Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:31:11 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13469
#KOTW13469
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 11, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுகவுக்கு போடப்படும் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாகும்! முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4052 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு போடப்படும் வாக்குகள், பாரதீய ஜனதாவுக்கு அளிக்கப்படும் வாக்குகளைப் போன்றதாகும் என - தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி பரப்புரை செய்த - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசியுள்ளார். விபரம் வருமாறு:- இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு திரட்டும் முகமாக, கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இம்மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10.30 மணி முதல் காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் பரப்புரை செய்தார்.





காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் அருகிலும், வள்ளல் சீதக்காதி திடலிலும், திருச்செந்தூரிலும் பரப்புரை வாகனத்திலிருந்தவாறு அவர் பேசினார். அவரது உரைச்சுருக்கம்:-





பாரதீய ஜனதா கூட்டணி கொள்கை முரண்பாடுகளைக் கொண்டது. மதவாதத்தை வெறுத்துப் பேசி வந்த வைகோ, டாக்டர் ராமதாஸ், கேப்டன் விஜயகாந்த் ஆகியோரெல்லாம் தற்போது மதவாத சக்தியான பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளனர். நேர் எதிர் கொள்கைகளைக் கொண்ட இத்தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இன்று களம் காண்பதைப் பார்க்க வேடிக்கையாக உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் தான் இதுவரை பரப்புரை செய்த எந்த ஊரிலும் பாரதீய ஜனதாவை விமர்சித்து ஒரு சொல் கூட பேசியதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, அதிமுகவுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் பாரதீய ஜனதாவுக்கு அளிக்கும் வாக்குகளைப் போன்றது என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அளித்தது கலைஞர் அவர்கள்தான். உண்மை இவ்வாறிருக்க, நான்தான் இட ஒதுக்கீடு அளித்தேன் என நாக்கூசாமல் பேசும் ஜெயலலிதா அவர்களை நோக்கி நான் கேட்க விரும்புவதெல்லாம், தற்போது 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை - அடுத்து நான் ஆட்சிக்கு வந்தால் உயர்த்தித் தருவேன் என்று கலைஞர் கூறினார். ஆனால் அவர் ஆட்சியில் இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் தாங்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கூற இயலுமா? நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் கூட, திமுக கூட்டணியில் 4 முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இது 10 சதவிகித இட ஒதுக்கீடாகும்.

ஜெயலலிதா தான் பரப்புரை செய்யுமிடங்களிலெ்லாம், “செய்வீர்களா, செய்வீர்களா?” என்று மக்களைப் பார்த்துக் கேட்கிறார். பதிலுக்கு மக்களும், “பல திட்டங்களைத் தருவதாகக் கூறினீர்களே...? செய்தீர்களா, செய்தீர்களா?” என்று கேட்கின்றனர்.

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் தற்போது 10 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது.

தோழமைக் கட்சிகளை சிறிதும் மதிக்காதவர். தன்னை நம்பியிருந்த கம்யூனிஸ்ட்டுகளை கடைசி வரை நம்ப வைத்து காலை வாறியவர்தான் ஜெயலலிதா.

மத்திய அரசில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், நிலையான ஆட்சி கேள்விக்குறியாகும். அடிக்கடி ஆட்சிக் கலைப்புக்கு வித்திடுவார். இதை நான் யூகமாகக் கூறவில்லை. அவரது கடந்த கால நடவடிக்கைகளே அதற்குச் சான்று.

பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும், அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெளிவுற குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?

இந்த நாட்டில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாகப் பழகி வரும் சூழல் உள்ளது. குறிப்பாக அச்சூழல் வலுவாக உள்ளது. அதைப் போக்கிட யாரையும் அனுமதிக்க மாட்டோம்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.

அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஆர்.பி.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எம்.எச்.அப்துல் வாஹித், பெத்தப்பா சுல்தான், இப்றாஹீம் இப்னு அத்ஹம், எம்.இசட்.சித்தீக் உட்பட பலர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வெட்ட போற மாட்டின் செவியில் வேதம் ஓதி என்ன பயன்.!!!
posted by s.s.md meerasahib (TVM) [11 April 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 34245

முஹம்மது அபூபகர் அவர்களே........ உங்களின் பேச்சை நம் ஊரில் பேசி பிரயோஜனம் இல்லை. பக்கத்து ஊரில் போய் சொன்னாவது கேட்ப்பார்கள். நம் ஊரில் ரெம்பவும் மெத்தப்படித்த மேதாவிகள் சமீப காலமாக அதிகம். ஒற்றுமைக்கு வேண்டி இவர்கள் வாய் மூட மாட்டார்கள். அந்த கடுகளவு பொறுமையோ,நல் என்னமோ இவர்களுக்கு கிடையாது. தெளிந்த நீரில் மீன் பிடிக்க இந்த கூட்டத்துக்கு தெரியாது. குட்டையை கலக்கி மீன் பிடிக்க நினைக்கிறார்கள். குட்டையில் இறங்கும் போது இவர்கள் கலக்குன நீரில் இவர்களுக்கு தெரியாமல் முதலை இவர்களின் காலை பிடிக்கும்போது......... கொய்யா....கொய்யா...... என்று கூவுவார்கள். இதுதான் இந்த எலக்சனில் முஸ்லிம்களுக்கு நடக்க போகிறது. அட்மின் அவர்களே....... நான் தனி நபரை விமர்சிக்க வில்லை என் சகோதரர்களுக்கு சொல்லும் உபதேசம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எத்தனை காலம் தான் ஏணியாய் இருப்பது ?
posted by S.A.Muhammad Ali (துபாய் ) [11 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34246

முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒரு சீட்டை பெற்று கொண்டு திமுகவிடம் கட்சியை அடகு வைத்து விட்டது. இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை, பா.ம.க , தேமுதிக போன்ற கட்சிகள் எல்லாம் அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!.

தற்போது உள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் போட்டியிடும் தொகுதியில் கட்சி வேறுபாடின்றி அனைத்து முஸ்லிம்களும் ஆதரவு அளிக்க முன்வர வேண்டும். மற்ற தொகுதிகளில் ஊழல் மற்றும் மதவாதத்தை தேசிய அளவில் எதிர்க்க கூடிய குற்ற பின்னணி இல்லாத வேட்பாளர்கள் கொண்ட ஆம் ஆத்மி கட்சியை நம் மக்கள் ஆதரித்தால் தான் ஏற்புடையதாக இருக்கும். திமுக தனது முன் வாசலை காங்கிரஸ் கட்சிக்கும் பின் வாசலை பிஜேபி யிற்கும் திறந்து வைத்து உள்ளது. காசை விட்டெறிஞ்சா எந்த தொகுதியிலும் ஜெயிக்கலாம் என்ற எண்ணத்தை வித்திட்ட திமுக, மற்றும் அதிமுக என இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

நமது தொகுதியில் ஆம் ஆத்மி சார்பாக போட்டியிடும் சமூக போராளி தோழர் ம.புஷ்பராயன் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவது நம்முடைய கடமை.

வாரிசு அரசியலை ஒழிக்க,
ஊழலை அகற்ற,
மதவாதத்தை ஒழிக்க,
சிறையில் வாடும் குற்றமற்ற இஸ்லாமிய சகோதரர்களை மீட்க, dcw விற்கு எதிராக போராட,
வாக்களிப்பீர் துடைப்பம் சின்னத்திற்கு .

"உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உண்மையான பேச்சு. ஆனால், தூத்துக்குடி தொகுதியில்......
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [11 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34247

முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் தம்பி அபூபக்கர் அவர்களின் பேச்சு, முற்றிலும் உண்மையானது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தவிர வேறு எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் (ஆம் ஆத்மி கட்சி உட்பட) அது அதிமுகவுக்கு சாதகமானதே. அது மறைமுகமாக பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு போன்றதே.

எல்லா கட்சிகளும் ஊழலில் ஊறிப்போனது தான் ( ஆம் ஆத்மி கட்சி, இன்னும் சோதனை செய்யப்படவில்லை). யாரும் பரிசுத்தவான்கள் இல்லை. நமது ஊரை உள்ளடக்கிய தூத்துக்குடி தொகுதியை பொறுத்த வரை, கடந்த 3 நாடாளுமன்ற தேர்தல்களில், திமுகவுக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்த ஊர் நமதூர். ஆனால், இந்த 15 ஆண்டுகளில், நமதூருக்கு ஒரு நலத்திட்டங்களும் செய்யவில்லை.

மாறாக, கடைசி MP ஜெயதுரை, ஒரு படி மேலே போய், நமதூர் ரயில்வே ஸ்டேஷன் பணிகளுக்கு ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை. ராஜ்ய சபை உறுப்பினர் நிதியில் இருந்து கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நக்கல் வேறு. இவர்களுக்கு ஓட்டு போட்டு, திமுக நமக்கு கொடுத்தது 'அல்வா' தான்.

இந்த ஒரு தொகுதியில் திமுக தோற்பதால், ஒன்றும் குறைந்து விடாது. நமக்கு செய்த துரோகங்களுக்கு பாடம் கற்பிக்கத் தான். மற்ற தொகுதிகளில், திமுகவுக்கு வாக்களிக்கலாம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒரு MP போதும் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34249

அதிமுகவுக்கு போடப்படும் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாகும்! CP

என்று அதிமுக வின் கூட்டணியில் முஸ்லீம் லீக் இருக்கும் தி மு க வுக்கு போடப்படும் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாகும்! என்று கூறினீர்கள் - ஒரு MP சீட்டுக்காக உங்களின் பரப்புரைகள் நிலை இல்லாது போய்விட்டது.. பலகீனமான முஸ்லீம் மக்களின் ஓட்டுகளை பெறுவதில் நன்கு பயற்சி பெற்று விட்டீர்கள் சபாஷ் சபாஷ் - விழிப்புணர்வுகள் உள்ள முஸ்லீம்களுக்கு வேதனை அளிக்கிறது..

கடந்த 2002 ஆம் ஆண்டு பி ஜ பி யின் உறுப்பினர் ஒருவர் மக்களவையில் பொது சிவில் சட்டத்தை தீர்மானமாக்க கொண்டு வந்த போது இன்று நீங்கள் கூட்டணி அமைத்து இருக்கும் தி மு க அந்த பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு அளித்து முஸ்லீம் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தது..

அப்போது 2002 ஆண்டு மக்களவையில் முஸ்லீம் லீக் - ம தி மு க பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வாக்களித்து - அதை மறந்து இன்று நீங்கள் ஒரு MP சீட்டுக்காக தி மு க வுடன் கூட்டணி அமைத்து இருக்கிறீர்கள்... முஸ்லீம் மக்கள் முன்னிலையில் நீங்கள் ஆதரிக்கும் தி மு க தேர்தல் முடிவுக்கு பிறகு பி ஜ பி க்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று வெளிபடையாக பொது கூட்டத்தில் பகிரங்கமாக பேச முடியுமா...? உறுதி மொழி கொடுக்க முடியுமா..?

மக்களே.. இவர்களே நம்பி ஏமாறாதீர்கள் இவர்களுக்கு தேவை ஒரு MP ஒண்ணுதான் குறிக்கோள்.. சமுதாயமாவது கத்திரிக்காயாவது... தொகுதியில் சுயநலமில்லாத நல்ல வேட்பாளரை தேர்ந்துடுத்து அனுப்புங்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [11 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34250

இப்படை தோற்கின் எப்படை வெல்லும். நாளை வரலாறு புரட்சிதலைவி அம்மாவை பறைசாத்தட்டும். வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னதிக்கு மட்டுமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rilwan (TX) [12 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34251

ஆதிமுக அனுதாபிகளுக்கு சமீபத்திய இரண்டு நிகழ்வுகளை மனதில் kollungal.

1. ஆதிமுக பாஜாக ஊட்டி புரிந்துணர்வு - ஆதிமுகாவிர்க்கு சாதகமாக பாஜாக வேட்பாளர் வேண்டும் என்றே தவறாக மனு செய்தது - இது பெரிய இடத்து சம்பந்தம்

2. சற்று நேற்று அரசியல் புரோகர் சோ ராமசாமி அய்யர் பாஜாக போட்டியிடாத இடாத இடங்களில் ஆதுமுகாவிர்க்கு ஒட்டு போட சொல்லி இருப்பது

புரிய வில்லையா இன்னும் ? அவ்வளவு மாற மண்டைகளா ?

பின்குறிப்பு - அப்பப்பா ..என்ன கண்கொள்ளா காட்சி ,.ஹெலிகாப்டரில் பறக்கும் ஜெய அய்யருக்கு அடிமை மந்திரிகள் மேடையில் இருந்த படி தலை குனிந்து பவ்யம் காட்டுவது ,,,பின்பு எளிக்கூட்டம் போல காலில் விளுவது ,,, சீ ,,,,, என்ன இந்த அடிமைத்தனம் ? ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் கூட இவ்வளவு கேவலமாக நடக்காது ,,,, வடிவேலின் காமெடி கூட இப்படி இருந்ததில்லை .. இவ்வர்களுகேல்லாம் ஒரு உயிர ... ஒரு வாழ்க்கை ..வெக்கம் இல்லாமல் வாழ்வது தான் கொள்கையா ?

திமுகா விற்கும் ஆதிமுகாவிர்க்கும் உள்ள பாஜாகா கொள்கை இருபது சீட்டு தான் ... .. அது என்ன இருபது சீட்டு ?// இவர்களில் யாருக்கு இருபது சீட்டு கிடைக்கிறதோ அவர் மந்திரி பதவிகள் வாங்கிக்கொண்டு மோடி புகழ் பாடுவார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved