Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:55:26 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13460
#KOTW13460
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 8, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயலுக்கு ஆதரவு கோரி நகரில் பரப்புரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4853 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியின் கீழ், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு திரட்டும் முகமாக, இன்று 19.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் வாகன பரப்புரை நடைபெற்றது.



மதிமுக கட்சிப் பாடகர் நெல்லை அபூபக்கர் கொள்கை விளக்கப் பாடல்களுடன் உரையாற்றினார்.





மதிமுக தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் அறிமுகவுரையாற்றினார்.



காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து தொடர்ந்து போராடப் போவதாக மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன் சிறப்புரையாற்றினார்.



பாஜக தலைமையிலான கூட்டணியில் மதிமுக அங்கம் வகிப்பதால் அதன் சிறுபான்மையினர் நலக் கொள்கைகள் எதையும் விட்டுவிடவில்லை என்றும், சில இக்கட்டான அரசியல் சூழ்நிலைகளின்போது இதுபோன்று முடிவுகள் எடுக்க வேண்டி வருவது சகஜமான ஒன்றுதான் என்றும், இதில் திமுக உட்பட எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை என்றும் அவர் கூறினார்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகத் திகழும் தனியார் சட்டங்களுக்கு எதிராக கொண்டு வர முயற்சிக்கப்படும் பொது சிவில் சட்டத்தை என்றும் போல் மதிமுக எதிர்க்கும் என்றும், சிறுபான்மையினர் நலன் காக்க மதிமுக எல்லா வகையிலும் பாடுபடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இக்கூட்டத்தில், மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள - தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.









கூட்ட ஏற்பாடுகளை, மதிமுக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காயல்பட்டினம் நகர செயலாளர் பத்ருத்தீன், நகர நிர்வாகிகளான ஏ.கே.பீர் முஹம்மத், எம்.ஏ.காதர் அலீ, எஸ்.ஏ.மீராஸாஹிப், இ.கோவிந்தராஜ், ஏ.பட்டாணி, எம்.இசட்.அப்துல் காதர், ரியாசுத்தீன் பாதுஷா, கவிஞர் நெய்னா, எஸ்.எல்.எம்.காதர், எம்.முஹம்மத் ஸாலிஹ், செய்கு அலீ, ஷஃபீக், சங்கர நாராயணன், இசட்.ஜெய்லானீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ

படங்களில் உதவி:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
அப்துல் மாலிக்


பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34191

கட்சி கட்டளை, என்ன செய்வது ? ஓட்டு கேட்டு வீதி வரை வந்துவிட்டார்கள், எந்த கோணத்தில் நகர மக்களிடம் வாக்கு கேட்க, ஊருக்குள் நுளைவதை தவிர்ப்போம், கடை வீதியோடு ஒத்துழைக்க முயற்சி செய்கிறார்கள் நகர ம.தி.மு.க. பொறுப்பாளர்கள். கூட்டணி தர்மம் காக்க தே.மு.தி.க. நிர்வாகிகளையும் ஒன்றா களம் இறக்கி வந்த வாகனம் மகிழ்சியுடன் சென்றுவிட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. முஸ்லிம்களின் மனநிலை
posted by S.A.Muhammad Ali (Velli) (Kayalpatnam) [09 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34193

நம் சமுதாய மக்கள் தொன்று தொட்டு திராவிட கட்சிகளின் அபிமானிகளாக இருந்து வந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களின் வாக்குகளை அளிப்பதில் தவறியதில்லை.

இன்று உள்ள அரசியல் சூழ்நிலையில் அனைத்து திராவிட கட்சிகளும் சந்தற்பவாதிகளே. தமிழகத்தில் எந்த திராவிட கட்சி அதிகமான சீட்டுகளை பெற்றாலும் மத்தியில் யாருக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதோ அவர்கள் பக்கம் தான் சாய்வார்கள். தங்களின் சுய தேவைகளுக்காக மட்டுமே சிந்திக்க கூடிய திராவிட கட்சிகள் இஸ்லாமியர்களை ஒட்டு வங்கிகளாக மட்டுமே பார்த்து வருகிறார்கள்.

நம் சமுதாய மக்கள் தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுபடாவிட்டாலும் மனதளவில் அவர்கள் ஒதுங்கியே உள்ளார்கள். ஆகையால் மதிமுக, தேமுதிக காயல் நிர்வாகிகளை நாம் அவர்களின் புற செயல்பாடுகளை மட்டும் பார்த்து முடிவு எடுக்க வேண்டாம் .

இதே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பிஜேபியுடன் கூட்டணி வைத்த சமயம் அதன் நிர்வாகிகள் அந்த கட்சியை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் தான் தற்பொழுது இவர்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள்,. நம் தலைவர்கள் தங்களின் கட்சியை காப்பாற்ற சில சமயங்களில் இது போன்ற முடிவை எடுக்கும் போது மக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மத்தியில் மதவாதத்திற்கும் ஊழலிற்கும் எதிராக மாற்று சக்தியாக புறப்பட்டு இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்கு அளிக்க நம் மக்கள் தயாராகி விட்டார்கள் காயல்பட்டணம் கலைஞர்பட்டணம் என்ற மாயையில் இருந்து விடுபட்டு இஸ்லாமியர்கள் இனி இளிச்சவாயர்கள் இல்லை என்பதை திராவிட கட்சிகளுக்கு உணர்த்த இந்த தேர்தலில் நம்முடைய வாக்குகளை “துடைப்பம்” சின்னத்தில் அளித்து சமூக போராளி திரு.புஷ்பராயன் அவர்களை வெற்றி பெற செய்வது நம்முடைய கடமை. நம்மில் சிலர் “துடைப்பம்” சின்னத்திற்கு வாக்களித்தால் ஓட்டை பிரிக்கிறோம் கூரையை பிரிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். தமிழகத்தை பொருத்த வரையில் அனைத்து திராவிட கட்சிகளும் பிஜேபி யின் அபிமானிகளே. துடைப்பம் வெற்றி பெறாவிட்டாலும் இஸ்லாமியர்களின் வாக்கு திராவிட கட்சிகளிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்ற அவப்பெயரை துடைத்தெறியும் என்பது நிச்சயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இக்கட்டான அரசியல் சூழ்நிலை
posted by shaik (Macau) [09 April 2014]
IP: 122.*.*.* Macau | Comment Reference Number: 34196

பாஜக தலைமையிலான கூட்டணியில் மதிமுக அங்கம் வகிப்பதால் அதன் சிறுபான்மையினர் நலக் கொள்கைகள் எதையும் விட்டுவிடவில்லை என்றும், சில இக்கட்டான அரசியல் சூழ்நிலைகளின்போது இதுபோன்று முடிவுகள் எடுக்க வேண்டி வருவது சகஜமான ஒன்றுதான் என்றும்,

சில இக்கட்டான சூழ்நிலை வந்தால் உங்கள் வீடு மாப்பிள்ளை யாக ஒரு கொலை காரனை ஏற்று கொள்ள தயாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...நீயுமா ப்ருட்டஸ்?
posted by mackie noohuthambi (chennai) [09 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34201

வைகோ வாக்குக் கேட்டு வருவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. அவர் அவரது உரிமை.ஆனால் அவர் மது விலக்கை தமிழகம் முழுதும் அமுல் நடத்த வேண்டுமென கோரி அவர் காயல்பட்டினம் வீதிகளில் நடைப்பயணம் வந்த போது அவர் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள்.

காயல்பட்டினம் போல் இந்த தமிழகமே மாற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். மதுக்கடை இல்லாத ஊர். சினிமா தியேட்டர் இல்லாத ஊர். காவல் நிலையம் இல்லாத ஊர்.மத நிள்ளக்கனதுக்கு எடுத்துக் காட்டான ஊர்.இப்படி பாராட்டியவர் அதே ஊரில் வந்து முஸ்லிம்களுக்கு எதிரியான நரேந்திர மோடியின் வெறிபிடித்த முகத்துடன் தன் நன் நெறிபிடித்த முகத்துடன் இணைத்துக் கொண்ட பதாதையுடன் வாக்கு கேட்கலாமா, புலி பசித்தாலும் புல்லை திங்காது என்பார்களே, இந்த கலிங்கத்து புலி சில நாடாளுமன்ற சீட்டுக்காக சீற்றமிழந்து சோரம்போய் வெறும் புலிக் கோடுகள் போட்ட பூனையாக மாறிவிட்டதை நினைத்து வேதனையாக இருக்கிறது.

ஒருகாலத்தில் திராவிட இனத்தின் போர்வாள்.பின்னர் புரட்சித்தலைவியின் புல்லாங்குழல், இப்போது மதவெறி பிடித்தவர்களின் ஊதுகுழல்.

எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு - எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு - நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதல்ல.

SOME ARE BORN IN GREATNESS - SOME ACHIEVE GREATNESS - GREATNESS IS THRUST UPON SOME - SOME FALL DOWN LIKE GREAT FALLS AND BECOME WASTE WATER IN THE GROUND.

VAIKO, YOU TOO, BRUTUS?

வாழ்த்தவும் மனமில்லை மன்னிக்கவுமமார்க்கமில்லை. தூற்றவும் தோன்றவில்லை. இதயம் கனக்கிறது. கர்த்தர் உம்மை ஆசீர்வதித்து நல்வழி படுத்துவாராக. ஆமென்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by omar abdul (riyadh) [09 April 2014]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 34203

சுயநலவாதியை துரோகியை இன்னும் கண்டுபிடிக்கவில்லையா ? அல்லது நீங்கள் தான் துரோகியா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Abdul Majeed (Bangalore) [09 April 2014]
IP: 202.*.*.* India | Comment Reference Number: 34204

பல ஊர்களில் MLA ,MP கலை வோட்டே கேட்க விடாமல் திருப்பி அனுப்பி வுள்ளனர் . சேலத்தில் ஜும்மா அருகில் பிரச்சாரம் செய்ய வந்த DMDK வேட்பாளரை தடுத்து அனுப்பி வுள்ளனர். நம் ஊரில் தான் பிஜேபி கூட்டணி பிரச்சாரம் செய்வதை , முஸ்லிம் பெயர் தாங்கிகள் சால்ஜாப்பு சொல்வதை வாய் பார்த்து கொண்டிருக்கிறோம் .

DMK வும் பிஜேபி யை ஆதரித்தது என இன்று ஒருவர் வோட் கேட்பதற்கு காரணம் சொல்கிறார் . நாம் இவர்களை போன்றவர்களை வோட் கேட்க விடாமல் திருப்பி அனுப்பி பிஜேபி யை ஆதரித்தால் எந்த காரணம் சொல்லியும் காயல் பட்னத்தில் நுழைய இயலாது என எல்லா கட்சியினற்கும் உணர்த்த வேண்டும்.

கட்சி தலைவர்களை தடுக்கா விட்டாலும் சமுதாய நலனை விட கட்சி அடிமைகளாக இருக்கும் மனிதர்களை ஒதுக்க வேண்டும். எந்த மேடையிலும் இவர்களை ஏற அனுமதிக்க கூடாது .

பல ஊர்களில் பிஜேபி கூட்டணியில் இணைந்ததாழ் கட்சியை கலைத்து உள்ளனர். அனால் இங்கோ பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உணர்வற்று உள்ளனர். கூட்டணிக்காக கூச்சம் இல்லாமல் வோட் கேட்கும் இவர் போன்றோரின் தலையிட்டால் வைகோ நடை பயணத்திற்கு கல்லூரியில் வரவேற்பு கொடுத்ததை நினைக்கும் பொழுது நெஞ்சு எரிகுறது . இனிமேலாவது விழித்து கொண்டு அரசியல் வாதிகளால் ஏமாற்ற படாமல் இருப்போமா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. காயலின் கருப்பாடுகள்
posted by முத்துவாப்பா (al khobar) [09 April 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34207

ஈவு இரக்கம் இல்லாமல்
இனத்தை கருவறுத்த
ஈன பிறவியோடு
இணைந்திருக்கும்
இந்த ஐந்தறிவுகள்
காயலின் கருப்பாடுகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Imran (HongKong) [09 April 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 34215

தைரியம் இருந்தால் மதிய்ய காயலுக்கு செல்வார்களா??? மதிமுக நண்பர்களே பதில் வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அபாய அறிகுறி அறிவிப்பு!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [09 April 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34216

இது ஜனநாயக நாடு யாருவேண்டுமானாலும் யாரிடமும் வாக்கு கேட்கலாம்! என்ன வருத்தம் கேட்பவர், கேட்க்கப்படுபவரின் தகுதியையோ,அவரின் கலாச்சாரத்தையோ,அவரின் மார்க்க நம்பிக்கை வாழ்வு முறையையோ கிஞ்சித்தும் கவனிப்பதில்லையே என்பதுதான்!

கேட்பது நமது கடமை அதை கேட்டுவிட்டுத்தான் போவோமே என்ற எழுதபடாத சட்டத்தை அரங்கேற்று கிறார்கள்! அதற்க்கு சில காயலர்களும் இருதலைகொள்ளி எறும்புகளாய் ஏனோதானோவென்று துணைபோகும் போலிவேட நாடகக்காட்சிகளையும் காணமுடிகிறது!

நேற்றுதான் ப .ஜ க வின் தேர்தல் அறிக்கையில், அதே அயோத்தியில் அதே இடத்தில ராமர்கோயில் கட்டப்படும்,பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும், காஸ்மீர் மக்களுக்குறிய சலுகைகள் நீக்கப்படும் என்று தைரியமாக சிறுபான்மையராகிய நம் முஸ்லிம் மக்களை முனையளவுகூட ஒரு பொருட்டாக கருதாமல் எங்களுக்கு அடிமையாகத்தான் உங்கள் காலங்களை கழிக்கவேண்டும் என்ற இறுமாப்பு அறிக்கையை தந்திருக்கிறார்கள்!

இப்படிப்பட்ட அறிக்கை வந்த பிறகும் நமூரில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார்கள் என்பதை என்னும் பொழுது,இதயத்தில் ஏதோ ஒரு சுமை அமுக்குவது போன்ற ஒரு உணர்வு,

எத்திசை எதிர்ப்புகள் வந்தாலும் எங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி அணுவளவும் குறையாமல் கிடைத்திடும் என்ற இறைநம்பிக்கையை இறுக்கமாக இதயத்தில் ஏந்தி வாழும் எங்களை இறைவன் கைவிடமாட்டான்!

இருப்பினும் எனதருமை இஸ்லாமிய சமுதாயமே இப்பொழுது நம் முன்னால் நிற்கும் மிகப்பெரிய அபாயத்திலிருந்து நாம் காக்கப்படவேண்டுமென்றால் தற்போது சிறுபான்மையருக்கு குறிப்பாக முஸ்லிம்களாகிய நமக்கு அடைக்கலமாகவும்,ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் அணிக்கே நம் ஆதரவை தெரிவித்து மதவெறியர் களின் வேட்டைக்கு பலியாகாத புல்லிமான்போல் பறந்தோடி நம்மைநாம் பாதுகாத்துக்கொள்வோமாக்!

இந்த அணிக்குத்தான் வாக்களியுங்கள் என்று அடையாளம் காட்டி பிரச்சாரம் பண்ண விரும்பவில்லை. சிறந்த சிந்தனை சிற்ப்பிகளாகிய காயல்பதி மக்களுக்குத்தெரியும் எந்த அணியை இந்த சுல்தான் சிலேடையாய் சொல்கிறான் என்று! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [09 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34218

அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்டிப்பாக நம் சமுதாயம் முன்பு போல் ஒரு கட்சிக்குதான் வாக்கு என்ற நிலைகளில் இருந்து மாறி அது சமையம் நமக்கு முக்கிய துரோகிகள் யார் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் .

அரசியல் கட்சிகளை பொருத்தவரை என்றும் சந்தர்ப்ப வாதமாகதான் இருப்பார்கள் அதுபோல் நம் சமுதாயமும் அந்தந்த காலத்துக்கு தகுந்த முடிவுகளைதான் சமுதாய நலன் கருதி அமைத்து கொள்கிறார்கள் .

இந்த சூழ்நிலைகளில் நமக்கு தமிழ்நாட்டில் தி . மு . க கூட்டணிக்கு வாக்களிப்பது நமக்கு சற்று சாதகமாக அமையும் அதை தாண்டி மற்ற எந்த கூட்டணிக்கு நம் வாக்கு போனாலும் அது நமக்கு பெறும் பாதகமான ஒன்றாகதான் அமையும் என்பது நம்மில் பெரும்பாலான வர்களின் மனதில் உள்ள உண்மை கருத்து.

அம்மா திராவிட கழகம் கண்டிப்பாக பிஜேபியை தான் ஆதரிக்கும் , வையாபுரி மகன் கோபால்சாமி மோடியை பிரதமர் ஆக்குவதில் வித்தைகள் எல்லாம் கான்பிக்கிறார்.

பாவம் விருதுநகரை பொருத்தவரை அவருடைய வெற்றி வாய்புகள் என்பது மிகவும் குறைவாகதான் உள்ளது. உண்மையை சொல்வதாக இருந்தால் வை.கோபால் சாமிக்கு தேனி தொகுதிதான் சாதகமான தொகுதி .

நம் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கும் மற்ற அணிகளுக்கும் தங்கள் வாக்கினை போடாமல் நம் வாக்கு நமக்கு சாதகமாக அமையுமாறு பார்த்து கொள்ள வேண்டும் .

இப்பொழுது சிதறும் நம் சமுதாய ஓட்டுகளால் நம்முடைய சமுதாயம் வரும் காலதில் சிதறடிக்கபடும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும் .

முஸ்லிம் சமுதாயம் அவர்களது தொகுதிகளில் ஒற்றுமையாக , ஹிக்மத்தாக செயல்பட்டால் அந்த தொகுதிகளில் நாம் யார் வந்தால் நமக்கு பாதிப்புகள் குறைவு என்பதை மேலும் நன்மைகள் அதிகம் என்பதை அறிந்து இந்த வேட்பாளரை நம் சமுதாயம் ஆதரிக்கணும்.

நம்முடைய சமுதாயதின் பெரிய எதிரியை நாம் வர விடாமல் தடுக்க அணைத்து காரியத்தையும் நாம் எடுக்கணும் அதன் திறவு கோல் என்பது ஒற்றுமைதான் .

எந்த காட்டுமிராண்டிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இறைவனின் தவக்களை தாண்டி என்பது வேறு ஆனால் நாம் அது போன்ற சக்திகளை வரவிடாமல் தடுப்பது என்பது நம் முக்கிய கடமை வருமுன் காப்போம் என்ற வாக்கின்படி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Shahul Hameed SMI (chennai) [09 April 2014]
IP: 170.*.*.* United States | Comment Reference Number: 34224

நமது ஊரில் பிஜேபி கூட்டணிக்கு ஆதரவு இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எல்லா திராவிட கட்சிகளுமே சந்தர்ப்ப வாதிகள் தான் அனால் அதில் தற்போது வைகோ வுக்கே முதலிடம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. பரப்புரை அவர்களது உரிமை. அவர்களை வீழ்த்துவது நமது கடமை.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [09 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34227

ஜனநாகயாக நாட்டில் யாரும் எங்கும் பிரசாரம் பண்ணலாம். அவர்களின் உரிமையில் நாம் தலையிட முடியாது. பாசிச பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிக்க வேண்டியது நமது கடமை.

இந்த கூட்டணி, ஒரு தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை. அதனால் நாம் கவலை அடைய வேண்டியதில்லை. அவர்கள் டெபாசிட் கிடைக்கா வண்ணம் தோற்கடிக்க வேண்டும். வைகோ அவர்களே, தன்னை தோற்கடிக்க திமுக மற்றும் அதிமுக ஆகியவை 80 கோடி செலவழிக்க இருக்கிறது என்று சொல்லி இப்போதே தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்..

அந்த கட்சியின் நமதூர் நிர்வாகிகள், பரப்புரையில் கலந்து கொண்டது பற்றி கருத்து பதிந்தனர். 1998 மற்றும் 2004 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி வைத்த சமயத்தில், அதிமுகவினர் தைரியமாக வாக்கு கேட்டனர். அவர்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை.

அதை விட மோசம், 1999 நாடாளுமன்ற & 2001 சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்த சமயத்தில், திமுகவினர் நடந்து கொண்டது. 2001 சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்த காரணத்தால், திமுக மீது நமதூரில் அதிருப்தி நிலவியது. அந்த தேர்தலில், சுயேட்சையாக நமதூரை சார்ந்த சகோதரர், MZ ரபீக் அவர்கள் நின்றார். திமுக & அதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாமல், அவருக்கு வாக்களிக்கலாம் என்று பலர் முடிவெடுத்தனர்.

ஆனால், அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதற்கு, பொய்யான காரணத்தை சொல்லியவர்கள் தான் இந்த திமுகவினர்.

எது எப்படியோ, வரும் தேர்தலில் நமதூருக்கு நன்மை செய்யக் கூடிய வேட்பாளருக்கு வாக்களிப்போம். எனக்கு தெரிந்து, நாம் திமுக & அதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்து, நமதூருக்கு கிடைத்த நலத்திட்டங்கள் ஒன்றுமில்லை. நம்மை ஏமாளியாக்கியது தான் மிச்சம். (அனிதா அண்ணாச்சி விதிவிலக்கு).

இப்போது, DCW நச்சு ஆலை விரிவாக பிரச்சனை வேறு. இந்த பிரச்சனையில், இந்த மதிமுக வேட்பாளர் அந்த ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், பாஜக கூட்டணியில் இருப்பதால், இவருக்கு வாக்களிக்க முடியாது. அதே போல், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரும் அந்த நச்சு ஆலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். மற்ற கட்சிகளின் நிலை என்ன என்று அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகளுக்கே தெரியாது.

நமதூருக்கு நலத்திட்டங்கள் கொண்டு வரும் கட்சிக்கு, அந்த நச்சு ஆலைக்கு எதிரான கட்சிக்கு வாக்களிப்போம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று புரிந்திருக்கும். அவரை வெற்றி பெற வைப்போம்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வேண்டும் ஒரு மாற்றம்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [09 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34228

2002 ஆம் ஆண்டு பி ஜ பி யுடன் தி மு க கூட்டணி அமைத்தது அதில் பி ஜ பி உறுப்பினர் ஒருவர் மக்களவையில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு திரட்டும் போது அந்த போது சிவில் சட்டத்திற்கு தி மு க தனது ஆதரவை பதிவு செய்தது...!

அதே மக்களவையில் பொது சிவில் சட்டத்திற்கு இந்த வைகோ தனது எதிர்ப்பை பதிவு செய்தார்..!

அது அப்போது - இது இப்போது - மக்கள் மனநிலை மாறுவது எப்போது...!

பல ஆண்டுகாலமாக பல திராவிட கட்சிகளை பற்றி அவரவர் யோக்கிதைகளை நாம் பார்த்து புளித்து போய்விட்டது - ஆகையால் மக்களாகிய நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது நமது கடமை.

முதலில் இந்த திராவிட கட்சிகள் அனைத்தையும் புறக்கணிக்க இன்றே ஆயத்தமாக வேண்டும் - குறிப்பாக புதிய வாக்காளர்கள் திராவிட கட்சிகளை புறக்கணிக்க ஆயத்தமாகி விட்டார்கள் என்றே அறியமுடிகின்றது - தேசத்தின் நலன் பற்று உள்ள ஒரு நல்ல தலைமையை மக்கள் இப்போது விரும்புகிறார்கள்... அதற்க்கு தேர்வு ஆம் ஆத்மி என்று பல சமூக ஆர்வலர்கள் - ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பல மாநில நிர்வாகிகளால் பேச படுகின்றன..

இவர்கள் சொல்வது போல் இன்று ஒரு மாற்றத்தை செய்தால் தான் என்ன என்று பலரின் விருப்பமாக இருக்கிறது..

இன்ஷா அல்லாஹ்.. இறைவன் நாட்டம் எதுவோ அதுவே நடைபெறும்... நாமும் அந்த மாற்றத்திற்காக முயற்சி செய்வோமாக.. ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. திராவிட பச்சோந்திகளுக்கு பாடம் புகட்டுங்கள் !!
posted by Salai. Mohamed Mohideen (Philadelphia) [09 April 2014]
IP: 67.*.*.* United States | Comment Reference Number: 34229

இன்றைக்கு மதிமுக தேமுதிமுக தங்களின் சுய நலன்களுக்காக மதவெறி பாஜக விடம் 'தன்மானத்தை' அடகு வைத்து விட்டார்கள். முஸ்லிம்களை பற்றி யோசித்து பார்த்தார்களா அல்லது தன் கட்சியில் உள்ள ஒரு முஸ்லிமிடமாவது கருத்து கேட்டார்களா? ஏனென்றால் அவர்களுக்கு தெரியும்… நாமெல்லாம் ஏமாளி கூட்டம் (இந்த நூற்றாண்டிலும் கூட) என்று.

கடந்த காலத்தில் இதே ஒரு நிலைபாட்டைத் தான் திமுக அதிமுக வும் எடுத்தபோது காயலில் உடனே கழகத்தை கலைத்தார்களா அல்லது குறைந்த பட்சம் தலைமை கழகத்துக்கு தன் கண்டனத்தை எத்தனை திமுக அதிமுக சகோதரர்கள் தெரிவித்தார்கள்?

இதோ நம் காயலில் தேமுதிமுக அன்பர்கள் தேர்தல் களப்பணியாற்ற மாற்றோம் என்று ஒதுங்கி விட்டார்கள் ( ஆனால் " மானம் கெட்ட திமுக - மதிமுக" வினர் கிளம்பி இருக்கின்றார்கள். எவன் குடி முழுகினால் மாண்டால் இவர்களுக்கு என்ன. தன் வயிற்றை ரொப்பிக் கொள்ளவேண்டும்??). வலுவான எதிர்ப்பை காட்டாமல் காயலில் கட்சியை கலைக்காமல் ஒதுங்கி என்ன பயன்?

இதே மதிமுக / தேமுதிமுக கட்சிகள்… அடுத்த தேர்தலில் திமுக அதிமுக போன்று முஸ்லிம்களின் நண்பன் என்பார்கள். நாமும் பல்லை இளித்துக்கொண்டு 'சொரணையில்லாமல்' அவர்கள் பின்னால் போவோம்.

இன்னும் எத்தனை காலம் தான் நாம் செம்மறி ஆட்டு கூட்டமாக வாழப்போகின்றோம்? 'முஸ்லிம்களின் நண்பன், இட ஒதுக்கீடு' என்ற பசப்பு வார்த்தைகளை நம்பி எத்தனை காலம் நம் சமுதாயத்தை சுரண்டி பிழைக்கும் அயோக்கியர் கூட்டத்திடம் நம் சமுதாயத்தை அடகு வைக்கப்போகின்றோம்?

இன்னும் எத்தனை வருடங்கள் 'முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு' என்ற கோஷத்தை மட்டுமே அரசியல் ஆதாயமாக கையில் எடுத்து கொண்டு அல்லது இதனை மட்டுமே முன்னிலைபடுத்தி, கட்சி அறிக்கை அல்லது வாழ்வுரிமை போராட்டம் (குறிப்பாக தேர்தல் நேரங்களில்) என்று திராவிட கட்சிகளிடம் அரசியல் 'டீல்' செய்ய / அடகு வைக்க போகின்றோம்????

ஒற்றை சீட்டுக்காக நம்மை அவர்களிடம் அடகு வைத்தே பழகிப்போன நம் சமுதாய கட்சிகள்… வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திராவிட கட்சிகளின் தயவின்றி நம்மவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தனித்து போட்டியிடாலே குறைந்த பட்சம் மூன்று சீட் நம்மால் வெல்ல முடியும்.

மமக முஸ்லிம் லீக் கட்சிகள், திமுக கூட்டணியில் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடிகின்றது. ஆனால் சமுதாய கட்சியாக ஓரணியில் ஒன்று திரள முடியவில்லையே ஏன்???? இஸ்லாம் இதனை கற்று தரவில்லையோ???? இதை விட கேவலமான நிலைப்பாடு… வாய் கிழிய மார்க்கம் பேசும் ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ள மற்றோதொரு அணியினருக்கு. மார்க்க கொள்கை, கட்சி என்று நம் சமுதாயத்தை பிளவு படுத்தியே பலரின் காலமும் கழிகின்றது. இவர்கள் தாம் நம் சமுதாயத்தின் பாதுகாவலர்கள் (மில்லியன் டாலர் கேள்வி) ?

தங்களுடைய தேவைக்கு மட்டும் நம் சமுதாயத்தை பயன்படுத்தும் இந்த அரசியல் (திராவிட) பச்சோந்திகளுக்கு, சாமர்த்தியமாக இந்த தேர்தலில் ஒரு பாடம் புகட்டுங்கள். நம் சமுதாய கட்சிகளாகிய SDPI, MMK, TNMUL கின் வேட்பாளர்களை மட்டும் வெற்றி பெற செய்யுங்கள். மற்ற அனைத்து இடங்களிலும் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். மாற்றத்திற்கு வழி வகுங்கள்… மாற்றத்திற்கு வழி வகுங்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Rilwan (Tx) [09 April 2014]
IP: 198.*.*.* United States | Comment Reference Number: 34230

சந்தர்ப்பவாத அரசியல் முஸ்லிம்களுக்கு தேவை இல்லை . நேர்மையான அரசியல் நமக்கு தேவை. மோடிக்கு நற்சான்றிதல் வழங்கிய கருணாநிதிக்கும் வைகோவிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சமயம் கூடி வந்தால் கருணாநிதி modi க்கு ஆதரவு கொடுப்பார்.

ஆம் ஆத்மி மோடிக்கு எதிர்ப்பு கொடுக்கும் என உத்திரவாதம் உண்டு. மோடியை தோலுரிக்கும் வேலையே Adam ஆத்மி matrum than செய்கிறது. மேத்தா பட்கரும் சோனி சொரியும் புஷ்பராயனும் உள்ள கட்சி இவர்கள் யாரும் காவிகளும் அல்ல அரசியல் வியாபாரிகளும் அல்ல.

மேலே குறிப்பிட்டுள்ள மூவரும் Makkal நலனுக்காக சொந்த வாழ்க்கையை தொலைத்தவர்கள். நேர்மையானவர்கள்.போராளிகள். வேறென்ன வேண்டும் ?

Pin kurippu: நான் ஆம் ஆத்மி உறுப்பினர் அல்ல. உண்மையின் அடிப்படையில் ஆதரவு கொடுக்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...வைகோ
posted by Shah Jahan (Colombo) [10 April 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 34232

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: "எந்த தொகுதியில், நான் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, விருதுநகரிலேயே போட்டியிடுகிறேன்."

விடுதலை புலிகளுக்கு அளவில்லாத உதவி செய்தவர். ஆயுத கடத்தலுக்கு தன் காரையே கொடுத்தவர். ராஜீவ் கொலைக்கு உதவியாக நின்றவர். காமராஜ் பிறந்த ஊரில் ஜெயிக்க போறாராம். இவர் வரலாறு அறியாதவர்களா அம்மக்கள் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Shah Jahan (Colombo) [10 April 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 34235

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வைகோ புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். குலசேகரத்தில் அவர் பேசியதாவது:

"இந்தியாவிலேயே இஸ்லாமிய சமூகத்துக்கு அதிக இடஒதுக்கீட்டைக் கொடுத்துள்ள மாநிலம் குஜராத் மாநிலம் என்பதை புள்ளிவிவரத்தோடு என்னால் கூற முடியும்."

கூறுங்கள் ஐயா கூறுங்கள். அப்போதுதான் கருப்பு துண்டின் சாயம் வெளுக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. முஸ்லிம்களிடையே ஒற்றுமை வேண்டும்.
posted by V D SADAK THAMBY (GUANGZHOU,CHINA) [10 April 2014]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 34236

இஸ்லாமியர்களிடையே ஒற்றுமை என்பது எட்டாக்கனிதான்.

எனினும் இந்த முறை , பெரும்பாலான இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஒரே அணியில் இருப்பது ஆறுதல் தரும் விஷயமே .நாம் வாழ்வது இஸ்லாமிய நாடல்ல. இங்கு நடப்பதும் இஸ்லாமிய ஆட்சியல்ல.. பெரும்பான்மை இஸ்லாமிய கட்சிகள் ஆதரிக்கும் திமுக கூட்டணிக்கு நம் வாக்குகளை ஒருசேர வழங்கி , முஸ்லிம் ஆதரவு சக்திகளை வெற்றியடைய செய்ய வேண்டியது .

சரி. உங்களில் ஒருசிலருக்கு திமுக வுக்கு வாக்களிக்க பிடிக்கவில்லையா!! பரவாயில்லை. அமைதியாக ஒதுங்கிக்கொள்ளுங்கள்.வீணாக முஸ்லிம்களின் ஒற்றுமையை கெடுக்காதீர்கள்.

முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. முஸ்லிம்களின் ஒற்றுமை நீங்கில் முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் தாழ்வு.

முஸ்லிம்களின் வாக்கு வீணடிப்பதற்கு அல்ல.

ஆதரிப்போம் திமுக அணியை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [10 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34238

ம.தி.மு.க பிஜேபி யோடு கூட்டு சேர்ந்த போதே நமதூர் ம.தி.மு.க. அபிமானிகள் தங்களை இந்த காட்சிகாக தேர்தல் பணி செய்வதை நிறுத்தி தங்களின் அதிர்ப்தியை தெரிவித்திருக்க வேண்டும்,அதை விடுத்து

"நாங்கள் என்ன பிஜேபி க்காகாவா ஓட்டு கேட்டோம்,பம்பரம் சின்னத்திர்கல்லவோ கேக்கிறோம்" என்று கூறுவது சிறுபிள்ளை தனமானது,இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் பம்பரத்திற்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பிஜேபி க்கு விழும் ஒட்டு என்று,

பரப்புரையில் கலந்து கொள்ளா விட்டால் மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது,அதிக பட்சம் என்ன செய்யும் கட்சி?அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும்,நீக்கி விட்டு போகட்டுமே,நமது சமுதாயமா கட்சியா என்று வரும் போது கட்சியை கால் தூசிக்கும் கீழாக மதிக்க வேண்டும்,அதை விடுத்து நான் பெயருக்கு ம.தி.மு.க. வில் இருந்தாலும் ஒட்டு போடுவது அதற்கல்ல என்பது வெறும் விதண்டா வாதமே,புரிந்து கொள்வார்களா ம.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved