Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:16:06 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10530
#KOTW10530
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 1, 2013
நச்சு வாயுவை நானே உணர்ந்தேன்! ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்!! - மாவட்ட ஆட்சியர்
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2735 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயு தொடர்பாக, மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம் சரியான தகவலை அளிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையும் ஆர்.டி.ஓ.விடம் பொய்யான தகவலையே அளித்துள்ளது.

பின்னர் சென்னையிலிருந்து வந்த மாசுக்ட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் புகைபோக்கியில் ஆய்வு செய்தபோது, 1250 மில்லி கிராம் என்ற - அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, 2900 மில்லி கிராம் நச்சு வாயுவை வெளியேற்றியது தெரிய வந்துள்ளது. நச்சு வாயுவின் பாதிப்பை நானே உணர்ந்தேன்.

மேலும் இது தொடர்பாக தூத்துக்குடியிலுள்ள 3 சங்கங்களும், 12 தனி நபர்களும் ஸ்டெர்லைட் ஆலை மீது புகார் அளித்துள்ளனர். புகாரளித்தவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு, இன்னும் ஒரிரு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களது உத்தரவை ஆலை நிர்வாகத்தால் ரத்து செய்ய முடியாது. இந்த உத்தரவிற்கு தடை பெறவோ, ஆலையைத் திறக்கவோ நீதிமன்றத்தை மட்டுமே ஆலை நிர்வாகம் அணுக முடியும்.


இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஸ்டெர்லைட் ஆலை
posted by HAFIL AMEER. A (DUBAI) [01 April 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26601

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் மூடு விழா கண்டால் நன்று.

அதைப்போல DCW உம் மூடினால் நமக்கு மிக நன்றாக இருக்கும், இதற்க்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தாள் நன்றாக இருக்கும், நடக்குமா என்று பொறுத்திருந்து பாப்போம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26602

துடிப்பாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பல கோடி நன்றிகளும் பாராட்டுக்களும்.

மாவட்டத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகளும் ஒத்துழைத்தால் தான் மக்கள் பணிகள் சிறப்பாக இருக்கும். அதிகமானோர் மக்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கு பதிலாக வேறு யாருக்கோ விசுவாசமாக இருப்பது தான் பிரச்சனையின் மூல காரணம்.

நானும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) சார்பாக, மாவட்ட ஆட்சியரிடம் DCW மாசு சம்பந்தமாக மனு கொடுக்கும் குழுவினருடன் சென்று இருந்தேன், மக்கள் குறை கேட்கும் நாள் அன்று, தூத்துக்குடிக்கு.

ஆட்சியர் அவர்கள் அன்று வருவார்கள் வருவார்கள் என்று காத்து இருந்து, கடைசியில் அவர்கள் வேறு அவசர வேலை காரணமாக கூட்டத்திற்கு வர இயலாததால், கூட்டத்திற்கு தலைமை ஏற்ற அதிகாரியிடம், நினைவூட்டல் மனுவை கொடுத்ததும், அவர்கள் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை அழைத்து, இதன் நடவடிக்கை என்ன என்று வினவ..

அவரோ, மிகவும் பொறுப்பாக பதில் அளித்தார்கள்.

" எங்க கடமை முடிந்து விட்டது, DCW சம்பந்தமான அறிக்கையை சென்னைக்கு அனுப்பிவிட்டோம், , முன்பே ஒரு பகுதியை மூட ஆணை பிறப்பித்தோம், ஒன்றும் பயன் இல்லை, ஆக சென்னை அதிகாரிகள் தான் முடிவு செய்யனும்" என்ற கையாலாகாத பதிலை சொன்னார். அன்றே சுர்க்க் என்று மனதில் பட்டது. இவர்களின் விசுவாசம் எங்கு என்று.

இன்று, மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெளிவாக்கி விட்டது.

____ " தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயு தொடர்பாக, மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம் சரியான தகவலை அளிக்கவில்லை "..

மக்களே புரிந்து கொள்ளுங்கள்...

ஒரு அரக்கனுக்கு ஆப்பு அடித்து விட்டார்கள், DCW அரக்கனுக்கு என்று ஆப்பு அடிப்பார்களோ.. !!

( ஆப்பு என்ற வார்த்தையை சொன்னாலே பலருக்கு கடுப்பு வருகிறது, ஆக ஆப்பு என்ற வார்த்தைக்கு பதிலாக, உங்களுக்கு விருப்பமான வார்த்தையை உபயோகிக்கவும் )

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved