Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:05:12 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15491
#KOTW15491
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 27, 2015
தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என அரசு தெரிவித்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் மூலம் அனுப்பப்பட்ட மனுவிற்கு தகவல்: மக்கள் உரிமை செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4236 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசு பொது தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் - ஹிஜாப் எனும் தலை முக்காடு அணிய அரசு தடைவிதிக்கவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் மூலம், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட மனுவினை தொடர்ந்து இந்த தகவலை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, மக்கள் உரிமை வார இதழ் - தனது பிப்ரவரி 27-மார்ச் 5, 2015 பதிப்பில் தெரிவித்துள்ளது.



தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய தடுத்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!
ஆசிக் உமர், காயல்பட்டினம்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர்களாலும், கல்வி நிறுவனங்களாலும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சகோதர சமுதாய மாணவிகளின் ஏளன பார்வைக்கும் கிண்டலுக்கும் இலக்காகப்படுகின்றனர். ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்து கற்றவை அனைத்தையும் தேர்வு விடைத்தாள்களில் முறையாக பதிவு செய்ய இயலா நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

கிட்டத்தட்ட மனம் கலங்கி தோற்றுவிடுவோமோ என்று சோர்வடையும் நிலை நம் கண்மணிகளுக்கு. இந்த அவல நிலைக்கு தீர்வு எப்போது? என பெற்றோர்களும், சமுதாய ஆர்வலர்களும் ஏங்கி தவித்து வந்தனர்.

அது அவல நிலை மட்டும் அல்ல, உரிமை மறுப்பு.

அரசு பொதுத்தேர்வுக்காக மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாக பாடம் படித்து தேர்வு எழுத சென்ற மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே தடுத்து நிறுத்தும் அளவுக்கு அவர்கள் என்ன பஞ்சமா பாதகம் செய்து விட்டனர்? குமுறி குமுறி கொந்தளித்த மாணவிகளுக்கு தடுத்த நிறுத்திய ஆசிரியர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

அவர்கள் ஹிஜாப் என்ற தலை முக்காடு அணிந்து இருந்தது தான் காரணம் என்று சொன்னதோடு ஹிஜாபை அகற்றி விட்டு வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என கண்டிப்புடன் அறிவித்து விட்டதால் வேறு வழியின்றி ஹிஜாப் இன்றியே தேர்வு எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த கெடுபிடி நிலை நீடித்து வந்த நிலையில் முஸ்லிம்கள் இதற்கு கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்து வந்தனர்.

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கும், நம் நாடு கடைப்பிடித்து வரும் மத சார்பற்ற தன்மைக்கும் விரோதமானது என்ற போர்க்குரல் எழுந்தது. ஹிஜாபுக்கு தடை விதித்தும், அபராதம் விதித்தும் அடாத செயல் புரிந்த பிரெஞ்சு அதிபர் சர்கோசி தேர்தலில் படுதோல்வி அடைந்து அரசியல் வாழ்வே அஸ்தமனம் ஆனா நிலை உலக அளவில் அசைக்க முடியா வரலாற்று சான்றாக இருக்க, சமூக அமைதிக்கும், சமய உரிமைக்கும் இந்திய திருநாட்டிற்கே முன் உதாரணமாக திகழும் தமிழ் நாட்டில் ஹிஜாபுக்கு தடையா? இது முறையா என உரிமை பேணும் அமைப்புகள் களம் இறங்கின. இதில் காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்கள், மற்றும் நற்பணி அமைப்புகளின் ஒப்புதலுடன், தேர்வு மையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு காயல்பட்டினம் நகராட்சி தலைவி ஐ.ஆபிதா அவர்கள் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி டி.சபீதா IAS , அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவுக்கு உடனடி தீர்வு கிடைத்தது.

அரசுத்தேர்வு இயக்குனர் திரு தேவராஜன் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சி.ஈ.ஒ. (மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி) யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மீண்டும் தேர்வு மையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அரசு தடை செய்யவில்லை என்றும், மீறி ஹிஜாப் அணிய தடை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள சி.ஈ.ஒ.க்களுக்கும் இது தொடர்பான் உத்தரவுகள் தேர்வுக்கு முன்பான சந்திப்பில் பிறப்பிக்கப்படும் என அரசு தேர்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அரசு பொதுத்தேர்வுகளில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பினை சமூக உணர்வுள்ள அனைவரும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு இது தொடர்பான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டால் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

உணர்ச்சி வசப்பட்டு மோதல் போக்கை கடைப் பிடிக்காமல் மேற்சொன்ன வழிமுறைப்படி நிலைமையை கையாள வேண்டும்.

கல்வித்துறை, காவல்துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் சீக்கிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமயம் தொடர்பான உரிமைகள் முஸ்லிம்களுக்கும் உண்டு. அதனை மறைக்கவோ, மறுக்கவோ எவருக்கும் உரிமையில்லை. ஒன்றுபட்டு உரிமைகள் வெல்வோம். பொதுத்தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வழி வகை கண்ட சமுதாய உணர்வு கொண்ட அனைவரையும் பாராட்டுகிறோம்.


இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [28 February 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39387

அல்ஹம்துலில்லாஹ் மகிழ்ச்சியான செய்தி

எப்போதும் ஒழுக்கமாக தலையில் ஹிஜாப் போட்டிருக்கும் அந்த மக்களை இதை தடுக்கும் போது ஒரு வித படபடப்பையும் அசௌகரியமும் மனதில் ஏற்படுத்தும் இதனால் தேர்வில் கவனம் சிதறும் இதற்காக பாடுபட்ட அனைத்து ஜமாத்துகள் பொது நல அமைப்புகளுக்கு இறைவன் நற்கூலியை கொடுப்பானாக ஆமீன்

நம் இந்தியாவில் வாழும் சீக்கியர்கள் தமது மதத்தின் அடையாள சின்னத்தை எந்த நிலையிலும் விட்டு கொடுப்பதில்லை கிரிக்கெட் விளையாட்டிலும் கூட


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved