகர்மன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிந்துகொண்டு பல பரிந்துரைகளை முன்வைத்த சமாதானக் குழு, தலைவியின் கருத்துக்களையும் அறிந்துதானே இருப்பீர்கள்? அதன்படி உறுப்பினர்களுக்கு வைத்த பரிந்துரைகள் என்று எதையும் அடையாளம் காண முடியவில்லையே?

கேள்வி 3:

ஐக்கியப் பேரவைக்கு சமாதானக் குழு அளித்துள்ள பரிந்துரையால், இத்தனை நாளாக ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் இனி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நடக்கும் என்பதைத் தவிர வேறென்ன புதிதாக நடந்துவிடப் போகிறது?

ஒவ்வொரு ஜமாஅத்தின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், செயலாளரும் பேரவை பொதுக்குழுவில் வந்தால் பேரவை ஊருக்குப் பொதுவான அமைப்பாக இருக்கும். அனைத்து ஜமாஅத்துகளின் உறுப்பினர்களும் கட்டுப்படுவார்கள். யாரோ இருவரை பிரதிநிதிகளாக்குவதால் என்ன நடந்தது என்பது கடந்த காலத்தில் மக்கள் அறியாததா?

கேள்வி 4:

ஊடகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையைப் பார்க்கும்போது வாய்விட்டு சிரிக்கத் தோன்றுகிறது.

(1) செய்திகள் வெளியிடுவதால் ஒற்றுமை பாதிக்கப்படுமா அல்லது அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வால் பாதிக்கப்படுமா?

“அவங்க என்ன வேணும்னாலும் செய்யட்டும்! நீங்க அதை யாருக்கும் சொல்லாதீங்க” என்று சொல்வது சரிதானா?

(2) நல்ல - கெட்ட செயல்களைக் கண்ணுறும் ஊடகத்தினர் அதை செய்தியாக்குவதை விட்டுவிட்டு நளினமாக அவர்களிடம் பேச வேண்டும் என்று சொல்வதை என்னவென்று சொல்ல? கட்டப்பஞ்சாயத்து செய்யச் சொல்வது போல் இல்லையா இது?

இதுகுறித்து சமாதானக் குழுவின் பதில்கள் என்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.

சுருங்கச் சொன்னால், எல்லோருக்கும் பொதுவான ஐக்கியப் பேரவை குறுகிய வட்டத்திற்குள் இருப்பதையும், தனியார் நடத்தும் ஊடகங்களை எல்லோரின் கருத்துக்களை அறிந்தும் செயல்படச் சொல்வதாக அல்லவா உள்ளது இந்தப் பரிந்துரை?

இது நியாயம்தானா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Refreshing Good News
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [28 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25881

அல்ஹம்துலில்லாஹ். இதற்காக உழைத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக.

வறண்ட நிலத்தில் நல்ல மழை பெய்தது போல் உள்ளது. இதில் சம்பத்தப்பட்ட அனைவரின் உள்ளங்களும் ஈரமாக இருக்க துஆ செய்வோம். இது தனிநபர் சம்பந்தமான விஷயம் இல்லை, நமது குடும்பங்களின் நலன்கள் (ரோடு, தண்ணீர், சுத்தம், ... ) இதில் அடங்கியுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25882

சமாதானக் குழுவுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. இப்படி ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகாதா என்று ஏங்கி நின்ற என போன்றவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இது.

கருத்து வேறுபாடுகள் மனித குலத்துக்கு இறைவன் அளித்த ஒரு நிஉமத்து என்று பெரியவர்கள் கூறுவார்கள். சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 நபித் தோழர்களுக்கு இடையே கூட கருத்து வேறுபாடுகள் இருந்தன. இமாம்கள் இறை நேச செல்வர்கள் கூட இந்த கருத்து வேறுபாட்டுக்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் அவர்களுடைய கருத்து வேறுபாடுகள், இந்த தீனுல் இஸ்லாத்தை மக்களிடம், மனித சமுதாயத்திடம் ஷரீஅத்துக்கு உள்பட்டு கொண்டு சேர்ப்பதில் , கண்மணி நாயகம் அவர்களின் வாக்கையும் வாழ்வையும் தம் இரு கண்களாக போற்றி அவர்கள் அடியொற்றி நடப்பதிலே மக்களை ஈடு படுத்த பயன்பட்டன.

ஆனால் துரசிர்ஷ்டவசமாக நமது கருத்து வேறுபாடுகள் உலக ஆதாயத்துக்காகவும் சொந்த சுய நலன்களை நோக்கமாக கொண்டதாகவும் இருப்பதால் நாம் சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு விடியலும் இரவானால் பகல் ஒன்று வந்திடும் என்பதை சொல்கிறது என்பது போல் இந்த செய்தி வந்துள்ளது.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். நீர் வெட்டி நீர் பிரியாது என்பார்கள். நெறியூட்டி அறிவூட்டி நம்மை வளர்க்க வேண்டியவர்கள் வெறியூட்டி வளர்க்க நாம் இடம் கொடுக்காமல் இப்போது பெரியவர்கள் வகுத்து தந்த பாதையில் நமது இலக்குகளை அடைய முற்படுவோமாக. விட்டுக்கொடுத்ததால் பல சாம்ராஜ்யங்கள் அந்த நபி தோழர்களின் பாதங்களை முத்தமிட்டன என்ற வரலாறு தெரிந்தவர்கள் நாம். எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு மறுமலர்ச்சியை இந்த ஊரில் ஏற்படுத்தி, நமது உரிமைகளை வென்றெடுக்க எல்லோரும் ஒரே குரலில் ஒரே குடையின்கீழ் திரண்டு நின்று போராட அருள் புரிவானாக. படங்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

ALLAAHUMMALHIMNAA MARAASHIDHA UMOORINAA VA AGHITHNAA MIN SUROORI ANFUSINAA VA MIN SAYYIAATHI AUMAALINAA......AMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஒற்றுமை ஓங்கட்டும்,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [01 March 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25908

நகராட்சியில் நிலவிவந்த அசாதாரண சூழ்நிலையால் தீர்மானங்கள் நிறைவேற்றபடாமல், மக்கள் பணி செயலற்று போயிருந்த சூழ்நிலையில் இதற்கு தீர்வு காணும் முகமாக முஸ்லீம் லீக் பொதுசெயலாளர் மற்றும் பெரியர்வகள் முயற்சியால் KMT யில் வைத்து இரண்டு தரப்பினரும் கலந்த ஒரு புரிந்துணர்வு கூட்டம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கழித்து சமாதான குழுவினரின் பரிந்துரை நகர்மன்றதலைவி மற்றும் உறுப்பினர்கள் இடத்தில் வழங்கபட்டு உள்ளது.

இந்த பரிந்துரையில் குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் நன்கு ஆய்வு செய்து அனைவரின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு முந்திய நாள் நடந்த நகராட்சி கூட்டத்தில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றபடாமல் தலைவி CMA அலுவலகத்தில் மன்றத்தை கலைக்க கோரிக்கை வைத்ததாக கூறி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். இந்த சம்பவம் சற்று அமைதியான போக்கில் சென்ற நகராட்சி மீண்டும் மோதல் போக்குக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்படியே தலைவிக்கு உறுப்பினர்களை பிடிக்கவில்லை. உறுப்பினர்களுக்கு தலைவியை பிடிக்கல என்று இன்னும் பாக்கி இருக்கிற மூன்று அரை வருடம் எப்படி கழியும் என்ன வேலை நடைபெறும் என்பது மக்களின் வேதனையாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சமாதான குழுவினரின் பரிந்துரை இரண்டு தரப்பினர்களால் செயல் படுத்தபடுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஊரு நன்மையை கருத்தில் கொண்டு தங்கள் சுய வேலைகலை ஒதுக்கி மக்களின் நன்மைக்காக சுமூகமான சூழ்நிலையை நகராட்சியில் ஏற்படுத்த நல்ல ஆலோசனைகளை கொண்ட சமாதான குழுவினரின் பரிந்துரையை ஏற்றுகொள்வது மக்களுக்கு செய்யும் கடமையாகும்.

எனவே தலைவியும், உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மக்களின் பிரதிபலிப்பு மேலோங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. நல்லது நடக்கும் என நம்புவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. புண்ணியமிகு புனர்காலை புனித காயலில் புனரப்போகிறது இன்ஷா அல்லாஹ்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU) [01 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25916

அல் ஹம்திலில்லாஹ்! அருமையான முயற்சி இவ் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு வித்தூன்றிய அனைத்து இதயங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்! நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்!

அருமையான சமாதான குழு ,பெருமைக்குறிய பல பெரியோர்கள்,கண்ணியமிகுபலபுண்ணியவான்கள், முழுபொலுதும் ஊர் நலனின் ஒரே எண்ணத்துடன் உலாவரும் ஊரின் முதுகெலும்புக்கொப்பான மனித புனிதர்கள் ஆகியோர்கள் அடங்கிய இக்கூட்டு குழு!.

இக்குழுவின் முயற்சியால்,இதுவரை இருந்து வந்த கசப்பு மிகுந்த காயலின் இருட்டு நீங்கி,இனிமேல் இதயம் குளிரும் இனிய பூபால இசைகலந்த புனர் காலைபொழுது புனித காயலில் புனரப்போகிறது,என்ற நம்பிக்கையை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை கொண்டு அனுபொலுதும் எதிபார்ப்போமாக!

ஊர் மக்களாலும்,ஒற்றுமை விரும்பிகளாலும் வரவேற்கும் இவ் ஒற்றுமை கூட்டு குழுவினர்களே, உங்களுக்கு நல் யோசனை தருகிறோம் என்று நயவஞ்சக வார்த்தைகளுடன் சோற்று கட்டில் பெருச்சாலியை புதைத்து புனித மிகு பொக்கிஷம் என்று உங்களிடம் திணிக்க தந்திரமாக கங்கணம் கட்டிக்கொண்டு வரும் குறுக்கு புத்தி குள்ளநரிகுனதான்களை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாதீர்கள்,அவர்களை எல்லாம் இனம் கண்டு எடுத்தெறிந்து விடுங்கள்!

நேர்மையான எண்ணங்களுக்கும்,முயற்சிகளுக்கும் எல்லோர் மனம் குளிரும் வெற்றியை த் தந்தருள்வான ஆமீன்!

மேன்மைக்குறிய கூட்டு குழுவினர்களே, ஊடகங்களின் விசியத்தில் மறுமுறையும் உங்கள் மென்மையான கவனத்தை செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. எனது வார்டு மக்களுக்கு நான் இது சம்பந்தமாக பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [01 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25917

எனது வார்டு மக்களுக்கு ஒரு உண்மை தகவல்...

சமாதான குழுவில் துண்டு பிரசுரம் கண்டு அதிர்ச்சி... இறைவனை முன் நிறுத்தி எனது வார்டு மக்களுக்கும் எனக்கும் உண்மையை சமாதான குழு (விளக்கத்தை) சொல்லுவார்களா...?

சென்ற 29-12-2012 அன்று இரவு கே.எம்.டி. மருத்துவமனை கூட்ட அரங்கில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் - நகராட்சி தலைவர் - மன்ற உறுப்பினர்கள் - ஊடகங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்று நகரில் துண்டு பிரசுரம் (நோட்டீஸ்) சமாதான குழுவின் சார்பாக கொடுக்க பட்டது அதை என் பார்வைக்கு படிக்கும் போது மிக வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்..!

மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்று உள்ளது.. இரவு கே.எம்.டி. மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு 13வது வார்டு உறுப்பினராகிய எனக்கு அழைப்பு விடுதீர்களா..? 18 உறுபினர்களில் வெறும் இரண்டு உறுப்பினர்களை (ஜனாப் ஏ.லுக்மான் எம்.சி., ஜனாப் எம்.ஜஹாங்கீர் எம்.சி.) மட்டும் வைத்து கூட்டம் போட்டுள்ளீர்கள்... உறுப்பினராகிய என்னை ஏன் அழைக்கவில்லை என்பதற்கு இந்த சமாதான குழுவினர் எனக்கும் எனது 13வது வார்டு மக்களுக்கும் விளக்கும் தாருங்கள்... உங்கள் விளக்கத்தை எதிர் பார்த்தவனாக எனது கேள்வியை எனது வார்டு மக்களின் சார்பாக முடிக்கின்றேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சரண் அடைவதும் ஒருவகை வியுகமே!
posted by kavimagan.m.s.abdulkader (doha-qatar) [01 March 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25919

இந்தப் பேச்சுவார்த்தை துவங்குவதற்கான அடித்தளம் அமைத்த தாய்ச்சபையின் ஊழியர்கள் சகோதரர்.அபூபக்கர்,வாவு.சம்சுதீன் காக்கா மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்தினை பதிவு செய்கிறேன்.அல்லவை நீங்கி நல்லவை நடந்திட,நீங்கள் எடுத்திடும் இந்த முயற்சி வெற்றிபெற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

ஒரு பிரச்சனை உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதன் மூல காரணி ஒன்று இருக்கும்.அதனை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உண்டு. ஒன்று,அதனை முற்றிலுமாக துடைத்து எறிவது.மற்றொன்று .அதனிடமே பரிபூரணமாக சரண் அடைந்து விடுவது.இப்போது முன்னெடுத்துச் செல்லப்படுவது இதில் இரண்டாவது ரகம் என்பதனை உணர முடிகிறது.எது, எப்படியாயினும்,ஊர் நன்மைக்கு உங்கள் வியுகம் வித்திடுமானால் அனைவருக்கும் மகிழ்ச்சியே!

இங்கு இன்னொரு விஷயத்தை கவனத்தோடு பதிவு செய்வது அவசியமான ஒன்று.சமாதான நடவடிக்கைகளை ஆதரிப்பது போன்று படம் காட்டும் ஒரு கும்பல்,காழ்ப்புணர்ச்சியோடு பல செய்திகளைப் பரப்பி வருகிறது.அந்த முகவரியற்ற முகங்களுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

தி.மு.க.திராவிட நாடு கேட்பதைக் கை விட்டாலும்,அதனை கேட்டதற்கான காரணிகள் மட்டும் அப்படியே இருக்கிறது என்று சொன்னார்.அது போல,இந்த விஷயத்தில்,வெகு ஜன மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத ஒரு குழு,புதிய அதிகார மையமாக உருவெடுத்து,தற்காலிக அமைதி ஏற்பட்டாலும்,அதன் மூல காரணமான தனி நபர் நாட்டாமை ஒடுக்கப் படும் வரை,கடந்த முறை,இந்த முறை போன்று அடுத்த முறை தேர்ந்தெடுக்கப்படும் நகர்மன்றமும் இதே அவல நிலையை சந்திக்க நேரிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Salai S Nawas (singapore) [02 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25939

மேலோட்டமாக பார்த்தால் நல்ல முயற்சி என்றே தோன்றியது. ஆனால் எங்கள் 13 வது வார்டு உறுப்பினர் சம்ஸ் மாமா அவர்களின் கருத்து படித்து பார்த்த பிறகுதான் எங்கோ விஷ விதை தூவ பட்டு இருப்பதை உணர முடிகிறது.

அடுத்தவர்களின் குரல்வளை நெறிக்கப்பட்ட ஒரு சமாதன முயற்சி. எதோ ஊருக்கு நல்லது நடந்தால் சரிதான் என்று மற்ற சாமானியர்கள் போல நானும் இலவு காத்த கிளியாய் ..

-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தவ்ஃபீக் செய்வானாக ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்) [02 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25945

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

இது ஒரு நல்ல செய்தி என்பதைவிட , மி௧வும் மகிழ்ச்சியான, ஊர் மக்கள் அனைவருக்கும் நிம்மதியைத் தரவல்ல செய்தி என்று சொல்வதே பொருத்தமாகும்.

இதற்கான முயற்சியை ஆரம்பம் செய்தவர் முதற்கொண்டு அந்த முயற்சிகளை தொடங்கியவர்களிருந்து அதை தொடராக பொறுப்புடன் செய்து நம்மவர்கள் மத்தியிலிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வைக்கின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ்! இம்மையிலும் , மறுமையிலும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.

---------------------------

சமாதானக் குழு ஏற்படுத்தப்பட்டு, பரிந்துரை ஒன்றையும் தயாரித்து, அப்பரிந்துரையை, காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இணையதள ஊடகங்களின் நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைத்தும் இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

நம்மவர்களிடம் உள்ள பல கருத்துக் குழப்பங்களுக்கு மத்தியில் சமாதான குழு ஏற்பட்டு பரிந்துரையை ஒப்படைக்கும் அளவிற்கு நமக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது என்றால் - நிச்சயமாக வருங்காலத்தில் நாம் அனைவரும் எல்லா விசயங்களிலும் ஒன்றுபடுவோம், ஒற்றுமையாக இருப்போம் என்பதற்கான முதல் படிதான் இது என்பதை - நம் மக்கள் உணர வேண்டும். அதற்கு துணை புரிந்த அல்லாஹ்வுக்கு நன்றி கூற வேண்டும்.

---------------------------

உண்மையாகவே! நாம் அனைவரும் சமாதானமாக இருக்க வேண்டும், ஊரும், மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்குமேயானால் , இந்த சமாதான குழுவில் அல்லது சமாதான குழு ஏற்படுத்திய உடன்பாட்டில் எதுவும் குற்றம் குறைகளை காணாது , அதை பொருட்படுத்தாது இருப்பதே நமக்குள் என்னாளும் ஒற்றுமையை உண்டாக்க வழி ஏற்படுத்தும்.

என்னைப் பொருத்தவரை இதில் குற்றம் இருக்கிறது இது தவறு என்றோ! - இல்லை இதில் குற்றம் , குறை இல்லை எல்லாம் முறையாகத்தான் நடந்திருக்கிறது என்று பாராட்டவோ முடியாது , அதை இந்த தருணத்தில் சுட்டிக் காட்டவும் இயலாது. காரணம் என்னுடைய எண்ணம் , என்னுடைய நோக்கம் எல்லாம் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் , ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே நிய்யத்துதான். அதனால் இந்த தருணத்தில் குற்றம், குறைகளை காண்பது என்பது மடமையாகும்.

--------------------------

ஒன்றரை ஆண்டுகாலமாக நம்முடைய நகர்மன்றம் செயலற்றுக்கிடக்கிறது - அதன் காரணம் யார் , எவர் என்பது நம் அனைவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது எனலாம்.

முழுமையான காரணம் இதுதான் என்று எவரும் உறுதியாக கூற முடியாத நிலையில் இருந்தோம் என்றே சொல்ல வேண்டும்.

உறுதியாக இதுதான் காரணம் என்று எவரும் அறிந்திருப்பார்களேயானால் ஏன் அதை அவர்கள் களைய முன் வரவில்லை? - அதில் ஏதோ ஒரு சிக்கல் இருந்திருக்கிறது என்பதே! அதை சீர்படுத்த முடியாததற்கு காரணம் எனலாம்.

இன்று ஏதோ ஒரு வகையில் நல்ல வழி பிறந்திருக்கிறது - இதை நாம் பற்றி பிடித்துக்கொண்டு ஒற்றுமையை நோக்கி செல்லக்கூடிய பாதையை விரிவுப்படுத்தனுமே அன்றி அதை கெடுத்து ஒற்றுமை குறைவுக்கான வழிகளை உண்டாக்கக் கூடாது.

ஒற்றுமையாக செயல்படத் தொடங்கி அதன் பின் ஏதும் குற்றம், குறைகள் தெரிந்தால் அவைகளை முறையான அணுகுமுறைகளோடு களைவதே நல்லது.

-------------------------------

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை வலிமைப் படுத்துதல் விசயமாகவும் எடுத்திருக்கும் முடிவுகளிலும் குறை காணாது அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமோ அவ்வளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை நிலைநிறுத்துவதே! நம் ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.

அதல்லாமல் பழைய நிகழ்வுகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தால் - காரியங்கள் கைகூடாது. அங்கேயும் குறைகள் இருக்கத்தான் செய்யும் , இருந்தபோதிலும் நாம் அதன் உள்ளே நுழைந்து குறைகளை நிவர்த்தி செய்ய முயலுனுமே தவிர , வசைப்பாடிக் கொண்டிருப்பதில் அருத்தமில்லை.

ஆகவே, முஸ்லிம் ஐக்கியப்பேரவையை வலிமைப்படுத்துவதில் நம்முடைய முழு ஆதரவும் ஒவ்வொருவருக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.

---------------------------------

ஊடகங்கள் பங்களிப்பிற்கான ஆலோசனையும் கவனிக்கப்பட வேண்டியதே!

இதிலே பலருக்கும் பல அபிப்பிராயங்கள் இருக்கும் - எனக்குக்கூட மாற்று கருத்துக்கள் வரத்தான் செய்யும்.

இருந்தாலும் நாம் நம் ஊரை, ஊரின் கலாச்சாரத்தை பார்க்க வேண்டியதாக உள்ளது.

பத்திரிக்கை தர்மம், ஊடக தர்மம் என்று பல தர்மங்களையும் பார்க்கின்ற நாம் அசல் தர்மத்தை பார்ப்பதில்லை.

நம் எல்லோருடைய குறிக்கோளும் ஊரின் நன்மையை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அப்படி ஊரின் நன்மையே நமக்கு முதன்மையானது என்று இருப்போமேயானால் , ஊடகங்களின் தர்மத்தை சற்று விலகியே வைக்கவேண்டும்.

ஊடக விசயத்தில் உண்மையான உழைப்பும், ஊர் மக்களுக்கு ஆற்றும் சேவையும் , நன்மைகளும் ஆற்றல் உள்ள ஊடகங்களை தனியாகவே எடுத்துக்காட்டும்.

எனவே ஊடகங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது - மேலும் இன்று ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகிறது கட்டுப்பாடு அல்ல , வரை முறைதான் என்பதை ஊடகத்தார்கள் உணர வேண்டும்.

இந்த வரைமுறைகள் கூட விரைவில் ஓரளவு தவிர்க்கப்படும் என்பதயும் நம்பலாம். எனவே , ஊடகத்தார்கள் ஊருக்காக உதவ முன் வாருங்கள்.

-----------------------------------

மேலும், இந்த பிரச்சனைகள் எல்லாம் சாதாரணமானவைதான் ஆனால் இது அல்லாமல் வேறு பிரச்சனைகள் நம் கண்ணுக்கு தெரியாமல் அல்லது தெரிந்தும் நாம் புரியாமல் நம்மை சுற்றி பல இருக்கின்றன.

அவைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது இந்த ஒற்றுமை குறைவு இருந்தால் சாத்தியமாகாது.

ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமை என்னும் கைற்றைப்பற்றிப் பிடித்து, நமக்கு ஏற்படும் துன்பங்களை களைந்து, நம் வருங்கால சந்ததிகள் சுபிட்சமாக வாழ வழி வகுப்போமாக.

பொதுவான காரியங்களில் கொள்கை, கோட்பாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வெற்றிப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்! நமக்கு தவ்ஃபீக் செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இதுதான் என்னுடைய முதல் கமெண்ட்
posted by Mohamed Salih (Bangalore) [07 March 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 26078

இதுதான் என்னுடைய முதல் கமெண்ட் ( நகராச்சி சம்பதமாக ) என்று நினைகிறேன் ...

அல்ஹம்துலில்லாஹ். இதற்காக உழைத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக.

சமாதானக் குழுவுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

இப்படி ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகாதா என்று ஏங்கி நின்ற என போன்றவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இது.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved