![](/newsimg/610201469814.jpg)
ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் அரூஸ் - அரூஸிய்யா பள்ளியில் இன்று காலை 09.45 மணிக்கு பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. பள்ளியின் இமாம் வடகரை முஹம்மத் வலிய்யுல்லாஹ் வழிநடத்திய இத்தொழுகையில், அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
![](/newsimg/610201469835.jpg)
![](/newsimg/610201469847.jpg)
தொழுகை முடிவுற்ற பின்னர், மஹல்லா ஜமாஅத்தினர் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக் கூறி, கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
![](/newsimg/610201469858.jpg)
![](/newsimg/610201469874.jpg)
![](/newsimg/610201470394.jpg)
![](/newsimg/610201470409.jpg)
![](/newsimg/610201470420.jpg)
![](/newsimg/610201469885.jpg)
காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளியிலிருந்து...
தகவல் & படங்கள்:
‘ரிஃப்அத்’ உமர்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) அரூஸிய்யா பள்ளியில் ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அரூஸிய்யா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|