Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:52:47 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13383
#KOTW13383
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 29, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: கட்சிக்குள் உள்குத்து வேலை செய்வோர் ஓரங்கட்டப்படுவர்! ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்துப் பேசிய திமுக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4134 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இம்மாதம் 10ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. அப்பட்டியலின் படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனை காயல்பட்டினம் 13ஏ, விசாலாட்சியம்மன் கோயில் தெரு என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது.



அதன் திறப்பு விழா நேற்று (மார்ச் 28) 17.00 மணியளவில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



தொடர்ந்து நடைபெற்ற - ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர் கூட்டத்திற்கு, திமுக நகர அவைத்தலைவர் ஜெ.எம்.கிதர் முஹம்மத் தலைமை தாங்கினார். திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், நிர்வாகிகளான எஸ்.ஏ.காதர் ஸாஹிப், ஏ.பன்னீர் செல்வம், எம்.என்.சொளுக்கு, பூங்கொடி, எஸ்.எச்.தாஜுத்தீன், ஏ.எஸ்.ஆறுமுகம், ஆர்.எஸ்.கோபால், பி.எம்.அப்துல் காதர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திமுக 13ஆவது வட்ட செயலாளர் ஆர்.எஸ்.கணபதி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



கூட்டணி கட்சிகளான ஆதித்தமிழர் பேரவை சார்பில் அதன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அருந்ததி அரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் முன்னோடித் தமிழன், மனிதநேய மக்கள் கட்சியின் நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், திமுக நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு, திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தேர்தல் பணியாற்ற வேண்டிய இக்காலகட்டத்தில், உட்கட்சிப்பூசல் இருக்கக் கூடாது என்று மமக நகர தலைவர் பேசினார்.



அதனைத் தொடர்ந்து, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் ஆஸ்டின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி நிறைவுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



தேர்தல் பணியாற்ற வேண்டிய இத்தருணத்தில், திமுகவிற்குள் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது என்று, கூட்டணிக் கட்சிகள் சொல்லுமளவுக்கு நிலையுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இப்பிரச்சினையையை சரிசெய்ய வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டே இன்று நான் இங்கு வருகை தந்துள்ளேன்.

கட்சி என்பது ஜனநாயக அமைப்பு என்ற அடிப்படையில், கருத்து வேறுபாடுகள் தவிர்க்க இயலாததுதான். எனினும், அதைப் பூதாகரமாக்கி, தேர்தல் வெற்றிக்கு எதிராக அதன் போக்கு அமைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இத்தனையையும் தாண்டி, கட்சியின் கட்டுக்கோப்புக்கு மாற்றமாக செயல்படுவோரை இனங்கண்டு ஓரங்கட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.



யார் என்ன சொன்னாலும், இந்த காயல்பட்டினம் என்றும் கலைஞர்பட்டினம்தான் என்பதை, சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் தளபதி ஸ்டாலின் இங்கு வந்தபோது, வெளியிலேயே வராத இந்த ஊர் பெண்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை நேரில் பார்த்து அறிந்துகொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார்.

இங்குள்ள வாக்கு நிலவரம் குறித்து அவர் என்னிடம் கேட்டபோது, காயல்பட்டினத்தில் 90 சதவிகித வாக்கு நம் கட்சிக்குத்தான் என்று நான் உறுதியுடன் தெரிவித்துள்ளேன். அது நிறைவேற அனைவரும் உறுதியுடன் உழைக்க வேண்டியது கடமை.

இந்தத் தேர்தலில் பரப்புரை செய்யும் ஜெயலலிதா, செல்லுமிடங்களிலெ்லாம் திமுகவையும், காங்கிரஸையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆனால் பாஜக பற்றி ஒன்றுமே சொல்வதில்லை.

திமுகவை ஊழல் செய்த கட்சி என்று விமர்சிக்கிறார். அப்படியே வைத்துக்கொள்வோம்... நீங்கள் சுத்தமா? நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு முகம் காட்ட அஞ்சி ஓடி ஒளிவது யார் என்பதை இந்த நாடு அறியும்.

ஜெயலலிதா பிரமராகக் கனவு காண்கிறார். தன்னுடன் இருந்த கட்சிகள் அனைத்தையும் வெளியில் தள்ளிவிட்டார். யாருடைய ஆதரவும் இன்றி அநாதையாக நிற்கும் நிலையிலும் அவர் நாட்டை ஆள கனவு காண்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

நரேந்திர மோடிக்கும், இவருக்கும் செயல்திட்டங்கள் ஒன்றே. இருவரும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்களே. எனவே இவ்விருவர் விஷயத்திலும் மிகுந்த எச்சரிக்கை தேவை.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அமோக வெற்றிபெறச் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினரானால், தொகுதி மேம்பாட்டு நிதியாகக் கிடைக்கும் 5 கோடி ரூபாயையும் இந்தத் தொகுதிக்கு - குறிப்பாக இந்த ஊருக்கு எந்தெந்த வகைகளிலெல்லாம் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறதோ, அத்தனை வழிகளிலும் பயன்படுத்தப்படும் என நான் உறுதியளிக்கிறேன்.


இவ்வாறு திமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி பேசினார்.

கூட்டத்தில், ஜெயக்குமார் ரூபன், ஆனந்தசேகரன், ராஜ்மோகன் செல்வின், சொ.சு.தமிழ் இனியன், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர மாணவரணி அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உட்பட - திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், அங்கத்தினர் பங்கேற்றனர்.









படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்


ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஆம் ,,,ஆம் ,,ஆம்,,,!
posted by OMER ANAS (DOHA QATAR.) [29 March 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34022

(மாவாட்ட வந்த தி மு செயலாளரே,,..ஜெயா உம்மா) திமுகவை ஊழல் செய்த கட்சி என்று விமர்சிக்கிறார். அப்படியே வைத்துக்கொள்வோம்... நீங்கள் சுத்தமா?

நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு முகம் காட்ட அஞ்சி ஓடி ஒளிவது யார் என்பதை இந்த நாடு அறியும்.c &p

எப்பு எப்பு இப்பவாவது,நாங்களும் அப்படியே வைத்துக் கொள்வோம் என்று ஒத்துகொண்டீகளே! ஆகா நீங்க இரண்டு பேருமே எங்களை சுரண்டிதான் இத்தனை நாளா,உங்க குடும்பத்தை வளர்த்து இருக்கீங்கோ அப்படித்தானே !

அப்புறம்,காயல் பட்டணம் எப்பவும் காயல் பட்டணம்தான். அது எங்கள் பட்டணம்தான்.. {அது என்ன உங்கள் தலிவருக்கு எப்பவும் கோபால் பல்பொடி புறம் புடிச்சிருக்கு.

தேர்தல் வந்தா மட்டும் எங்க ஊற புடிச்சிருக்கு?)இத, வரும் தேர்தலில் எமது துடைப்ப கட்ட நிரூபிக்கும்.! காரணம்,! கையால் மக்கள் கண் விழித்துக் கொண்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.I.மூசா நெய்னா (காயல்பட்டணம்) [29 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34028

சபாஷ்.!!!. சகோதரர் உமர் அனஸ் அவர்களே. நெத்தியடி. ஊழலை பற்றி பேச குறைந்தபட்ச அருகதை வேண்டும். திருவாரூரில் இருந்து வெறும் கையை வீசி கொண்டு வந்த குடும்பத்துக்கு, இன்று விமான சர்வீஸ் விடும் அளவுக்கு வளம் வந்தது என்ற விஞ்ஞான ரீதியான உண்மையை திமுகவின் தலைவரோ அல்லது தளபதியாரோ சொன்னால் மக்கள் தெளிவுபட வசதியாக இருக்கும்.

இப்புனித பாரம்பரிய ஊரான காயல்பட்டினத்தை கலைஞர் பட்டினம் என்று பிதற்றுவதற்கு கட்சி பாகுபாடின்றி என்ன எதிர்ப்புகள் இருந்தது என்பதை முன்காலத்தில் வளைதளத்தில் மூலம் நன்கு அறிய முடிந்தது. மேலும், 90 சதவீத வாக்காம். நகைச்சுவை நடிகர் வடிவேலையும் மிஞ்சி விட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தேர்தல் வந்தால், இல்லாத 'கலைஞர் பட்டணம்' என்று சொல்வார்கள்
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [30 March 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34031

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான், இல்லாத 'கலைஞர் பட்டணம்' என்று சொல்வார்களோ?

1999 முதல் 15 ஆண்டுகள், தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக அந்த கட்சி வேட்பாளர்களை, MP ஆக மிகப் பெருவாரியான ஓட்டுக்கள் போட்டு வெற்றி பெற செய்த இந்த ஊர் (அவர்கள் பாஷையில் கலைஞர் பட்டணம்) மக்களுக்கு இந்த 15 வருடங்களில் செய்த ஒரு நலத்திட்டத்தையாவது சொல்ல முடியுமா?

நமதூர் & நாசெரத் ரயில்வே ஸ்டேஷன்கள், வருமான ரீதியில் ஒரே அந்தஸ்து பெற்றவை. ஆனால், அடிப்படை வசதிகளை பார்க்கும்போது, இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். இந்த ADK ஜெயசீலன் அவர்களை (DMK - BJP கூட்டணியில் இருந்த போதும்) நமதூரும் தான் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்தது.

நாம் ஓட்டு போட்டு கடைசியாக வெற்றி பெற்ற 'சித்த வைத்தியர்' ஜெயதுரை, தனது MP தொகுதி மேம்பாட்டு நிதி (வருடத்துக்கு 5 கோடி வீதம் 5 வருடங்களில் 25 கோடி) முடிந்து விட்டது, ராஜ்ய சபை உறுப்பினர் நிதியில் கேளுங்கள் என்கிறார்.

இவர்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த காயலர்களுக்கு, இவர்கள் செய்த கைமாறு, "அல்வா" கொடுத்ததுதான்.

அனிதா அண்ணாச்சியை, மனதில் வைத்து, உள்குத்து வேலை செய்வோர் ஓரங்கட்டப்படுவர்! என்று சொல்கிறார். அனிதா அவர்கள், ADMK -ல் இருந்தபோதும், இப்போதும் ஊரின் நன்மைக்காக பல நல திட்டங்கள் செய்தார். அவரை கட்சியில் ஓரங்கட்ட நினைக்கும் இவரின் மகனுக்கா உங்கள் ஓட்டு?

சிந்திப்பீர்! உங்கள் ஓட்டை இவரின் மகனுக்கு போட்டு, இன்னும் 5 ஆண்டுகள் ஏமாற வேண்டாம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மக்களின் மீது அக்கறை கொண்டவரை தேர்ந்தேடுப்போமாக..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [30 March 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34042

அனிதா அண்ணாச்சியை, மனதில் வைத்து, உள்குத்து வேலை செய்வோர் ஓரங்கட்டப்படுவர்! என்று சொல்கிறார். அனிதா அவர்கள், ADMK -ல் இருந்தபோதும், இப்போதும் ஊரின் நன்மைக்காக பல நல திட்டங்கள் செய்தார். அவரை கட்சியில் ஓரங்கட்ட நினைக்கும் இவரின் மகனுக்கா உங்கள் ஓட்டு? CP

சாளை அப்துல் ரசாக் அவர்களே..! உங்களின் நியாயமான ஆதங்கம் உங்களின் எதிர் கேள்வி சிந்தனை நமதூரில் எத்தனைபேருக்கு இருக்க போகிறது..!

ஒழுக்கநெறி - ஒரு நன்றி உணர்வு - தனது வெற்றிக்கு தோல் கொடுத்த ஊரின் மீது பாசப்பற்று உள்ள அனிதா என்ற ஒரு மனிதனை தவிர நான் என் வாழ்நாளில் இது வரை ஒரு MP அல்லது MLA எவரையும் இத்தொகுதியில் குறிப்பாக நமது காயல்பட்டினத்தில் அனிதா அவர்களை போல் நான் எவரையும் உணர்ந்ததில்லை..

இன்று தேசத்தில் உள்ள மாநிலங்களில் போட்டியிடுவோர் அவர் அவர்கள் தனது சொந்த ஆதாயங்களுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் தனது வாரிசுகளை அரசியலில் புகுத்தியுள்ளார்கள்..! தான் பிறந்து வளர்ந்த தொகுதியின் நன்மைக்காகவோ.. தொகுதி மக்களின் அடிப்படை தேவைக்காகவோ.. மக்களின் வேதனையை களைய குரல் கொடுக்கவோ போட்டியிட முன் வரவில்லை.. அனைத்தும் சுயநலமே மேலோங்கி நிற்கின்றன இதற்க்கு அந்த அந்த நகரில் உள்ள சில சுயநலவாதிகளும் அவர்களின் சுய தேவைக்காக துணை புரிவது வழக்கமாக 5 ஆண்டுக்கு ஒரு முறை பயணம் தொடர்கின்றது - வேதனையான பயணத்தை முடிவில்லாமல் தொடர்ச்சியாக கொண்டு செல்கிறார்கள்..! இதற்க்கு முடிவு யார் கையில் உள்ளது..?

மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு அவசியமாகிறது.

இதற்க்கு முடிவை யார் ஏற்படுத்துவது...?
நாம் தான்.. நமது வாக்கு சீட்டு தான்.

முக்கியமாக நாம் சிந்திப்பது:- நமது தொகுதியில் போட்டியிடும் அவரின் கடந்த கால சேவை ஆற்றல் அவரின் கட்சி நிறுவனரின் இந்திய சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை வாக்குறுதி இதையல்லாம் அறிந்து தனது வாக்கை செலுத்துவது சிறந்த இந்திய குடிமகனின் கடமை..

இன்ஷா அல்லாஹு... வருகிற 24 ஆம் தேதி நமது வாக்கு ஒரு தூமையான மக்களின் துயரத்தை போக்க தன்னை தானே அர்பணித்த ஒரு நல்ல நபருக்கு வாக்களிப்போமாக... வாக்குகள் எண்ணிக்கை முடின்கின்ற போது சுயநலவாதிகளின் தவறான சிந்தனைகள் கலையட்டுமாக..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved