Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:04:52 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12289
#KOTW12289
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 11, 2013
நீங்க மட்டும் எங்க ஊருக்கு வருவீங்க... உங்க ஊருக்கு நாங்க வரக்கூடாதா...? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3404 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



கடந்த சில நாட்களாக காயல்பட்டினத்தின் பல்வேறு தெருக்களில் இரண்டு குரங்குகள் வந்து தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பலவீனமானோரைக் கண்டால் வாயைத் திறந்து உறுமுவதும், பலமானவர்களைக் கண்டால் திறந்த வாயை மூடிய படி ஓடுவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆங்காங்கே இவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருட்களை ஆவலுடன் தின்பதும், ஆளில்லா வீடுகளில் இவர்களே உரிமையுடன் எடுத்துத் தின்பதும் அவ்வப்போது நடைபெறுகிறது.

ஒரு நாளுக்கு ஒரு தெரு என்ற கணக்கில் தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர்களை, அந்தந்தப் பகுதியின் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்டங்கூட்டமாக வந்து கண்டு செல்கின்றனர். தரிசனமோ சில நிமிடங்கள்தான் என்றாலும், அப்பகுதியில் - பெரிய அரசியல் தலைவரைக் கண்டது போல, அன்று முழுக்க இவர்களின் வருகை பற்றியே பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் கடற்கரையிலும் நண்பர்கள் சிலர் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது.

காயல்பட்டினம் சித்தன் தெருவிலுள்ள ஒரு வீட்டின் வெளிப்பகுதியில் அவ்விரண்டு குரங்குகளும் தரிசனமளித்த காட்சியைத்தான் மேலேயுள்ள படத்தில் காண்கிறீர்கள்.

படம்:
கன்ஸுர்ரஹ்மான்
சித்தன் தெரு - காயல்பட்டினம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [11 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31354

நேற்று மொகுதூம் தெருவில் புளியானகளையம் மெய்தீன் வீட்டு தோட்டத்தில் சுமார் 2 மணி நேரம் கதை சொல்லி கொண்டு இருந்தது இந்த குரங்குதான். கதை கேட்ட சிறுத்தை இஸ்மாயில் என்ற தமிழன் பிஸ்கட் துண்டு வீசி மகிழ்ந்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நம்மை போன்ற ஜீவராசிகள் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [11 November 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 31356

அண்மையில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற நம் மக்கள் யாரும் ஊர் வரும்போது தன்னோடு " இதுகளை " விருந்தாளியாக அழைத்து வந்து இருக்கலாம் !

எப்படியோ ! இந்த விருந்தாளியின் அன்பு தொல்லை (குரங்கு சேட்டை) நமக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த விருந்தாளிகளின் உயிருக்கு எந்த வித சேதங்கள் , காயங்கள் ஏற்படாமல் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் முறைப்படி அவர்களின் தாயகத்திற்கு அனுப்பிவிட நாம் முயற்சி செய்ய வேண்டும் ! ஏனெனில் நம்மை போன்ற ஜீவராசிதான் ! முறைதவறி நாம் செயல்பட்டால் அதனையும் , நம்மையும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் நாம் பதில் சொல்லியாக வேண்டும் !!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [11 November 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31363

இங்கிருந்து அங்கும் , அங்கிருந்து இங்கும் எப்படி தாவுவது என்று பயிற்சி கொடுக்க வந்திருக்கும் . ஏனெனில் விருந்தாளிகள் வந்த நேரம் அப்படி .

Vilack SMA, சீச்சியாவ் , குவாங்க்ஜோ , சீன மக்கள் குடியரசு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அட நம்ம இடத்திலிருந்து வந்தவனை பாரு!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [11 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31367

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்ற சித்தாந்தத்தை நம்பாத இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று வந்து பார்த்தால், பார்க்கின்ற பலபேர் நம்முடைய அச்சின் பிரதியாகத்தான் செயலிலும் சிந்தனையிலும் அவர்கள் புத்தியையை பிரயோகிக்கிறார்கள்! ஐய்ய்யோ! ஐயைய்ய்யோ!!

சிறு சேஷ்டையுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அதான் இருக்குல..??
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [11 November 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 31368

ஏன் பா ...... ஊருல இருக்கிறது போதாதுன்னு இதுவேறைய...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. குரங்குகள் ஜாக்கிரதைன்னு போர்டு மாட்டி வைக்கணும்.
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [11 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31369

இந்த புகைபடத்தில் இடது புறம் இருக்கும் அந்த கொழுத்த குரங்குதான் முதல்லெ தாவியது என நினைக்கிறேன். முதல்லெ தாவுன குரங்குதான் மூத்த குரங்கா இருக்கும். அந்த குரங்கு இப்ப இருக்கிற இடத்திலாவது நிலையா இருக்குமான்னா அதுவும் சந்தேகம்தான். எங்கடா வழி இருக்கு எப்படா தவலாம்ன்னு யோசிச்சிடிருக்கு... அநேகமா தாவும். அப்படி தாவும் போது தாவுற மரக்கிளை ஒடியாமெ இருக்கணும். இல்லைன்னா அநியாயமா விழுந்து செத்துப்போகும். இந்த தாவும் குரங்கினை நினைக்கையில் பட்டுக்கோட்டையாரின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றது...

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் -
அதன் அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா -
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா...

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா...

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா...

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா...

எவ்வளவு பொருத்தமான வரிகள் இந்த உலகில் நடக்கும் உருட்டல் மிரட்டல்களுக்கு சவுக்கடி கொடுக்கும் பாடல். பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டைதான்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...ஊரு விட்டு ஊரு வந்து
posted by seyed ibrahim (yanbu,ksa) [11 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31376

ஊரைவிட்டு ஓடி வந்த காதல் ஜோடி. ஐயோ பாவம் யாரு பெத்தபுள்ளையோ கல்லடிவிலாம இருத்த சரி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வந்தாரை வாழ வைக்கும் காயல்பட்டினம்!!!.
posted by s.s.md meerasahib (TVM) [17 November 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 31518

வந்தாரை வாழ வைக்கும் காயல்பட்டினம் தான்........... வப்பாமார்களா இதை மட்டும் நம் ஊரில் வாழ வைக்க வேணாம். சீசன் இல்லன்டாலும் காரியமாவும், கடமை தவராமலும் குற்றாலம் செல்லும் நண்பர்கள் தயவு செய்து பிடித்து கொண்டு போயி அங்கு விடவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved