Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:59:15 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12407
#KOTW12407
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 25, 2013
செழிப்பான லாபம் தரும் செம்பருத்தி! காயல்பட்டினம் விவசாயி குறித்து பசுமை விகடன் செய்தி!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5579 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சார்ந்த முஹம்மது இப்ராகிம், செம்பருத்தி மலரை சாகுபடி செய்துவருகிறார். காயமொழியில் உள்ள நிலத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இவர் குறித்த செய்தியினை பசுமை விகடன் பத்திரிக்கை தனது 10-12-2013 இதழில் வெளியிட்டுள்ளது.









தகவலில் உதவி:
'குளம்' முஹம்மத் தம்பி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fareed (Dubai) [25 November 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31658

Salam

Ibrahim bhai good work.CONGRATULATION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [25 November 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 31659

மாஷா அல்லாஹ்..

காயலின் நவீன இளைய விவசாயி ..உங்கள் விவசாயம் நல்ல முறையில் நடை பெற வாழ்த்துக்கள் .

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by MAC.Mujahith (MUMBAI) [25 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31660

மாஷா அல்லாஹ்.." என்னங்க சத்தமில்லாத ஒரு சாதனையாளர்.."

சபாஷ்.." சபாஷ்..'' கலக்குறாங்க காயளர்கள்.." தொடரட்டும் உங்கள் சாதனை..!! அது விண்ணை பிளக்கட்டும்..!!!

இந்த சாதனைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...ibrahim
posted by hylee (kayalpatnam) [25 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31662

'புதுமை பித்தன் 'இப்ராஹிமின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. AGRI
posted by Jahir hussain Vena (BAHRAIN) [25 November 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 31663

நல் வாழ்த்துக்கள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [25 November 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31664

முன்பெல்லாம் நமதூர் மக்கள் பெரும்பாலானோருக்கு வயல்கள் இருந்தது . ஆனால் ஒருநாள்கூட வயல்வெளியில் இறங்கி வேலை செய்திருக்க மாட்டார்கள் . " உழவன் " என்ற ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு , அவர் சொல்லும் கணக்கையும் , அவர் தரும் நெல் மூட்டைகளையும் வாங்குவார்கள் . அங்கு என்ன நடக்கிறது என்பதே நம்மவர்களுக்கு தெரியாது . நாளடைவில் உழுகின்ற நிலம் உழவனுக்கே சொந்தம் என்ற சட்டத்தால் எல்லா வயல்வெளிகளையும் உழவனுக்கே தாரைவார்த்து விட்டோம் .

இது ஒருபுறம் இருக்க , நம்மவர்கள் பெரும்பாலானோர் வெளியூரிலும் , வெளிநாட்டிலும் வியாபாரம் செய்து வந்தார்கள் . இதுபோன்ற வயல்வெளியைக்காட்டிலும் வியாபாரமே மேலாக தெரிந்தது . இதனால் வயல்வெளியை கவனிக்க ஆளில்லாமல் , நிலங்களை உழவனுக்கு தாரைவார்க்க வேண்டியதாயிற்று .

இன்றும்கூட நம்மவர்களுக்கு பக்கத்து ஊர்களில் தென்னந்தோப்புகள் உள்ளது . அங்கும் அதே கதைதான் . தோட்டக்காரனிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறோம் . அவர் தரும் தேங்காய்தான் கணக்கு . சில சமயங்களில் அதுவும் இல்லை என்பார் .

எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் . தம்பி முஹம்மது இப்ராஹீம் பேட்டியை பார்கையில் இந்த விவசாயத்தில் அவரே நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார் . அதனால்தான் வெற்றி இவருக்கு சாத்தியமாயிற்று .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Muthu Muhammad (Dubai) [25 November 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31666

மாஷா அல்லாஹ்.
தொடர் முயற்சிக்கு கிடைக்கும் பலன்,
அல்லாஹ் அதிக பரக்கத்தை தருவானாக.
வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Cnash (Makkah ) [25 November 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 31667

இந்த புதிய முயற்சிக்கு வெற்றியும் இறைவன் இடமிருந்து பரகத்தும் உண்டாக துஆ செய்கிறோம் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மேலும் வளர துஆ செய்கிறேன்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [25 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31668

பாராட்டுக்கள். அல்லாஹ் உன்னுடைய தொழில் மேலும் வளர, பரகத் கிடைக்க துஆ செய்கிறேன். நீ பொது காரியங்களில் ஈடுபட்டு, வெற்றி பெற்றது போல் இதிலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தினசரி உன்னை பார்க்கத்தான் செய்தேன். ஆனால் சொல்லவே இல்லை. உன் மாமனாரைப் போல் நீயும் விவசாயத்தில் ஈடுபட்டு இருக்கிறாய்.

இவரின் வெற்றியில் படிப்பினை என்னவென்றால், எந்த தொழிலிலும் முழுமையாக அர்பணிப்பு ஈடுபட்டால், அல்லாஹ் உதவியுடன் வெற்றி கிடைக்கும். நண்பன் S.M.அலி குறிப்பட்டது போல், விவசாயத்தை நமதூர் மக்கள் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டதனால் தான், வயல்காரனும், தோட்டக்காரனும் தருவதை நாம் வாங்கிக் கொள்கிறோம். இதில் நானும் விதிவிலக்கல்ல.

தம்பி இப்ராஹீமிடம் ஆலோசனை கேட்டு விவசாயத்தில் ஈடுபடலாம். வாழ்த்துக்கள்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. செம்பருத்தி!
posted by kavimagan m.s.abdul kader (doha...qatar) [25 November 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31669

தம்பி..... உங்களது வெற்றி மகிழ்ச்சிக்குரியது...

விளிம்பு நிலை மனிதர்களின் செழிப்பான எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தெரிந்த சமகால இளைஞர்களுள் நீங்களும் ஒருவர்...

தொடரும் உங்கள் சாதனை பலரின் வேதனைகளை நீக்கட்டும்....

இந்தக் களத்தில் மட்டுமல்ல.... வேறு எந்தத் தளமானாலும் சாதிக்கும் சக்தியை உமைப் போன்ற இளைஞர்களுக்கு இறைவன் நல்கட்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by syedahmed (GZ, China) [25 November 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 31671

NECESSITY IS THE MOTHER OF INVENTION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...பாராட்டுக்கள் ....
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 November 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31672

இது நிச்சயம் ஒரு வித்தியாசமான முயர்ச்சி . இவரின் இந்த முயர்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும் .

வல்ல நாயன் உங்களது முயர்சியில் நல்ல வெற்றியை தந்து , மேலும் அதிக பரக்கத்தையும் தர அருள் புரிவானாக . ஆமீன் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by குளம் முஹம்மது தம்பி (சென்னை) [25 November 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31673

சகோதரர் இப்ராஹீம் அவர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஒரு சிறிய அங்கீகாரம் தான் இது, மேலும் நிறைய பெயரும் பொருளும் ஈட்ட வல்ல இறைவன் இவருக்கு துணை புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...செம்பருத்தி பூவே....
posted by mackie noohuthambi (kayalpatnam) [25 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31674

இவர் யார் என்று தெரிகின்றதா?

காயல்பட்டினம் சுற்று சூழல் பாதுகாப்பு கழகத்தில் (KEPA)வில் ஒரு முக்கிய உறுப்பினர்.

ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மொகுதூம் ஜூம்மா பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்.

இவரது முன்னோர்கள், இவரது பெற்றோர்கள் மாணிக்க வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிரவர்கள்.

48 துட்டு என்பது அவர்கள் குடும்ப பெயர். ஒரு ரூபாய்க்கு 48 துட்டுக்கள் என்று இப்ராஹீம் அவர்கள் தந்தையின் முப்பாட்டனார் கேலியாக சொன்னது அவர்கள் குடும்ப பெயராக அமைந்து விட்டது.

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

வித்தியாசமாக சிந்தித்து சாதித்துக் காட்டியிருக்கும் எனது இனிய மருமகனுக்கு வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Muthu Mohamed (Mumbai) [25 November 2013]
IP: 120.*.*.* India | Comment Reference Number: 31676

அஸ்ஸலாமு அழைக்கும்

ஏன் அருமை மச்சான் முயற்சியில் எல்லாம் வல்ல அல்லா வெற்றியை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. செம்பருத்தி இப்ராகிம்..
posted by Salai S Nawas (singapore) [26 November 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 31679

அப்போ இனிமே 48 இப்ராகிம் இல்லை. செம்பருத்தி இப்ராகிம். மென்மேலும் உயர வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...Assalamualaikum.
posted by aboobacker mz (Chennai) [26 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31680

May Allah bless him with success in all efforts. Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. பிறருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [26 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31681

மாஷா அல்லாஹ்... காயல் மண்ணில் ஒரு புதிய விவசாய சகோதரரை கேள்வி படும் போது மனது மகிழ்ச்சி அடைகிறது... இந்த சகோதரரின் உழைப்பு நகரில் சும்மா வீணாக நேரத்தை கழித்து வரும் (இன்னும் பிறருக்கு) ஒரு பாடமாக அமைய வேண்டும்...

இப்ராகிம் அவர்களே...! உங்களின் இந்த புரட்சிகரமான சாகுபடிக்கு எனது வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

வல்ல இறைவன் மேலும் உங்களின் விளைச்சலை அதிகபடுத்தி அதிகமான பரக்கத்தை கொடுப்பானாக ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. அங்கீகாரத்தின் தொடக்கம்!
posted by Mauroof (Dubai) [26 November 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31683

மலர்ந்திருப்பது செம்பருத்தி மலர் மட்டுமல்ல, அவைகள் மலர்வதற்கு வித்திட்ட உம் முகமும் கூடத்தான்.

சப்தமில்லாது சரித்திரங்கள் படைக்கும் இளைஞர்கள் பட்டியலில் இன்று உமது பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பசுமையை நீர் விரும்ப, பசுமையும் உம்மை விரும்ப, இவை இரண்டையும் விரும்பும் "பசுமை விகடன்" ஓர் தொடக்க அங்கீகாரத்தை உமக்கு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இன்னும் பல அங்கீகாரங்கள் உம் கைகளில் தவழ்வதற்கு காத்துக் கொண்டிருக்கும். வாழ்த்துக்கள்.

உமது முயற்சியையும் அதன் வெற்றியையும் எண்ணுகையில் கவிமணியனின் கீழ்கண்ட கவிதை வரிகள்தான் என் ஞியாபகத்தில் வந்தது.

"முயற்சி ஓர் பூ,

நம்பிக்கை ஓர் விதை,

தன்னம்பிக்கை ஓர் தளிர்,

துணிவு ஓர் செடி,

சாதனை ஓர் மரம்".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. “மன் ஜத்த வஜத”
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா) [26 November 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31685

சகோதரர் இப்ராஹீம் அவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு “வேத புர்கானில் கூறப்பட்ட நபிமார்களின் பெயர்கள்” பற்றிய இனிய பாடல்வரிகள் தான் உடனே நினைவில் வரும்.

“மன் ஜத்த வஜத” [முயற்சித்தவன் மட்டுமே பெற்றுக் கொள்வான்] என்னும் அரேபியப் பழமொழியையும் நினைவுறுத்தும் வண்ணம், தானும் களமிறங்கி பயிரிட்டதால் இன்று அவர் செம்பருத்திச் செம்மலாகவும் அங்கீகரிக்கப் பட்டிருப்பது மகிழ்வளிக்கிறது.

வாழ்த்துக்கள்! அல்லாஹ் தங்கள் இந்த தொழிலில் அபிவிருத்தியையும் தருவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by netcom buhari (chennai) [26 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31686

சபாஷ் வித்யசமான முயற்சி பண்ணி வெற்றி கண்ட இப்ராகிம்க்கு வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. பசுமை விகடன் முந்திவிட்டது!
posted by S.K.Salih (Kayalpatnam) [26 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31687

அன்பு நண்பன் 48 இப்றாஹீமின் இந்தச் சாதனைக்குப் பின்னணியில் ஏராளமான அவதிகள் உள்ளதை நான் நன்கறிவேன்.

பொதுவாக, வயசுப் பிள்ளைகள் ஊரிலிருப்பதே கவுரவக் குறைவாகக் கருதப்படும் இக்காலகட்டத்தில், நல்ல தொழில் துறைகளில் கோலோய்ச்சி வரும் இவரது குடும்பத்தாருடன் இணைந்து இவர் வேறு ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துச் சென்றிருக்கலாம். செல்லவும் செய்தார். ஆனால் அவரால் அதில் நிலைக்க இயலவில்லை.

சிறு வயது முதலே அவரை ஆட்கொண்ட பசுமைத் தாகம்தான் இன்று இந்நிலைக்கு அவரை மிளிரச் செய்துள்ளது. இதற்காக அவர் கொடுத்த விலை ஒன்றிரண்டல்ல! நம் ஊரின் பொதுவான மனப்பதிவுடன் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு இதுகுறித்து எடுத்துக்கூறி, அவர்களை சரிகாணச் செய்து, மாதங்கள் பல கடந்த பின்பே மகசூலை எதிர்பார்க்க முடியும் என்றிருந்த நிலையிலும் - செம்பருத்திச் செடியை நவீன பூச்சிக்கொல்லி விஷம் (மருந்து?!) எதையும் தொட்டுக் கூடப் பாராமல் முளைப்பித்து, மகசூலில்லா மாதங்களில் குனிந்த தலை நிமிராமல் குடும்பத்தாருடன் அவர் அளவளாவியது வரை எனக்குத் தெரியும்.

அப்பேர்பட்ட இவரது முயற்சி இன்று திருவினையாகியுள்ளது. கருணையுள்ள அல்லாஹ் இவர் வாழ்நாள் முழுக்க மனம் தளராத அளவுக்கு அபரிமிதமான மகசூலையும், அதன் காரணமாக மகிழ்ச்சியையும் அவர் குடும்பத்தில் திளைக்கச் செய்வானாக. இன்று இவர் பலருக்கு முன்னுதாரணமாகிவிட்டார். இன்ஷாஅல்லாஹ் நாளை இவர் காயலர்களின் பசுமைக் கதாநாயகனாகவும் மாற முடியும். அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.

ஓரிரு முறை இவரது தோட்டத்திற்கு இணைந்து சென்றேன். அங்கு செம்பருத்தியையும் தாண்டி காணக்கிடைத்த பனங்கிழங்கு, முருங்கைக் கீரை, முருங்கைக்காய், எலுமிச்சம்பழம், நார்த்தங்காய் ஆகியவற்றைக் கபளீகரம் செய்து, குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களோடு திரும்பும் வழமையைக் கொண்டிருந்தேன். ரமழானுக்குப் பிறகு அது தொடரவில்லை. இன்ஷாஅல்லாஹ் ஓரிரு நாட்களில் மீண்டும் தொடரும் எனது களப்பணி.

இவரது செம்பருத்தித் தோட்டம் குறித்து விபரங்களைச் சேகரித்து விரிவான செய்தியொன்றை வெளியிட மனதளவில் எண்ணியிருந்தேன். என் எண்ணம் கரையேறுவதற்குள் ‘பசுமை விகடன்’ முந்திக்கொண்டது. இதை விட அது சிறப்புதானே...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. பிழை திருத்தம்
posted by yahya mohiadeen (dubai) [26 November 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31690

"ஓரிரு முறை இவரது தோட்டத்திற்கு இணைந்து சென்றேன். அங்கு செம்பருத்தியையும் தாண்டி காணக்கிடைத்த பனங்கிழங்கு, முருங்கைக் கீரை, முருங்கைக்காய், எலுமிச்சம்பழம், நார்த்தங்காய் ஆகியவற்றைக் கபளீகரம் செய்து, குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களோடு திரும்பும் வழமையைக் கொண்டிருந்தேன். ரமழானுக்குப் பிறகு அது தொடரவில்லை. இன்ஷாஅல்லாஹ் ஓரிரு நாட்களில் மீண்டும் தொடரும் எனது களப்பணி" (copy அண்ட் paste)

தம்பி சாலிஹ்,
ரமழான் காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டதால் அதன் பிறகு இக்காரியங்கள் நடைபெறவில்லை என நினைக்கிறேன்.

மேலும், களப்பணி என்று குறிப்பிட்டிருக்கிறாய் - களவுப்பணி என்பதே சாலப் பொருந்தும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் ( காயல்பட்டினம் ) [26 November 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31692

அன்பு தங்கையின் கணவர் அவர்களின் சாதனை செய்தியை கண்டு தலைக்குனிவுடன் பாராட்டுகின்றேன்.

காரணம் சகோ. S.K.சலிஹ் சொல்லுவது போன்று, நானும் மச்சானை தூற்றியது உண்டு. சம்பாதிக்கும் வயதான இந்த சிறிய வயதில் இப்படி பொடுபோக்காக இருக்கின்றாயே, ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க மாட்டாயா? இப்படி வீடு காடு என்று சுற்றுகின்றாயே என்று பலமுறை கடுமை காட்டியுள்ளேன். ஒரு தடவை கூட டென்ஷன் ஆகாமல், புன்னகை மாறாமல், கொஞ்சம் நாள் தான் மச்சான்...அறுவடை ஆரம்பித்து விட்டால் எல்லாம் நலமாக அமையும் என்று கூறி விடுவான்.

அல்ஹம்து லில்லாஹ். அனைத்தும் நன்றாக அமைந்து வருகின்றது.

மார்க்கத்தில் பற்றுதல், அனைவர்களுக்கும் உதவும் மனப்பான்மை, குழந்தை பிறந்த வீட்டிற்கு உதவுவது முதல், மரணித்த மனிதனை குளிப்பாட்டி அடக்குவது வரை நீ செய்யும் உதவிகள், பள்ளிவாசலில் உன்னுடைய பங்களிப்பு போன்ற உன்னுடைய நற்குணங்களை கண்டு பூரிப்படைகின்றேன்.

வல்ல ரஹ்மான் உன்னுடைய வாழ்வில் எல்லா வளங்களையும் வழங்குவானாக..! தொடரட்டும் உன்னுடைய சேவைகள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by K S Muhammed shuaib (Kayalpatnam.) [27 November 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31711

சகோதரர் இப்ராஹிம் அவர்களின் செம்பருத்தி முயற்சி பாராட்டத்தக்கது. அவரது செம்பருத்தி தோட்டத்திற்கு ஒரு முறை சென்று பார்க்கவும் வாய்ப்பு கிட்டியது. செம்பருத்தியோடு ஏதேனும் ஊடு பயிராக விதைத்தால் சகோதரருக்கு இன்னும் பலன் கிட்டும் என நம்புகிறேன்.

செம்பருத்திக்காட்டில் வெயிலோடு நின்று போராடி சகோதரர் இப்படிக் கறுத்து விட்டாரே .என்று என்னும் போதுகொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கிறது.

எனினும் செம்பருத்தி தைலத்தின் குணமே முடியைக் கறுக்கவைப்பதுதான் என்பதை மனதில் கொண்டு சகோதரை வாழ்த்துகிறேன். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [28 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31714

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊரிலுமா ?? இப்படி ஒரு சிறப்பு பெற்றவர் ....நம்முடைய அருமை சகோதரர் ஜனாப் .இபுராஹிம் அவர்களின் சாதனை .....மாஷா அல்லாஹ் ....நாம் எப்படி தான் நம் சகோதரர் அவர்களை பாராட்டுவது என்றே நமக்கு ஒன்றுமே புரிய வில்லை .

அருமை சகோதரர் ஜனாப் .இபுராஹிம் அவர்களே தங்களை வாழ்த்தி ...தங்களின் இந்த முன்னேற்றம் மேலும் சிறப்பு அடையவும்....தாங்கள் இன்னும் பலன் அடையவும் துவா செய்கிறேன் ..............

இந்த இளம் வயதில் இப்படி ஒரு செயல் திறன் பெற்றவரா என்றும் யாம் வியப்புடன் ....பெருமைபட்டு ...மீண்டும் .... தங்களை ....வாத்துகிறேன்......

>> தொடரட்டும் தங்களின் வியப்புடைய செயல் பாடுகள் யாவும் <<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved