Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:07:10 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12671
#KOTW12671
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 30, 2013
இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் காலமானார்! டிச.31 (நாளை) மாலையில் இறுதிச் சடங்கு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இன்றிரவு 22.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.

நிலத்தடியிலிருந்து மீத்தேன் வாயு எடுக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக, அவர் பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது, அத்திவெட்டி என்ற ஊரில் உடல்நலக் குறைவால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை (டிசம்பர் 31) மாலை 16.00 மணியளவில், கரூர் மாவட்டம் - சுருமான்பட்டியிலுள்ள வானகம் கிராமத்தில் நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில், 1938ஆம் ஆண்டு கோ.நம்மாழ்வார் பிறந்தார். இயற்கை அறிவியலாளர்களுள் ஒருவரான இவர், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இளங்கலை பயின்று முடித்தார். 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து, ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், சூழல் பாதுகாப்பு தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர்.

தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வந்த அவர், குடும்பம் அமைப்பு உட்பட 250 மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராகவும் இருந்துள்ளார். இயற்கை விதையைத் தவிர்த்துவிட்டு, மரபணு மாற்ற விதைகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக அவர் தீவிரமாக தொடர் போராட்டத்தை நடத்தினார்.

"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பைத் துவக்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தவர். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழையும் அவர் நடத்தி வந்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இவர் காட்டிய முனைப்பைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவருக்குச் "சுற்றுச் சூழல் சுடரொளி' விருதை வழங்கியது.

கரூர் மாவட்டம், சுருமான்பட்டி கிராமத்தின் கரட்டு மேடான பகுதியில், வானகம் என்ற பெயரில் இயற்கை வழி வேளாண்மை குறித்து, செய்முறை விளக்கங்களுடன் பொதுமக்களுக்கு அவர் விழிப்புணர்வூட்டி வந்தார். மாதந்தோறும் 3 நாட்கள் வானகத்தில் நடத்தப்படும் முகாமில், பெருமளவில் விவசாயம் செய்வோர், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருவோர் உட்பட ஏராளமானோர் இம்முகாமில் பங்கேற்று, இயற்கை வழி வேளாண்மை - எளிய வாழ்க்கை முறை குறித்து பாடங்களைப் பெற்றதோடு, நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்கத் துவங்கினர்.

கடைசியாக, கடந்த நவம்பர் மாதம் 12, 13, 14 தேதிகளில் மாதாந்திர முகாம் நடத்தப்பட்டது. அதில், எழுத்தாளர்களும் - சமூக ஆர்வலர்களுமான காயலர்கள் சிலரும் பங்கேற்று வந்தனர்.











மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கெதிரான - நம்மாழ்வாரின் நடைப்பயணம் காரணமாக, டிசம்பர் மாத முகாம் நடத்தப்படவில்லை.

ஜனவரி மாதம் 02, 03, 04 தேதிகளில் மீண்டும் முகாம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகாமிலும் காயலர்கள் சிலர் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று அவர் காலமானதால், நவம்பர் மாதம் நடத்திய முகாமே அவரது கடைசி முகாமாகிப் போனது.

[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 23:05 / 30.12.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சுபுஹானல்லாஹ்
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [30 December 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32226

"குல்லு மன் அலைஹா பான்"...

எல்லோரும் மரணத்தை சுவைக்க கூடியவர்களே... என்ற அல்லாஹுவின் வார்த்தை மிகவும் சரியானதே. சுபுஹானல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஓர் இயற்கை, இயற்கை எய்துவிட்டது
posted by Mauroof (Dubai) [30 December 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32227

இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. நம்மாழ்வார் அவர்களின் மரணம் குறித்த செய்தியை புதியதலைமுறை தொலைக்காட்சியில் பார்த்ததும் பேரதிர்ச்சி அடைந்தேன்.

புதியதலைமுறை தொலைக்காட்சியில் செய்திகளுக்கு இடையே அவரது பதிவுகள் வெளிவரும் சமயமெல்லாம் நான் அவர் கூறுவதை மிக உன்னிப்பாக கவனிப்பேன்.

சகோ. S.K. சாலிஹ் அவர்கள் சமீபத்தில் எழுதிய அனுபவப்பூர்வமான கட்டுரை "கம்பங்கூழும், கரட்டு மேடும்" படித்த மாத்திரத்தில் வரும் விடுமுறையில் நானும் அவர் நடத்தும் 3 நாட்கள் முகாமில் பங்கேற்க வேண்டும் என உளமார விரும்பினேன். அந்தோ அந்த வாய்ப்பு இனி கிடைத்தாலும் இவர் தலைமையில் அது நடைபெறும் வாய்ப்பை இழந்து விட்டதே என்பதை எண்ணி வேதனை அடைகிறது உள்ளம்.

அவர் விட்டுச்சென்ற இயற்கை வேளாண் நற்பணிகள் தொய்வில்லாது தொடர வேண்டும் என்பதே அனைத்து இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கும் என்றால் அது மிகை அன்று. நம் நாட்டின் விவசாய பூமி அனைத்தும் பாதகர்களால் அதன் மேல் உரங்கள் என்ற போர்வையில் தூவப்படும் விஷங்கள் நீக்கப்பட்டு இயற்கை உரங்களால் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேற வேண்டும். அதற்கான பங்களிப்பை ஒவ்வொரு தனி மனிதரும் கொடுத்தே ஆக வேண்டும்.

அவரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், அவரது மாணாக்கர்கள், நாடெங்கும் உள்ள அவரது அபிமானிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை சமர்பிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நம் மக்களுக்காக பாடுபட்ட பெரியவர்...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [30 December 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32229

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர்களே!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மரணம் என்ற செய்தியை அறிந்து மிகவும் கவலை அடைகிறேன்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். சென்ற நவம்பர் மாதம் 12,13,மற்றும் 14 தேதிகளில் வானகத்தில் நடைபெற்ற 3 நாட்கள் முகாமுக்கு அடியேனும் சென்றிருந்தேன். இயற்கை விவசாயம், இயற்கை உணவு மற்றும் அல்லாது பொது அறிவு சம்பந்தமான பலவற்றையும் அந்த முகாமில் நாங்கள் பெற்றோம்.

இயற்கை வழியில் விவசாயம் செய்ய தன்னலமின்றி பல வகையிலும் நம் மக்களுக்காக பாடுபட்ட அந்த பெரியவர் நம்மை விட்டு மறைந்துவிட்டது இயற்கை விவசாயத்தை, இயற்கையான உணவை நேசிப்பவர்களுக்கெல்லாம் பேரிழப்புதான்.

என்ன செய்வது? பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்ற இறைவனின் விதியை யாரால்தான் மாற்ற முடியும்? எனவே இறைவனின் கட்டளைக்கு நாம் அனைவரும் தலை சாய்த்து, அந்த பெரியவரின் மரணத்தை பொறுமையுடன் ஏற்றுக்கொள்வோமாக.

அந்த பெரியவரின் நோக்கத்தை ,தியாகத்தை, கடமையை பின்பற்றி இயற்கை விவசாயத்தை மென்மேலும் பெருக உழைப்போமாக. பெரியவர் நம்மாழ்வார் அவர்களுடைய குடும்பத்திற்கும் அவர்களுடைய நண்பர்கள் , சுற்றத்தார்கள் மற்றும் நம் அனைவருக்கும் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் தருவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [31 December 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32231

இயற்கையை மிகவும் நேசித்த மனிதர் இயற்கையின் வலிமையான கரங்களுக்குள் சென்று அடைக்கலமாகி விட்டார்.

தான் மிகவும் நேசித்த இயற்கை வேளாண்மை , சூழல் பாதுகாப்பிற்காக தனது அரசு பணியையும் தனது குடும்பத்தினையும் துறந்தவர்.

அவர் நடத்திய கடைசி முகாமில் இரண்டாம் நாள் இரவு நடந்த நீண்ட திண்ணை உரையாடலில் அவரின் குடும்ப வாழ்க்கை துறப்பு பற்றிக் கேட்கும்போது ஒன்றை அடைய ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும் என்றார்.

மண்ணையும் , நீரையும் , விண்ணையும் நஞ்சாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

முகாமின் நடந்த திண்ணை உரையாடலில் அவர் அமர்ந்திருந்த நாற்காலியானது மறு நாள் காலை வெகு நேரம் வரை அதே இடத்தில் வெறுமனே கிடந்தது.

அந்த வெற்று நாற்காலியை பார்க்கும்போது அவர் இல்லாத வானகம் நடுவம் என்பது மனக்கண் முன் வந்து போனது. நேற்றிரவு அது மெய்ப்பிக்கப்பட்டும் விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [31 December 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32232

2013 முடிந்தது ..... அல்ல ஒரு சகாப்தம் சத்தம் இல்லாமல் நம்மை மீளா துயரில் ஆழ்த்தி விட்டு பிரிந்து சென்றது.... இயற்கை அன்னை தான் மகனை தன்னோடு அணைத்து கொண்டாள்.....அய்யா நம்மாழ்வார் ஒரு போராளி ..... போராளி மரணிப்பது இல்லை .......அவர் ஒரு விதையை நம்மில் விதைத்து சென்று உள்ளார் ... அது விருட்சமாய் எழுந்து நிற்கும்.

அய்யாவை வாழ்வில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என ஆசை பட்டேன் ...கண்ணீர் மட்டும் வருகிறது. என்னை இயற்கை விவசாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த மாமனிதர்.

உயிரை உறிஞ்சும் செயற்கை உரங்களை எதிர்த்து போராடிய மிகச்சிலரில் ஒருவர். போற்றதக்க மனிதர்!!! ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...மரணம் என்ற இயற்கையை யாராலும் வெல்ல முடியாது,
posted by A.R.Refaye (Abudhabi) [31 December 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32233

மரணம் என்ற இயற்கையை யாராலும் வெல்ல முடியாது,இலையாக உதிராமல் வித்தாக விதைக்க பட்ட இவர்மூலம் கிளைகள் பெருகி மேலும் பசுமை காக்க வேண்டும் அதுவே இவருக்கு நாம் செய்யும் கைமாறு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [31 December 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32235

சில மனிதர்களின் அருமைகளும் பெருமைகளும் அவர்களின் மறைவுக்கு பின்பு தான் தெரியும், சிலருடையது அவர்களின் வாழ்நாட்களில் தெரிந்து விடும். அப்படி வாழ்நாளில் சாதனைகள் படைத்து, பெருமைப்பட மறைந்தவர் இந்த இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள்.

இவர்களின் வானகம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு, அதன் விவரங்களையும், அனுபவித்த அனுபவங்களையும் சகோதரர் S.K.சாலிஹ் மற்றும் சகோதரர்கள் விவரிக்கும் போது, ஆஹா.. மிஸ் பண்ணி விட்டோமே, அடுத்த விடுமுறையில் கண்டிப்பாக கலந்து கொள்ளனும், ஐயாவை நேரில் சந்திக்கனும் என்ற நிய்யத்து இருந்தது. அதற்குள் பெரியவர் மைய்யத் ஆகி விட்டாரே.

இவரின் மறைவால் துயரப்பட்டு இருக்கும் அனைவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இயற்கை
posted by Eassa Zakkariya (Jeddah) [31 December 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32236

இயற்கை தன்னைதானே அழகுப்படுதிக்கொண்டது.இயற்கையை சுவாசமாக நேசித்த "சுவாசம்" அடுத்தவர்கள் சுவாசிக்கவேண்டி புறப்பட்டது .

இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் காலமானார் - இயற்கையின் தாளம் தவறியதோ ? அல்லது தப்பியதோ ?

சிலர்கள் மட்டுமே உரமாக மாறுகிறார்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [31 December 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32237

"உதிர்ந்தது இலை அல்ல விதை!" என்றென்றும் நினைவில் வாழ்வார்......நம்மாழ்வார்!

சுபான் அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நல்ல மனிதர்
posted by K.S.Seyed Mohamed Buhary (uae) [31 December 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32238

நபி பிறக்கும் முன்பு வாழ்ந்த ஒரு வாரி வழங்கிய ஒரு சீமாட்டியை பற்றி நபியவர்கள் ஒரு மூமினின் குணம் அவரிடம் இருப்பதாக கரி வால்தினார்கலே அது தான் எனக்கு நம்மாழ்வாரின் விசயத்தில் நியாபகம் வருகிறது. (இயற்க்கைக்கு வாரி வழங்கிய வள்ளல்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [31 December 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32241

வருந்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [01 January 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32250

நச்சு மருந்துகளின் நாச கரத்திலிருந்து மருத நிலம் காக்க
கடைசி மூச்சுவரை களமாடிய மருத நாயகரே...
உம் பெயரைக் கல்லில் எழுத மாட்டோம்...
விவசாய மண்ணில் எழுதிவைக்கிறோம்..

(நன்றி - ஆரூர் புதியவன் அவர்களின் எழுதிய இரங்கல் கவிதையில் இருந்து)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved