Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:17:50 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12981
#KOTW12981
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 9, 2014
தோப்புக் குளியல், புலிக்குகை காணலுடன் KCGCயின் இன்பச் சிற்றுலா! காயலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4544 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தோப்புக் குளியல், புலிக்குகை காணலுடன் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில் இன்பச் சிற்றுலா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் காயலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தோப்புக் குளியல், புலிக்குகை விஜயத்துடன் இனிதே முடிந்தது KCGC-ன் இன்பச்சிற்றுலா!

சென்னையில் உள்ள காயல்வாசிகளுக்காக ஆண்டிற்கு ஓரிருமுறை என நமது KCGC அமைப்பின் மூலமாக நடத்தப்பட்டு வரும் இன்பச்சிற்றுலா சென்ற 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 7 மணி முதலே சிற்றுலாக்காக முன்பதிவு செய்திருந்த காயலர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்ட இடங்களான மண்ணடி, எழும்பூர் மற்றும் கெல்லிஸிலிருந்து புறப்படுவதற்காக குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.

.........

காலை 8 மணிக்கு சென்னை மண்ணடியிலிருந்து புறப்பட்ட பேருந்து எழும்பூர் வழியாக வந்து அங்கு காத்துக் கொண்டிருந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு முதலில் புறப்பட்டது. அடுத்து கெல்லிஸிலிருந்து நேரடியாக இரண்டாவது பேருந்து புறப்பட்டது.

தினமும் பல்வேறு அலுவல்கள், வீட்டு வேலைகள், பள்ளிக்கூடம் செல்லுதல் என பரபரப்புடன் இயங்கி வரும் பல வயதினரையும் உள்ளடக்கி குடும்ப சகிதமாக வந்திருந்தவர்களைச் சுமந்துக்கொண்டு சென்னையின் முக்கிய வீதிகளைக் கடந்து செனடாப் சாலை வழியாக அண்ணா நூலகம், அதைத் தொடர்ந்து காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், ராஜீவ்காந்தி சாலை வழியாக காலை 9 மணிக்கு நாவலூரில் உள்ள அபூ கார்டனுக்கு இரண்டு பேரூந்துகளும் சென்றடைந்தன.



பயணத்தின் போது கண்டு களித்த அண்ணா நூலக கட்டடம், பல்வேறு பூங்காக்கள், விரிவான சாலைகள், அதன் நடுவே நாட்டப்பட்டிருந்த ஈச்சமரம், கித்தில்(பானி)மரம், பரக்கும் ரயில் என அழகழகான மரங்கள், தகவல் தொழில் நுட்பத்திற்காக கட்டப்பட்டுள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் என உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகளினூடே பயணக்குழு தோப்பிற்குள் திளைப்புடன் நுழைந்தது.

முதலில் வந்திருந்த அனைவருக்கும் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த காலை உணவான இட்லி, சட்னி, சாம்பார் பரிமாறப்பட்டு அடுத்து தேநீரும் வழங்கப்பட்டது.

அடுத்து, வந்திருந்த ஆண்களிடம் KCGC-ன் உறுப்பினராகும் படியும் ஏற்கனவே உறுப்பினரானவர்களிடமிருந்து சந்தா பாக்கிகளும் வசூலிக்கப்பட்டன. மேலும் பயணக் கட்டணம் செலுத்தாதவர்களிடமிருந்து அக்கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போட்டிகள் துவங்கின. முதலில் மழலையர், சிறார்களுக்கான குர்ஆன் திலாவத் (கிராஅத்) போட்டி நடைப்பெற்றது. அல்ஹாஃபிழ் அபுல் ஹஸன் மக்கீ இப்போட்டியை நடுவராக இருந்து சிறப்பான முறையில் நடத்தினார். இப்போட்டியில் முதல் மூன்று பரிசுகள் சிறுவர் சிறுமியருக்காக தனித்தனியே ஒதுக்கப்பட்டிருந்தன.



அடுத்து ஆரவாரமான மியூசிகல் சேர் போட்டி குழந்தைகளுக்காக மட்டும் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்கிப்பிங் போட்டி ஆடவருக்காக நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஒரே முறையில் அதிகமாக குதிக்கும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் என அறிவிக்கப்பட்டது.



தொடர்ந்து முப்பது அடி தூரத்தில் நாட்டப்பட்ட ஒரு ஸ்டம்பை நோக்கி குறிவைத்து தாக்கும் பந்துருட்டும் போட்டி பெரியவர்களுக்காக நடத்தப்பட்டது. இதிலும் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் மூன்று வாய்ப்புகள் தரப்பட்டன.







பெண்களுக்கான போட்டிகள் தனியே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்து நடத்தப்பட்டது. PIN PIERCING, CUP TARING, STRAW STRINGING, PIN PRESSING, SHIP MAKING, BALL PASSING, PUZZLES PICKING, BALLOON BURSTING, LEMON IN THE SPOON AND QUIZ ஆகிய போட்டிகள் பெண்டிருக்காக நடத்தப்பட்டன.

அடுத்து ஆடவர் மற்றும் குழந்தைகள் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர். உடல் உஷ்ணம், பயணக் களைப்பு, தினசரி அலுவல்கள் முதலியவற்றால் சோர்ந்திருந்த பெரியவர்களும் குழந்தைகளும் மகிழ்ச்சி பொங்க முங்கிக் குளித்து பரவசத்துடன் காணப்பட்டனர். பல வகை பந்து விளையாட்டுகளும் நீச்சல் குளத்தில் நிகழ்ந்தன.





அடுத்து ளுஹர் தொழுகைக்கான அதான் கூறப்பட்டு ஜமாஅத்துடன் தொழுகை நடைப்பெற்றது. தொழுது முடித்ததும் அதே இடத்தில் KCGC செய்து வரும் பணிகள் குறித்து மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுபோன்ற சிற்றுலாக்களின் நோக்கம் நமக்கிடையே ஏற்படும் நெருக்கத்தை வைத்து ஊர்மக்களுக்கு சேவை செய்வதே எனவும் ஆகையால் வந்திருக்கும் ஒவ்வொருவரும் KCGC-யின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு வலுவாகச் செயல்பட உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.



மேலும் KCGC-ன் அடுத்த நிகழ்வாகிய சென்னைவாழ் காயலர்களின் பிள்ளைகளை சென்னையிலுள்ள IIT-க்கு அழைத்துச் செல்வதற்காக பெயர் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

விளையாட்டு, குளியல் என பற்பல நிகழ்விற்குப்பின் பசித்த உடல்களுக்கு அருசுவை உணவாக காயல் களரி சாப்பாடு உள்ளூர் வழக்கப்படி சகானில் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல உணவருந்தியதும் ஒரு சாரார் மலரும் நினைவுகளோடு மாமரத்தின் நிழலில் குட்டித்தூக்கத்தில் ஈடுபட்டனர்.





தொடர்ந்து மதியம் 4.00 மணியைத் தாண்டியதையடுத்து தோப்பிலிருந்து விடைப்பெற்று புலிக்குகை செல்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன் அஸ்ர் தொழுகையும் ஜமாஅத்துடன் தொழவைக்கப்பட்டு அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவராக தாம் ஏற்கனவே வந்த பேரூந்துகளில் ஏறியதை அடுத்து மாலை 4.40 மணிக்கு பேரூந்துகள் புலிக்குகையை நோக்கி புறப்பட்டன.

மாலை 5.30 மணிக்கு புலிக்குகையை வந்தடைந்ததும் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த சுண்டல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.



அடுத்து புலிக்குகையின் அடர்த்தியான புல்வெளியில் ஓரிடத்தில் அனைவரையும் சங்கமிக்கச் செய்து அபூகார்டனில் காலையில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் முதல் மூன்றிடத்தை பிடித்தவர்களுக்கான பரிசளிப்பு விழா KCGC-யின் தலைவர் ஆடிட்டர் அஹமது ரிஃபாய், அதன் துணைத் தலைவர் ஸ்மார்ட் அப்துல் காதர், உறுப்பினரான அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆண்கள் பகுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு மேடையிலேயே வழங்கப்பட்டது. பெண்கள் பகுதியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட அப்பகுதியிலேயே பரிசுகள் வழங்கப்பட்டன.



கதிரவனின் அஸ்தமம் கொஞ்சம் கொஞ்சமாகத் துவங்கி இருள் படர ஆரம்பித்த வேளையில் சிற்றுலாவிற்கு வந்தோர் அனைவரும் குழுக்குழுவாக புலிக்குகையைச் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பின்னர் அதன் பின்னால் அழகுரக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் கடற்கரைக்குச் சென்று அங்கும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதை அடுத்து நன்றாக இருள்சூழ ஆரம்பித்த வேளையில் இரவு 7.00 மணிக்கு புலிக்குகையிலிருந்து திரும்பி அவரவர் பேரூந்துகளில் ஏறி இரவு 8.45 மணிக்கு அனைவரும் தத்தமது இல்லத்தை சென்றடைந்தனர்.



புகழனைத்தும் படைத்துப் பரிபாலிக்கும் மேலோன் அல்லாஹ் ஒருவனுக்கே.


இவ்வாறு, KCGC சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை தெரிவிக்கிறது.

தகவல்:
ஹைதர் ஹுஸைன்
நிர்வாக அலுவலர் - KCGC.


KCGC அமைப்பின் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட வெளியரங்க ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [09 February 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33081

மாஷா அல்லாஹ்.

இதுதான் உண்மையான "மனதும், உடலும் ரிலாக்ஸ் ப்ளீஸ்". டென்ஷன் நிறைந்த கால ஓட்டத்தில், மனிதன் இயந்திரமாக மாறிப்போனான். அந்த இயந்திரத்திற்க்கு கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்து, ஆயில் இட்டு இன்பகரமாக மாற்றியுள்ளீர்கள்.

புகைப்படங்களையும், செய்திகளையும் கண்டு நாங்களும் ரிலாக்ஸ் ஆனோம். மிக்க சந்தோசம்.

சகோதரர் ஜைனுதீன் (நெல்லை) அவர்களை கண்டும் மிக்க மகிழ்ச்சி.

* குர்ஆன் போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகளின் பெயர்களை தெரிவித்து இருக்கலாமே.

* மக்ரிப் தொழுகை பற்றிய விபரம் இல்லையே.!!

ஆக, உடலுக்கும், மனதிற்கும், வயிற்றுக்கும் சந்தோசத்தை கொடுத்த இந்த ஒற்றுமையான ஒன்று கூடல் தொடரட்டும். உங்களின் மக்கள் பணிகளும் சிறக்கட்டும். வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [09 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33083

தீனுடன் கூடிய .. தீன் (dheen ) ..

வேலைப்பளுவுக்கு இடையே இந்த ஒரு சிற்றுலா மனவள பரிமாற்றத்துக்கு மிகவும் இன்றியமையாதது.

யாருக்கு சந்தோஷமோ இல்லையோ அதுவும் சென்னை பொடிசுகளுக்கு மிகப்பெரிய சந்தோஷம் (எத்தனை நாள் தான் நாங்கள் ஷவரில் குளிப்பது என்கிற ஆதங்கம் இன்று மட்டும் காணமல் போயிருக்கும்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உல்லாசம் மிகுந்த உவகையுடன் கூடிய ஒன்று கூடல் !
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33084

உல்லாசம் மிகுந்த உவகையுடன் கூடிய ஒன்று கூடல் என்பதைவிட ஒருங்கிணைந்த உணர்வுகளின் உள்ளக்கூடல் என்றாலும் அது மிகையல்ல!

சகோதரர் ஜியாவுதீன் கருத்திலிருந்து சிறிது கைபிசைகிறேன்,உண்மையான இயந்திர வாழ்க்கை இங்குதான்(வளைகுடாவில்தான்) வெகுவாக காணப்படுவது.தமிழக தலைநகரில் வசிப்பவர்களுக்கு எங்கே இயந்திர வாழ்க்கை?.

ஒரு கருத்துடன் ஒருங்கிணைகிறேன். குடும்பத்திலுள்ள எல்லா நன்மைதீமை நிகழ்வுகளை நாள்தோறும் சந்தித்து அதற்க்குறிய தீர்வுகளை சமநிலையோடும், சமபலத்தோடும் தீர்த்துவைக்க கூடிய பல சிக்கல்களை சந்திக்கும் பல இதயங்களுக்கு இந்த இன்ப சுற்றுலா ஒரு இனிய சுகம்தரும் சுந்திரத்தனமாக அமையும் என்பதே என்னுடைய கருத்தாகும்!

எப்படி இருப்பினும் எம்முடைய மக்கள் எங்கு சந்தோசமாக தோன்றினாலும் நம் எல்லோர்களின் இதயத்திலும் இனம்புரியா இன்பமகிழ்ச்சி பொங்கி பாயும் என்பதே உண்மை. அந்த உண்மை உணர்வு இடத்தால் தூரத்தையொ,நாட்டால் தூரதையொ பார்ப்பதுமில்லை,பாகுபடுவதும் இல்லை!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
அன்புடன்.
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved