Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:53:31 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14662
#KOTW14662
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 7, 2014
ஹஜ் பெருநாள் 1435: தமாம், ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா காயலர்களின் தியாகத் திருநாள் தேனமுத சுற்றுலா யான்போவில் சங்கமம்!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 5452 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமாம்,ரியாத் ஜித்தா,மக்கா மதீனா ஆகிய ஊர்களின் காயலர்கள் குதுகூலத்துடனும்,தங்கள் குடும்ப சகிதததுடனும் இனிமைமிகு யான்போவில் சங்கமமாகி குவியத் தொடங்கினார்கள். பெருநாளின் முந்திய இரவிலிருந்தே யான்போவில் காயலர்களின் புகலிட இல்லமாகிய சகோதரர் "கலவா" இபுறாகீம் அவர்களின் "காயல்ஹவுஸ்" களைகட்ட ஆரம்பித்து விட்டது. மேலே உள்ள ஊர்களிலுள்ளவர்களும், உள்ளூர் காயலர்களும் குவியத் தொடங்கி விட்டார்கள்.







பெருநாள் தொழுகை முடிந்ததும் "காயல்ஹவுஸில்" நமதூர் புகழ்மிகு பெருநாள் உணவு வகையான வட்டிலப்பம் முதல் அனைத்து அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது.







ஜித்தாவில் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு அன்று மதியம் சிற்றூந்துகளில் யான்போ பயணமான காயல் குடுபத்தவர்கள்,வழியில் தங்கள் மதிய உணவை எல்லோரும் கூட்டாக வெட்டவெளியில் இதமான இயற்கை சூழலில் சந்தோஷ உரையாடலுடன் உண்டுமகிழ்ந்த பின்னர் யான்போ வந்தடைந்தனர்!











அவர்களை யான்போ சார்பாக சகோதரர் "கலவா "இபுறாகீம் மற்றும் சகோதரர்கள் வரவேற்றார்கள்! அன்று இரவு கேரளா மாநிலத்து மக்களோடு நம் "காயல்ஹவுஸ் "சகோதரர்களின் தோழமை கால்பந்தாட்டப்போட்டி மின்னொளியில் நடைபெற்றது, அதை நம்மக்கள் பார்த்து ரசித்தனர்.இரவு உணவு கடல் உணவு வகைகளான மீன். இரால் விருந்து யான்போ கடற்கரை பூங்காவில் பரிமாறப்பட்டது.







பெருநாளின் அடுத்த நாள் யான்போவின் புகழ்பெற்ற கடல் சொகுசுபடகு பயணத்தை அனைத்து காயலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் நூறு காயல் சகோதரர்களும் , குடும்பத்தார்களும் அப்படகில் பயணமானார்கள். ரம்மியமான தென்றல் காற்றையும், கடல் நீரையும் கிழித்துக்கொண்டு சென்ற அந்த பெரிய சொகுசு படகில் முதல் மாடி, மேல்மாடி என்ற தளங்கள் சிறிய கப்பலைப்போல் வடிவமைக்கப் பட்டிருந்தது.











அந்த இனிமையான ஒருசில மணித்துளி பயணத்தில் எல்லா சகோதரர்களும் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அவர்கள் வயது வித்தியாசத்தைக்கூட பாராமல் ஒவ்வொருவரும் சிறு பிள்ளைகளாய் மாறிய காட்சியை கண்டு அனைவரும் அகம் மகிந்தனர்!





















படகு பயணத்தை முடித்துக்கொண்டு அன்றைய மதிய உணவாகிய அறுசுவை பிரயாணி பிரித்யோகமாக காயல்ஹவுஸிலிருந்து தயாரித்துவந்ததை அனைவர்களுக்கும் அங்குள்ள பூங்கா நிழலில் பரிமாறப்பட்டது!











இரண்டு நாட்கள் தமாம், ரியாத், ஜித்தா, மக்கா மதீனா ஆகிய ஊர்களில் இருந்து வந்த காயல் சகோதரர்களின் இன்ப சுற்றுலா இனிதே முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்! இந்த இரண்டு நாட்களில் நாங்கள் பெற்ற இனிமையான பயண அனுபவம் வாழ்வில் எந்நாளும் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சி சுவடாய் எங்கள் இதயத்தில் பதிந்து விட்டதாக வந்த அனைவர்களும் பாராட்டினர்!









நூற்றுக்கு மேற்ப்பட்ட நமது காயல் பந்தங்களை பரிவோடு வரவேற்று அவர்களுக்கு எல்லா வசதிகளையும்,செலவு அனுசரணைகளையும் செய்த "கலவா" இபுறாகீம் அவர்களுக்கு அனைவர்களும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்தார்கள்!



சகோதரர் "கலவா" இபுறாகீம் அவர்களோடு அனைத்து நிகழ்வுகளையும் நெரிமுகப்படுத்தி நேர்த்தியாக வழிநடத்திச்சென்ற சகோதரர் முகம்மது ஆதம் சுல்தான் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த யான்போ காயல் சகோதரர்கள் அனைவர்களுக்கும் வந்திருந்த காயல் சொந்தங்கள் தங்களின் அன்பொழுகும் நன்றியை தெரிவித்து விடைபெற்றார்கள்!



தகவல்:
சகோதரர் ஹமீத் ரிபாய்

புகைப்பட உதவி:
சகோதரர் ஜஃபர் சாதிக்
சகோதரர் சல்மான் பாரிஸ்,


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சவுதி அரேபியா ரொம்பதான் மாறிப் போச்சி..
posted by mackie noohuthambi (chennai) [09 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37652

ஒரு காலம் இருந்தது. வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது தேநீர் குடிக்க காசு இருக்கிறதோ இல்லையோ, உடலில் நடப்பதற்கு வலு இருக்கிறதோ இல்லையோ கையில் இகாமா கட்டாயம் இருக்க வேண்டும். தப்பி தவறி மறந்து விட்டோம், அவ்வளவுதான், காவல் துறை சிவப்பு நீல வண்ண சொகுசு கார் நமது கண்களில் பட்டால் போதும் நம்மை அறியாமல் நமது கைகள் நமது பாக்கெட்டை தொட்டுப் பார்க்கும். உயிர் போய் உயிர் வந்தது போல் இருக்கும். சோலை வனங்கள் நமக்கு கிட்டாத பாலை வனங்கள்.. பெண்கள் தான் போக வேண்டும், அதுவும் சவூதிகள்தான் போக முடியும். எப்போதும் பூட்டியே இருக்கும்.

இந்த மரண பயத்துடன்தான் காயல்நல மன்ற கூட்டங்கள் ஏதோ ஒரு சிறையில் நடப்பதுபோல் - இப்போது நாளிதழ்களில் பரப்பாக பேசப்படும் பெங்களூர் பரப்பரா அக்ரஹாரம் போல - அங்கே இருப்பது போன்ற ஒரு வெறுமை கலந்த போலி சந்தோஷம். நாம் இந்தியாவில் எவ்வளவு சுதந்திரமாக வாழ்ந்தோம். இப்போது இப்படி அடிமை போல் இருக்கிறோமே என்ற கவலை -துயரம் நம்மை ஆட்கொள்ளும். நண்பர் ஆதம் சுல்தான் எனது இனிய பொது செயலாளர் அவர்களுக்கு இந்த விஷயங்கள் நன்கு தெரியும்.

ஆனால் இப்போது நிலைமை முற்றிலுமாக மாறி இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - திறந்த வெளியில் காயல் களரி அறுசுவை உணவு. அல்லாஹ்வை ஷுக்று செய்யுங்கள். நீங்கள் இருப்பது பொன்னான காலம். கொடுத்து வைத்தவர்கள். இதையும் மீறி யாருக்காவது மன கஷ்டங்கள் இருந்தால் எங்கள் காலங்களை நினைத்து திருப்தி பட்டுக் கொள்ளுங்கள்.

"புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது

நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூ மழை பொழிகிறது

எந்த நாடு என்ற கேள்வி இல்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை"

என்று பாட தோன்றுகிறது.

எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கெடுபிடிகளை கடந்துவந்த வாழ்க்கைப்பயணம்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37657

சுமார் 25 வருசத்திற்கு முன் ரியாதில் நான் இருக்கும்பொழுது காயல் மன்ற கூட்டம் எந்த ஒரு தனி வீட்டிலும் நடத்த முடியாது பொது இடத்தில உட்க்காரும் இடமான பூங்காவில் (PARK) பயந்து பயந்து நடத்தி இருக்கிறோம் ஒரு தடவை தமாமிலிருந்து நண்பர் A .R .தாஹா கூட கலந்து இருக்கிறார் (அவர் இந்த செய்தியைப் பார்த்தால் நினைவுக்கு வரும் )அந்த அளவிற்கு அப்போதிருந்த சட்ட்திட்டத்திற்கும் காவல்துறைக்கும் பயந்து கொண்டு மிகவும் கவனமாக கூட்டங்கள் நடத்தி நம்மூர் வரிய மக்களுக்கு, வதங்கும் மக்களுக்கு,வறுமை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு வெறித்தனம் எங்கள் எல்லோர்களின் மத்தியிலும் இருந்ததென்று சொன்னால் அது மிகையல்ல!

நம் KMT மருத்துமனைஉருவாக நன்கொடைவசூல் பண்ணுவதில் தீவிரம் காட்டிய காலத்தில் சுமார் 500 கி.மீ தொலைவிலுள்ள் ஒரு ஊரில் ஒரு தோட்டத்தில் நம்மூர் மக்கள் நிறைய இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களிடம் வசூல் பண்ண ஒரு வெளிக்கிழமை என் காரில் ஒரு குழுவாக சென்றோம். அப்போதெல்லாம் ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு செல்வதென்றால் அலுவலக அனுமதி முத்திரை கடிதம் வேண்டும். அக்கடிதம் இல்லையென்றால் காவல்துறை பிடித்து விடும் நாங்கள் ஆர்வ கோளாறினால் அவசரமாக புறப்பட்டு விட்டோம். நம்மூர் மக்களிடம் வசூல் செய்துகொண்டு இருக்கும்பொழுது ஒரு காவல்துறை காவலாளி வந்து என்னை பிடித்து இது யாருடைய கார் என்றார் என்னுடையது என்றேன் எங்கிருந்து வருகிறீர்கள் எங்கே உங்கள் அன்மதி கடிதம் என்று வினவவே, என் தம்பிக்கு சுகவீனம் சற்றுஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வந்ததால் உடனே புறப்பட்டு வந்தோம் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாங்கள் அனுமதி கடிதம் பெறமுடியாது என்று சோகமே உருவான முகத்துடன் பாதி அழுகை வருவதுபோல் பாவனை செய்தோம்.பெரிய அதிகாரியிடம் என்னை கூட்டி சென்று விட்டு விட்டார் பெரிய அதிகாரி அன்ற மாலைதான் வந்தார். வந்தவர் என்னை விசார்த்தார் என் அலுவலக பெயரையும் மற்றைய விபரத்தையும் கேட்டுவிட்டு சற்று எச்சரித்து எங்களை விவ்டுவிதார் அந்த அனுபவம் இன்றுவரை எங்கள் மனதை விட்டு அகலவில்லை.

நான் என்றும் மதிக்கு சகோதரர் மக்கி நூகுதம்பி காக்கா அவர்கள் கருத்து பதிவில் "பெங்களூர் பரப்பரா அக்ரஹாரம் போல - அங்கே இருப்பதுபோன்ற ஒரு வெறுமை கலந்த போலி சந்தோஷம்("c&p) என்ற அளவிற்கு ஒப்பிட தேவையில்லை,கெடுபிடிகள் கடினம்தான் ஆனால் அதுவே பெங்களூர் பரப்பரா அக்ரஹாரம் சிறைகள் போன்றோ அல்லது திகார் சிறைகள் போன்றோ ஒரு குற்றவளிக்கொப்பான வாழ்கையை நாங்கள் வாழவில்லை

அப்படிப்பட்ட இழிநிலை சிறை வாழ்கை நம் அனைவருக்கும் அணுவளவும் அணுகாமல் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி காவல் புரிவானாக ஆமீன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved