Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:21:22 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13846
#KOTW13846
Increase Font Size Decrease Font Size
சனி, மே 31, 2014
புகாரி ஷரீஃப் 1435: சமூக ஒற்றுமை, உலக அமைதி, சகோதரத்துவம், நோய் நிவாரணத்திற்காக அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் பங்கேற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7266 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கி, இன்றுடன் (மே 31) நிறைவடைகிறது.

ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.

ஒரு நாள் நீட்டிப்பு:

நேற்று ரஜப் 30ஆம் நாள் வெள்ளிக்கிழமை - ஜும்ஆ நாள் என்பதால், இவ்வாண்டின் நிகழ்ச்சிகள் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், ஷஃபான் 01ஆம் நாளான இன்று (மே 31) இவ்வாண்டின் நிறைவு நாளாகும்.

அதிகாலை நிகழ்ச்சிகள்:

இன்று அதிகாலை 05.15 மணிக்கு, இன்றைய நிறைவு நாள் நிகழ்ச்சிகளை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிப் கிராஅத் ஓத, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், குருவித்துறைப்பள்ளி ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ நிறைவுநாள் பாடத்தை ஓதி துவக்கி வைத்தார்.

காலை நிகழ்ச்சிகள்:

இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் இமாமும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்கினார்.

தொடர்ந்து, கூட்டு துஆவின் மகிமைகள் எனும் தலைப்பில், மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் பி.ஏ.காஜா முஈனுத்தீன் பாக்கவீ தமிழ் மொழியிலும், கேரளா - கருநாகப்பள்ளி - தேவளகர பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஒய்.ஏ.தாஹா மஹ்ழரீ மலையாள மொழியிலும் உரையாற்றினர்.

அபூர்வ துஆ பிரார்த்தனை:

ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, சீர்காழி - புத்தூர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளியின் இமாம் - காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எல்.ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ அபூர்வ துஆ பிரார்த்தனை இறைஞ்சி, இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.

சமூக ஒற்றுமை, உலக அமைதி, சகோதரத்துவம், நோய் நிவாரணத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இப்பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக, உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டனர்.

பிரமுகர்கள் பங்கேற்பு:

இப்பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ சென்னையிலிருந்து வந்திருந்தார். அவருடன், திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜனும் வந்திருந்தார்.





அதுபோல, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வருகை தந்து, மஜ்லிஸ் நலனுக்காக நன்கொடை வழங்கினார். தமிழக முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கானும் வருகை தந்திருந்தார்.





அதிமுக முன்னாள் நிர்வாகிகளான சரவணப்பெருமாள், விஜயகுமார் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அனைவருக்கும் மஜ்லிஸ் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.



பிரார்த்தனையில் பங்கேற்ற முக்கியமானோர்:

காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர்மன்ற முன்னாள் தலைவரும் - வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவருமான வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் உட்பட, நகர பொதுமக்களும், வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.





















































































இட வசதி:

ஆண்களுக்கு, மஜ்லிஸின் ஆண்கள் பகுதி ஹல்கா, பெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, குருவித்துறைப்பள்ளியின் உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளிப்பள்ளி, குருவித்துறைப்பள்ளி மையவாடி மைதானம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பெண்களுக்கு, மஜ்லிஸின் பெண்கள் பகுதி ஹல்கா, கிழக்குப் பகுதி மைதானம், பெரிய முத்துவாப்பா தைக்கா, ஈக்கியப்பா தைக்கா உள்ளிட்ட பகுதிகளில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் ஒரே குரலில் ‘ஆமீன்’ என்று கூறி, துஆ - பிரார்த்தனை செய்தனர்.

துஆ இறைஞ்சிய ஆலிமுக்கு வழியனுப்பு:

சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற துஆ பிரார்த்தனை நிறைவுற்ற பின்னர், துஆ இறைஞ்சிய ஆலிமை - ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபி பைத் பாடி நகர்வலமாக அவரது இல்லம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.


படம்:
வீனஸ் ஸ்டூடியோ


பாதுகாப்பு ஏற்பாடுகள்:

ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மஜ்லிஸ் வைபவக் கமிட்டியின் சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் ஆம்புலன் முதலுதவி வாகனம் நிகழ்விடத்தில் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, அப்பாபள்ளித் தெருவிலிருந்தே வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அப்பாபள்ளித் தெரு - தீவுத் தெரு சந்திப்பில் துவங்கி, மஜ்லிஸ் வளாகம் வரை ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.

இறுதி நாளை முன்னிட்டு, இன்று மாலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 16.30 மணிக்கு, ஹாஃபிழ் சொளுக்கு எம்.எஸ்.அஹ்மத் ஜமீல் கிராஅத் ஓதி மாலை நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, நபிகளார் மீதான மவ்லித் மஜ்லிஸ், மவ்லவீ ஹாஃபிழ் என்.எச்.பி.நவாஸ் மிஸ்பாஹீ தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.எம்.மீரா ஸாஹிப் துஆ ஓதி நிறைவு செய்தார்.

17.35 மணிக்கு எம்.இ.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஏ.எல்.நூருல் அமீன் ஆகியோர் ஏலம் விடும் நிகழ்ச்சியை நடத்தினர்.

19.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்கும் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

20.45 மணிக்கு, மாதிஹுல் கவ்த் மர்ஹூம் அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், ஏ.முஹம்மத் ஜியாத் தலைமையில் நடைபெற்றது.

21.45 மணிக்கு, நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் கடைசி கட்ட நிகழ்ச்சிகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஹாஃபிழ் என்.ஏ.சாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதி துவக்கி வைக்க, மஜ்லிஸ் வளைவுகளில் பதியப்பட்டிருக்கும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் மன்பஈ வழங்கினார்.

ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்’ என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நன்றி கூற, இலங்கை - கொழும்பு இஹ்ஸானிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.ஏ.முஹம்மத் ஹல்ஜீ ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

நாளை (ஜூன் 01) காலை 06.00 மணி முதல் 08.30 மணி வரை நேர்ச்சை வினியோகம் செய்யப்பட, அத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுறும்.

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிறைவு நாட்களின் நிகழ்ச்சி நிரலைக் காண இங்கே சொடுக்குக!

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1434ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 30ஆம் நாள் அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [31 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35133

அபூர்வ துவா பிராத்தனையில் கூடியவர்களின் நாட்டம், தேட்டம், நிவாரணி, நிம்மதி, சமூகத்துவம் என்றும் நிறைவேறி ஒற்றுமையுடன் வாழ இறைவன் அருள்புரிவானாக. சிறப்பான விழாவில் கலந்துகொண்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by smbuhary 8kadai (jeddah) [01 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35135

அஸ்ஸலாமு அழைக்கும்...

மாநபியீன் மாமன்றம் புனித மஜலிசூல் புஹாரி ஷரீப் சபையின் இறுதி நாள் நிகழ்ச்சியான புனித அபூர்வ துஆ மற்றும் அணைத்து நிகழ்ச்சியையும் நேரலையில் கண்டு மகிழ்ந்தேன். அல்லாஹ கேட்கபட்ட துஆக்கலீன் நமது நாட்டங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக.ஆமீன்.

என்றும் அன்புடன்
புஹாரி 8 கடை
ஜித்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Sithi katheeja (Singapore) [01 June 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 35137

மஜ்ளிசுல் Buhari சரீப் சபையல் கேட்கப்பட்ட அணைத்து பிரார்த்தனையும் Allah Kabul செய்வானாக. ஆமீன் அந்த்த மஜ்லிசை kayak நாள் variant Natalia அல்லாஹ aril புரிவானாக Amin


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by seyed ahamed refaij (sultanate of oman) [01 June 2014]
IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 35138

அஸ்ஸலாமு அழைக்கும் எனது பிரியமுள்ள நண்பர் நூஹு kaka அவர்களை இந்த அபூர்வ துவா பிராத்தனையில் பார்க்கும்போது ரெம்ப santhosam இந்த அபூர்வ துவா பிராத்தனையில் எல்லா சொந்தம்களை பார்க்கும்போது ரெம்ப சந்தொசமகே இருக்கிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அல்ஹம்துலில்லாஹ்
posted by Salai Sheikh Saleem (Dubai) [02 June 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35141

யா அல்லாஹ், 87 வருடங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்த புனித புஹாரி ஷரீப் அபூர்வ துஆ பிரார்த்தனையில் கேட்கப்பட்ட அனைத்து துஆக்களும் இந்த புனித கிரந்தத்தின் பொருட்டாலும், ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களின் பொருட்டாலும், நல்லடியார்கள், அவுலியாக்கள் ஷுஹதாக்களின் பொருட்டாலும் கபூல் செய்யப்பட்டு, நமதூர் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கவும், கொடிய நோய் நொடிகள் நம்மை விட்டு தூராக்கவும், எதிரிகளின் சூட்சியங்களில் இருந்து நம்மை காப்பாற்றி, நமக்குள் ஒற்றுமையை ஒங்க செய்வாயாக ! எங்களின் முன்னோர்களுக்கும் எங்களுக்கும் எங்களின் சந்ததியினருக்கும் நரக நெருப்பை ஹராமாக்குவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அபூர்வ துஆவை மிகவும் நேர்த்தியாக நடத்தி வந்து, நேரடி ஒளிபரப்பி வெளியூர் வெளி நாடுகளில் வசிக்கும் எங்களை போன்ற பலரின் மன ஏக்கத்தை நிவர்த்தி செய்த சபையின் அத்துனை நல்ல உள்ளங்களுக்கும், அல்லாஹ் நல்லருள் பாளிப்பாகனாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [02 June 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35142

அஸ்ஸலாமு அலைக்கும்,

அங்கு போதிகபட்ட சாஹிஹுல் புஹாரி ஹதீத் மற்றும் இறைவனின் வேதம் குர்ஆனின்படியும் நடக்க நம் அனைவர்க்கும் வல்ல நாயன் அருள் புரிவானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [02 June 2014]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 35145

சிறப்பான ஏற்பாடுகள். தொடர்ந்து 87 வருடங்களாக நடந்துவரும் இப்புனித புகாரி ஷரீப் அபூர்வ துஆ நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து துஆக்களையும் அல்லாஹ் கபூல் செய்வானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved