Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:25:03 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10872
#KOTW10872
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 23, 2013
கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை அமைப்புகள் இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்! சுமார் 140 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2882 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, வழமை போல இவ்வாண்டும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தின.





இம்முகாமில், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர், டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் சசிப்பிரியா ஆகிய - புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று மருந்துவ ஆலோசனைகளை வழங்கினர். காயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 104 பெண்களும், 36 ஆண்களும் என மொத்தம் 140 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.











இம்முகாமில், மருத்துவ நிபுணர்களுக்கு உதவியாக, மருத்துவப் படிப்பு மாணவர்களான சுல்தான் ராஷித், பீர் முஹம்மத், பி.பார்ம். மாணவர்களான ‘ஜாஸ் பெர்ஃப்யூம்ஸ்’ ஜெ.ஏ.அப்துல் ஹலீம், ஹாஃபிழ் கே.எம்.முத்து இஸ்மாஈல் ஆகியோர் மருத்துவர்களுக்கு துணைப் பணியாற்றினர்.



முகாம் நிறைவில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.



முகாம் ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கே.எம்.எஸ்.மீரான் தலைமையில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர் குடாக் புகாரீ, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, காதர் சுலைமான், எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், கே.எம்.டி.மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப் ஆகியோர் செய்திருந்தனர்.

பெண்கள் பகுதியில், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஏற்பாட்டில் பெண் தன்னார்வலர்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்தனர்.



மாணவர்கள் அதாவுர்ரஹ்மான், மர்வான், வி.எம்.ஏ.சுலைமான், சுல்தான் ஆகியோர், முகாமில் தன்னார்வலர்களாகக் கடமையாற்றினர். ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ கே.முஹ்ஸின், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, கத்தர் காயல் நல மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் துணை நின்றனர். சாளை பாதர் ஆகியோர் முகாம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.



முகாம் நிறைவுற்ற பின்னர், மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் சசிப்ரியா இணைந்து தெரிவித்ததாவது:-

மொத்தம் 140 பேர் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். ஆண்கள் சிலருக்கு சில பற்கள் கூர்மையாகவும், சிலருக்கு அடிக்கடி தாடையில் கடிபடும் வகையிலும் அமைந்திருந்தது… அவற்றை சரி செய்திட அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுள் ஒருவருக்கு புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பதும், இன்னும் இருவருக்கு அதன் அடையாளங்கள் தென்படுவதும் கண்டறியப்பட்டது.

பொதுவாக புற்றுநோய் என்பது முற்றிய பிறகே தன்னை அடையாளங்காட்டும். அதற்குப் பிறகு சிசிக்சை செய்வதால் பெரிய அளவில் பயனெதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதே நேரத்தில், இதுபோன்ற முகாம்களின் மூலம் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், மிக இலகுவாக சிகிச்சை மூலம் சரிசெய்திட இயலும்.

அந்த அடிப்படையில், இம்முகாமில் பங்கேற்று - புற்றுநோய் இருப்பதாகவும், அதன் அறிகுறிகளும் கண்டறியப்பட்டவர்களுக்கு, தகுந்த பரிசோதனைகள் மூலம் அவற்றை உறுதிப்படுத்திய பின்னர், எளிய சிகிச்சை மூலம் இலகுவாகக் குணப்படுத்த இயலும். இதனால் அவர்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்படுகிறது.


இவ்வாறு, புற்றுநோய் மருத்துவ நிபுணர்களான டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் சசிப்ரியா ஆகியோர் தெரிவித்தனர்.

முகாமை நடத்திய குழுவினர் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு, தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளரான ‘கரூர் ட்ரேடர்ஸ்’ ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஏற்பாட்டில், ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ குடும்பத்தார் மதிய உணவு விருந்தளித்தனர்.



படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அல்லாஹ்ஆத்திக்கள் ஆபீயா....
posted by Muhammad Nooh (Jeddah. Sharafiyyah.) [23 May 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 27557

நம் சகோதர சகோதரிகள் தாமாக முன்வந்து புற்றுநோய் பரிசோதனை செய்துள்ளது பாராட்டுக்குரியது.மேலும் பயனாளிகளில் மூவருக்கு ஆரம்ப நிலையில் பாதிப்புள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.வல்லோன் அல்லாஹ் அவர்கள் அனைவர்க்கும் பூரணமான சுகத்தையும், வளமான நீடிய வாழ்வையும் கொடுப்பானாக.

இந்த முகாமை ஏற்பாடு செய்த இரு காயல் நல மன்றத்தார்க்கும்,KMT நிவாகத்தார்க்கும் மருத்துவர்களுக்கும் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும் மேலும் இதில் கலந்துக்கொண்ட அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் எல்லா நற்பாக்கியங்களையும் தந்தருள்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [23 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27558

கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை அமைப்புகள் இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் பயனுள்ள வகையில் அமைந்ததற்கு வல்ல இறைவனுக்கும், உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

புற்றுநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள்?

இதற்க்கு முன்பு நடந்த முகாமிலும் சிலருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருந்தனவே, அவர்களின் தற்போது நிலைமை என்ன? சரியாக மருத்துவம் அவர்களுக்கு கிடைக்கின்றனவா?

நோய் இல்லாத நிம்மதியான காயலை உருவாக்கப் பாடுபடும் அனைவர்களின் எண்ணங்களை அல்லாஹ் பூர்த்தி செய்வானாக., இன்ஷா அல்லாஹ்.

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பயன்பெற்றவர் கூறியது...
posted by S.K.Salih (Kayalpatnam) [23 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27559

இந்த முகாமில் புற்றுநோய் அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்படுவோருக்கு, மருத்துவமனையிலிருந்தே தொடர்புகொண்டு, அடுத்தகட்ட சிகிச்சைக்கு அறிவுரை வழங்குகின்றனர். கட்டுப்படுவோர் பெற்ற அறிவுரையின்படி சிகிச்சை பெற்று இறையருளால் நலம் பெற்றுச் செல்கின்றனர்.

புற்றுநோய் அடையாளங்கள் இருப்பதாகக் கண்டறியப்படுவோர் யாரென முகாம் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்வோருக்குக் கூட தெரியப்படுத்துவதில்லை. அவ்வளவுக்கு ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எனினும், இந்த முகாமின்போது, எனக்கு மிகவும் அறிமுகப்பட்ட ஒரு சகோதரர் கூறுகையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே போன்ற முகாமில் தன் காக்கா மகனுக்கு (அல்லது மகளுக்கு) அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், மருத்துவரின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்றதால், தற்போது புற்றுநோய் அடையாளமே இன்றி இறையருளால் நல்ல உடல் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

இதுதான் இந்த முகாம் மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள். ஜியா காக்காவின் கேள்விக்கு இந்தக் கருத்துப் பதிவின் மூலம் விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved