Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:01:32 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14817
#KOTW14817
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 29, 2014
பச்சைக் குழந்தை உச்சா போனது போல... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4077 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கேரள மாநிலம் - கோழிக்கோடு நகரில் வசிக்கும் காயலர்களின் அயராத தொடர்முயற்சியின் பயனாக, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் துவங்கி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது காயல்பட்டினம் வழித்தடத்திலான கோழிக்கோடு - திருச்செந்தூர் விரைவுப் பேருந்து சேவை.













சேவை அறிமுகப்படுத்தப்பட்ட அன்று இயக்கப்பட்ட அதே பேருந்துதான் இன்றளவும் இயக்கப்படுவதாகவும், அவ்வப்போது ஏற்படும் பழுதுகளைச் சரி செய்யாமலும், போதிய பராமரிப்புகளை மேற்கொள்ளாமலும் இப்பேருந்துச் சேவை இயக்கப்பட்டு வருவதால், தற்போது நகரப் பேருந்தை (டவுண் பஸ்) விட தரம் குறைந்த நிலையில் அது இயங்கிக் கொண்டிருப்பதாகவும், கோழிக்கோடு நகரில் வசிக்கும் காயலர்கள் தெரிவித்துள்ளனர்.





ஒட்டப்படாத பிளவுகள், ஒட்டப்பட்ட டயர்கள், திரைச்சீலையுடன் ஜன்னல்கள் என கற்காலத்தை நினைவுகூரும் வகையில் இப்பேருந்து இயக்கப்பட்டு வருவது குறித்து, போக்குவரத்துக் கழகத்திற்கு - கோழிக்கோடு வாழ் காயலர்களை உள்ளடக்கிய மலபார் காயல் நல மன்றம் (மக்வா) சார்பிலும், காயலர்கள் தனிப்பட்ட முறையிலும் நேரில் வாய்மொழியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் பல கோரிக்கைகளை வைத்தும், இன்றளவும் அப்பேருந்தில் எந்தப் பழுதும் சரிசெய்யப்படாதது மட்டுமின்றி, நாளுக்கு நாள் பழுதுகள் அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக வண்டியின் பயண நேரம் 60 நிமிடங்கள் அதிகரித்துள்ளதாகவும் பயணியர் மேலும் கூறினர்.











பல மணி நேரங்கள் பயணிக்க வேண்டிய இப்பேருந்தில் சாதாரண நாட்களில் பயணிப்பதே பெரும் அவதிக்குரியது எனும் நிலையில், மழைக்காலங்களிலோ - இப்பேருந்திற்கு உள்ளேயே குடை பிடித்துதான் பயணிக்க வேண்டியுள்ளதாகக் கூறிய அவர்கள், வண்டியின் மேற்கூரை, கண்ணாடி இல்லாமல் திரைச்சீலை தொங்க காட்சியளிக்கும் ஜன்னல் ஆகியவற்றின் காரணமாக, பெய்யும் மழை வண்டியின் முழுப் பரப்பையும் முழுமையாக நனைத்து பயணியரின் நிம்மதியை முற்றிலும் கெடுத்து விடுவதாக கோழிக்கோடு வாழ் காயலர்கள் தெரிவித்துள்ளனர்.









இப்படங்களில் காணப்படுவதை விடவும் மோசமான நிலையிலேயே தற்போது பேருந்து இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோழிக்கோட்டிலிருந்து...
தகவல் & படங்கள்:
ரயீஸ்


[இச்செய்தியில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் கோப்புப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Jeddah) [30 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37933

நமதூரில் 40 வயதை தாண்டிய எவருக்கும் " டப்பா பஸ் " பற்றி தெரியாமல் இருக்காது . தற்போது இந்த பெயர் புழக்கத்தில் இல்லை . SETC பேருந்தை " டப்பா பஸ் " என்று அழைக்கலாம் .

( டப்பா பஸ் என்று அழைப்பது ADJ பஸ் . நாசரேத்திற்கு செல்லும் பஸ் . நாசரேத் பஸ் வந்து விட்டதா என்று கேட்க மாட்டார்கள் . Dappa பஸ் வந்து விட்டதா என்று தான் கேட்பார்கள் . )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [30 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37938

இந்த பேருந்தின் இந்த அவல நிலை குறித்த செய்தியை மேற்கோள் காட்டி SETC திருச்செந்தூர் / தூத்துக்குடி நகர பணிமனையிலோ அல்லது சென்னையில் உள்ள SETC மேலாண் இயக்குநரிடமோ இணைய தளம் கருத்து கேட்டு வெளியிட்டால் பிரச்னை தீருவதற்கும் வாய்ப்புண்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இ.போ.ச...
posted by mackie noohuthambi (kayalpatnam) [30 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37942

நாங்கள் இலங்கையில் படிக்கும் காலத்தில் இலங்கை அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் எழுதப் பட்டிருக்கும் வாசகம் இ.போ.ச.

இதன் அர்த்தம் "இலங்கை போக்குவரத்து சபை". நாங்கள் அதை "இதில் போவது சங்கடம்" என்று மாற்றி சொல்வோம். இதே நிலை இன்றும் கூட இருக்கிறது. எவ்வளவு உயர்ந்த சொகுசு பேருந்துகள் இருந்தாலும் இப்படி சில பேருந்துகள் இருக்கத்தான் செய்கின்றன. கோழிக்கோடு போகும் நண்பர்கள் நடதுனர்களையும் ஓட்டுநர்களையும் நன்கு கவர்ந்து விட்டார்கள். வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பது ஹல்வா மிச்சர் கொடுப்பது வரை நன்கு அறிமுகமாகி விட்டார்கள்.

இப்போது தமிழக அரசு அம்மாவை இழந்து வாடும் பிள்ளை போல் இருக்கிறது. இந்த நேரத்தில் இதை எல்லாம் சரி செய்யும்படி அவர்களை கேட்பது நியாயம் இல்லை. முதலமைச்சரே கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சி பொறுப்பை ஏற்கிறார். இந்த பேருந்தும் அம்மாவின் இழப்பை எண்ணி அழுகிறதோ என்னவோ..

எனவே, மலபார் காயல் நல மன்றம் ஒரு தீர்மானம் இயற்றி இந்த பேருந்தை விலை கொடுத்து வாங்கி தனியார் பேருந்தாக இயக்கினால் பயணம் சொகுசாகவும் இருக்கும். "காயல் நல மன்ற போக்கு வரத்து கழகம்" என்ற நல்ல பெயரையும் அதற்கு சூட்டலாம்.. வருமானமும் ஈட்டலாம்... கொஞ்சம் மாற்றி யோசியுங்கள் நண்பர்களே.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [30 October 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37944

பச்சை குழந்தை உச்சா போகிறதா ?
தலைப்பே தலை சுற்றுகிறது.

மலபார் காயல் மக்கள் பஸ்ஸினால் கஷ்டப்படுகிறார்கள் என்றால் இங்கே ஹாயா தலைப்பு.

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எப்படியெல்லாம் வளைக்க முயற்சிக்கிறார்கள் நேர்மையின் முதுகுத்தண்டை?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [31 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37952

முன்னாள் இருந்த ஹசன் ஸ்டாரே (அஸ்ஹர் பள்ளியின் எதிரில்) கட்ச்சி டீ கடையொன்று இருந்தது. பேருந்து பயணிகள் அங்கு தேநீர் அருந்துவது வழக்கம்.

ஒருநாள் காலை ஒருவர் வேகமாக ஓடிவந்து கட்ச்சி கடையில் தேநீர் அருந்துபவரிடம் நாசரேத் டப்பா பஸ் போயிட்டுதா என்று கேட்டார் தேநீர் அருந்தும் அந்த நபர் அமைதியாக இருந்தார் .மறுபடியும் அந்த நபர் கேட்டார் அப்பொழுதும் அவர் அமைதியாக இருக்கவே சற்று கொபமுடம் குரலை உயர்த்தி மூன்றாவது முறையும் அவரிடமே கேட்டார். இதை கேட்டுக்கொண்டிருந்த டீ கடை உரிமையாளர், அந்த நபரை பார்த்து யோவ் போய்யா அங்கிட்டு அந்த பஸ் ஒனரிடமே “டப்பாபஸ்” என்று கேட்கிறீரே நீரா பெயர் வைத்தீர் என்று கோபமாக திட்டியதால் அந்த பஸ் உரிமையாளர் சற்று ஆறுதல் அடைந்தார்..

அன்றைய அந்த பஸ்ஸக்குள்ள பெயரை இன்று சூட்டினால் பொருத்தமாக இருக்கும்!

ஆய்சியாளர்களின் அவலத்தை எந்த அளவிற்கு நியாயப்படுத்தும் முயற்சிக்கு வந்து விட்டார்களென்றால் “இப்போது தமிழக அரசு அம்மாவை இழந்து வாடும் பிள்ளை போல் இருக்கிறது. இந்த நேரத்தில் இதை எல்லாம் சரி செய்யும்படி அவர்களை கேட்பது நியாயம் இல்லை.(C&P)

ஆகவே எல்லோரும் மூலையில் உட்க்கார்ந்து அழுதுகொண்டிருங்கள் என்ற அறிவுரைகளை அனைத்து பேமாளி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் ஒர் அறிவிப்பு கூடியவிரைவில் வந்தாலும் வரலாம் ஏனனில் அதையும் ஆமோதிக்கும் மிகுதியான மேதாவிகள் மொய்ந்திருக்கும் தமிழகமாயிற்றே!

ரயில்வே அமைச்சர் செயலற்று வீட்டில் இருப்பதனால் திருசெந்தூர் நெல்லை இரயில் மிகவும் பளுதடைந்து அவலநிளையுடன் கேட்ப்பாரற்ற நிலையில் இயங்கும் புகைவண்டியை காயல்நகர மக்கள் குத்திகைக்கு எடுத்து ஓட்டினால் நிறைய இலாபம் கிடைக்குமல்லவா? என்பது என்னுடைய சிறிய யோசனையே

கோழிக்கோடு பேருந்தை மாற்ற அரசாங்கத்திடம் அதன் கடமையை செய்யச்சொல்லும் எச்சரிக்கையை விட்டுவிட்டு அந்த பேருந்தையே நாம் விலைக்கு வாங்கி அதை பணிகள் உபோயோகதிற்கு பயன் படுத்தலாம் என்ற யோசனைக்கு நிகராக மேலே சொன்ன ரயில்வண்டி வாங்கும் என் யோசனை நிகரானது தானே? எப்படியெல்லாம் வளைக்க முயற்சிக்கிறார்கள் நேர்மையின் முதுகுத்தண்டை?

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved