Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:58:34 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10724
#KOTW10724
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 5, 2013
நகரில் நிலவும் செயற்கை குடிநீர் தட்டுப்பாடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2745 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறதா?

இது குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் துறை அலுவலர் (பிட்டர்) நிசாரிடம் காயல்பட்டணம்.காம் வினவியது. குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை ஏதும் இல்லை என்றும், குடிநீர் விநியோகம் - நான்கு நாட்களுக்கு ஒரு முறை என்பது ஐந்து நாளுக்கு ஒரு முறை என ஆகியிருப்பதாகவும் அவர் கூறினார். குடிநீர் விநியோகம் குறித்து புகார்கள் மக்களிடம் இருந்து வரவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

பொது மக்களிடம் பெறப்பட்ட தகவலோ வேறுவிதமாக உள்ளது. சேது ராஜா தெருவில் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக புகார். சொளுக்கார் தெரு, கொச்சியார் தெருவில் 6 - 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக புகார். குத்துக்கல் தெருவில் 6 - 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக புகார். ஏன் இந்த நிலை?

காயல்பட்டினம் நகராட்சிக்கு தினசரி குடிநீர் வழங்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் துணை பொறியாளர் பாலசுப்ரமணியம் - குடிநீர் வழங்கும் அளவில், எந்த மாற்றமும் இல்லை என்றும், தினசரி 21 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் காயல்பட்டினத்திற்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க - இந்த கோடை காலத்தில் ஏன் செயற்கையாக குடிநீர் தட்டுப்பாடு நிலை காயல்பட்டினத்தில் உருவாக்கப்படுகிறது?

மே 3 அன்று தினத்தந்தி நாளிதழில் காயல்பட்டினம் நகராட்சி சார்பில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் மே 10 ம் தேதிக்குள், நகரில் 6,000 லிட்டர் மற்றும் 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இது குறித்து நகராட்சி அலுவலர் நிசாரிடம் விசாரித்ததில், இது முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்றும், தற்போது நகரில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறினார்.



லாரிகள் மூலம் தண்ணீர் விநோயோகிக்க - நகராட்சியின் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டிற்கு, ஏப்ரல் 29 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தொகை, அரசின் வறட்சி நிவாரண தொகையின் மூலம் செலுத்தப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தண்ணீர் தட்டுப்பாடு நிலை உருவாக வாய்ப்புள்ளதா என காயல்பட்டணம்.காம் உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தது. ஜூன் மாதம் இறுதி வரை எந்த பிரச்சனையும் கண்டிப்பாக ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்த அவர், தென் மேற்கு பருவ மழை துவங்கியவுடன் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையிலும் வறட்சி சூழல் எனக்கூறி லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது காலம்காலமாக நடந்து வரும் முறைக்கேடு என்றும் அவர் தெரிவித்தார்.

காயல்பட்டினம் நகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் ஆத்தூர் நீரேற்றம், பாபநாசம் அணையினை நம்பி உள்ளது. இந்த அணையின் தற்போதைய நீர் அளவு, கடந்த ஆண்டை விட 25 சதவீதம் கூடுதலாகவே உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது அதிகளவு விவசாயத்திற்கு குடிநீர் திறந்து விடப்பட்டு வந்தாலும், குடிநீர் வழங்க பெரும் அளவில் பிரச்சனை இருக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு - காயல்பட்டினம் நகராட்சியில் - லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதில் பல புகார்கள் வந்தன. ஒரு லாரி தண்ணீரின் கட்டணம் நிர்ணயம் குறித்து குற்றச்சாட்டுக்கள் நிலவின. வழங்கப்பட்ட தண்ணீரின் தரம் குறித்து குற்றச்சாட்டுக்கள் வந்தன. மேலும் - எத்தனை முறை நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது என்ற அளவு பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஏன் இப்படி பொறுப்பில்லாமல் மக்கள் பணம் வீண் விரயமாவதை கண்டு கொள்ளாமல் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [05 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27220

அந்த அந்த வார்டு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்காத வரை இந்த மாதிரி செயற்கை குடிநீர் தட்டுப்பாடு நாடகம் நகராட்சியின் மூலம் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கும் அதில் சந்தேகமல்ல...

சாலைப் பணிகள் முறைப்படி நடைபெறாததை சுட்டிக்காட்டி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், 04.02.2013 திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையீட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.. செய்தி அறிந்தேன்.. இதை ஒரு அமைப்பு தான் செய்ய வேண்டுமா...?

தற்போது செயற்கை குடிநீர் தட்டுப்பாடு நாடகம் நகராட்சியில் நடக்கிறது...

இதல்லாம் ஏன்.. எதற்கு..? என்ன காரணம்...?

உறுப்பினர்கள் யாராவது நகராட்சியின் ஊழியர்களிடம் விபரம் கேட்க்கிறீர்களா...?

நீங்கள் கேட்க வேண்டிய தகவலை இது குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் துறை அலுவலர் (பிட்டர்) நிசாரிடம் காயல்பட்டணம்.காம் கேட்டுள்ளது போல் 18 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர்களாவது இது சம்பந்தமாக குடிநீர் துறை அலுவலர் (பிட்டர்) நிசாரிடமோ..! நகராட்சி சேர்மனிடமோ...! ஆணையரிடமோ...! வினவியது உண்டா...?

ஏன் இப்படி பொறுப்பில்லாமல் மக்கள் பணம் வீண் விரயமாவதை கண்டு கொள்ளாமல் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள்.. மக்கள் பிரதிநிதியாகிய உறுப்பினர்களே இந்த மவுனத்தால் உங்களுக்கு என்ன இழப்பு..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [05 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27221

அஸ்ஸலாமு அலைக்கும்

பொதுவான நம் ஊர் மக்களின் கருத்து .....நமது ஊருக்கு மட்டும் ஏன்...காலம் தொட்டு ,,தண்ணீர் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது ....காரணம் என்னவென்றே இன்று நாள் தொட்டு நமக்கே புரிய வில்லை .......

அல்லாஹு தான் நம் ஊர் மக்களை இந்த தண்ணீர் பிரச்சனையில் இருந்து காப்பாற்ற வேணும்.

தாங்கள் கூறியது போன்று தான்....குத்துக்கள் தெரு / சேது ராஜா தெரு பகுதிகளில் தண்ணீர் பிரைச்சனை ரொம்பவுமே தலை தூக்கித்தான் உள்ளது .

ஆம்மா 4 நாளைக்கு ஒரு தடைவைதான் தண்ணீர் முன்பு விட்டு வந்தார்கள் இப்போது அது 5 ஆகியதா.....வேதனைக்குரிய விசையம் ............. இதற்கும் ஒரோ முடிவு எப்போது தான் வருமோ .......

பொது மக்களுக்கு முக்கியமானதே தண்ணீர் தான் .....அதுவும் இப்படியா ??????

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Water is Precious
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [05 May 2013]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 27233

குடி நீர் திருட்டை தடுக்க .....நம்ம ஊரு எல்லையில் வாட்டர் மீட்டர் வைத்து விட்டார்களா.......(Our Beloved Jamal Mama's Room)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [05 May 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27237

இது மாதிரி செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை கொண்டுவருவது,

மக்கள் நகராட்சிக்கு வந்து கூப்பாடு போடுவார்கள்,

இதையே சாக்காக வைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் என்று ஆரம்பிப்பது,

தலைவி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு லாரிக்கு இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயிப்பது,

கொடுப்பதோ கூடுதலாக,

யார் கத்தி கேட்டாலும் பதிலே சொல்லாமல் இருப்பது..

இது தான் எதார்த்தமான நடைமுறை.

என்னத்தை செய்ய முடியும், வெறும் சம்பளத்தை மட்டும் வைத்து காலத்தை ஓட்ட முடியுமா? எதிலும் கைவைக்க முடியாமல் தலைவி முதல், சில இயக்கம் வரை விழிப்புடன் இருந்து, போட்ட ரோட்டையும் நோண்டி எடுக்கின்றார்கள்..!

வேனா ஜாகிர் ஐயா, மீட்டர் ரூமா..! அப்படின்னா.! அதை எல்லாம் மறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

நடப்பவைகள் நன்மையாக இருக்கட்டும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved