Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:40:56 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13385
#KOTW13385
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 29, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்று, ஆம் ஆத்மி வேட்பாளர் புஷ்பராயன் வேட்பு மனு தாக்கல் செய்தார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3597 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆதரவாளர்கள் புடைசூழ, ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ம.புஷ்பராயன் இன்று (மார்ச் 29) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். விரிவான விபரம் வருமாறு:-

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.



இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வரும் ம.புஷ்பராயன் கடந்த 3 ஆண்டுகளாக இடிந்தகரையில் தங்கியிருந்த அவர், அந்த ஊரை விட்டும் வெளியேறினால் - காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. எனினும், இடிந்தகரையிலிருந்து இடையூறுகள் எதுவுமின்றி - ஆம் ஆத்மி அபிமானிகளுடன் புறப்பட்ட அவர், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம், ஆத்தூர் வழியாக தூத்துக்குடியிலுள்ள ஆம் ஆத்மி தேர்தல் பணிமனையைச் சென்றடைந்தார்.

காயல்பட்டினம் வந்த வேட்பாளருக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முனையில், ஆம் ஆத்மி ஆதரவாளரான அமீர் சுல்தான் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், காயல்பட்டினத்திலிருந்து ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் சில வாகனங்களில் வேட்பாளருடன் இணைந்து சென்றனர்.





அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், அவர் செய்தியாளர்களிடையே தனது கருத்துக்களைப் பதிவு செய்ததோடு, அவர்களது கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார். (செய்தியாளர் சந்திப்பு செய்தி தனியாக வெளியிடப்படும்.)

பின்னர், தூத்துக்குடி பனியமாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்த பின்னர், அங்கிருந்து ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் புடை சூழ பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார்.









இன்று 14.30 மணியளவில், தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புரூஸ், நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம், தேர்தல் வட்டாட்சியர் நெல்லை நாயகம் ஆகியோர், தேர்தலுக்கான மக்கள் தொடர்பாளரும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான முத்து முன்னிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனின் வேட்பு மனு விபரங்களை சரிபார்த்து ஒப்புதலளித்தனர்.



அதன் தொடர்ச்சியாக, ம.புஷ்பராயன் தனது வேட்புமனுவை வழங்க - மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் அதனைப் பெற்றுக்கொண்டார்.



ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுபாஷ் பர்னாந்து, அதன் அங்கத்தினரான ஜோஸப் (தூத்துக்குடி), எஸ்.அப்துல் வாஹித் (காயல்பட்டினம்), எம்.என்.அஹ்மத் ஸாஹிப் (காயல்பட்டினம்) ஆகியோர் உடனிருந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [29 March 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 34027

ஆம் ஆத்மி வேட்பாளர் புஷ்பராயன் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார், மாற்று வேட்பாளர் காயல் பட்டினத்தில் இருந்து ஒரு ஆதரவாளர் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கலாம். வரும் 1.4.14 அன்று அ.தி. மு. க வெற்றி வேட்பாளர்கள் 40 தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள், புரட்சித்தலைவரின் இரத்ததின் இரத்தங்களே, மாற்றுகட்சி ஆதரவாளர்களே அனுதாபிகளே படைசூழ வேட்புமனு தாக்கல் செய்வோம் வாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கட்சி வேட்பாளர் அல்ல ... சுயேச்சை தான்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [30 March 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34033

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளராகவே மனு தாக்கல் செய்து உள்ளார்கள் என்று செய்திகள் சொல்லுகின்றன.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/udayakumar-other-aap-candidates-file-நொமினடிஒ

செய்தி பார்க்க - தாட்ஸ் தமிழ் :-

தூத்துக்குடி: தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் இல்லாத காரணத்தால் சுயேச்சை வேட்பாளராகவே மனு தாக்கல் செய்துள்ளனராம். ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்ட கட்சிதான் என்ற போதிலும், அது மாநிலக் கட்சியாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் அக்கட்சி சார்பில் போட்டியிடுவேர் சுயேச்சையாகவே கருதப்படுவார்களாம்.



அந்த வகையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த இக்கட்சியின் உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் சுயேச்சைகளாகவே கருதப்படுவர். தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ரவிகுமாரிடம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புஷ்பராயன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் புஷ்பராயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் வேட்பு மனுவை ஆன்லைனின் டவுண்லோடு செய்திருந்தோம். ஆனால் அச்சிடப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கும், ஆன்லைன் படிவத்திற்கும் அதிகளவில் வித்தியாசங்கள் இருந்தது. இதனால் ஆட்சியரும், அதிகாரிகளும் இரண்டு மனுக்களையும் ஒப்பிட்டு பார்த்தனர். மேலும், என்னுடைய வேட்பு மனுவை முன்மொழிந்த 10பேரையும் நேரில் அழைத்துவருமாறு அதிகாரிகள் கூறினார். எனக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான வீடு, நிலம் உள்ளது. எனது பெயரில் ரூ.40ஆயிரமும், எனது மனைவி பேரில் ரூ.25ஆயிரமும் வங்கி கணக்கில் உள்ளது. எனது மனைவியிடம் 50 பவுன் நகை உள்ளது. என்மீது 385 வழக்குகள் பதிவு செய்ய்பபட்டுள்ளது. இதற்காக குற்றப்பத்திரிக்கைகள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனது பிரசாரத்தை நாளை முதல் அதாவது இன்று முதல் தொடங்குகிறேன் என்றார்.



Read more at:

http://tamil.oneindia.in/news/tamilnadu/udayakumar-other-aap-candidates-file-nomination-as-independents-lse-196796.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (TX) [31 March 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34049

வாழ்த்துக்கள் .. நம் சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது சந்தோசம் அளிக்கிறது . இங்கு வெற்றி தோழ்வி முக்கியம் இல்லை .. எதனை ஆதரிக்கின்றோம் .. எதற்க்காக குரல் குடுக்கின்றோம் என்பது முக்கியம் ...

திரு புஷ்பராயனுக்காக பிரச்சாரப்பணி செய்யும் நம் சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய தாழ்மையான நன்றி . சரியான பாதையின் செல்கிறீர்கள் . இந்த ஒரு காட்சிமட்டும் தான் நல்லவர்களை தேடி பிடித்து கொண்டுவந்துள்ளது ... அதிகார வர்க்கத்தினரால் ஒதுக்கப்பட்ட மக்கள் உழைப்பாளிகளை நமக்கு அடையாளம் காட்டியுள்ளது ..

புரிந்து கொள்ளுங்கள் ... இவர்களுக்கு மக்களை அதிகாரத்திற்கு விற்கத் தெரியாது ...

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விட்டில் பூச்சிகள்!!!.
posted by s.s.md meerasahib (TVM) [02 April 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 34105

அன்பு நண்பர்களே........ நான் ஆம் ஆத்மி கட்சியை குறை கூறவில்லை. இந்த தேர்தலில் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு சுதாரிப்பும் "இந்த" நாம் மக்களுக்கு இல்லையே....... என்ற கவலைதான்.

இவர்களை சொல்லி புரயோஜனம் இல்லை. எல்லா இனத்திலும் விட்டில் பூச்சிகளின் இதயம் இருக்கத்தானே..... செய்யும். அந்த இதயம்கள் நிலைபாடாக இருக்காது. தடுமாற்றத்தில் இருக்கும். இந்த இதயத்தை தான் "நப்சுள் அம்மாரா" என்பார்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved