Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:39:43 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11830
#KOTW11830
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 17, 2013
ரூபாய் 10க்கு அம்மா குடிநீர் திட்டம் துவக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2828 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரினை ரூபாய் 10 க்கு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு செய்திக்குறிப்பு வருமாறு:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று (15.9.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா குடிநீர் ” உற்பத்தி நிலையத்தை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன் பெறும் வகையில் “அம்மா குடிநீர்” விற்பனையைத் துவக்கி வைத்தார்கள்.



பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 21.6.2013 அன்று அறிவித்தார்கள்.



அதன் முதற்கட்டமாக, திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். 1 லிட்டர் குடிநீர் பாட்டில் ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா குடிநீர் குறைந்த விலையான 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக மேலும் 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.



பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று (15.9.2013) திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அம்மா குடிநீர் விற்பனையைத் துவக்கி வைத்ததன் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பாட்டில் அம்மா குடிநீரை 10 ரூபாய் செலுத்தி மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு 7 பயணிகளுக்கு அம்மா குடிநீர் பாட்டில்களை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் திரு பிராஜ் கிஷோர் பிரசாத், இ.ஆ.ப., அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு கூ. ரங்கராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [17 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30155

திருசெந்தூரில் இருந்து செல்லும் அனைத்து TTC /TSS அரசு பஸ்களில் இந்த தண்ணீர் விற்பனை செய்யபடுகிறது. மலிவு விலையில் தண்ணீர் வழங்கிய மாண்புமிகு அம்மா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [17 September 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 30156

அம்மா அவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு நட்சத்திர பாராட்டுக்கள்.

அதே சமயம் இந்த தண்ணீர் மானிய விலையில் விற்பதை போன்று அந்த தண்ணீரையும் மானிய விலையில் கொடுத்து விடாமல், இழுத்து மூடினால் நன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தொற்று நோய் ?
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [17 September 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 30158

முதலில் சாப்பாடு (அம்மா உணவகம்).
இப்பொழுது தண்ணீர். (அம்மா குடிநீர்)

நல்ல திட்டம் வரவேற்க வேண்டிய திட்டம்.

அடுத்தது வெற்றிலை பாக்கு ? (அம்மா வெற்றிலை பாக்கு)

இந்த அம்மா எதை ஆரம்பித்தாலும் "அம்மா" என்ற அடைமொழியை இணைத்துக் கொள்கிறார். ஏதோ தன சொந்த பணத்திலிருந்து செலவு செய்கிற மாதிரி. அம்மா உணவகம், அம்மா காப்புறுதி, அம்மா டிவி, அம்மா கிரைண்டர், அம்மா மிக்சி ,அம்மா முகாம், அம்மா இது, அம்மா அது என்று எங்கும் அம்மா எதிலும் அம்மா !

ஒரு வேலை கலைஞரிடமிருந்து தொற்றிகொண்ட நோயாக இருக்கும் அல்லது தன்னுடைய காலத்திற்குப் பின், ஆட்சிக்கு வருபவர்கள் தன்னை நினவு படுத்த மாட்டார்கள் என்ற அச்சம்?

ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி. ஆர். போன்றோர் முதலமைச்சாராக இருந்த காலங்களில் அவர்கள் மக்கள் நலனுக்காக நிறைவேற்றிய எந்த பொதுத் திட்டத்திலும் தங்கள் பெயரை இணைத்து அழகு பார்த்ததாக சரித்திரமில்லை / ஞாபகமில்லை.

இலவசமாக கிடைத்துகொண்டிருந்த குடிநீரை 10-15 வருடங்களுக்கு முன் வரை யாரும் காசு கொடுத்து வாங்கவில்லை. இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதுபோல இலவசமாக நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்றையும் (அம்மா பிராண வாயு என்று) காசு கொடுத்து வாங்காமலிருக்கும் வரை சரி.

Anyway, பிரயாணிகளுக்கு உபயோகமான திட்டம். நன்றி! வரவேற்ப்போம்.!!

காப்புறுதி திட்டத்தை மாற்றியது மாதிரி TASMAC என்ற பெயரையும் கலைஞர் பிராந்திக் கடை என்று கலைஞர் ஆட்சி காலத்திலும், அம்மா பிராந்திகடை என்று அம்மா ஆட்சி காலத்திலும் மாற்ற மாட்டார்களாமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [17 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30159

Assalamu Alaikum

This is very good scheme many private companies making hug money through water business with out Quality .

10 RS. Slight high price but if it is safe and Quality one . Why she is put her photo on the water bottle like this?

We want to be very careful in the upcoming Parliament Election. before Election she will not keep allaince with but after Election she will support or allaince with BJP only . if every party stand seprate in Tamil Nadu AIADMK + -22 ,DMK + -15 CONG + -3( CONG WILL GET - 0 BUT ALAINCE WILLGET 3 )bjp+ -0 .

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [17 September 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30161

அருமையான திட்டம். சூப்பரான நடவடிக்கை.

இது மாதிரியான திட்டம் எல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்று தான், அது, அரசு கட்டுப்பாட்டில் நாடு இல்லை என்பதே.

- உணவகங்களில் ஏற்றப்படும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லையா..? உடனே அம்மா உணவகம் திறப்பார்கள்.

- காய்கறி விலையை கட்டுப்படுத்த முடியவில்லையா.. அம்மா காய்கறி கடை..!!

- குடிதண்ணீர் கம்பனிகளின் அட்டகாசத்தை கட்டுபடுத்த முடியவில்லையா.. அம்மா குடிநீர்.!!

- விலைவாசியை கட்டுபடுத்த முடியவில்லையா..!! மலிவு விலையில் அரிசி, பருப்பு, டீ தூள் போன்றவைகளை மலிவுவிலை ரேஷன் கடையில் விற்பனை.

வெற்றிலை பாக்கு விற்பவர்களை கவனமாக இருக்க சொல்லுங்க.. கொஞ்சம் விலையை கூட்டினாலும், அம்மா வெற்றிலை பாக்கு கடை வந்து விடும்.

ஆக, இது எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஹோட்டல் தேவை=
posted by hasbullah mackie (Dubai) [17 September 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30162

அப்படியே வெகு தூரம் பிரயாணத்தில் செல்லுபவர்களுக்கேன்றே வழியில் சில ஹோட்டல் கலை அமைத்து அதில் குறைந்த செலவில் தரம் மிக்க உணவு வழங்கினால் நன்றாக இருக்கும்.. அல்லது ரயிலில் வழங்குவது போன்று இடையில் உள்ள பிரபலமான ஊர்களில் வைத்து உணவு வழங்கினால் நன்றாக இருக்கும்....

அன்றாட தேவை படும் பால் {மலிவு விலை பால்} என்று மலிவு விற்பனைக்கு வந்தால் இந்த விலைவாசி ஏற்றம் உள்ள சமயத்தில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நல்ல நீரை கொடுக்கவேண்டியது அரசுனுடைய கடமை.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [17 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30164

கலப்பட தண்ணீரை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை,ஆகவே என் கடையில் மலிவு விலைக்கு தண்ணீர் தருகிறேன்! என்று போட்டி வியாபாரம் அரசாங்கமே ஆரம்பித்திருக்கும் விந்தையை கேட்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது!

தண்ணீர் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவை,அதிலும் நல்ல நீரை கொடுக்கவேண்டியது அரசுனுடைய கடமை.

ஆக நம்முடைய "தேவையை" "சேவை" என்ற போர்வையால் போர்த்தி பல கோடியை பின்புற வாயில் மூலமாகப்பெரும் இந்த "மாயாஜால" மலிவு வியாபார வித்தையில் மயங்கி விடவேண்டாம் மக்களே!

மறுமுறையும் சொல்கிறேன்,நல்லநீரை எல்லோருக்கும்,எல்லா இடங்களிலும் கிடைக்க செய்வது தான் ஒரு பொறுப்புள்ள அரசுனுடைய கடமையாகும்!

10 ரூபாய்க்கு பெறுமதியான நல்லநீரை வெளிநபர் 25 ரூபாய்க்கு விற்றால் அதை கண்டுபிடித்து கடடுபடித்தி 10 ரூபாய்க்கு விற்க வைக்கலாமேயொழிய, அரசே காசுக்கு நீரை விற்பதென்பது வேதனையிலும் வேதனையே!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:..பெற்றால்தான் பிள்ளையா..?.
posted by OMER ANAS (DOHA QATAR..) [17 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30165

திட்டனும்னா இதுவும் நல்ல திட்டம்தான் சகோதரர்களே! கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளுங்களேன்!

பிள்ளையில்லா தாயின் ஏக்கம்தான் இந்த அம்மாவின் அனைத்து திட்டம்மும்! ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் நாமும்!. அம்மா நீ என்றும் செய்றதை செய், மகனே நீ என்றும் பிரதி உபகாரம் மட்டும் தேடாதே.!!! உங்கள் தாயை மட்டும் காக்கும் கட்சி தனயர்களே!

உங்களால் தமிழகம் இனி உருப்படும்.

எனக்கு இதில் முழு நம்பிக்கை உண்டு! அம்மாவின் அடுத்த திட்டம். காசில்லாமலே அனைவர்களுக்கும் திருநெல்வேலி தொதுள் அல்வா கொடுப்பதுதான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Cnash (Makkah ) [17 September 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 30166

பொறுப்புள்ள அரசில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர் ஒரு மினரல் வாட்டர் கம்பெனி நடத்துகிறார், முன்னாள் முதல்வரின் மகள் செல்வி அவர்களுக்கும் ஒரு மினரல் வாட்டர் தொழிற்சாலை பெங்களூரில் இருக்கிறது ... இவர்கள் எல்லாம் தங்கள் ஆட்சி காலத்தில் பொறுப்புடன் மக்களுக்கு தண்ணீரை விலை இல்லாமல் வழங்கவா இந்த கம்பெனிகளை நடத்துகிறார்கள் என்று தெளிவு படுத்தினால் நல்லது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. தமிழக அரசின் பெயர்களை சூட்டுங்கள் !!!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [18 September 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30171

அம்மா "மினரல் வாட்டர் " திட்டம் அருமைதான் ! ஆனால் எதிலும் அம்மா , எங்கும் அம்மா என தனது பெயரை போடவேண்டிய அவசியமில்லை . " "தமிழ் நாடு குடிநீர் திட்டம் " என பெயர் வைக்கலாமே ! இவ்வாறு தனது ஆட்சிக்குப்பிறகு வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் தொடருமா ? நிச்சயம் முடியாது !

அதுபோல்தான் "கலைஞ்சர் டிவி " என இலவசங்கள் வந்தது ! இப்போ அது தொடருகிறதா ? இல்லை ! ஏன் ? கலைஞ்சரின் பெயர் இருக்கிறது ! என்ற காரணம்தான் ! ஆகவே ! மக்கள் பணத்தில் செயல் புரியும் எந்த திட்டமாக இருந்தாலும் அது " தமிழக அரசின் பெயர் மாத்திரமே இருக்கவேண்டும் என்பது எங்கள் எண்ணம் !!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by T.M.R. MARZOOK (KAYALPATNAM) [18 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30178

அன்புத்தம்பி சினாஸ் அவர்களுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புஹிறேன். மேட்டர் அம்மமிணறல் வாட்டர். இதை விட்டுவிட்டு முன்னால் அமைச்சரையும் சஹோதரி செல்வியையும் இழுப்பது தேவையில்லாதது. அவர்களெல்லாம் மிஹமிஹா நல்லவர்கள். எதில்? சாப்பிடுவதில். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved