Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:44:55 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13101
#KOTW13101
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 25, 2014
அ.தி.மு.க நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியீடு! முழு விபரம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2450 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை, தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். ஒட்டு மொத்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்ப் பிரதியை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். ஆங்கிலப் பிரதியை கழக அமைப்புச் செயலாளர் டாக்டர். விசாலாட்சி நெஞ்செழியன் பெற்றுக்கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில், தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் நலன், கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட வாக்குறுதிகளும், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட நடவடிக்கை – தனி ஈழம் அமைந்திட இலங்கைத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உணவு பாதுகாப்புத் திட்டத்திற்கு பதிலாக பொதுவிநியோகத் திட்டம் – ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை அனுமதிப்பதில்லை - மகளிருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தேசிய அளவில் அமல்படுத்த நடவடிக்கை – மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை – மகளிருக்கான இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்வது – இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை – உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கை முழுவதையும் காண இங்கு அழுத்தவும்>>


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [25 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33353

அஸ்ஸலாமு அழைக்கும் ,

போற போக்கை பார்தால் அம்மா தனித் தமிழ் நாடு வாங்கி விடுவார் போல் படுகிறது வாழ்க அம்மா எல்லாம் அவருடைய இஷ்டம்தான் .

இந்த நாற்பது தொகுதிக்கும் அறிவிக்கப்பட்ட அடிமைகள் எத்தனை முறை மாற்றபடுவார்கள் என்பதை பாவம் அந்த அம்மா கூட அறிய மாட்டார் இந்த கட்சி பெயரை ஆல் இந்தியா அம்மா ஆரிய முன்னேற்ற கழகம் என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும் .

அதுபோல் தேர்தல் பிரசாரத்தியும் காணொளி காட்சிகள் மூலம் செய்தால் நன்றாக இருக்கும் கொடைநாடு மறந்து இந்த அம்மா தமிழ் நாட்டுக்கு வந்திருப்பது மிக பெரிய ஆட்சரியம்தான் . நம் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் பாவம் இந்த தமிழன் ரம்போ......ராம்போ ...... நல்லவன் எத்தனை முறை மடையனாகினாலும் ஆகுறான் .

வாஜ்பாய் நினைவுடன் இருந்தால் இவருக்கு எதிராக பிரசாரம் செய்வார் அந்த 13 நாட்களை எளிதில் மறக்க மாட்டார் அதனை நினைத்து நினைத்து மனிதனுக்கு போதம் மாறி போய்யி இருக்கும்

. இன்னும் நிறைய கூத்துகள் இருக்கிறது நாம் இவற்றை கவனித்து நம் மக்கள் கவனமாக செயல்படனும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இலவு காத்த கிளியின் கதை!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [25 February 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33363

ஜெயலலிதா அவர்களின் ஆணித்தரமான ஆட்ச்சேபனையையும் மீறி முஸ்லிம்களுக்கு 3.5% சதவீத இடஒதிக்கீடு கொடுத்ததோடு மதவாத சக்தியில் இயங்கும் எந்த கட்சிகளுடன் கூட்டு இல்லை என்ற கொள்கை உணர்வை அறிவித்து சிறுபான்மையினர்களின் சிந்தையை குளிரவைத்த தலைவனையும் மிஞ்சி,

எங்கள் தலைவி இஸ்லாமியர்களுக்கு இடஒதிக்கீட்டை இன்னும் ஏழு சதவீதமாக உயர்த்தி தர உள்ளார், என்ற பலமான செவிவழி செய்தி செயல் வடிவமுடைய அறிக்கையாக அம்மாவிடமிருந்து வெளிவரும் என்று இன்று வரை (தேர்தல் அறிக்கை வெளியான இத்தருணம் வரை) எதிர்பார்த்த இஸ்லாமியர்களுக்கு இலவு காத்த கிளியின் கதையாக முடிந்துவிட்டது !

அம்மா எப்படியும் இடஒதிகீட்டை உயர்த்தித்தர நாடியுள்ளார்,ஆகவே எங்கள் அமைப்பின் இடஒதிக்கீட்டு போரட்டத்திற்கு பின்னர் அதை அறிவியுங்கள். நீங்கள் அறிவித்ததற்கு உங்களை போற்றும் முஸ்லிம் மக்கள் அதேவேளையில் எங்கள் போராட்டமும் அதற்க்கு முக்கிய காரணம் என்று முழுமையாக நம்பி அனைத்து முஸ்லிம்களும் உங்ககளுக்கு ஆதரவாக அணிதிரளுவார்கள்,என்றதொரு ரகசிய ஒப்பந்தம் ஒரு தவிஹீத் அமைப்பு தலைவருடன் ஏற்ப்பட்டதாக மிகப் பிரபலமாக பேசப்பட்டு அதை ஒருசில ஆலிம்கள் கூட மேடையில் பேசியதாக அறிந்தேன்!

ஆனால் அம்மாவோ அனைத்து எண்ணங்களுக்கும் "ஆப்பாக" தன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்!

இப்பொழுது என்ன முடிவுக்கு வரப்போகிறார் தவ்ஹீத் தலைவர். எச்சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நாங்கள் வேறுபட்டு நிற்கும் அமைப்பின் தலைவர்,எவ்வணியில் இருக்கிறாரோ அவ்வணிக்கெதிராக இருப்பதே எங்களின் எந்நாளும் மாறாத இறுதிக்கொள்கையாகும்,என்பதை இதுவரை கடைபிடித்து வந்தவர், இப்பொழுதும் அதே நிலையை மேற்கொள்ள பல காரணங்களை ஆராய்ந்து அதற்க்கு அழகூட்டி,அதனால் தான் நாங்கள் தனித்து நிற்கப்போகிறோம் என்று அறிவிப்பாரா?அல்லது.

அனைத்து முஸ்லிம் அமைப்பும் ஓரணியில் சேர்ந்து விட்டது, நாமும் நம் சமுதாய மக்கள் நலன் கருதி அந்த அணிக்கி ஆதரவு கொடுப்போம் என்ற முடிவுக்கு வருவாரா?இந்த விசியத்தில் அல்லாஹ் அவர்களுக்கு நீத்யுடைய நேர்மையான வழியை காட்டியருள்வானாக !ஆமீன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நிரந்தரம் இல்லை...
posted by Dawood bin Shaffie (Hong Kong) [26 February 2014]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 33366

சகோ அஹ்மது சுலைமான் சொன்ன விஷயத்தை நேற்றே வாக்காளர் பட்டியல் வந்ததும் சொல்ல நினைதேன்... "எந்த ஒரு பெயரும் அதில் உறுதி கிடையாது... எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் என்பது "அம்மா"வின் தனித்துவமே...

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அறிவிப்பு வரும்
posted by சதக்கத்துல்லா (தம்மாம்) [26 February 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33380

ஆதம் காக்கா, கவலைபடாதீர்கள். நாங்கள் தனியாக அம்மாவை சந்தித்தோம். அவர்கள் தனியாக எங்களிடம் லெட்டர் தந்தார்கள். எனவே இட ஒதுக்கீடுடை கூட்டி கொடுத்து விட்டார்கள். எனவே முஸ்லிம்களே அம்மாவிற்கு ஓட்டு போடுங்கள் என சீக்கிரம் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து இருங்கள். இதே கூத்து இதற்கு முந்திய தேர்தலிலும் நடந்ததுதான். ம்ஹீம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved