Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:39:18 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14659
#KOTW14659
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 7, 2014
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4083 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜாமீன் கோரும் ஜெயலலிதாவின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விபரம் வருமாறு:-

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி செப்டம்பர் 30 அன்று சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான விசாரணையை அக்டோபர் 06ஆம் நாளுக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அக்டோபர் 01ஆம் நாளன்று அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரும் மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, நிறைவில் அக்டோபர் 07ஆம் நாளுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், ஜெயலலிதாவின் தண்டனைக்கு ரத்துக் கோரும் மனுவையும் கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிபதி சந்திரசேகர் நீண்ட தீர்ப்பு வழங்கினார். அதில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அவ்வளவு எளிதில் வெளியில் விடமுடியாது என்றும் இதற்கு முன்பு நடைபெற்ற ஊழல் வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட எவ்வித சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

ஊழல் குற்றம் மனித உரிமைகளுக்கு எதிரானது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதாலும் இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க முகாந்தரம் இல்லை என நீதிபதி கூறினார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

செவ்வாய்க்கிழமை காலை 11.50 மணியளவில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது. பிற்பகல் 3.35 மணியளவில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தலா 4 ஆண்டு காலம் சிறையும், ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். அன்றைய தினமே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை பெங்களூரில் நடைபெற்றது. விசாரணையை முன்னிட்டு பெங்களூரின் சில முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முதல் மனுவாக ஏற்க மறுப்பு:

முன்னதாக, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்கக் கோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மனுவை முதலில் விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். ஜெயலலிதா மனுவை அவசர மனுவாக கருதி முதல் மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்தார். ஆனால், மனுவை வரிசைப்படியே விசாரிக்க முடியும் என நீதிபதி சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துவிட்டார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு வரிசை எண் படி 73-வது வழக்காக விசாரணைக்கு வந்தது.

ராம் ஜெத்மலானி வாதம்:

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராம் ஜெத்மலானி வாதிட்டார்.சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த அப்பீல் மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி வாதடினார்.

பவானி சிங் வாதம்:

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

'ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.அவரை ஜாமீனில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும், தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பி செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என அவர் தெரிவித்தார்.

ஜெத்மலானி பதில்:

அதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, "ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார்" என்றார்.

விசாரணை ஒத்திவைப்பு:

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி வாதம் ஒரு மணி நேரம் வாதிட்டார். வழக்கறிஞர் பவானி சிங்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன. தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர்.

மீண்டும் விசாரணை:

உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு ஜாமீன் மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் 2.30 மணிக்கு வாதம் தொடங்கியது. சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 3.35 மணியளவில் ஜெயலலிதா உள்ளிட்டோர் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

ஜாமீன் மனு:

கடந்த 29ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 1ஆம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா, இவ்வழக்கை வழக்கமான நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

தகவல் உதவி:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [07 October 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37640

முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Moderator: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதாக ‘தி இந்து’ இணையதளம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. பின்னர் அது உடனடியாக திருத்தப்பட்டுவிட்டதால், அதன்படி இச்செய்தி திருத்தப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by V D SADAK THAMBY (Chaina) [07 October 2014]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 37642

அரசு வக்கீக் பவானிசிங் முன்னுக்குப்பின் முரணாக நடந்துகொண்டார். ஜாமீன் கொடுக்க முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர் பிறகு இறுதியில் கண்டிஷன் ஜாமீன் கொடுக்க ஆட்சேபனையில்லை என்று குழப்பினார். என்னதான் அரசுவக்கீல் திடீரென அணி மாறினாலும் நீதிபதியின் கையில்தான் தீர்ப்பு உள்ளது என்பதை அவர்உணரவில்லை.. அரசு வக்கீல் பவானிசிங் மீது ஏற்கனவே சந்தேகக்கண் இருக்கத்தான் செய்கிறது. விசேட நீதிமன்றத்திலும் இவருடைய நடவடிக்கை சந்தேகிக்கும்படியாகவே இருந்தது.

முதலில் ஜாமீன் கொடுக்க எதிர்ப்புதெரிவித்த அவர், பிறகு எப்படி திடீரென மனதுமாறினார் பார்த்தீர்களா !!

அரசு வக்கீல் பவானிசிங்கை திடீரென மனது மாறச்செயததில் இருந்தே 'ஜாமீன் கோருபவர்களின் ' அபரிமிதமான அரசியல் செல்வாக்கை எவன் ஒருவனும் உணரமுடியும். . இதை உயர்நீதிமன்ற/உச்சநீதிமன்ற நீதிபதிகள் எளிதாக உணர்வர் . உச்ச நீதிமன்றத்திலும் கூட இவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது அரிதிலும் அரிதுதான். அப்பீல் வழக்கையே துரிதமாக (fast track) நடத்தி முடிக்கசொல்லி உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை பணிக்கும். இந்தியாவில் ஊழல் வழக்குகளில் இந்த வழக்கு ஒரு முன்மாதிரி. பலமிக்க தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் ஜாமீன் கொடுக்காமலேயே துரிதகதியில் (fast track) விசாரித்து இறுதித்தீர்ப்பு விரைவாக கொடுக்கப்படவேண்டும். அப்போதுதான் ஊழல் அரசியல்வாதிகள் யாரும் எளிதில் தப்பிக்க முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நீதிக்கு தலை வணங்கு...
posted by mackie noohuthambi (chennai) [07 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37643

நீதிக்கு தலை வணங்கு என்று தமிழில் சொல்வார்கள். நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிக்கலாம் ஆனால் நீதிபதிகளை விமர்சிப்பது நாகரிகம் இல்லை.

சென்னையில் காலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மிக அற்பமானவை, ஆத்திரமூட்டக் கூடியவை. ஜாமீன் கேட்பது மிக நயமாகவும் நாணயமாகவும் நீதிபதியின் உணர்வுகளை தட்டி எழுப்புவதாகவும் கேட்கவேண்டும். உணர்ச்சிகளை தூண்டக் கூடியாத அமையக் கூடாது. அதே சமயம் நீதிமன்றத்தில் வாதாடுவது மிகவும் நுட்பமாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும்.

வழக்கில் ஜெயலலிதா சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களுக்கே புரியும். அதிமுக நண்பர்களுக்கு அவசரம் அதிகம். 18 வருடங்கள் ஆக்கப் பொறுத்தவர்கள் இப்போது மிக்க அவசரப் படுகிறார்களே என்று முதல் ஜாமீன் மனுவை முன் வைக்கும்போதே இவர்களை எச்சரிக்கை செய்தார். பவானி சிங் அவர்கள் நீதிபதியை கடுப்பேற்றி விட்டதையும் மறுக்க முடியாது. இவ்வளவு பெரிய மக்கள் சக்தியும் ஆதரவும் பெற்ற ஒரு முதலமைச்சரை ஜாமீனில் விட்டால் இந்த நாட்டை விட்டே ஓடிவிடுவார் என்பது எவ்வளவு அபத்தமான வாதம். கடைசியில் அவர் தடம் புரண்டது மன்னிக்க முடியாத குற்றம். இவரை இனிமேல் யாரும் வழக்கறிஞராக ஏற்றுக் கொள்வார்களா, அரசே அவரை டிஸ்மிஸ் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இன்றைய புதிய தலைமுறை "நேர் பட பேசு" விவாதத்தைக் கவனித்தவர்களுக்கு ஒரு செய்தி தெளிவாகிறது. உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தாலும். வழக்கு தொடர்ந்து கர்நாடகா நீதி மன்றத்தில்தான் நடக்கும். ஏனெனில் கர்நாடக நீதி மன்றத்துக்கு இந்த வழக்கை 2003 இல் மாற்றியதே உச்ச நீதி மன்றம்தான்.

எல்லா குற்றங்களுக்கும் நீதியின் கடைசி வாசல் உச்ச நீதிமன்றந்தான். அதை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு சாதகமானாலும் பாதகமானாலும் நாம் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஜெயலலிதா அவர்களுக்கு இது நன்கு தெரியும். அவர் பொறுமையுடனும் தைரியத்துடனும் எதையும் எதிர் கொள்வார். ஆனால் அவரது கட்சி தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு பல தவறான போராட்டங்களிலும் சுவரொட்டி விளம்பரங்களிலும் ஈடு பட்டு பிரச்சினையை பூதாகாரமாக்கி விட்டார்கள். ஊழல் வழக்கு விஷயங்களில் உச்ச நீதி மன்றம் முன்னெப்போதையும் விட இப்போது சட்டங்களை - தீர்ப்புக்களை கடுமையாக்கி விட்டதால், இதற்கு பின்னர், ஊழல் வரிசையில் நிற்கும் தமிழக தலைவர்கள் எல்லோரும் இது போன்ற தீர்ப்புக்களை எதிர் நோக்கியே இருக்க வேண்டும்.

நமக்கு பிரியமானவர்கள் தண்டிக்கப் படும்போது நமக்கு மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் என்ன செய்வது. தவறு செய்த உயர் குலப் பெண் - வசதி வாய்ப்பு மிக்க செல்வாக்கு உள்ள குடும்ப பின்னணி உள்ள பெண் திருடியபோது அந்த பெண்ணை விடுவிப்பதற்கு நபிகள் நாயகம் அவர்களிடம் நபி தோழர்கள் சிபாரிசு செய்த போக்கு முகம் கடுகடுத்த நபி அவர்கள், எனது மகள் பாத்திமா திருடியிருந்தாலும் இதே தண்டனைதான் கொடுத்திருப்பேன். உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் இப்படி ஏற்ற தாழ்வுகள் பார்த்து சட்டத்தை தங்கள் இஷ்டம்போல் வளைத்து தீர்ப்புக்கள் வழங்கியதால்தான் அவர்கள் மிக கேவலமாக அழிக்கப் பட்டார்கள் என்ற உண்மையை நபிகள் நாயகம் அவர்கள் தெளிவு படுத்தி சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்ற நிலைப்பாட்டை உறுதிப் படுத்தினார்கள்.

இங்கே ஊழல் செய்தவர்கள் நபி தோழர்களுமல்ல தீர்ப்பு வழங்குபவர்கள் நபிகள் நாயத்தின் வழியில் நடப்பவர்களும் அல்ல. இறுதி தீர்ப்பு நாள்தான் எல்லா நியாய அநியாயங்களுக்கும் உண்மையான தீர்ப்பு வழங்கும் நாளாக இருக்கும். அதுவரை சாட்சிகள் யார் பக்கம் சாதகமாக இருக்கிறதோ வாத பிரதிவாதங்களை யார் சமயோசிதமாக கெட்டி தனமாக வாதிடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

ஆட்சி அதிகாரங்களை அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கு கொடுக்கிறான். அவன் நாடியவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கி கொள்கிறான். இதற்கு கால எல்லை நேரம் பகல் இரவு என்றெல்லாம் கிடையாது என்பதை இப்போது உலகின் நாலா பக்கங்களிலும் நடக்கும் திடீர் புரட்சிகள் மூலம் அவதானிக்க முடிகிறது. நம்மால் முடிந்த வரை நேர்மையாக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எல்லோரும் முயற்சி செய்வோம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...லட்சிய வெறி அல்ல ஆட்சி அதிகார வெறி
posted by mackie noohuthambi (chennai) [10 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37658

தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றிருக்கும் ஜெயலலிதாவுக்காகத் தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் கண்ணீர் விட்டுக் கதறுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது, தமிழர்களில் கணிசமானவர்கள் ஊழலைக் குற்றமாகக்கூட அல்ல பிரச்சினையாகக்கூடப் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கில் மிகுந்த முனைப்பு காட்டிய திமுக தரப்பின் யோக்கியதையைப் பார்க்கும்போது, பிரச்சினை ஊழல் அல்ல; மாறாக ஆட்சியதிகாரம் தொடர்பானது என்று மக்கள் கருதுவதில் தவறில்லை.
நேர்மை மற்றும் நீதிகுறித்து மக்களிடையே நம்பிக்கையற்ற மற்றும் ஏளனமான கருத்து நன்கு வேர்விட்டு வளர்ந்திருப்பதற்குக் காரணம், அரசு மட்டுமல்ல சமூகத்தின் அனைத்துத் தரப்புமே அழுகிய நிலையில் இருப்பதுதான். உனது மகன்களிலேயே நல்லவன் யாரென்றதற்கு, அதோ கூரை மீதேறிக் கொள்ளிவைக்கிறானே அவன்தான் என்று சொன்ன பரிதாபத்துக்குரிய தந்தை ஒருவரின் நிலைமையில்தான் இன்றைய தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே இருக்கிறது.

இந்த நிலை மாற ஆட்சியாளர்களால் இங்குமங்குமாகக் கொண்டுவரப்படும் ஒருசில சட்ட மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் போதுமானதல்ல. ஒரு பெரும் மாற்றம் மக்களின் சமூக மற்றும் அரசியல் உணர்வுநிலையில் நிகழ்ந்தாக வேண்டும். அத்தகைய உணர்வுநிலை மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய அளவுக்குப் பலமான அரசியல் கட்சி அல்லது சமூக இயக்கம் எதுவும் தற்போதைக்குக் கண்ணில் தென்படவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சொல்லுங்கள் நடுநிலை நெஞ்சமுடையவர்களே ?.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [11 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37664

ஒரு பேரூந்தில் பயணம் செய்ய பயண சீட்டு பெற முனைபவரிலிருந்து,பெரிய அரசாங்க அலுவலகத்தில் தன்னுடைய காரியம் முடிவடைய எத்தனிக்கும் சாதாரண சாமானியன் முதல் சமூகத்தில் உயா அந்தஸ்தில் இருப்பவர்கள் வரை,ஏதாவதொன்றை இலைமறையாய்க் கொடுத்துத்தான் தங்கள் தேவைகளையும்,தங்கள் காரியங்களையும் முடித்துக் கொள்கிறார்கள். இதில் 99% சதவீததினர்கள் நம்முடைய நெஞ்சைத் தொட்டுப் பார்த்தால் நாமே உணரக்கூடியவராவோம்!

ஆக இது எதார்த்தம் இதுதான் இந்தியாவின் வாழ்க்கைமுறை இதை பெரிதாகச்செய்பவன் பிடிபடுகிறான்.அவன் பலராலும் நிந்திக்கப்படுகிறான், நிந்திப்பவன் கூட தன் நிலையை நினைக்காமல் நேர்மையானவனைப்போல நடிக்கிறான்! .

ஆக இந்த வாழ்க்கைமுறை தவிர்க்கமுடியாத சங்கிலித் தொடாராக பழகிப்போய்விட்டது.இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு ஆட்சியானதோ ஆளும் முதன்மையோ தங்களின் ஆட்சித்திறனை மக்கள் மத்தியில் கூறி முந்திய ஆட்சியாளர்களிடமிருந்து ஒப்பிட்டுக்காட்டி,நான் பொன்னான ஆட்சியைத் தந்துகொண்டிருக்கிறேன் என்று மக்களிடம் முறையிட்டு அவர்கள் மனதை கவர முயற்சசித்தால்,உண்மையிலேயே நடுநிலையான மக்கள் முதல் அனைத்து மக்களும் ஆதரவை அள்ளித்தருவார்கள்

அதை விட்டு விட்டு முந்திய ஆட்சியாளர்கள் ஊழல புரிந்து விட்டார்கள்,கோடான கோடியை கொள்ளையடித்து விட்டார்கள் ஆகவே அவர்களை இங்கு அண்ட விடாதீர்கள், அவர்கள் சிறைக்கம்பிக்கு சொந்தக்காரர்கள் என்று மக்க்களிடம் கூறி,கூறி ஆட்சியைப்பிடித்த அந்த தலைமை அதே ஊழலில் தண்டனை பெரும்பொழுது,அதை விமர்சிக்க சாதாரண கடைக்கோடி சாமானியனும் முன்வரத்தான் செய்வான்.அவன் சிறுதவறு செய்திருந்தாலும் அதை நினைக்க மாட்டான் ஆட்சியாளரின் முதன்மையே இப்படி செய்யலாமா?ஊழலை ஒழிப்பேன் என்று சொன்னதால் அல்லவோ அவர்களுக்கு ஓட்டளித்தேன் என்று எண்ணுபவன் அத்தலைமையை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது..

இதையெல்லாம் மறந்து மனித புணிதம் என்றும், தெய்வத்திற்கு மனிதன் தண்டனை தீர்ப்பு வழங்கலாமா?என்றும்,நீதி வழங்கிய நீதிபதி நீசமுடையவன் என்றும் மாநிலத்தில் எல்லா இடங்களிலும் இவர்களின் நிலைபாட்டை தெர்வித்து, இல்லை இல்லை திணித்து எல்லா மக்களையும் மிரட்டி எதிர்ப்பணியில் இணையுங்கள் இல்லையெனில் உங்கள் நிர்வாகநிலையங்களின் நிர்வாக குரல்வளயங்கள் நெருக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப் படுவீர்கள் என்ற சர்வாதிகார ஆட்டதைப்பார்த்துக்கொண்டு, அதனால் ஏற்ப்படும் பாதிப்புகள் அனைத்தும் மக்களால்தான் செய்யப்படுகிறது என்பதை ஒப்புகொள்ளுங்கள் என்று சொல்வது கேப்பையில் நெய்வடிகிறது என்ற சொல்லுக்கு ஒப்பானது இல்லையா? சொல்லுங்கள் நடுநிலை நெஞ்சமுடையவர்களே ?அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved