Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:25:03 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10646
#KOTW10646
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 23, 2013
அதிமுக நகர துணைச் செயலாளர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2947 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளர் ஏற்பாட்டில், நீர் மோர் பந்தல், காயல்பட்டினம் கூலக்கடை பஜாரிலுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி அணுகுசாலை முனையில், 22.04.2013 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.



கட்சியின் மேலவை பிரதிநிதியும், காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றினார்.



கட்சியின் வார்டு கழக செயலாளர்களான எம்.செந்தமிழ், எம்.எஸ்.நிஜார், மங்கை ஒய்.சுயம்பு, எம்.இ.எல்.புகாரீ, இ.காசிலிங்கம், பூவை எஸ்.சிவபெருமாள், எஸ்.ஆறுமுகநெயினார், காயல் பி.ஆதி, எஸ்.டி.மரைக்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் பட்டணம் எம்.கணேசன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்தார்.







பின்னர், சேது எம்.முருகன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, கட்சியின் நகர பேச்சாளர் ஹாஜி எஸ்.ஏ.மெய்தீன் சிறப்புரையாற்றினார்.



காயல்பட்டினம் நகருக்கு நலத்திட்டங்களை வழங்கி, சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் ஒற்றைத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, இம்மாதம் 19ஆம் தேதியன்று நடைபெறவிருந்த காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், அண்மையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததற்கு அவர் தனதுரையில் கண்டனம் தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும் நோக்குடனேயே அவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், அதை உணராமல் அவர்களை கட்சியில் இணைத்துக்கொண்ட - தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனைக் கண்டித்துப் பேசிய அவர், உள்நோக்கத்துடன் கட்சியில் இணைக்கப்பட்டுள்ள இந்த நகர்மன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் கூறினார்.

காயல்பட்டினம் நகர்மன்றத்திற்குத் தொடர்பில்லாத ஒருவர் தனது பணபலத்தால் நகராட்சி நிர்வாக நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிட்டு, நகரை சீரழித்து வருவதாகவும், விரும்பத்தகாத இப்போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நகரில் கட்சி நலனுக்கு மாற்றமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் அனைத்தையும் கட்சியின் மேலிடத்திற்கு முறைப்படி தகவல் அளித்துக்கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

காயல் எஸ்.புரட்சி சங்கர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், கட்சியின் நகர உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கட்சியின் நகர துணைச் செயலாளர் ஹாஜி கே.ஏ.சேகு அப்துல் காதர் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.

தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்

படங்கள்:
A.K.இம்ரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohmedyounus (Muscat) [23 April 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 27037

ஐந்து பேர் இருக்குற கட்சியில் ஆறு கோஷ்டிகள் போல.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [23 April 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27038

பாராட்டுக்கள்.

பல கோஷ்டிகள் இருந்தால் நல்லது தான், பல நீர் மோர் பந்தல்கள் அவரவர்களால் திறக்கப்படும். மக்களுக்கு நன்மை தான்.

சரிங்க, இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பந்தலில் மோர் கொடுப்பது தொடர்கின்றதா? பானைகளில் தூய குடிநீர் நிரப்பப்படுகின்றதா?

கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை வராமல் இறைவன் காப்பானாக.!

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Cnash (Makkah) [23 April 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27039

ஷ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.......பா ... இதை முன்மாதிரியா கொண்டு எல்ல கட்சின் கோஷ்டியினரும் திறக்க வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் கட்சி .. அப்போ தான் வீட்டுக்கு ஒரு பானை தண்ணி கிடைக்கும்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வரவேற்போம் நல்லபடி!
posted by OMER ANAS (DOHA QATAR..) [23 April 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 27041

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கூட கோஸ்டி சண்டை மாறாமல்,தினமும்,முக்குக்கு முக்கு மோர் பந்தல் திறந்து வைக்கும் அதிமுகவின் உண்மை தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்த நேரத்துல ஊருல இல்லாம போய்ட்டோமேன்னு ரொம்ப கவலையா இருக்கு நம்ம கட்சி தொண்டர்களுக்கு...! மாமா அமைச்சருக்கே ஆப்பு வச்சதை பார்க்கும் போது, உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!

நமக்கென்ன...கம்முன்னு நேற்று போல் இன்றும் நாளையும், வாழ்த்தி வரவேற்ப்போம் இதை நல்லபடி...! அடுத்த மோர் பந்தலை எதிர் பார்த்தபடி...!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தலையீடு மற்றும் நேரம் இருக்காது என நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [24 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27058

காயல்பட்டினம் நகர்மன்றத்திற்குத் தொடர்பில்லாத ஒருவர் தனது பணபலத்தால் நகராட்சி நிர்வாக நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிட்டு, நகரை சீரழித்து வருவதாகவும், விரும்பத்தகாத இப்போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். (C - P)

இன்ஷா அல்லாஹ்.. அதற்கான நேரம் நெருங்கி விட்டது... இனி அதற்கான தலையீடு மற்றும் நேரம் இருக்காது என நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன..! பொறுந்து இருந்து நாம் பார்போம்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved