Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:08:27 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14815
#KOTW14815
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 29, 2014
குப்பைத்தொட்டி இடமாற்றத்தால் பொதுமக்கள் அவதி! மக்களின் பொறுப்பற்ற தன்மையே இடமாற்றத்திற்குக் காரணம் என நகர்மன்ற உறுப்பினர் தெரிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3894 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசின் IUDM திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சிக்கு - குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் வாங்கப்பட்டு, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக வைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளின் பொதுமக்கள் இத்தொட்டிகளில் கொட்டும் குப்பைகள், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களால் அதற்கென உள்ள வாகனத்தில் தொட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு, குப்பைகள் ஓரிடத்தில் கொட்டப்பட்டு, மீண்டும் வெறுமையான தொட்டிகள் மீண்டும் எடுத்த இடத்தில் வைக்கப்படும்.

குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாத சில இடங்களில்தான் ஆங்காங்கே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படும் நிலை இருக்கிறது என்றால், குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்ட சில இடங்களிலும், பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையால் குப்பைகளைத் தொட்டிக்குள் போடாமல், வாகனத்திலிருந்தவாறே தொட்டியை நோக்கி வீசியெறிவதும், அதனால் குப்பைகள் தொட்டிக்குள் விழாமல் ஆங்காங்கே சிந்திச் சிதறி, சுகாதாரக் கேட்டுக்குக் காரணமாவதும், வைக்கப்பட்டுள்ள தொட்டிகளுக்குத் தீ வைப்பதும், பின்னர் அது தொடர்பானவர்களே நகராட்சியைக் குறைகூறுவதும் வாடிக்கையாகிப் போனது.

அது மட்டுமின்றி, வீட்டுத் தோட்டங்களில் மொத்தமாகச் சேரும் குப்பைகளையும் பொறுப்பின்றி ஆங்காங்கே கொட்டும் நிகழ்வுகளும் தொடர்கதைக உள்ளது.

பார்க்க செய்திகள்:- 01 02 03

காயல்பட்டினம் 10ஆவது வார்டுக்குட்பட்ட பரிமார் தெருவில் இதுபோன்று வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி சில நாட்களுக்கு முன் காயிதேமில்லத் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், அத்தொட்டியில் குப்பைகளைக் கொட்டிய பொதுமக்கள், தற்போது தொட்டியின்றி இருப்பதால், சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாகக் கூறுகின்றனர்.











அவர்களுள் சிலர், அப்பகுதியை உள்ளடக்கிய 10ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்கிடம் முறையிட்டதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து, நகர்மன்றத் தலைவரிடம் வினவியபோது,

ஒவ்வொரு வார்டிலும் அந்தந்தப் பகுதி மக்களின் ஒருமித்த கருத்துக்கள் பெறப்பட்டு, அதனடிப்படையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. பரிமார் தெருவில் வைக்கப்பட்டிருந்த தொட்டி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டனர்.

ஒரு வார்டு தொடர்பான பிரச்சினையை, என்னை விட அந்தந்த வார்டு உறுப்பினர்கள்தான் நன்கறிந்திருப்பர் என்பதால், வார்டு உறுப்பினரிடம் முறையிடுமாறும், மக்களுக்காகவே இயங்கும் நகராட்சியில், அனைவரும் இணைந்து தெரிவிக்கும் முறையீடுகளுக்கு நகராட்சி நிச்சயம் செவிசாய்க்கும் என்றும் நான் அவர்களிடம் கூறினேன். அதே நேரத்தில் அவ்விடத்தில் தொட்டியில்லாததால் குப்பைகள் அதிகளவில் தேங்குவதைக் கருத்திற்கொண்டு, அங்கு குப்பைகளை அவ்வப்போது அகற்றிட சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறேன்
என்றார்.

10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்கிடம் இதுகுறித்து வினவியபோது,

குப்பை சேகரிக்கும் வாகனத்திற்காகக் காத்திருந்து பொதுமக்கள் குப்பைகளைக் கொடுப்பதில் உள்ள அவதியைக் கருத்திற்கொண்டே, அதிகமாகக் குப்பைகள் சேரும் பகுதிகளைக் கணக்கிட்டு, இதே எனது 10ஆவது வார்டில் இன்னும் 9 இடங்களுக்குக் குப்பைத் தொட்டிகள் தேவை என்ற நிலையிலும், பரிமார் தெருவிற்கு முன்னுரிமையளித்து ஒரு குப்பைத்தொட்டியை வைக்க ஏற்பாடு செய்தேன்.

ஆனால், குப்பைத் தொட்டியை வைப்பதற்கு முன்பு வரை அமைதியாக இருந்த அப்பகுதி, தொட்டி வைக்கப்பட்ட பின்புதான் பிரச்சினைக் களமாக மாறியுள்ளது. குப்பைகளைத் தொட்டியில் போடாமல் அதனருகிலேயே வீசிச் செல்வதும், குப்பைத்தொட்டி இருக்கும் பகுதியில் கழிவு நீரை ஓடவிட்டு, பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலுள்ள தொட்டி விரைவிலேயே சேதமடையக் காரணமாவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் எனது வார்டிலிருந்து நான் முகம் கொடுக்கும் பிரச்சினைகளில் பெரும்பகுதி இந்தக் குப்பைத் தொட்டி சார்ந்ததாகவே இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பலமுறை எடுத்துக்கூறியும் போதிய ஒத்துழைப்பே கிடைக்கவில்லை. எனவே, காயிதேமில்லத் நகரில் தேவைப்படும் இடத்தில் தற்போது அத்தொட்டியை மாற்றி வைத்துள்ளேன். அப்பகுதி மக்கள் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.

முறையாக நடக்கும் ஒரு சிலர் இதனால் பாதிக்கப்பட்டாலும், எனக்கு வேறு வழி தெரியாததாலேயே இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. இதைத் தவிர எனக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லை
என்றார்.

படங்கள்:
Y.M.முஹம்மத் தம்பி
(AKM ஜுவல்லர்ஸ்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Jeddah) [29 October 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37927

மக்களின் பொறுப்பற்ற தன்மையே தெருவில் சுகாதாரக்கேட்டிற்கு காரணம் . இதில் நகர் மன்றத்தையும் , வார்டு உறுப்பினரையும் குறை கூறி பிரயோஜனம் இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mohideen (Jeddah) [29 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37928

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அன்பது போல் நகர்மன்றத்தை குறை கூறி ஒரு பிரயௌஜனமும் இல்லை. மக்கள் தான் திருந்த வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack SMA (Jeddah) [29 October 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37930

நகரின் அனைத்து தெருக்களுக்கும் குப்பை அள்ளும் லாரி வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை . ஒருவேளை , அப்படி வந்தால் எந்தத்தெருவிற்கும் குப்பை தொட்டி தேவையில்லை . மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து லாரி வரும் வேளையில் குப்பையை அவர்களிடம் கொடுக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் . மீறுபவர்கள் நகராட்சி மூலம் தண்டிக்கப்பட வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [30 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37932

எதற்கெடுத்தாலும் நகர் மன்றத்தையும் வார்டு உறுப்பினரையும் குறை கூறிக் கொண்டிருப்பதே சிலருக்கு வாடிக்கையான வாழ்க்கைமுறையாகும்! அவர்களை எந்தநாளும் திருத்தவேமுடியாது!

வார்டு உறுப்பினர் உங்களுக்கு சேவகர் என்றால் அவர் ஒரு "கை" தான் "மறுகை" மக்களாகிய நம்முடைய ஒத்துழைப்பாகும்,ஆக ‘இருகைககள்” சேர்ந்து தட்டினால்தான் தீர்வு என்ற ஒலி அதிரும். எந்த திறமையான ஆட்சியாக இருந்தாலும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அவ்வாட்சி வெற்ற்றி பெற்று வளம் கொழிக்கும்!

தற்போது “பந்து” வார்டு உரிப்பினரிர் கையில்தான் இருக்கிறது, அத்தெரு மக்களுக்கு தகுந்த பெரியவர்களை வைத்து அறிவுரை செய்து பொறுப்பற்ற தன்மையினால் குவியும் குப்பையும் அதனால் பரவும் கொசுவின் அபாயத்தின் பாதிப்பையும் அவர்கள் புரியும்படி சொல்லி செயல்பட வைப்பதுதான் சாதுர்ண்யம். அதை விட்டுவிட்டு தாங்களும் அவர்களோடு போட்டாபோட்டி போடுவது பொறுப்புள்ள உறுபினருக்கு அழகல்ல.!

அவர்களுக்குள்ள தொட்டியை அங்குள்ள பெரியவர்களின் உதவியுடனும் அழகான அறிவுரையுடனும் வைத்து பாருங்கள் பலன் அனைவரும் விரும்பபியதாகவே அமையும்..எப்பொழுதும் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. ஒரு சிலருக்காக மல்லுகட்டி இருப்பதைவிட அவர்கள் மனமும் எண்ணமும் அவர்களின் இயல்புநிலையை நினைத்து திருந்தும் அளவிற்கு சற்று விட்டுக்கொடுத்து போனால் பலரின் பாராட்டுதலை தாங்கள் பெறுவதுமட்டுமல்ல பொதுவாழ்வில் பொறுமையானது மிகப்பெரிய “புண்ணியபொக்கிஷம்” என்ற தத்துவத்திற்க்கோர் உதாரணமாக உங்கள் வாழ்க்கையும் அமையும் அல்லாஹ்வின் உதவியால்!

.நான் சார்ந்த வார்டு என்பதால் சற்று உரிமையாலும்,வயதாலும் உறுப்பினருக்கு அறிவுரை கூறியுள்ளேன் அதை ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கையில்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!. !

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved