Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:17:42 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10686
#KOTW10686
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 29, 2013
நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான அறிவிப்பை உறுப்பினர்கள் திரும்பப் பெற்றதாக நக. நிர். மண்டல இயக்குநர் அறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3483 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மீது 11 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் (ஆர்.டி.எம்.ஏ.) காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர இதர 17 உறுப்பினர்களும், கடந்த மார்ச் மாதம் 08ஆம் தேதியன்று கடிதம் அளித்திருந்தனர்.

அதனடிப்படையில், நடப்பு ஏப்ரல் மாதம் 05ஆம் தேதியன்று சிறப்புக் கூட்டம் நடத்தி, அம்மனு குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் டி.மோகன் அறிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு மீதான விசாரணை இம்மாதம் 01ஆம் தேதி நடைபெற்று, பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும், இம்மாதம் 03ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.

இறுதியில், நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று கூறி, இம்மாதம் 5ஆம் தேதியன்று நடைபெறவிருந்த - நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த சிறப்புக் கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், நகர்மன்றத் தலைவருக்கெதிராக கடந்த மார்ச் மாதம் 08ஆம் தேதியன்று தாங்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மான அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மேற்படி 17 உறுப்பினர்களும் தெரிவித்துள்ளதாகவும்,

அதனடிப்படையில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரால் இம்மாதம் 05ஆம் தேதி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த சிறப்புக் கூட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் டி.மோகன் கைச்சான்றிட்ட கடிதம், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பின்வருமாறு அளிக்கப்பட்டுள்ளது:-



இவ்வாறு அக்கடிதம் அமைந்துள்ளது.

தகவல்:
M.S.M.ஷம்சுத்தீன்
13ஆவது வார்டு உறுப்பினர்
காயல்பட்டினம் நகராட்சி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [29 April 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27117

அடடா.. வடை போச்சே....!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [29 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27119

நீதிக்கும், அக்கிரமத்திற்கும் நடந்த அறப்போர். பொது மக்களிடம் மேடையிட்டு, உண்மையை முறையிட்டு, அராஜக ராஜாவை அடையாளம் காட்டியதின் தீர்வுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நம்புண்ணிய ஊருக்கு புனர்ஜென்மம் பிறக்கப்போகிறது.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [29 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27120

இன்னல்லாஹ் மாஷாபிரீன். பொறுமையானவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும்!

நீர் அடித்து நீர்விலகுவதில்லை,சற்று சுற்றி வளைத்து வலம்வந்து பார்போமேயானால் எல்லோரும் ஒருவகையில் சொந்தங்களாகத்தான் இக்காயல்பதியில் பிறந்து வளர்ந்து வருகிறோம்!

அனைத்து அன்புள்ளங்களே, இனி உங்கள்முன் நிற்கும் கடமை, நம் கண்ணியகாயலை கட்டியெலுப்ப வேண்டிய தருணம் வந்து விட்டது.

போதாதவர்களின் கண்பட்டு சிறிது புழுதிபடிந்திருக்கும் நம்புண்ணிய ஊருக்கு புனர்ஜென்மம் பிறக்கப்போகிறது. அப் போற்றுதலுக்குறிய பயன், நம்பொறுமையின் பரிசே! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்.
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சூழ்ச்சிகள் கவிழும்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [30 April 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27123

சூழ்ச்சியாளர்க்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் ஒருவன் இருப்பதை மறந்து ஆட்டம் போட்டால் இதுதான் நிலை.

Anyway, இந்த வாபஸ் செய்திக்கு பின்னால் திரைமறைவில் என்ன நடந்தது, யாரு தலைமையில் நடந்தது என்பது நமக்கு தெரியாவிட்டாலும், அந்த நல்ல மனிதர்களுக்கு நன்றி, மற்றும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மிக பெரிய பிரச்சனைகளை அதிகாரிகள் முதல் உறுப்பினர்கள் வரை நீதி துறையின் கேள்விகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும் என்பதால் இந்த வாபஸ்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [30 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27125

Anyway, இந்த வாபஸ் செய்திக்கு பின்னால் திரைமறைவில் என்ன நடந்தது, யாரு தலைமையில் நடந்தது என்பது நமக்கு தெரியாவிட்டாலும், அந்த நல்ல மனிதர்களுக்கு நன்றி, மற்றும் வாழ்த்துக்கள். (C - P)

ஹுசைன் நூர்தீன் அவர்களே...

நல்ல பரந்த மனதுடன் தங்களின் கருத்துக்களை பதிகின்றீர்கள்... ஆனால் இந்த வாபஸ் என்பது தற்காலிகமான ஆறுதல் என்று எடுத்து கொள்ளலாம்..! ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் நேற்று நடந்த நகராட்சி சாதாரண கூட்டத்தில் இவர்களின் புரிந்துணர்வு இன்னும் சரியாகவில்லை என்றே கருத முடிந்தன...!

இப்போதைய சூழல் இந்த 17 உறுப்பினர்கள் அனைவர்களும் இதை கட்டாயம் வாபஸ் வாங்கி தான் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது...! இல்லையெனில் மிக பெரிய பிரச்சனைகளை அதிகாரிகள் முதல் உறுப்பினர்கள் வரை நீதி துறையின் கேள்விகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும் என்பதால் இந்த வாபஸ்...!

ஆகையால் ஓரிரு மாதத்தில் இதே உறுப்பினர்கள் இதே நம்பிக்கையில்லா தீர்மானம் வேறு விதமான குற்றசாட்டுகளை குறிப்பிட்டு மீண்டும் கொண்டு வரலாம்...

இன்றைய என் பதிவு நாளை உணர படலாம்.. இதுவே எனது கருத்து...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by PROF.DR.MOHAMED YASIN (UNIVERSITY OF DAMMAM) [30 April 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27128

Dear Mr.Mohideen and Mr.Renganathan

Please give your co-operation to the chairman to establish the constructive plans to the city . Those civilians who chose you also chose Mrs.Abitha Shaik as chairman. Everyone has got his/her credibility, stuff, and admirability . Use your membership such that Your area get atleast few developments .

Nothing we gain at the end if the situation persists like this . On the Other hand act professionally and reach your goal . Including me , No one can interpret his/her personal disputes in official agenda. It would get struck .

God bless you and all......,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...பொறுத்து இருந்து பார்போம்
posted by b.a.buhari (chennai) [30 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27129

அப்பம் திருபியும் நம்பிக்கையில்லா தீர்மான தை உறுப்பினர்கள் மண்டல இயக்குநரிடம் மனுவாக கொடுக்க போகிண்டர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by MS MOHAMMED LEBBAI (DXB) [30 April 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27133

சீச்சீ இந்த பழம் புளிக்கும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [30 April 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27134

அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்பாடா............ஒரு வழியாக இந்த ''' அரபோரட்டம் ''' ( நம் தலைவி அவர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மான ) ஒரு முடிவுக்கு வந்து விட்டது........சந்தோசம் தான் .......இனியாவது நம் நகரமன்ற உறுப்பினர்கள் .....தங்களை தேர்வு செய்து நகர்மன்றத்துக்கு அனுப்பிய தங்கள் தொகுதி மக்களுக்கு நல்லது ..... செய்வார்களா ?? என்ன ... இனியாவது நம் தலைவி அவர்களை கொஞ்சம் செயல் படுத்த விடுங்களேன்.......

தங்கள் தொகுதி மக்கள் முழுக்க தங்களையே நம்பிக்கையோடு ..தங்களையே நம்பி கொண்டு இருக்கிறார்கள் ........தயவு செய்து பொது மக்களை ஏமாற்றி விடாதீர்கள்..........தங்களின் தொகுதிக்கான நல்ல செயல் திட்டங்கள் தான் .....என்றென்றும் பொது மக்களின் மனதில் ரொம்பவும் ஆலமாக பதிந்து இருக்கும் .....இல்லை ...இல்லை ....இருப்பீர்கள்......... நம்பிக்கை என்பது ஒரு ஆலமரம் ( மக்கள் மனது ).....அதை உறுப்பினராகிய நீங்கள் சாய்த்து விடாதீர்கள்.......பின்பு தங்களுக்கு தான் ரொம்பவும் கஷ்டமாகி விடும்.............

நாங்கள் ....நீங்கள் நல்ல ....நல்ல ....திட்டங்கள் ....எல்லாம் தீட்டி ... பொது மக்களுக்கு ( நம் ஊருக்கு ) செயல் படுத்துவீர்கள்....என்று நாங்கள் காத்து இருந்தால் ......எங்களுக்கு கடுமையான ஏமாற்றமாகவே இன்று நாள் வரை இருந்து வருகிறது ........இதன் விடிவும் / முடிவும் ..... தான் என்ன ??

நம் நகர் மன்றதின் நடவடிக்கைகளை நம் ஊர் பொது மக்களும் சரி / வெளி உலகமும் சரி / நம் இணைய தளங்களும் சரி ......மிகவும் உன்னிப்பாகவே கவனித்து வருகிறது ....என்பது யாவர்களும் அறிந்ததே ....அப்படி இருந்துமா .....நீங்கள் ( தலைவி & உறுப்பினர்கள் ) தேவைகற்ற ஒரு சில பிரச்சனைகளால் நம் நகர்மன்றதின் நடவடிக்கைகளும் சரி .... செயல் படாமல் ......பொது மக்களுக்கு எந்த ஒரு நல்ல காரியங்களும் சரி ....போய் சேர்வது இல்லை ..... நமது ஊரும் முன்னேற்றம் அடைந்ததும் இல்லை ........ ( நம் ஊருக்கும் சரி நற் பெயர் இல்லை )....

தயவு செய்து தங்களின் பிரச்சனைகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு .....பொது மக்களை நினைத்து பார்த்து ...நம் ஊருக்கான நல்ல ,, நல்ல செயல் திட்டங்களை வடிவமையுங்கள்...........ஊர் மக்களின் மனதில் இடம் பிடியுங்கள்......

இன்ஷா அல்லாஹ்.நாங்கள் என்றென்றும் தங்கள் யாவர்களையும் நினைத்து பார்க்கும் விதமாக செயல் படுங்கள் .........

இன்று நாள் வரையில் நம் ஊருக்கான நல்ல திட்டங்கள் ஒன்றும் நடந்ததாகவே பொது மக்களாகிய எங்களுக்கு தெரியவே இல்லை .... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...நேர்மைக்கு கிடைத்த கிரீடம்
posted by Mohammed Nooh KA (Jeddah. Sharafiyyah.) [01 May 2013]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27139

நகரமன்ற தலைவியின் செயல்பாடுகளுக்கு மாசு கற்ப்பிக்க முயன்ற வஞ்சகர்களுக்கு நீதி கொடுத்த முதல் சாட்டை அடி.

இனியாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய தலைவிக்கு ஒத்துழைப்பார்கள் என்று நம்புவோமாக.இன்ஷாஅல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved