Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:29:35 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13098
#KOTW13098
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 25, 2014
40 தொகுதிக்கும் வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு! தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தேர்வு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3280 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அறிவித்தார்.



முதல்வர் ஜெயலலிதா, தனது 66-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பகல் 12.30 மணிக்கு வந்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

1. திருவள்ளூர் (தனி) - டாக்டர் பி.வேணுகோபால் (அதிமுக மருத்துவ அணிச்செயலாளர்)

2. வடசென்னை - டி.ஜி.வெங்கடேஷ்பாபு (வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர்)

3. தென்சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் (தெற்கு லீத் கேஸில் தெரு, ராஜா அண்ணாமலைபுரம்)

4. மத்திய சென்னை - எஸ்.ஆர்.விஜயகுமார் (அதிமுக மாணவர் அணி செயலாளர்)

5. ஸ்ரீபெரும்புதூர் - கே.என்.ராமச்சந்திரன் (காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அவைத் தலைவர்)

6. காஞ்சிபுரம் (தனி) - மரகதம் குமாரவேல் (திருப்போரூர் ஒன்றிய இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர்)

7. அரக்கோணம் - திருத்தணி கோ.அரி (திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)

8. வேலூர் - பா.செங்குட்டுவன் (வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்)

9. கிருஷ்ணகிரி - கே.அசோக்குமார் (கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர்)

10. தருமபுரி - பி.எஸ்.மோகன் (தருமபுரி வழக்கறிஞர் பிரிவு செயலாளர்)

11. திருவண்ணாமலை - ஆர்.வனரோஜா (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்)

12. ஆரணி - செஞ்சி சேவல் வெ.ஏழுமலை (விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)

13. விழுப்புரம் (தனி) - எஸ்.ராஜேந்திரன் (விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப்பிரிவுச் செயலாளர்)

14. கள்ளக்குறிச்சி - டாக்டர் க.காமராஜ் (விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்)

15. சேலம் - வி.பன்னீர் செல்வம் (சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்)

16. நாமக்கல் - பி.ஆர். சுந்தரம் (நாமக்கல் மாவட்ட அவைத் தலைவர்)

17. ஈரோடு - எஸ்.செல்வகுமார சின்னையன் (ஈரோடு மாநகர மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்)

18. திருப்பூர் - வி.சத்தியபாமா (தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

19. நீலகிரி (தனி) - டாக்டர் சி.கோபாலகிருஷ்ணன் (குன்னூர் நகரமன்றத் தலைவர்)

20. கோவை - ஏ.பி.நாகராஜன் (கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர்)

21. பொள்ளாச்சி - சி.மகேந்திரன் (திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்)

22. திண்டுக்கல் - எம்.உதயகுமார் (நிலக்கோட்டை பேரூராட்சி செயலாளர்)

23. கரூர் - டாக்டர் மு.தம்பிதுரை (அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்)

24. திருச்சி - ப.குமார் (இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர்)

25. பெரம்பலூர் - ஆர்.பி.மருதைராஜ் என்ற மருதராஜா (பெரம்பலூர் ஒன்றிய செயலாளர்)

26. கடலூர் - ஆ.அருண் மொழித்தேவன் (கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர்)

27. சிதம்பரம் (தனி) - மா.சந்திரகாசி (பெரம்பலூர் விவசாய பிரிவுச் செயலாளர்)

28. மயிலாடுதுறை - ஆர்.கே.பாரதிமோகன் (திருப்பனந் தாள் ஒன்றியச் செயலாளர்)

29. நாகப்பட்டினம் (தனி) - டாக்டர் கே.கோபால் (திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்)

30. தஞ்சை - கு.பரசுராமன் (தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்)

31. சிவகங்கை - பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்டச்செயலாளர்)

32. மதுரை - இரா.கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி துணை மேயர்)

33. தேனி - ஆர்.பார்த்திபன் (தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்)

34. விருதுநகர் டி.ராதாகிருஷ்ணன் (விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர்)

35. ராமநாதபுரம் - அ.அன்வர் ராஜா (அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்)

36. தூத்துக்குடி - ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்)

37. தென்காசி (தனி) - வசந்தி முருகேசன் (நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளர்)

38. நெல்லை - கே.ஆர்.பி.பிரபாகரன் (ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிச் செயலாளர்)

39. கன்னியாகுமரி - டி.ஜாண் தங்கம் (கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர்)

40. புதுச்சேரி - எம்.வி.ஓமலிங்கம் (காரைக்கால் மாவட்டச் செயலாளர்)


கம்யூனிஸ்ட்களுடன் பேச்சு:

தொடர்ந்து நிருபர்களிடம் முதல்வர் கூறுகையில், ‘‘இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு பற்றி பேசப்பட்டு வருகிறது. தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றார்.

---------------------------------

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் தியாகராஜ் நட்டர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 60. இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலூகா, யாகோபு புரம் ஆகும். இவர் கிறிஸ்தவ நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்.

இவரது மனைவி எமிமா அமலா ராணி, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சிமிர்னா ராகிதா என்ற மகளும், ஆண்டனி மாமல்லன், ஜோசப் சாமுவேல் என 2 மகன்களும் உள்ளனர். மகள் சிமிர்னா ராகிதா திருமணாகி மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார்.

தியாகராஜ் நட்டர்ஜி குடும்பத்துடன் தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டில், உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் 1972ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். தற்போது தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக உள்ளார். கடந்த 2001-2006 வரை அரசு வழக்கறிஞராக பணிபுரிந்தார்.

மேலும், சாயர்புரம் போப் கல்லூரி செயலாளராகவும், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் உள்ளார். எம்ஏஎல்எல்பி முடித்துள்ள இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 30 வருடங்களாக வழக்கறிஞராக உள்ளார். வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தகவல் மற்றும் புகைப்படங்கள்:
தி இந்து மற்றும் www.tutyonline.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...WELL DONE !
posted by mackie noohuthambi (chennai) [25 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33333

நேர்காணல் இன்னும் முடியவில்லை, கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கவில்லை, யாருடன் கூட்டு சேர்வது என்று சாம்பார் பேரம் பேசிக்கொண்டிருக்கும் நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை,

கட்சியை உடைப்பதா தன் பக்கம் வளைப்பதா என்ற சிந்தனை ஓட்டம் இன்னும் OYAVILLAI, தேர்தல் தேதியும் இன்னும் அறிவிக்கப் படவில்லை. தன் தலைக்கு மேல் தொங்கும் சொத்து குவிப்பு ஊழல் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் அறிவிப்பில் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் சாதக பாதகங்கள் பற்றிய ஒரு பதட்டமும் இல்லாமல் இத்தனை பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் 40 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்து மார்ச் 3 முதல் சூறாவளி சுற்றுப் பயணத்துக்கும் நாள் குறித்து அமைதியாக தன் 66ம் அகவையில் நுழையும் புரட்சி தலைவிக்கு ஒரு SALUTE ! துணிச்சல் மிக்க தலைவி.

வெற்றிக்கு முதல் மந்திரமே தன்னம்பிக்கை தான்.THERE IS NO SUBSTITUTE TO HARD வொர்க் AND QUICK DECISION. தாமதமாக எடுக்கும் சரியான முடிவைவிட துரிதமாக எடுக்கும் தவறான முடிவு சிறந்தது என்ற சூட்சுமத்துக்கு மறு பெயர் ஜெயலலிதா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abdul Wahid .S (Kayalpatnam) [25 February 2014]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 33341

முஸ்லிம்களுக்கு சென்ற தேர்தலில் அளிக்கப்பட்ட (3% மேல் தரப்படும் என்ற ) வாக்குறுதி எல்லாம் கப்சாதானா ? பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு ! கணக்க்கு (குறைந்தது 13 சீட்டுகள்) இடிக்கிற மாதிரி இருக்கே .

எல்லாவற்றிக்கும் மேல் அம்மா பிரதமர் ஆவப் போகிறதாக உடன் பிறவா உடன் பிறப்புகள் நம்பிக்கை கொண்டுள்ளார்களே. இந்த அம்மா பெயர் லிஸ்டில் இல்லையே. ஒரு வேலை அறிஞர் அண்ணா எம்.எல். சி ஆகி முதல்வர் ஆனா மாதிரி ஏதாவது சட்டத்தில் கேப் இருக்கும் போல! அல்லது ஒரு எம் பி க்கு கல்தா கொடுத்துவிட்டு இடைத் தேர்தல் கொண்டு வருவாங்க போல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னல்லாஹ் மாசாபுரீன்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [25 February 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33342

"தாமதமாக எடுக்கும் சரியான முடிவைவிட துரிதமாக எடுக்கும் தவறான முடிவு சிறந்தது" என்பது நான் என்றும் மதிக்கும் சகோதரர் நூஹுதம்பி காக்காவின் கருத்து.

"பதறினால் சிதறிவிடும்"."பொறுத்தார் பூமியாழ்வார்" என்ற கடந்தகால உண்மை நிகழ்வுகளில் உத்தம பழமொழியும் நூஹுதம்பி காக்காவிற்கு தெரியாதது அல்ல!

என் இந்த கருத்துப்பதிவு நூஹு தம்பி காக்காவிற்கு மட்டும்தான், வேறு எண்ணத்துடன் நான் எழுதியது என்று நினைப்பவர்களுக்கு நான் பொறுப்பாளியல்ல..

அல்லா அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [25 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33346

அஸ்ஸலாமு அழைக்கும் ,

இது போன்ற ஒரு மோடத்தனமான சர்வாதிகார அறிவிப்புகளை அம்மாவை தவிர வேறு எவராளும் அறிவிக்க முடியாது .

பாவம் தோழர்கள் மிஞ்சி போனால் அவர்களுக்கு தலா ஒன்று , அல்லது தலா இரண்டு , அல்லது மிகவும் கூடுதல் என்றால் தலா மூன்று எதற்கு அதிகம் கொடுக்க போவது இல்லை சில சமயம் தலா ஒன்றாக கூட இருக்கலாம் .

இதட்கு என்ன தொகுதி உடன்பாடு உடன் படிக்கை என்று தெரியவில்லை துண்டை காணம் துணியை காணம் என்று மஞ்ச துண்டாரிடம் இந்த தோழர்கள் வந்தாளும் ஆட்ச்சரியம் ஒன்றும் இல்லை .

( சூரியன் , தாமரை , இரட்டை இலை ) இந்த கட்சிகள் போட்டி போடும் தொகுதிகளில் தி . மு . க விட்கு சாதகமாக முடிவுகள் பெரும்பாலும் அமையும் .

( சூரியன் , இரட்டை இலை , ( பிஜேபி அல்லாது அதன் கூட்டணி கட்சிகள் போடி போடும் தொகுதிகளில் ) ஆ . இ . அ . தி . மு . க விட்கு சாதகமாக முடிவுகள் பெரும்பாலும் அமையும் .

பிஜேபி யும் , அம்மா வும் நேரடி போடி போடாத இடங்களில் மாறி மாறி பிஜேபி க்கு ஆதரவாக ஆ . இ . அ . தி . மு . க வும் .

ஆ . இ . அ . தி . மு . க வுக்கு ஆதரவாக பிஜேபி யும் வாக்களிக்கும் தமிழகத்தை பொருத்தவரை இதுதான் அவர்கள் இருவரின் நிலைப்பாடு .

நம் ஓட்டுகள் இந்த இரண்டு கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் போடு விடாமல் , சிதறாமல் அது சமயம் வலுவான சமைய சார்பு இல்லாது அணிக்கு அளிக்கு மாறு பார்த்து கொள்ளவேண்டும் .

அம்மா வின் வெற்றி தொகுதிகள் கடைசியாக பிஜேபி க்கு தான் சாதகமாக அமையும் என்பதில் நமக்கு இரண்டு கருத்துகள் வேண்டாம் .

மஞ்சள் துண்டும் தேர்தல் முடிந்த பிறகு எந்த கட்சியுடனும் கூட்டு வைக்க தயாராக இருப்பார் . இவருக்கு தமிழகத்தில் அதிக இடம் கிடைக்க வாய்புகள் குறைவு அம்மாவுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்புகள் உள்ளது இரண்டு கட்சியையும் தனித்து அதிக இடங்கள் வெற்றி பெற விடுவிட கூடாது மஞ்ச துண்டு அதிக இடம் பிடிக்க நம் ஓட்டுகள் உதவும் அதனால் அம்மாவை தடுக்க முடியும் கடைசில இதன் மூலம் அம்மா பிஜேபி க்கு மொத்தமாக கொடுக்க இருக்கும் ஆதரவை நாம் தடுக்க முடியும் .

என்னுடைய நிலைபாட்டின் படி ( சூரியன் , தாமரை , இரட்டை இலை மூன்றும் நிறைய தொகுதிகளில் நேரடியாக மோத வேண்டும் .

குறிப்பாக பிஜேபி அதிக இடத்தில் தமிழ் நாட்டில் போடி போடனும் குறைந்தது 15 இடத்திலாவது போடி போட்டால் நன்றாக இருக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [25 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33349

சந்திரசேகர், தேவகௌடா போன்றோரெல்லாம் பிரதமர் ஆஹ இருந்து விட்டார்கள். ஆதலால் ஜெயலலிதா அம்மா பிரதமர் ஆனால் தப்பு ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள் அம்மாவுக்கு ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [25 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33352

திறமையான வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, வெற்றி பெற பாடுபடுவோம். நாளைய இந்த தொகுதி அ தி மு க M P என்று 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் உச்சரிப்போம். நகர நலன் காப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...கடைசி வரை ... காத்து இருப்போம்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 February 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33357

40 தொகுதிக்கும் வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு! தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தேர்வு!!

அ.தி.மு.க வின் இந்த 40 வேட்பாளர்களில் , இறுதியான வேட்பாளர்களாக கரை சேருபவர்களை நாம் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தான் உறுதி செய்ய முடியும் . அது வரை , பாவம் அறிவித்த இந்த வேட்பாளருக்கு கூட தெரியாது, யார் இறுதியாக மன மேடையில் மாப்பிளையாக அமருவார்கள் என்று .

கடைசி வரை காட்சிகள் மாறலாம் ... அது வரை காத்து இருப்போம் .

குறிப்பு :- இது அவர்களின் உட்கட்சி விவகாரம் . அதில் தலை இட நமக்கு உரிமை இல்லை . அதை குறை சொல்லி நானும் எழுத வில்லை , விரும்பவும் இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...மீண்டும் படியுங்கள்...
posted by mackie noohuthambi (chennai) [25 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33364

எனதருமை செயலாளர் சுல்தான் காக்கா அவர்களுக்கு நன்றி. "அந்த சூட்சுமத்துக்கு மறுபெயர் ஜெயலலிதா" என்று குறிப்பிட்டுள்ளதை மீண்டும் படித்துப் பாருங்கள். அது எனது கொள்கை அல்ல. ஆனால் காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவுகளால் 24 வருடங்கள் சிறையில் வாடிய குடும்பம் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் சித்திரவதை பட்டுக் கொண்டிருக்கிறது.

15 - 20 வருடங்கள் தீர்ப்பும் இல்லாமல் தண்டனையும் இல்லாமல் தங்கள் இளமையையும் வாழ்வாதாரத்தையும் தொலைத்து முதுமை அடைந்து சித்திரவதைப் பட்டு அன்றாடம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் கோவை சிறையில் வாடும் முஸ்லிம்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

இதை எல்லாம் பார்க்கும்போது துரிதமாக ஏதாவது முடிவுக்கு இந்த அரசு வந்திருக்க வேண்டாமா. இவர்கள் என்ன தீர்ப்பு அளித்தாலும் அது 100 விழுக்காடு சரியான தீர்ப்பு என்று சொல்லி விட முடியாது.அரசியல்வாதிகள் நீதிமன்றங்களையும் முடக்கி விடுவார்கள் நீதியையும் வளைத்து விடுவார்கள் நியாய தீர்ப்பு நாளின் அரசன் அல்லாஹ் சொல்லும் தீர்ப்பே உறுதியானது, இறுதியானது,மற்றெல்லா தீர்ப்புகளும் டூப்பு.

உரிய காலத்தில் தீர்ப்போ மன்னிப்போ வழங்கப் பட்டிருந்தால் அது அப்போதே முடிந்து போயிருக்கும்.அந்த வகையில் ஜெயலலிதா என்ன கலைஞரும் எம்ஜியாரை விலக்கியது, அழகிரியை அப்புறப் படுத்தியது எல்லாமே பாராட்டுக்கு உரியவையே. இருந்தாலும் கலைஞர் கொஞ்சம் லேட்தான். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved