Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:57:08 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12716
#KOTW12716
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 7, 2014
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தத்தைக் கண்டித்து பிப். 18இல் ரயில் மறியல் போராட்டம்! முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3214 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தத்தைக் கண்டித்து, வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் - ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

கலந்தாலோசனைக் கூட்டம்:

தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினம் நகர அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து பொதுநல இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் 07ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மது நாஸர் தலைமையில் நடைபெற்றது.



சர்வ கட்சியினர், பொதுநல அமைப்பினர் கருத்துரை:

கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கூட்ட அறிமுகவுரையாற்றினார். பின்னர், நகரின் அனைத்துக் கட்சிகள் - பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துரையாற்றினர்.



காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான்,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துவராஜ்,
அரிமா சங்கம் சார்பில் வி.பி.ஐ.புகாரீ,
திமுக சார்பில் ஆர்.எஸ்.கோபால்,
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அப்துல் அஜீஸ்,

இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம்,
மதிமுக சார்பில் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை,
நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி,
வஞ்சிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் அலீ அக்பர்
ஆகியோர் கருத்துரையாற்றினர். காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாடு குறித்து பலரும் பல நேரங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையிலும் அவை தொடர்வண்டித் துறையால் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், போராட்டம் நடத்துவதே இதற்குத் தீர்வு என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

முஸ்லிம் லீக் மாநில செயலாளர் சிறப்புரை:

நிறைவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் சிறப்புரையாற்றினார். காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளில் காட்டப்படும் மெத்தனம், அதனால் பொதுமக்கள் நாள்தோறும் படும் அவதிகள் குறித்து அவர் விரிவாக விளக்கிப் பேசினார்.



இதே தொடர்வண்டி நிலையத்தில், முற்காலத்தில் ரெயில்கள் எதுவுமே நிற்காது என்ற நிலை ஏற்பட்டபோது, காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் ஒருங்கிணைப்பில், ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் தொடர்வண்டித்துறை இணையமைச்சராக இருந்தபோது காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தைப் பார்வையிட்டு, அதன் மேம்பாட்டுப் பணிகளுக்கு உத்தரவிட்டதையும், இதன் காரணமாக பல தொடர்வண்டி நிலையங்கள் பலனடையத் துவங்கியதையும் நினைவுகூர்ந்து பேசினார்.

காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் பணிகள் துவக்கப்பட்டு, குறைந்தளவு பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில், பணிகள் இடைநின்று போனதாகவும், இதுகுறித்து தொடர்வண்டித் துறை உயரதிகாரிகளுடன் பலமுறை நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் நினைவூட்டிய பின்னரும் செவிசாய்க்கப்படவில்லை என்றும் கூறிய அவர், அதன் பின் - கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இத்தனைக்குப் பிறகும் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படாததால், இனி ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூற, அனைவரும் அதனை ஒரே குரலில் வரவேற்றனர்.

தீர்மானங்கள்:

பின்வருமாறு கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - ரயில் மறியல் போராட்டம்:

காயல்பட்டினம் தென்னகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். தூத்துக்குடி மாவட்டத்தில் - தூத்துக்குடி, கோவில்பட்டிக்கு அடுத்து காயல்பட்டினம் மட்டுமே நகராட்சியாகும். சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழும் இந்நகர், சர்வதேச தொடர்புள்ள ஊராகும். இதன் காரணமாக, வெளிநாடு மற்றும் வெளியூர்வாசிகள் இந்நகருக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நகரில் அமைந்துள்ள ரெயில்வே நிலையத்தை இந்நகர பொதுமக்களும், சுற்றுலாப் பயணியரும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்ற காரணத்தால், இங்கு அடிப்படை வசதிகளை சிறப்பான முறையில் செய்து தர வேண்டும் என இந்நகர மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

கடந்த 29.12.2009 அன்று - அன்றைய மத்திய ரெயில்வே துறை இணையமைச்சர் இ.அகமது அவர்கள் இந்நகருக்கு வருகை தந்து, ரெயில்வே நிலையத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, இங்கு நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பணிகள் சிலவற்றை நிறைவேற்ற டெண்டர் விடப்பட்டது.

அவ்வாறு விடப்பட்ட பணிகளுக்கான டெண்டர், நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டு, சில பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல பணிகள் இதுவரை தொடங்கப்படவேயில்லை. நாங்கள் விசாரித்து அறிந்த வரையில், ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தக்காரருக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றும், மற்ற பணிகளுக்கு பண ஒதுக்கீடே செய்யப்படவில்லை என்றும் பலவாறான தகவல்கள் தரப்படுகின்றன.

எனவே, இந்நகர மக்களின் பிரதான கோரிக்கையான,

காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில், அனைத்து ரெயில் பெட்டிகளும் நிற்கும் அளவிற்கு நடைமேடையை விரிவாக்கியும், உயர்த்தியும், மேற்கூரை அமைத்தும் தர வேண்டும் என்பதே. தற்போது இவ்வசதி இல்லாத காரணத்தால், ரெயில் பயணிகள் ரெயிலில் ஏறவும், இறங்கவும் முடியாமல் கீழே விழுந்து விபத்திற்குள்ளாவது அன்றாடக் காட்சியாகிவிட்டது. ஏறவும், இறங்கவும் முடியாதவர்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு ரெயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில், இந்த ரெயில் நிலையத்தைப் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு மிகவும் இருட்டாக உள்ளது. இதனால், சமூக விரோத செயல்கள் இந்த ரெயில் நிலையத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன.

குடிநீர், சுகாதார வசதிகள், இந்த ரெயில் நிலையத்தில் பயணியருக்கும் இல்லை; இங்கு தங்கி பணிபுரியும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இல்லை. இந்த ரெயில் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளரும் இல்லை.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், உயரதிகாரிகளிடம் மக்கள் பிரதிநிதிகளின் துணை கொண்டு பலமுறை வலியுறுத்தியும் கூட, தென்னக ரெயில்வே இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி - எதிர்வரும் 2014 - பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல், காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் 2 - கிழக்கு கடற்கரை சாலை:

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து, தூத்துக்குடி - கன்னியாகுமரி வழித்தடத்தில் மட்டுமே பணிகள் காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

துறைமுகங்களையும், கடற்கரை ஊர்களையும் இணைக்கும் - தேசிய பாதுகாப்பு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலைப் பணியை சிதைத்து சீரழிக்கும் நோக்கோடு - கடற்கரைக்கு மேற்கே 5 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவில் இச்சாலையை அமைக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, புன்னைக்காயல் முதல் திருச்செந்தூர் வரையுள்ள கடற்கரை ஊர்களை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் வழி மாற்றியமைக்கப்படும் இத்திட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நகராட்சியான காயல்பட்டினமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் செல்வாக்குள்ள சில தனிப்பட்ட நபர்களின் தலையீட்டால் - திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தால் பயணத் தொலைவு அதிகரிப்பதோடு, இச்சாலையின் நோக்கமும் வீணாகிவிடும். ரெயில் பாதையும் குறுக்கிட்டு செலவும் அதிகரிக்கும்.

எனவே, புனிதத் தலங்களையும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், கடற்கரை ஊர்களையும் இணைக்கும் வகையில் - காயல்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறு தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 - இணையதளங்கள் மூலம் கோரிக்கை:

காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம், கிழக்கு கடற்கரை சாலை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில், தமிழக முதலமைச்சர், தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு, வெளிநாடு - வெளியூர் வாழ் காயல் நகர்நல அமைப்புகள் சார்பில் இணையதளங்கள் மூலம் கோரிக்கை விடுக்குமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4 - நகராட்சிக்குக் கோரிக்கை:

காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள், காயல்பட்டினம் வழித்தடத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக, தனித்தனி தீர்மானங்கள் நிறைவேற்றி, தமிழக முதலமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர் - அதிகாரிகளுக்கும், தென்னக ரெயில்வே பொது மேலாளர், மதுரை கோட்ட மேலாளருக்கும் அனுப்பி வைக்கவும், மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து - அவரது பரிந்துரையைப் பெறவும், காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5 - நகர்மன்ற உறுப்பினர்கள், ஜமாஅத் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்:

அறிவிக்கப்பட்டுள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு, நகரின் ஒவ்வொரு வார்டிலிருந்தும் தலா 50 பேருக்குக் குறையாமலும், ஒவ்வொரு ஜமாஅத் / புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் சார்பில் தலா 50 பேருக்குக் குறையாமலும் - சுமார் 3 ஆயிரம் பேரைத் திரட்ட, அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், ஜமாஅத்துகள், ஊர் நலக்கமிட்டி நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.



பங்கேற்றோர்:

இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள்,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், இளைஞர் ஐக்கிய முன்னணி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் - சென்னை, மஜ்லிஸுல் கவ்து சங்கம், அரிமா சங்கம், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு ஊர் நலக் கமிட்டி, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், காழி அலாவுத்தீன் சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





கூட்ட ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தியாளர் சந்திப்பு:

இரவு 07.00 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாலையில் நடைபெற்ற கூட்ட விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் செய்தியாளர்களிடம் விளக்கிப் பேசினார்.




இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்தால் மட்டுமே முடிவுக்கு வரும்.
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [08 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32324

ரயில் மறியல் போராட்டம் நடத்தி முடித்த பின் அடுத்து நம் மக்கள் வருகிற பொது தேர்தலை புறக்களிக்க வேண்டும் என்பது என் கருத்து.

பிஜேபி ஆட்சி செய்திருந்தால் கூட இன்று தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவுற்றிக்கலாம்...!காங்கரஸ் ஆட்சி முடியும் தருவாயில் இந்த போராட்டம் பயனளிக்க போவதில்லை... அநேகமாக இந்த மேம்பாட்டுப்பணி மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்தால் மட்டுமே முடிவுக்கு வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நாம் முஸ்லிம் .முஸ்லிமின் முறையான சயல்
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [08 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32326

போராட்டங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் ! 8-1-2014 wed. போராட்டங்கள் வெற்றி அடைந்து, வரும் காலங்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறி சமூகம் யாவும் நல வாழ்வு பெற அல்லாஹ் அருள் பாலிப்பானாக !

முதன் முதலில் நம் சொந்த தேவையானாலும்,பொது தேவைகலானாலும் எந்த போராட்டமாக இருந்தாலும் ,போராட்டம் நடத்துமுன் நாம் யாவரும் கோரிக்கைகளை இறைவன் முன் சமர்ப்பித்து குறைந்தது இரண்டு றக்காத்துகளாவது " இஸ்திகாரா " எனும் தொழுகையை தொழுது அல்லாஹ்விடம் கேட்டு மன்றாடிய பின் ஆரம்பிக்க வேண்டும் .இன்ஷாஅல்லாஹ் இறைவன் பூரண வெற்றியை தருவானாக ا'مين

இஸ்திகாரா தொழுகையை பற்றி உலமாக்களிடம் நன்றாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . எனினும் ஒரு சிறு குறிப்பு கீழே தரப்படுகிறது .

முறைப்படி இஸ்திகாரா தொழுகையை, முறைப்படி தொழுதுவிட்டு அதற்கே உரித்தான இந்த துஆவை முறைப்படி ஓதவும்

26- دعاء صلاة الاستخارة 74- قال جابر بن عبد الله رضي الله عنهما : كان رسول الله صلى الله عليه وسلم ، يُعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمُنا السورة من القرآن ، يقول : إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ، ثم ليقل :" اللهم إني أستخيرك بعلمك ، وأستقدرك بقدرتك ، وأسألك من فضلك العظيم فإنك تقدِرُ ولا أقدِرُ ، وتعلم ولا أعلم ، وأنت علام الغيوب ، اللهم إن كنت تعلم أن هذا الأمر -يسمي حاجته - خير لي في ديني ومعاشي وعاقبة أمري - أو قال : عاجلة وآجله - فاقدره لي ويسره لي ، ثم بارك لي فيه ، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري - أو قال : عاجله وآجله - فاصرفه عني واصرفني عنه ، واقدر لي الخير حيث كان ، ثم ارضني به "[1]. وما ندم من استخار الخالق ، وشاور المخلوقين المؤمنين وتثبت في أمره ، فقد قال سبحانه{ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ}[2] 1- البخاري7/ 162 - 2- سورة آل عمران ، آية : 159

பொருள் :-

யா அல்லாஹ் !...... நிச்சயமாக நான் உன்னிடமிருந்தே நன்மையை வேண்டுகிறேன். உன்னுடைய சக்தியிலிருந்தே சக்தியை t வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான பாக்கியத்திலிருந்தே கேட்டுக்கொள்கிறேன் . நிச்சியமாக நீயே தக்தீரை (விதி வசத்தை) ஏற்படுத்துகிறாய் . நான் ஏதும் ( விதி )ஏற்படுத்திக்கொள்ளாதவனாக இருக்கிறேன். நீ யாவும் அறிகிறாய் . நான் ஏதும் அறியேன். இன்னும் நீயே மறைவானவற்றை எல்லாம் அறிபவனாக இருக்கின்றாய் . யா அல்லாஹ் !......என்னுடைய தீனுக்கும் துன்யாவுக்கும் நல்லதாக இருந்தால் இது இறுதி காலத்திற்கும் நன்மை தருவதாக இருக்கும் என்று நீ அறிந்திருந்தால் அதை எனக்கு தந்தருள்வாயாக . அதை எனக்கு கிடக்க்கச்செய்து அப்பால் அதில் எனக்கு பறக்கத்தும் செய்தருள் . மேலும் இன்ன காரியமானது தீனுக்கும் துன்யாவிற்கும் என் பிற்கால வாழ்விற்கும் தீமை உண்டாகுமென்று நீ அறிந்திருந்தால் அதை என்னை விட்டும் தடுத்து விடு. என்னையும் அதைவிட்டும் தடுத்து வை . முடிவாக அதை ( த்க்தீராக )ஏற்படுத்தி வைப்பாயாக ! இன்னும் நன்மையானது எங்கிருந்த போதிலும் சரி அதைகொண்டு என்னை பொருந்திக் கொள்வாயாக.ا'مين தயவு செய்து இந்த துஆக்களை Down load செய்து பாடமிட்டு எல்லாவிஷயங்களுக்கும் பயன்படுத்தவும்.انشاء الله

தகவல்:
தைக்கா றஹ்மத்துல்லாஹ் காயல்பட்டனம்
Tel 04639-280852 = MOB . 9488507221
8-1-2014 WED 6-3-1435


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [09 January 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32344

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் .... அமைப்பின் இந்த நல்லதோர் முயற்ச்சி தான் இது ....வெற்றி பெற முதலில் வாழ்த்துக்கள் ....

அக்கம் ,,பக்கம் ,,உள்ள சுற்று வட்டாரங்களில் நம் ஊர் ரயில்வே இஸடேசன் தான் பொது மக்கள் அதிகம் வெளியூர் சென்று வரகூடிய ..+..அனைத்து ரயில்களிலும் மக்கள் போய் வரகூடிய ஒரு சூழ் நிலைமை அமைந்து உள்ளது யாவர்களும் அறிந்ததே.....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் முயற்ச்சில் மற்ற அனைத்து கட்சினர்களும் ஓன்று சேர்ந்து ஒன்றாகவே கைகோர்த்து செயல் படவேணும் ...குறிப்பாக நமது ஊர் பொது மக்களும் கண்டிப்பாக இணைய வேணும் .....நமது ஊர் ரயில்வே இஸ்டேசனின் இந்த மோசமான ஒரு அவல நிலைமை போகவேணும் .....

நாம் இந்த ஒரு போராட்டத்தோடு நின்று விடாமல் தொடர் போராட்டம் செய்தால் தான் நமக்கு முழுமையான ஒரு வெற்றி கிடைக்கும் .....

சென்னை செல்லும் ....செந்தூர் EXP ரயில் ....இரவில் நம் ஊர் வரும்போது நம் இஸ்டேசனில் விளக்கு கூட இல்லாமலும் ..+.. வயதானவர்கள் ரயிலில் ஏறுவதற்கு நமது '' நடைமேடை '' ரொம்பவும் தாழ்வாக இருப்பதால் நம் வயதான மக்கள் படும் கஷ்டமும் சொல்ல இயலாது ..... யாம் கண்ணால் கண்டு வேதனை அடைந்தேன் ....நம் ஊரில் ரொம்பவும் தெளிவான படித்த ....நல்ல பதவியில் நம் மக்கள் இருந்துமா ?? நம் ஊர் வயதான மக்களின் நிலைமை இப்படி ??

பொதுவாக சொல்ல போனால் நம் ஊர் வயதானவர்கள் திருச்சந்தூர் சென்று தான் செந்தூர் EXP ரயில் ஏறுகிறார்கள் என்பதும் குறிப்பிட தக்கது .... & நாம் வேதனை பட கூடிய ஒரு விசையுமும் தான் .....

இந்த போராட்டத்தை நம் ஊர் அனைத்து பொது மக்களும் அறியும் விதமாக பிட் நோட்டிஸ் அடித்து நம் மக்கள் பார்வைக்கு சென்று ...நம் மக்கள் அனைவர்களையும் ஓன்று திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்தி வெற்றி காணவேணும்..+ நல்ல எண்ணம் கொண்டு நமது ஊர் கேபிள் டிவி அமைப்பினர்களும் இந்த பொதுநல மக்கள் போராட்டத்தை அவர்களும் முழு ஒத்துழைப்பு நல்கி ...விளம்பரம் பண்ணவேணும் ..... நம் ஊர் வயாதான பெரியவர்களின் கஷ்டம் நீங்க வேணும் ....அதான் நம் யாவர்களின் நல் எண்ணம் .....

>>>> நாம் ஓன்று பட்டு ...நாம் ஓன்று திரண்டு ....நாம் ஒற்றுமையின் கீல் நின்று ...வெற்றியை காண்போம் <<<<

>> இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் நமக்கு சிறப்பாக்கி வைப்பானாகவும் ஆமீன் <<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (7/1/2014) [Views - 2203; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved