Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:43:43 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13451
#KOTW13451
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 7, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மியின் வேட்பாளர் ம.புஷ்பராயன் வீதி வீதியாக பரப்புரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3113 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.



இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.

இம்மாதம் 05ஆம் நாள் மாலையில், அவர் காயல்பட்டினம் நகரில் வீதி வீதியாக பரப்புரை செய்தார்.

ஐக்கிய விளையாட்டு சங்க நுழைவாயில் முன்பிலிருந்து பரப்புரையைத் துவக்கிய அவர், புறவழிச் சாலை, சிவன்கோயில் தெரு, காட்டு தைக்கா தெரு, குத்துக்கல் தெரு, மகுதூம் தெரு, தைக்கா தெரு, பிரதான வீதி, முஹ்யித்தீன் தெரு, கோமான் தெரு, நெய்னார் தெரு, சதுக்கைத் தெரு, அம்பல மரைக்கார் தெரு, கி.மு.கச்சேரி தெரு, ஆஸாத் தெரு, சித்தன் தெரு, தீவுத்தெரு, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, அப்பா பள்ளித் தெரு, அலியார் தெரு, கே.டி.எம். தெரு, காயிதேமில்லத் நகர், பேருந்து நிலையம், எல்.எஃப். வீதி, இரத்தினபுரி, சீதக்காதி நகர், மருத்துவர் தெரு ஆகிய வீதிகளில், தனது ஆதரவாளர்களுடன் சென்று பரப்புரை செய்த அவர், மஹான் ஸாஹிப் அப்பா தைக்காவில் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.











ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீதை, வேட்பாளர் ம.புஷ்பராயன் - அவரது இல்லம் சென்று சந்தித்து ஆதரவு கோரினார்.



புதுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை அருகில் அவர் தனது பரப்புரையை முடித்துக்கொண்டார்.

பரப்புரை செய்த இடங்களிலெல்லாம், காயல்பட்டினத்திற்கென தனியாக அச்சிடப்பட்ட பிரசுரத்தை அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களிடம் வினியோகித்தனர்.



தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்

படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வெற்றி இல்லாவிட்டாலும் ADMK - DMK ஓட்டுகள் சிதறும்.
posted by செய்து அகமது (சென்னை.) [07 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34175

ஆம் ஆத்மிக்கு விழும் ஓட்டுகள் அனைத்தும் தி மு க வின் ஓட்டுகள் அதிகம் இருக்கலாம் என நான் கருதுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இம்முறை ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [08 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34176

சனநாயகத்தின் ராஜதந்திரமே இது தான். இவர்களுக்குள்ளே சண்டையிடுவார்கள். மாறி மாறி ஆட்சி அமைப்பார்கள். ஆனால் மக்களின் வாழ்வுரிமையும் வாழ்வாதாரமும் எப்போதும் சுரண்டப்பட்டுக் கொண்டே இருக்கும். தேர்தல் வரும்போது வீறு கொண்டு, பலம் கொண்டு மோதுவார்கள். காரசாரமாய் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவார்கள். ஆனால், ஊழலை ஒழிக்கும் பொருட்டு அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துகிற நோக்கில் ஒரு சட்டம் கொண்டு வர முயற்சி செய்தால், காங்கிரஸ், பா.ஜ.க. என எந்த வித்தியாசமும் பாராமல் ஒற்றுமையுடன் சேர்ந்து பாராளுமன்றத்திலே அணி சேர்ந்து விடுவார்கள்.

காட்சிகள் மாறும் சனநாயக மேடையில் நடிகர்கள் மட்டுமே மாறுகிறார்கள்..! தேர்தல் நாடகம் நடக்கட்டும்.!

நமது தொகுதியில் திராவிட கட்சிகளை புறக்கணியுங்கள்... இம்முறை ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்..! மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதரை ஆதரிப்பீர்.

நாடாளுமன்ற வேட்பாளராகி, பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து, டில்லியில் பங்களா வாங்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு இல்லை. அரசியலுக்கு வரவேண்டும் என்பது போராட்டத்தில் பங்கெடுத்த எம் மக்கள் விருப்பமேயன்றி,நான் மனமுவந்து ஏற்றுக் கொண்ட விருப்பம் அல்ல - ம.புஷ்பராயன்)

(கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இன்று வரை புற்று நோயை பெருக்கி வரும் D C W இராசயன ஆலையை மன தூய்மையாக எதிர்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது - நம்மிடம் வாக்கு கேட்டு வரும் மற்ற வேட்பாளர்கள் எவரும் நகரில் புற்று நோயை பெருக்கி வரும் D C W ஆலையை பற்றி தேர்தல் பிரச்சார ஒலி பெருக்கியில் வாய் திறந்து ஒரு வார்த்தைக்கூட பேசுவதில்லை)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. 'மாற்றத்திற்கு' காயல் மட்டும் விதிவிலக்கல்ல !!
posted by Salai. Mohamed Mohideen (Philadelphia) [08 April 2014]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 34177

காயலில் கண்கூடாக கண்டது. 'மாற்றத்திற்கு' காயல் மட்டும் விதிவிலக்கல்ல. ஐயா, அம்மா, 'அண்ணன்' சொல்லிட்டார்னு கண்னை மூடிகிட்டு ஒட்டு போடுகின்ற செம்மறி ஆட்டு கூட்டமாக காயல் இன்று மட்டுமல்ல இனி என்றுமே இருக்க போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். இது அரசியலுக்கு மட்டுமல்ல… அனைத்து விடயத்திற்கும் பொருந்தும் !!

இன்றைய சமூகத்தினர் எவர் சொல்கிறார் என்று பார்ப்பதில்லை… சொல்ல படும் விடயத்தை (Subject) சிந்தித்து சுயமாக முடிவெடுக்கின்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள். கேடுகெட்ட திராவிட கட்சிகளை போன்று, ஆம் ஆத்மி தன்னிலை மாறும் பட்சம்… 'என்றைக்கும் ஆம் ஆத்மி தான்' என்ற செம்மறி ஆட்டு கூட்டத்தின் நிலைபாட்டை இவர்கள் எடுக்க மாட்டார்கள் என்பதனை பலர் கூற கேட்டறிந்தேன்.

மார்க்க கொள்கை வயது வேறுபாடுகளையும் தாண்டி, ஆம் ஆத்மி யின் ஆதரவாளர்கள் காயலில் பெருகி வருகின்றார்கள். இவர்கள் அரசியலையும் மார்க்கத்தையும் குழப்பி கொள்வதில்லை. இதை அறியாமல். குறுகிய வட்டத்தை சிந்தனையை விட்டு வெளியே வந்தால் நலம் !

கெஜ்ரிவாளால் இஸ்லாமியர்களுக்கு நாளை (?) ஏற்படப்போகும் ஆபத்து என்று குய்யோ முய்யோ என்று அலறும் சிலர்.. பிஜேபி யுடன் கூட்டணி வைத்து முஸ்லிம்களுக்கு ஏற்கனவே துரோகம் இழைத்து விட்ட திராவிட கட்சிகளை தலையில் வைத்து கொண்டாடுவதை பார்க்கும் போது, இது இவர்களின் அறியாமையா அல்லது முந்தைய கமெண்ட்களில் பலர் கூறுவது போல செம்மறி ஆட்டு கூட்டத்தின் வெளிப்பாடா என்று தெரிய வில்லை.

இத்தனை காலம் கண்ணை மூடிக்கொண்டு திராவிட கட்சிகளை நம்பி செம்மறி ஆட்டு கூட்டமாக அவர்களுக்கு நாம் வாக்களித்து வருவது ஒருபுறம். ஒற்றை சீட்டுக்காக நம்மை அவர்களிடம் அடகு வைத்தே பழகிப்போன நம் சமுதாய கட்சிகள் மறுபுறம்.

சிந்தியுங்கள் சகோதர்களே !!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [08 April 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34179

DCW விசயத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் மட்டும் தான் குரல் கொடுத்து வருகிறார் என்று ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்து வருகிறது. DCW நிறுவனத்துக்கு எதிராக திரு ஜோயல் பம்பரம் ம .தி .மு.க வேட்பாளர் வழக்கே தொடர்ந்து போராடி வருகிறார் என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved