Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:37:30 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12299
#KOTW12299
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 12, 2013
தனியார் பேருந்து மோதி கர்ப்பிணி மாடு படுகாயம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4388 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், நேற்று (நவம்பர் 11) மாலை 04.45 மணியளவில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே சென்றுகொண்டிருந்த – ஓடக்கரையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவருக்குச் சொந்தமான கர்ப்பிணி பசு மாட்டின் மீது தனியார் பேருந்து மோதியது.

இவ்விபத்தில், பசு மாட்டின் வயிற்று, இடுப்பு மற்றும் தாடைப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. பேருந்து மோதிய வேகத்தில், மாட்டின் பிளந்த வாய் மூட இயலாமல் திறந்த நிலையிலேயே உள்ளது.





பேருந்தின் முன்புற இடது பகுதியும் சேதமுற்றது.



விபத்தை தொடர்ந்து திருசெந்தூரில் இருந்து, மீண்டும் தூத்துக்குடி நோக்கி வந்த பேருந்து - சம்பவ இடத்தில நிறுத்தப்பட்டது. ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர்.





மாடு உரிமையாளருக்கு - மாட்டினை சாலையை கடக்காமல் பாதுகாத்திட காவல்துறையினரால் அறிவுரை கூறப்பட்டது. காயப்பட்ட மாட்டிற்கு முதல் உதவி செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் - சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து உரிமையாளர் நிறுவனத்தினர், மாடு உரிமையாளருக்கு நஷ்ட ஈடு தருவதாக சம்மதம் தெரிவிக்கவே, கூட்டம் களைந்து சென்றது.

புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. புதிய குறுக்குவழி சாலை
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [12 November 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 31381

நல்லவேளை . மனிதனுக்கு அடிபடவில்லையே! மாடு படும் வேதனை மனிதனுக்கு ஏற்பட்டால் என்ன ஆகும் பாருங்கள்? மாட்டுக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யவா முடியும்? அல்லது அதற்க்குன்டாகும் செலவைத்தான் பஸ் கம்பேரி கொடுக்குமா? அதனால் எதுவும் சாப்பிடமுடியாமல் தன்படையாகவே இறந்துபோகும்..

ஓடக்கரை பகுதி வளைவு மிகவும் குறுகலானது. வேகப்போக்குவரத்திர்க்கு ஏற்புடையது அல்ல. அப்பகுதியில் நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்படவேண்டும். மனித உயிர் பலி ஏற்ப்படும்முன் இதை சரிசெய்யவும்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஓடக்கரையில் இருந்து பிரிந்து - இரத்தினாபுரியில் இணையும் விதமாக புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஐந்தும் ஆறும் ஒன்றா...???
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [12 November 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 31382

மாட்டின் நிலை பார்க்க பரிதாபகமாக இருக்கு. இதில் யாரை குறை சொல்வது மாடைய? அல்லது மனிதனைய?( டிரைவர் ) ஏன் என்றால் மாடும் மனிதனும் சரி சமமாக ரோடில் நடப்பது நம் நாட்டில் தான் பார்க்கமுடிகிறது....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கவனக்கசிவின் நிகழ்வே விபத்தாகும்! ..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [12 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31390

கவனக்கசிவின் நிகழ்வே விபத்தாகும்! வேண்டும் என்று எந்த ஓட்டுனரும் விபத்தை விலை கொடுத்து வாங்குவதில்லை!

நகரும் அத்தனை ஜீவன்களும் நம் நாட்டின் ரோட்டில்தான் செல்கிறது! ஆறறிவுள்ள நாம் தான் சற்று கவனமாக கையாளவேண்டும். ஐந்தறிவு ஜீவனை அலட்சியமாக அதன் உரிமையாளரும் ரோட்டில் விடக்கூடாது, ஓட்டுனரும் கால்நடைதானே என்ற எண்ணத்தில் இமியளவும் கவனமின்மையை கையாளவும் கூடாது!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [12 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31394

அஸ்ஸலாமு அலைக்கும்

ரொம்பவும் பரிதாபமான செய்தி....அதுவும் கர்ப்பிணி மாடு என்பதால் நமக்கு மேலும் வருத்தமாக இருக்கிறது .உடனே மருத்துவர் இடம் அழைத்து சென்று அதன் வாய் சரி செய்வது தான் நல்லது & மனிதாபமான ஒரு செயலும் கூட.

ஒடகரையின் வளைவு பகுதி கொஞ்சம் '' ரிஸ்கானது '' தான் .....வாகனமும் கவனமுடன் செல்ல வேணும் & நம் மக்களும் சரி ....இருசக்கர வாகனமும் சரி முழு கவனமுடனே செல்வது தான் நல்லதும் கூட........

மேலும் இப்பகுதியில் இருசக்கர வாகனத்தை நம் சிறு வயது பிள்ளைகள் இவ்வளைவில் கடுமையான வேகத்தில் போவதை நாம் கண் கூடாகவே கண்டு உள்ளோம் ....இவ்வளைவில் நமது காவல் துரையின் தடுப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது ............

நமது ஊருக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரமும் அவசியம் தேவை ....முக்கியமாக குறிப்பிடத்தக்கது ஓன்று ....நமது ஊர் நிறைய சிறு பிள்ளைகளுக்கு ....வாகனம் ஓட்ட கூடிய ....லைசன்சு இல்லை என்பதும் உண்மையான செய்தி .....நமது காவல் துரை அதிகாரிகள் இதை கண்காணிப்பது ரொம்பவும் அவசியமே ............. மக்களின் உயிர் விலை மதிப்பற்றது அல்லவா ........

பஸ் ஓட்டுனரின் முழு கவன குறைவே தான் இதற்க்கு காரணம் என்று தான் நாம் சொல்ல வேணும் .

இத்தோடு நின்றதே எல்லா புகழும் நம்மை படைத்த ரப்புக்கே ..........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மருந்திட்ட தமிழ்
posted by Musthak Ahamed (goa) [12 November 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 31395

மனம் கனத்துப் போய்விடும் சில செய்திகளுக்கு சில வார்த்தைகளே மருந்தாகிவிடும். சுல்தான் காக்காவின் சுந்தர தமிழ் போல.

கவனக் கசிவு.......... கனமான என் நெஞ்சுக்கு மருந்திட்ட தமிழ்.

முஸ்தாக் அஹ்மத்
கோவா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...தீர்வு
posted by T.S.A. Aboothahir (chennai) [13 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31409

பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. மழையில்லா காலங்களில் அவற்றை அழைத்துக்கொண்டுபோய் தானே மழைக்காக துஆ செய்கிறோம்.

பிராணிகளோடும் பிரியமாக நடந்து கொள்ளச் சொன்ன பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் கரிசனம் நம் கண்களை பனிக்கச் செய்கின்றன.

மாடுகளே நீங்கள் என்ன செய்வீர்கள் இப்போது மனுநீதி சோழன் ஆட்சியும் இல்லையே, சாலை ஓரங்களில் செல்லும் இரு சக்கர ஓட்டிகளின் உயிருக்கே உத்திரவாதம் இல்லாத இந்த அவசர உலகில் மாடுகளே உங்களின் நிலை நிச்சயம் பரிதாபம் தான்.

மாடுகளே நீங்கள் எங்களுக்கு உதவிய காலங்கள் முடிந்து போய் விட்டது, இன்று நாங்கள் மாருதிகளில் வாகனிக்கிறோம். எங்கள் வாகனங்களை parking செய்யவே வசூலிக்கிறார்கள், பாவம் உங்களுக்கு எங்கள் இதயங்களில் இடம் உண்டே தவிர இல்லங்களில் இல்லை.

மாடுகளைப் பூட்டி வண்டிகளில் வாகனித்த காலங்கள் மறந்து விட்டது. எனவே தான் இப்போதெல்லாம் நீங்கள் எங்களுக்கு இடையூறாக தெரிகிறீர்கள். எங்கள் வாகனங்கள் உங்களை வதை செய்கின்றன..

என்ன செய்வது, தனக்கு வயது வந்து விட்ட பிறகு வயது முதிர்ந்து விட்ட பெற்றோரையே பிள்ளைகள் வதை செய்யும் நன்றி கெட்ட இக்காலத்தில் நீங்கள் செய்த உதவிகளை நினைவு படுத்த நேரம் எங்கே இருக்கிறது?

உங்கள் உரங்கள் தான் எங்களை உரமாக வாழ வைத்தது, செயற்கை உரங்கள் வந்து விட்ட பிறகு தான் எங்களுக்கு செயற்கை சுவாசங்கள், பலப்பல நோய்கள்.

நீங்கள் ஒரு காலத்தில் எங்களுக்கு உதவினீர்கள் உண்மைதான், உதவிய காலங்களை நாங்கள் மறக்கவில்லை, ஆனால் எங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களே இன்று முதியோர் இல்லத்தில், நீங்கள் மட்டும் எங்களுடனா?

இருங்கள் கொஞ்சம் யோசிக்கலாம், பெட்ரோல் விலை போகிற போக்கைப் பார்த்தால் திரும்ப உங்கள் உதவி தேவையாகலாம்.

யானைக்கொரு காலம் வந்தால் பூனைகொரு காலம் வராமலா போகும் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அரசு அனுசரணை போல மாடுகள் மறு வாழ்வு திட்டம் எதாவது வருகிறதா பார்க்கலாம்.

ஆடு மாடுகள் அறுக்கப் படவில்லையானால் நாடு தாங்காது, உண்ணுவதற்காகவோ, உழ்ஹிய்யாவிற்காகவோ ஆடு மாடுகள் அறுக்கப்படுவதும் ஜீவகாருண்யமே.

உயிரினங்களை வளர்ப்பது பெரிதல்ல முறையாக பராமரிக்க வேண்டும், நமதூரிலேயே இப்படி என்றால் அதிக மக்கள் வசிக்கும், வாகன நெரிசல் மிகுந்த பட்டணங்களில் ஆடு மாடுகளை பராமரிப்பது எப்படி?

மாட்டை காப்பதற்காக ஓட்டுனர் முயற்சித்திருந்தால் பல மனித உயிர்கள் அங்கே பலியாகியிருக்கலாம். அல்லாஹ் காப்பாத்தினான்.

மனிதர்களே ஒருவரை ஒருவர் உரசாமல் நடக்க முடியாத அளவு நெருக்கடி மிகுந்துவிட்ட இக்காலங்களில் ஆடு மாடுகள் நடப்பதற்கு எங்கே இடம் உள்ளது?

ஆடு மாடுகள் மேயும் புல்வெளித் தரைகள் எல்லாம் ரியல் எஸ்டேட் முதலாளிமார்களின் உதவிகளோடு? கட்டிடங்களாக மாறி விட்ட பிறகு ஆடு மாடுகள் மேய்வதற்கு எங்கே இடம் உள்ளது? மனிதன் குடிப்பதற்கே விலைக்கு தண்ணீர் வாங்கும் இந்த வினோத உலகில் தாகத்தோடு அலையும் மாடுகளுக்கு தண்ணீர் தர யார் தயார்?

மினரல் கேன் தண்ணீரை மகன் அதிகமாக குடிப்பதை ஆத்திரத்தோடு பார்க்கும் தகப்பர்கள் மிகுந்து விட்ட இக்காலத்தில் மாடுகளுக்கு தண்ணீர் தர எங்கே போவது? மாதம் மும்மாரி பொழிந்த காலங்கள் மாறிப் போய் விட்ட இக்காலத்தில் மனிதனே தண்ணீருக்கு ஏங்குகிறான். மாடுகளுக்கு எங்கே?

ஆறு குளம் எரி வாய்க்கால்களில் எல்லாம் தண்ணீர் எங்கே ஓடுகிறது நகைச்சுவை நடிகர் விவேக் சொல்வது போல மணல் அல்லும் லாரிகள் தானே ஓடுகின்றன.

பங்களா போன்ற வீடு, வீட்டுக்குப் பின் தோட்டம் துறவு, ஆடு மாடு கட்ட வளவு, கோழி அடைக்க கூடு என்ற காலங்கள் கடந்து மனிதர்கள் வசிக்கும் வீடுகளே கோழிக்கூடு போல சுருங்கிவிட்ட இக்காலத்தில் மாடுகளை எங்கே போய் கட்டுவது மனிதர்கள் குடியிருக்க அடுக்கு மாடி குடியிருப்புகளை (plot) தேடும் போது மாடுகள் குடியிருக்க எங்கே இடம் தேடுவது? இப்படியாக சிந்திக்கையில் ஆடு மாடுகள் வளர்ப்பதிலும் அவை பெருகுவதிலும் பல இடையூறுகள் இருக்கவே செய்கின்றன.

தண்ணீர்
உணவு
இடம்
மருத்துவம்

என மனிதர்களுக்கு தேவையான அத்தனை தேவைகளும் அவற்றிற்கு உண்டு.

இவை அனைத்தையும் கவனித்து பராமரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அரசு கிடங்குகளில் போதிய பராமரிப்பு அற்ற நிலையில் நோயுற்று மாடுகள் மரணிப்பது ஊடகங்களில் செய்திகளாக வெளி வருவதில்லை. இப்படியாக பல அசாத்திய கூறுகள் உண்டு. தீர்வு.

முறைப்படி அறுப்பது குர்பானி, அகீகா என அல்லாஹ்விற்காக அறுத்து பலியிடுவது, அவற்றை மனிதர்கள் முறையோடு உண்ணுவது என இஸ்லாம் கூறும் வழிகளே இவற்றிற்கான தீர்வு. அதுவே ஜீவகாருண்யம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved