Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:32:53 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10617
#KOTW10617
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 19, 2013
நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நகர்மன்ற சிறப்புக் கூட்டம்! போதிய உறுப்பினர்கள் இல்லாததால் நடைபெறவில்லை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3070 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கி, தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டம் நடைபெறவில்லை. விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் உள்ள 24 நகராட்சிகளில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் (BIO-GAS PLANT) அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிப்பு செய்தார்.

மேலும், பழுதடைந்துள்ள காயல்பட்டினம் நகர்மன்றக் கட்டிடத்தை புதுப்பிக்க 1.5 கோடி ரூபாயும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கும், இதர நலத்திட்டப் பணிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றுவதற்காக, இன்று மதியம் 03.00 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடத்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அழைப்பு விடுத்திருந்தார். நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இக்கூட்டத்திற்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மான முன்வடிவு வருமாறு:-



இக்கூட்டத்திற்கு, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மட்டுமே வருகை தந்திருந்தார். போதிய உறுப்பினர்கள் இல்லாததால், கூட்டம் நடைபெறவில்லை.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டியதிருப்பதாலும், பல உறுப்பினர்கள் ஊரிலில்லாத காரணத்தாலும், நன்றி தெரிவிக்கும் கூட்டப் பொருளையும் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மன்றக் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தனக்கு கடிதம் அளித்துள்ளதாக, நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் கூட்டத்தில் தெரிவித்தார். அக்கடிதம் வருமாறு:-



இக்கூட்டத்திற்கான கூட்டப் பொருள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை, 3 உறுப்பினர்கள் ஊரிலில்லாததால் பெறவில்லை என்றும், ஏனைய உறுப்பினர்கள் கடிதத்தை வாங்கவில்லை என்றும், கடிதத்தைக் கொடுக்கச் சென்ற நகராட்சி அலுவலர் ஏ.முஹம்மத் அலீ, நகராட்சி ஆணையருக்கு பின்வருமாறு அளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்:



பின்னர், இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கருத்து தெரிவிக்கையில்,

காயல்பட்டினம் நகராட்சிக்கு நலத்திட்டங்களை வழங்கி, தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில், போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், கூட்டத்தை நடத்த முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும், நகர மக்களின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களிடமிருந்து பெருவாரியாக கையெழுத்துக்களைப் பெற்று, முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





செய்தியாளர்களுக்கு நகர்மன்றத் தலைவர் அளித்த பேட்டியின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!

பின்னர், நகர்மன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற - தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கையெழுத்து சேகரிப்பு படிவத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் துவக்கமாக கையெழுத்திட்டார். 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனும் அப்படிவத்தில் கையெழுத்திட்டார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இதனால் நகரமன்ற தலைவிக்கு எந்த கை சேதமோ.. இழப்போ அல்ல..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [19 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26945

சமீபத்தில் 17 உறுப்பினர்கள் நகரமன்ற தலைவர் மீது (அல்லாஹுவை மறந்து அவதூறான) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை சென்னை உச்சநீதி மன்றம் மதுரை கிளையின் மூலம் நகரமன்ற தலைவி அதை முறியடித்தார்.. தவிடு பொடியாக்கினார்.. நீதி வென்றது... அநீதி தோல்வியுற்றது... இன்னும் அதில் இருந்து இந்த 17 உறுப்பினர்களும் மீளவில்லை என்பதையே காட்டுகிறது.. தலைவி அழைப்பு விடுத்த கூட்டமல்லவா... ஆகையால் இக்கூட்டத்தில் பங்கு பெறாதது இதன் மூலம் தெளிவாகிறது...

வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் நகரமன்ற சாதாரண கூட்டத்திற்கும் இதே தலைவிதான் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து கூட்டத்தை கூட்ட இருக்கிறார். அக்கூட்டத்தில் நகரமன்ற தலைவி அவர்கள் தமிழக முதலவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வருவது உறுதி... உறுதி..

திரும்பவும் தலைவியே 25ஆம் தேதி கூட்டும் கூட்டத்தில் 17 உறுப்பினர்களும் முடிந்தால் கலந்து கொள்ளுங்கள்.. தமிழக முதலவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை உறுப்பினர்களாகிய நீங்கள் எதிர்க்க நினைத்தாள் அக்கூட்டத்தை புறக்களியுங்கள் அல்லது அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யுங்கள்.. இதனால் நகரமன்ற தலைவிக்கு எந்த கை சேதமோ.. இழப்போ அல்ல..

தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்து இருக்கின்ற திட்டம் நகரமன்ற தலைவிக்கோ - உறுப்பினர்களாகிய உங்களுக்கோ அல்ல..! காயல்பட்டினத்தில் வாழும் பெருவாரியான அணைத்து சமுதாய மக்களுக்குரிய திட்டம் தான் என்பதனை விளங்கி கொள்ளவதே சரியாகும்..

நகர மக்களாகிய (அணைத்து சமுதாய மக்களாகிய) நாங்கள் தமிழக முதலவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 25 ஆயிரம் கையெழுத்து சேகரித்து தமிழக முதல்வரின் தனி அறை (CM செல்) க்கு அனுப்பி கொள்கிறோம்... காயல்பட்டினம் நகராட்சிக்கு நல திட்டங்கள் பல தந்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி,,, நன்றி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. a different guy ( only one)
posted by Moosa Sahib (Kayalpatnam) [19 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26947

எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் காக்கா எல்லா மன்ற கூட்டத்திலும் நீங்கள் மன்ற பணிகள் சிறப்புடன் செயல் பெற உறுதுணையோடு செயல் படுகிறீரர்கள்.

உங்களை தேர்ந்து எடுத்த மக்கள் பாக்கியவான்கள். உங்களுக்கு இறைவன் memmaalum ஊருக்கு சேவை செய்ய கூடிய manappangai தந்து அருள் வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [19 April 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26952

இது எல்லாம் மக்களுக்கு பழகிப்போச்சு..!!

ஒழுங்காக கூட்டம் நடைபெற்று இருந்தால், அது தான் செய்தி.

சரிங்க, இது மாதிரி சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு படிக்காசு உண்டுமா.?

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re: ...
posted by Abdul Wahid S (Kayalpatnam) [20 April 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 26961

3 உறுப்பினர்கள்தான் ஊரில் இல்லையாம்!. மற்றவர்கள் வாங்க மறுத்துவிட்டதாக அல்லவா இந்த செய்தி அறிவிக்கின்றது! துணைத் தலைவரின் கடிதத்தின் நண்பகத் தன்மை ?

தம்பி ஜியாவுதீன் கவனத்திற்கு : கூட்டப்படி ரூபாய் 600/- சிறப்புக் கூட்டத்திற்கு கிடையாதாம்.

நகராட்சியிலிருந்து வெளியேறும்பொது சாச்சா அந்தோணி உள்ளே வந்தார். ஏன் சச்சா கூட்டத்திற்கு வரவில்லை என்று அவருக்கு நன்கு அறிமுகமான பார்வையாளர்களாக வந்திருந்த சிலர் வினவினார்கள். அதற்க்கு சாச்சா "எனக்கு கூட்டத் தகவல் வரவில்லை" என்று பதிலுரைத்தார்.

உடனே தகவல் கொண்டுசென்ற நகராட்சி அலுவலர் முஹம்மத் அலியிடம், "சாச்சாவிடம் ஏன் தெரிவிக்கவில்லை?" என்றதும் அவர் உடனே சாச்சாவிடம் நான்தானே கொண்டுவந்தேன்? நீங்கள் வாங்க மறுத்து விட்டீர்களே" என்றார். ஆமாம் யாரும் அந்த தகவல் கடிதத்தை வாங்கவில்லை அதனால் நானும் வாங்கவில்லை என்று தனது பரிதாப நிலைமையை கபடமின்றி வெளிப்படுத்தினார் அவர். (மனசாட்சி உள்ள இவரை) எந்த அளவுக்கு இவரை கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள் என்பது தெளிவானது.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved