Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:44:26 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13093
#KOTW13093
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 24, 2014
வேலை தேடி வருவோருக்கு இலவச உணவுடன் கூடிய விடுதி! அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2973 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ நகரில் வேலை தேடி வரும் காயலர்களுக்கு இலவச உணவுடன் தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்கப்படும் என அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செய்தித்துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

அமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் 19ஆவது செயற்குழு கூட்டம் 14 - 02 - 2014 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் S.I. முகம்மது சாலிஹ் அவர்களின் தலைமையில் மன்றத்தின் துணை தலைவர் ஜனாப்.மக்பூல் அஹமது மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜனாப். ஹுசைன் நூர்தீன் ஆகியோர்களின் இல்லத்தில் வைத்து கூடியது.



ஹாஃபிழ் நஹ்வி S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.

வேலை தேடி வரும் காயலருக்கு உணவுடன் கூடிய இலவச விடுதி:

அமீரக நுழைவுசான்றை [VISIT / TOURIST VISA] முறையாக பெற்று வேலை தேடி வரும் காயலர்களுக்கு ஒரு நேரத்தில் ஒருவர் என்ற முறையில் அபூதபீயில் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளை செய்ய மன்ற உறுப்பினர் இருவர் முன்வந்துள்ளனர்.

இவ்வாறு வேலை தேடி வரவிருக்கும் நபர், காயலில் நியமிக்கப்பட இருக்கும் அபூதபீ காயல் நல மன்ற பிரதிநிதியை தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று இங்கு இடம் காலியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இச்செயற்குழு இவர்களின் பொது நலமிக்க அனுசரனையை வெகுவாக பாராட்டி அவர்களின் ஈருலக தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றிட துஆ செய்தது.

வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்:

நமது மன்றத்தின் சார்பாக வேலைவாய்ப்பு தகவல்கள், வேலை தேடும் நமது காயலர்களின் விண்ணப்பங்கள் சேகரிப்பு மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு சம்பந்தமான செயல்களை ஒருங்கிணைக்க A.M. அப்துல் ஜப்பார் [ 056 68 42 257 ] அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். காயல் சகோதர்கள் தங்களால் அறியப்படும் அமீரகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் உதவிகளை தரப்பட்டுள்ள கைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மன்றத்தின் காயல் பிரதிநிதி நியமனம்:

ஊரில் நமது மன்றம் சம்பந்தமான அனைத்து வேலைகளை நிறைவேற்றிடவும், காயலர்கள் அவர்களின் தேவைகளுக்காக அணுகிடவும் உள்ளூர் பிரதிநிதி நியமனம் தற்போது மிக முக்கியமென்று கருதி பொதுநல மிக்க தகுந்த காயல் சகோதரரை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டு அதன் பொறுப்பை ஜனாப். S.M.B. ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரீ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காயல் கடற்கரையின் அசுத்தத்தை நீக்கும் மக்கள் புரட்சி:

நமது மன்றம், தாய்லாந்து காயல்நலமன்றம் மற்றும் காயலின் பிற நலமன்றங்களுடன் இணைந்து காயல் கடற்கரையில் குவிந்திருக்கும் குப்பைகளை நீக்கி மக்களுக்கு நமது கடற்கரையின் பாரம்பரியம், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதின் அவசியம், மாசுபடுதலால் ஏற்படும் விளைவுகள், சுத்தமாக நடந்துகொள்ளும் விதம் ஆகியவைகளை ஓர் விழிப்புணர்வு முகாம் மூலம் தரப்பட்டு, மக்கள் புரட்சி செய்திட தீர்மானம் இயற்றப்பட்டது.

மன்றத்தின் மருத்துவ குழு அமைப்பு:

நமது மன்றத்தின் மருத்துவ உதவிகள், மனுதாரர்களின் பரிசீலனை, மற்றும் SHIFA மூலம் நிதி ஒதுக்கீடு நிறைவேற்ற மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு சமீபத்தில் SHIFA வால் கோரப்பட்ட அவசர நிதிஉதவி இருப்பு சம்பந்தமான சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு அறிந்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது..

குழு உறுப்பினர்கள்:

1. ஜனாப் ஹபீப் ரஹ்மான் ஆலிம்,
2. ஜனாப்.மக்பூல் அஹமது,
3. ஜனாப். ஹுசைன் நூர்தீன்,
4. டாக்டர் ஹமீது யாசர், மற்றும்
5. டாக்டர் செய்யத் அஹமது.
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 14 – 03 - 2014 ஆம் தேதி வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் M.A ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி அவர்கள் அறிவித்து, அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்


அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மாற்றி யோசிக்கிறார்கள் அழகிய முன்மாதிரி
posted by mackie noohuthambi (chennai) [24 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33324

காயல் நல மன்றங்கள் ஆரம்பிக்கப் பட்ட காலங்களில் மக்களிடம் குமருக்கு உதவி, கல்விக்கு உதவி மருத்துவ உதவி என்ற சிந்தனைகள் இருந்தது. காலப் போக்கில் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்கள் பல பரிணாமங்களைக் கடந்து இப்போது வேலை தேடி வருவோருக்கு உணவு உறைவிடம் இலவசமாக வழங்க முன் வந்திருக்கிறார்கள், இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் மாற்றி யோசிக்கும் சிந்தனை இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது.

ஒரு மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது நீண்ட பயனை தரும். இன்னும் நமதூரில், ஒருவர் சம்பாத்தியம் செய்து 10 பேர் வாழ்வாதாரத்துக்கு கொடுத்து உதவ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அல்லாஹ் ஒரு மனிதனை படைக்குமபோது இரண்டு கைகள் இரண்டு கால்களோடுதான் படைக்கிறான். உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் அதன் தாத்பரியம்.

உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். இங்கே வேலை தேடி வந்து வேலையில் அமர்ந்தவுடன் நானும் குறைந்த பட்சம் இரண்டு பேருக்காவது வேலை வாங்கி கொடுப்பேன் என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் மற்ற காயல் மன்றங்களும் இந்த வழி முறையை பின்பற்ற தகுந்த அழகிய முன்மாதிரி இது.

காயல்பட்டினம் கடற்கரையை சுத்தமாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர அதற்காக உங்கள் பணத்தை விரயம் செய்யாதீர்கள். நமது நகராட்சி செய்ய வேண்டிய வேலை இது. "காயல்பட்டினம் கடற்கரை உபயோகிப்போர் சங்கம்" என்று நமதூரில் ஏற்படுத்தி இருக்கிறார்கள் தெரியுமா? . KAYALPATNAM BEACH USERS ASSOCIATION இந்த வேலைகளை செய்ய வேண்டும்.நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை இதிலும் செலவழிப்பது வேஸ்ட்.என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

நல்லதுதானே செய்கிறோம் என்பதற்காக அரசு செய்ய வேண்டிய வேலைகளை நாம் செய்ய ஆரம்பித்தால், நமது ஊர் மக்களுக்கு மருத்துவம் கல்விக்கு செய்ய வேண்டிய உதவிகள் தடை பட்டு விடும் மிகவும் விவேகமாக செயல்படுங்கள். ஒவ்வொரு உறுப்பினருக்கும் குடும்பம் செலவுகள், எதிர்கால கனவுகள் இருக்கும். அதற்கு இடைஞ்சலாக உங்கள் வசூல்கள் ஆகி விடக்கூடாது.

நான் இந்த காயல் நல மன்றங்களில் முக்கிய பொறுப்பு வகித்து உறுப்பினர்கள் உணர்வுகளை உற்று நோக்கியவன் என்பதால் இந்த கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.உங்கள் முயற்சிகளை அல்லாஹ் கபூல் செய்வானாக. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உண்மையான
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [24 February 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33326

மாஷா அல்லாஹ் போற்றத்தக்க ஒரு புண்ணியமான காரியம்!வேலை தேடி அலைவோரின் எண்ணக்கவலைகள் தான் எத்தனை,எத்தனை.அதிலும் இருப்பிடம்,உணவு என்ற ஒரு பெரிய சுமையை சமாளிக்க ஒத்துழைப்பு நல்கும் அன்புக்குறிய அபுதாபி காயல் நல மன்றத்தினரின் கண்ணியம் அடங்கிய கசியும் இதயத்திற்கு எத்தனை ஆயிரம் நன்றி சொன்னாலும் தகும்!

வேலை இல்லா ஒரு காயல் சகோதரனுக்கு வேலை கிடைக்குமேயானால்,அப்படி கிடைக்கும் வேலையின் பலன் அந்த ஒருவரை மட்டும் சாராது,அவர் கீழ் அவரை எதிர்நோக்கி இருக்கும் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரு புனர்வாழ்வு கிடைத்ததற்கு சமமாகும்!

இப்படிப்பட்ட புண்ணிய பணியை அபுதாபி காயல் நலமன்றம் மட்டுமல்ல,அனைத்து காயல் நல மன்றங்களும் முன்னிலைப் படுத்தி செய்யவேண்டும்! வேலை இல்லாதவரின் வலியின் தன்மையை அந்த நிலையில் உள்ளவர்களால் மட்டுமே மிகுதியாக உணரமுடியும்!அல்லாஹ் அனைவரின் நெருக்கடியையும் நீக்கி நல்வழியை நல்கிடுவானாக ஆமீன்!

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் ரியாத் நகரின் முக்கிய இடத்தில ஒரு வீட்டை பிடித்து அதற்க்கு "காயல் முத்துச்சாவடி" என்று பெயரிட்டு அதில், வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கும் வரை தங்கி கொள்ளவதோடு உணவும் பரிமாறப்பட்டது.இப்புண்ணிய பணிக்காக கருணை உள்ளம் படைத்த நம் காயல் சகோதரர்களின் கணிசமான பொருள் உதவியால் வருடக்கணக்கில் இயங்கி வந்தது.இங்கு தங்கி இருந்தவருக்கு வேலை கிடைத்துவிட்டால்,அவரின் முதல் மாத சம்பளத்தை இப்புண்ணிய பணி நடைபெறும் முதுச்சாவடிக்கு கொடுத்தும் வந்தனர்.அவர் உதவி பெற்றதும் மட்டுமல்ல் மற்றைய நம் காயல் சகோதரர்களும் பயன் பெற வேண்டும் என்ற இறக்க உணர்வு வேட்க்கையை வளர்த்த புண்ணிய இடமாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல!

உண்மையான "சதக்கத்துல் ஜாரியா" வாகிய இக்கருணை காரியத்தை செய்ய முன் வந்த அத்துனை அபுதாபி காயல் நல மன்ற சகோதரர்களுக்கும் இன்னொருமுறையும் என் இதயம் பொங்கும் நல்வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Ahamed Mustafa (Dubai) [25 February 2014]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33345

It is a very good cause. Appreciate the efforrts by 2 individuals who have made this initiative & May allah Bless them, Barakkallah !

What I understood from the report is that its a gesture from 2 Individuals from Abudhabi, through their Association. I also know quite a few in this regard who is doing this silently.

Wassalam..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved