Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:11:53 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11384
#KOTW11384
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 26, 2013
காயல்பட்டினம் நகர்நலத் திட்டங்களுக்கு நிதி வேண்டி கோரிக்கை! மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற தமிழக அரசின் அனைத்துத் துறை கலந்தாய்வுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் முன்வைத்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2668 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற - தமிழக அரசின் அனைத்துத் துறை கலந்தாய்வுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு கோரி, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றியுள்ளார். விபரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் அனைத்து துறை கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் முன்னிலையில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைiமையில், நேற்று (ஜூலை 25ஆம் தேதி) நடைபெற்றது.



சுற்றுலா துறை அமைச்சர் உரை:

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் லெ.சசிகலா புஷ்பா, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜு.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை, மாநகராட்சி ஆணையர் மதுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏழை எளிய ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை உங்களைப் போன்ற துறை அலுவலர்கள் மூலமாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

வருவாய்த் துறையைச் சார்ந்த திட்டங்களான முதியோர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோர்களுக்கு உதவித்தொகை கேட்டு மனு அளித்துள்ள மனுதாரா;களின் கோரிக்கைகளை உடனே பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்குவதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் செய்ய வேண்டும். அதேபோல் வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பட்டா மாறுதல் போன்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வழங்கல் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடைகள் குறித்த நேரத்தில் விலையில்லா அரிசி வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவுக் கடைகளிலும் ஊட்டி டீ விற்பனையை துரிதப்படுத்த வேண்டும். மக்களுக்கு தேவையான அத்தியவாசியப்பொருட்கள் அனைத்தும் உரிய நேரத்தில் கிடைக்க அந்த துறை பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெயர் பெற்ற பனிமயமாதா கோவில் திருவிழாவிற்கு வேண்டிய அடிப்படை வசதிகளையும், மாநகராட்சியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையும் மாவட்ட நிர்வாகத்துடன்; இணைந்து பணியாற்ற வேண்டும். மின்சாரத்துறையினர் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதாரத்துறை நிலையங்கள் சுத்தமாக பராமாpப்பதுடன் கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் தயாரிக்கப்படும் மதிய உணவுகள் தரமானதாக இருக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு அது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்ற வரும் வளர்ச்சி நலத்திட்டப் பணிகள், குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர துறை அலுவலர்கள் ஈடுபட வேண்டும்.

அரசு அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உள்ளுர் திட்டக் குழுமத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, வேளாண்மைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் போன்ற துறைகளின் மூலமாக நடைபெற்று வரும் மக்கள் நலப்பணிகள் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் தரமானதாகவும், ஒப்பந்தம் செய்யப்படட காலத்திற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள், மக்கள் நலப் பணிகள் அடிப்படை வசதிகள் குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டும்.

பொதுப்பணித்துறையில் நீர் ஆதாரங்களாக விளங்கக்கூடிய குளம், கண்மாய், கிணறுகள், மழை காலங்களுக்குள் தூர் வாரப் பட வேண்டும். மேலும் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சாpன் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், மிதிவண்டி வழங்கும் திட்டம், விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக பொதுமக்களுக்கு கிடைக்கின்ற வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் அரசுத்திட்டங்களை முழுமையாக ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும்.


இவ்வாறு, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் முன்வைத்த கோரிக்கைகள்:

காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யுமாறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-

சல்லித்திரடு பகுதியில் மழை நீர் வடிகால் அமைத்தல்:

காயல்பட்டினத்தில் மழைக்காலங்களின்போது, சுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதியில் மழை நீர் அதிகளவில் தேங்கும். அதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள குடியிருப்புகள் மழை நீரில் மூழ்கும் நிலை ஆண்டுதோறும் இருந்து வருகிறது.

நகராட்சியின் சார்பில் எவ்வளவுதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அப்பகுதி மக்களுக்கு முழு அளவில் நிவாரணப் பணிகளைச் செய்ய இயலாத நிலையுள்ளது. இதனால், இரு சாரார் வசிக்கும் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

இதனைத் தவிர்த்திட, சல்லித்திரடு பகுதியில் தமிழக அரசின் சார்பில் நிலையான மழை நீர் வடிகால் அமைத்துத் தர வேண்டும்.

கடற்கரை பராமரிப்பு:

கடற்கரையில் வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் - காயல்பட்டினம் நகராட்சியிடமிருந்து செயல்திட்டம் வடிவமைத்துக் கேட்டிருந்தது. கடற்கரையை அழகுபடுத்தல், வசதிகளை அதிகரித்தலை விட, கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், கடற்கரையை சுத்தமாகப் பராமரிப்பதும் மட்டுமே தற்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுவதாக காயல்பட்டினம் நகராட்சி கருதுவதால், அதனடிப்படையில் செயல்திட்டம் வகுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, அதற்கான நிதியொதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழக முதல்வரின் பசுமைத் திட்டம்:

தமிழக முதல்வர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளிலும் மரங்கள் நட அரசால் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழு வெற்றியடைந்து, தமிழகம் சோலைவனமாக வேண்டுமானால், அதில் சில மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதாவது, வெறுமனே மரங்களை நட்டுவதற்கு மட்டும் நிதியொதுக்கீடு செய்யாமல், அவற்றுக்கு வேலியமைத்து, நீரூற்றி பராமரிக்கவும் நிதியொதுக்கீடு செய்தால் மட்டுமே இத்திட்டம் முழு வெற்றி பெறும் என்பதைக் கருத்திற்கொண்டு ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

காயல்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை:

காயல்பட்டினத்தில் நாள்தோறும் சேகரமாகும் திடக்கழிவு குப்பைகளைக் கொட்ட முறையான இடம் இல்லாத நிலையுள்ளது. இதற்காக 5 ஏக்கர் நிலம் பெற்றிட தமிழக அரசு நிதியொதுக்கீடு செய்தும், நகரில் முறையான இடத்தைப் பெற்றிட இயலாத நிலையுள்ளது.

எனவே, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நிலங்களை வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்து, புறம்போக்கு நிலங்களை இனங்கண்டு நகராட்சிக்குத் தந்துதவ வேண்டும்.

இரண்டாவது பைப்லைன் திட்டம்:

காயல்பட்டினத்தின் நீண்டநாள் கனவான இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டம் தற்போது தமிழக அரசின் மூலம் நனவாக்கப்பட்டு, அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட தடங்கல்களைத் தகர்த்தெறிந்து, பணிகள் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற ஆவன செய்த தமிழக அரசுக்கும், உயர்திரு. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு, தமிழக அரசின் அனைத்துத் துறை கலந்தாய்வுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [26 July 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28969

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது நகர்மன்ற மாண்புமிகு தலைவி .ஆபிதா ஷேக் அவர்களின்.கலந்தாய்வுக் கூட்டத்து.உரை அருமையனதே.இவ்வளவு திறம்பட செயல் பட கூடிய ஒரு தலைவி நமக்கு கிடைத்ததே முதலில் நாம் பெருமை பட கூடிய விஷயம் தான்.......இருப்பினும் ....நாமும் சரி ....நம் நகர் மன்றமும் சரி ...திறமையான ஒரு தலைவியை பயன் படுத்த முடியாமல் இருப்பதே ...நாம் வேதனை பட கூடிய விசையம் தாம் ....

நமது ஊரின் டெய்லி சேகரமாகும் திடக்கழிவு குப்பைகளைக் கொட்ட முறையான இடத்தை தமிழக அரசு இடம் பெறுவதில் குறியாகவே நம் தலைவி அவர்கள் இருப்பதையும்....... கண் கூடாகவே நாம் பார்க்கிறோம்.....அப்படி இருந்தும் இந்த விசயத்தில் ஒரு சிலர் தலைவி அவர்களை குறை கூறுவதை நாம் எப்படி தான் ஏற்று கொள்வது ...... கூடிய விரைவில் இந்த நல்ல திட்டமும் நிறைவேறும் என்கிற நம்பிக்கை நமக்கு தெரிகிறது .......

நம் தலைவியின் சொல்படி நமது ஊர் கடற்கரைக்கு வரும் உள்ளூர் & வெளியூர் பொதுமக்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் ரொம்பவுமே அத்தியவசியமானதே..... இருப்பினும் நம் ஊர் கடற்கரையை மேலும் ஒரு சில சிறப்பான வசதிகளையும் மேம்படுத்துவதும் தேவையானதே ...நம் தலைவி அவர்கள் இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவதும் தேவையானதே .... மழை காலங்களில் நம் கடற்கரைக்கு வரும் ( வயதான ஆண் / பெண் ) பொது மக்களுக்கு ஒதுங்குவதற்கு சரியானதோர் இடவசதி இல்லாது கஷ்ட படுவதையும் நாம் யாவர்களும் கண்டு உள்ளோம் ...இதையும் நம் தலைவி அவர்கள் முழு கவனத்தில் கொண்டு இதற்க்கான செயல் வடிவத்திலும் இறங்கவேணும் என்பதும் நம் பொது மக்களின் மிகவும் தாழ்வான வேண்டு கோள்... நம் கடற்க்கரை விசயத்தில் .... நம் தலைவி அவர்களின் பேச்சின் உரையை...நமது மாவட்ட நிர்வாகம் கண்டிப்பாகவே மிக துரிதமாகவே கவனிக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது.

நம் தமிழக அமைச்சர் அவர்களின் & நம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி பார்வைக்கு நம் நகர் மன்ற தலைவி அவர்களின் உரை சென்று இருப்பதால்....... நம் தலைவி அவர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளும் கண்டிப்பாகவே நிறைவேறும் என்கிற முழுமையான நம்பிக்கை நமக்கு உள்ளது .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கவிமகனின் கவிதை வரிகள்...
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [26 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28973

எனதருமை நண்பர் காயல் கவிமகன் எழுதிய கவிதையை நான் இங்கு கருத்தாகப் பதிவு செய்கின்றேன். இச்செய்திக்குப் பொறுத்தமான வரிகள் இக்கவிதையே அன்றி, வேறு வார்த்தைகள் எனக்குத் தோன்றவில்லை.

-ராபியா மணாளன்.

அடக்குமுறை அவமானங்கள்
ஆற்றலுடன் எதிர்கொண்டாய்...
தன்மான வழிநடக்கும்....நீ
தைரியத்தின் உவமானம்.

பறக்கும் புழுதிகளுக்கு
பரிசளித்தாய் புன்னகையை....
புரிதல் அதிகம் உனக்கு ...இது
புயலின் புழுதி அல்ல...புரளிகளின்....
புலம்பல்கள் தடுத்திடுமா?
புலர்தலை கிழக்கினின்றும்........

ஊழலைத் தடுப்பதற்கே
உழைக்கின்றாய் ஊருக்காய்.....
விட்டில்கள் தாக்குவதால்
விளக்கென்றும் உடைந்ததுண்டோ?

சில்லறைகள் ரீங்கரித்தால்
சில்வண்டு திகைத்திடுமோ?
சிறுநரிகள் சலசலப்பால்
சிங்கமது சளைத்திடுமோ?

தங்கத்தை தீயிலிட்டால்
தகரமாய் மாறிடுமோ?
தலை கீழாய்த் திருப்புவதால்
தீ குனிந்து எரிந்திடுமோ?

நகர்மன்றத் தேர்தலிலே
நார் நாராய்க் கிழிந்தவர்கள்
நம்பிக்கை இல்லை என்றால்
நம்பிடுமோ ஊர் உலகம் ?

பாளையத்தின் செல்லமகள்
படை நடத்து பயமின்றி....
படைத்தவனின் துணையிருக்க
பணம் உன்னை என் செய்யும்?

நன்றி: கவிமகன் காதர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [27 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28982

அன்பு நண்பர் கவிமகனின் கவிதை வரியில்

பாளையத்தின் செல்லமகள்
படை நடத்து பயமின்றி....
படைத்தவனின் துணையிருக்க
பணம் உன்னை என் செய்யும்?

காயல் மண்ணில் பிறந்த, எனது சமுதாய பெண்ணுக்கும் வீரம் உண்டு என்று நிருபித்துவிட்டார்.

வாழ்த்துக்கள். நகரமன்ற தலைவியின் கோரிக்கை நிறைவேற வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இது தான் உலகம்!  (25/7/2013) [Views - 3277; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved