Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:49:56 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15486
#KOTW15486
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 24, 2015
காயலர் குடும்ப சங்கமமாக குதூகலத்துடன் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 33-வது பொதுக்குழு!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 6011 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ஜித்தா - காயல் நற்பணி மன்றத்தின் 33 வது பொதுக்குழு, 7 ஆவது அமர்விற்கான நிர்வாக தெரிவு மற்றும் 13 ஆம் ஆண்டு துவக்கவிழா வெளியரங்கில் ஜித்தா சர்வதேச விமான நிலையம் அருகில் அமைந்துள்ள "அஸ்ஸஃப்வா" ஓய்வில்லத்தில் கடந்த 13-02-2015 வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மிகச்சிறப்பாக நடந்தேறியது.

வாகன புறப்பாடு :

ஏற்கனவே அறிவித்தபடி காலை 07:30 மணியிலிருந்தே உறுப்பினர்கள் ஜித்தா ஷரஃபிய்யா,ஆர்யாஸ் உணவகம் முன்பு குழுமினர். சகோ.எஸ்.முத்துவாப்பா, சகோ.எம்.டபிள்யூ.ஹாமீது ரிஃபாய் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்து உறுப்பினர்களை அமர்த்திகொண்டு 08:00 மணியளவில் புறப்பட்டு நிகழ்வு நடைபெறும் இடம் நோக்கி வந்து சேர்ந்தது.



மக்கா உறுப்பினர்கள் சிற்றுந்துகள் மூலம் சகோ.எம்.ஏ.இப்ராஹீம் தலைமையில் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர்.



யான்புவில் இருந்தும் ஏராளமான மன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர்.



வாகனம் உள்ள ஜித்தா உறுப்பினர்கள் தத்தமது வாகனங்களில் வந்து சேர்ந்தனர்.



வருகை தந்த அனைவரையும் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன், சகோ.சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான், சகோ.சோனா ஏ.டி.ஹுசைன் ஹல்லாஜ், சகோ எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் ஆகியோர் அகங்குளிர வரவேற்றனர். வந்திருந்தோர் யாவரும் தங்களுக்குள் உற்சாகமாக உரையாடி நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.

காலைச்சிற்றுண்டி :

வந்திருந்தோர் அனைவருக்கும் சுவைமிக்க காலை உணவு பசியாற இட்லி, வடையுடன் சர்க்கரை பொங்கல் பரிமாறப்பட்டு தேநீருடன் உபசரிக்கப்பட்டது.



சகோ.எம்.எம்.எஸ்.செய்கு அப்துல்காதிர், சகோ.பொறியாளர் ஜி.எம்.முஹம்மது சுலைமான் இருவரும் வருகை தந்த உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்தும், சந்தாக்கள், நன்கொடைகளை பெற்றும் அதற்கான ரசீதுகளை உடன் அளித்து கொண்டனர். புதிய சகோதரர்களும் தங்களை மன்றத்தில் இணைத்து உறுப்பினராகினர்.

வெளியரங்க விளையாட்டு போட்டிகள் :

வெளியரங்க விளையாட்டு போட்டிகள் விசாலமான மைதானத்தில் ஆரம்பமானதும் துள்ளிக்குதித்து வந்த சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியோர் என விளையாட்டில் ஆர்வமுள்ள அனைவரும் உற்சாகமாக கலந்துகொண்டனர்.



போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர் சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப், சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா.எஸ்.ஹெச்.மொகுதூம்முஹம்மது, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், சகோ.கே.வி.எம்.எ.சி.ஷாஹ் மீரான் ஸாஹிப் மற்றும் சகோ.சோல்ஜர் எஸ்.எ.எஸ்.ஷெய்கு அப்துல்லாஹ் ஆகியோர் சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன் தலைமையில் சிறு சிறு குழுக்களாக போட்டியாளர்களை தேர்வு செய்து போட்டிகள் துவங்கின.

பெனால்டி கிக் :

கால்பந்து பெனால்டி கிக் போட்டி 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு வழமையான உற்சாகத்துடன் நடைபெற்றது. யான்பு, மக்கா, ஜித்தா என குழுக்களுக்கு பெயரிட்டு கலந்து கொண்டனர்.















தொடர்ந்து கைப்பந்து போட்டி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், மியூசிகல் வாக், ஸ்லோ வாக் போன்ற வெளியரங்க போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.











போட்டியில் கலந்து கொண்ட பெரியோர், இளையோர் காயல் தெருவில் விளையாடும் சிறார்களாக மாறி ஆட்டம் ஆட முற்பட்டது உண்மையான காயல் விளையாட்டை கண்முன் கொண்டுவந்தது. போட்டியில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவத்திலே துள்ளி விளையாடியவர்களாக மாறினர்.



மங்கையர்களுக்கான போட்டி :

மறுபுறத்தில் சிறார்கள், மழலைகள் மற்றும் மங்கையர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. மங்கையர்களுக்காக உள்ளரங்கில் இசை நாற்காலி, கப்பில் பந்து போடுதல், MOVIN ON UP / CUP ஐ மேலிருந்து கீழ் அடுக்குதல், STRAW AND PEARL / முத்து உறிதல், COLOR SEPERATION ANEXITY / கலர் கற்களை பிரித்தெடுத்தல், ஊசியில் நூல் கோர்த்தல், SKIPPING என பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற்றது. அனைத்து போட்டியையும் நான்கு பேர் கொண்ட குழுவினர் சிறப்புற நடத்தினர்.

சிறார் மற்றும் மழலைகளுக்கான போட்டி :

சிறார் மற்றும் மழலைகளுக்காக சாக்கு ஓட்டம்,100, 50 மீட்டர் ஓட்டப்பந்தையம், பலூன் வெடித்தல், இசை நாற்காலி, பன் கவ்வுதல் மற்றும் பலவித போட்டிகள் தனித்தனியாக காலை முதல் இரவு வரை நடைபெற்றது. கொஞ்சம் கூட அலுப்பு தட்டாது மிகுந்த ஆர்வத்துடன் குழந்தைகள் கலந்து கொண்டது பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொண்டது. இவர்களுக்கான போட்டிகள் அனைத்தையும் சகோ.எம்.அய்.அரபிமுஹம்மது ஷுஅய்ப் மற்றும் சகோ.எம்.என். முஹம்மது ஷமீம் முன்னின்று அழகுற நடத்தினர்.



















ஜும்ஆ தொழுகை இடைவேளை :

ஜும்மா தொழுகைக்காக மதியம் 12.15 மணியளவில் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளரங்கில் 12:30 மணியளவில் புனித மக்கா நகர் அழைப்பாளர் இலங்கையை சேர்ந்த சகோதரர் அல்ஹாஃபிழ் முஹம்மது ஜியாது ஆலிம் அவர்கள் இஸ்லாமிய பண்புகள், இஸ்லாமில் ஈகை குறித்த தகவல், ஒரு முஸ்லீமின் பண்பு எங்ஙணம் அமையவேண்டும், ஒரு முஸ்லிம் எவ்வாறு ஈகையாளியாக இருக்க வேண்டும், பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு மற்றும் பிறருக்கு நாம் செய்யும் நல்லுதவி இவைகள் மூலம் ஈருலக வாழ்வில் நாம் பெறும் நன்மைகள் பற்றிய விரிவான மிக அழகான செய்திகளை ஜும்ஆ பேருரையாக தந்து தொழுகையை வழி நடத்தினார்.



33 வது பொதுக்குழு :

ஜும்மா தொழுகை நிறைவுற்றதும், 33 வது பொதுக்குழு கூட்டம் கூடியது. அதனை தொடர்ந்து 7 வது அமர்விற்கான நிர்வாகிகள் தெரிவு செய்தல் நிகழ்வு நடைபெற்றது.







சகோ. பொறியாளர் எஸ்.பஷீர் அஹமது, சகோ. எம்.என்.காஜா ரஹ்மத்துல்லாஹ், சகோ. பொறியாளர் கே.எம்.கமால் ஹாதி மற்றும் சகோ. மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.







அந்நிகழ்வுக்கு சகோ.குளம்.M.A.அஹ்மது முஹ்யித்தீன் தலைமையேற்று தலமையுரையற்றினார். சகோ.M.W.ஹாமீது ரிஃபாய் நிகழ்சிகளை நெறிபடுத்தினார். சகோ. பொறியாளர் அல்ஹாபிழ் எம்.ஹெச்.முஹம்மது அலி இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். சகோ எஸ்.ஹெச்.ஹுமாயுன் கபீர் அனைவரையும் அகமகிழ வரவேற்றார்.



கடந்த கூட்டங்களின் அறிக்கை நடைபெற்ற பணிகள் குறித்த முழு விபரங்கள் தீர்மானங்கள், மேலும் கடந்த மாதங்களில் யான்பு மற்றும் மக்கா நகரங்களில் நடைபெற்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனை சந்திப்பு கூட்டங்களில் அனைவரின் பங்களிப்புகள் அன்பான உபசரிப்புகள் பற்றியும் சகோ. சட்னி S.A.K.செய்யிது மீரான் விளக்கினார்.



மன்ற செயல்பாடுகள், உறுப்பினர்களின் உத்வேக மிக்க களப்பணிகள், நமது ஒற்றுமை, சந்தா என்ற நமது சிறு நிதியை மன்றத்திற்கு வழங்கியதின் நிமித்தம் இம்மன்றம் செய்த பாரிய உதவிகள் அதனால் இறைவன் புறத்திலிருந்து நம்மை அறியாது நாம் பெற்றிடும் அளப்பரிய நன்மைகள் குறித்த செய்திகளை சகோ.M.A.செய்யிது இப்ராஹீம் விரிவாக தந்தார்.



நம் மன்றம் வழங்கிய உதவித்தொகை, நாம் பெற்ற சந்தா மற்றும் நன்கொடை, மன்றத்தின் தற்போதைய இருப்பு மற்றும் தேவைகள் போன்ற நிதிநிலை குறிப்புக்களை சகோ.M.S.L.முஹம்மது ஆதம் வழங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக இது வரை மன்றம் சார்ந்த அனைத்து நிதிநிலை விபரங்களுடைய பட்டியலின் நகலும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அடுத்து வாழ்த்துரை வழங்கிய சகோ.முஹம்மது ஆதம் சுல்தான் நாம் கடல் கடந்து சம்பாதிக்க வந்த இடத்தில் நம்மூர் நலனுக்காக நாம் ஒற்றுமையாக இருந்து சேவைகளை செய்வதை நினைத்து உள்ளம் உவகை கொள்கிறது. அனைவரும் உதவிட தானாக முன்வரவேண்டும் என்று உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.



புதிய நிர்வாகத்தை தெரிவு செய்தல் :

புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்வின் கண்காணிப்பாளர் சகோ.எம்.எம்.மூஸா சாஹிப் மேற்பார்வையில் கடந்த நிர்வாகக்குழு முழுவதுமாக கலைக்கப்பட்டு 7 வது அமர்வில் வரும் இரு ஆண்டுக்கான (2015-2016) புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வந்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் படி தக்பீர் முழக்கத்தோடு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகள் முழு விபரம் அடுத்த செய்தி மூலம் தெரியபடுத்தப்படும்.

நன்றியுரை :

இந்த நிகழ்வு இனிதே நடந்தேற உதவிய வல்ல இறைவனுக்கு முதலில் நன்றியை செலுத்திவிட்டு....

எங்களது அழைப்பினை ஏற்று பல சிரமங்களை பொருட்படுத்தாது தூரம் தொலைவுகளில் இருந்து வந்திருந்த அனைவருக்கும் இந்த இனிய நிகழ்வு நடைபெற எல்லா வகைகளிலும் உதவிய, ஒத்துழைத்த மற்றும் அனுசரணைகள் பல வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் சகோ.A.M.செய்யிது அஹ்மது.

சகோ.K.A.முஹம்மது நூஹு பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் பொதுக்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.



காயல் களரி சாப்பாடு :

நம் காயல் மண்ணுக்கு சொந்தமான சுவை மிகுந்த களரி சாப்பாடு முதலில் பெண்கள், மழலைகளுக்கும் பின்பு ஆண்களுக்கான பந்தியுமாக சஹனில் பரிமாறப்பட்டது. அனைவருக்கும் சுவைமிகு கோன் ஜோன் ஐஸ்க்ரீம் வழங்கப்பட்டது.





ஆண்களுக்கான உள்ளரங்க விளையாட்டு :

அஸ்ர் தொழுகைக்குப்பின் தாலத்தில் பந்து ஊதுதல், பலூன் காற்றை கொண்டு கப்பை தள்ளுதல் மற்றும் காயல் பிரத்யோக தமிழ் சொல் விளையாட்டு நடைபெற்றது. காயல் தமிழ் விளையாட்டில் 5 பேர்கொண்ட 6 அணிகள் போட்டியிட்டது. இரண்டு படங்கள் திரையில் தோன்றும், அப்படங்களுக்கான பெயர்களில் காயல் தமிழ் ஒளிந்திருக்கும். அதை சரியாக கண்டுபிடித்து 30 வினாடிக்குள் சொல்லவேண்டும்.





பொழுதுபோக்காகவும், கேளிக்கையாகவும் நடந்த இந்த போட்டியில் பலாய், அணையாடை, குத்தறா, அரிகண்டம், கடவா பொட்டி, கஞ்சிதாள், அவன்தரை, கூவகட்டு, படுதூறு, வீதல், இருட்டுகசம், பிச்சாட்டை, புல்லைகுலவி,... போன்ற காயலுக்கே உரிய காயல் தமிழ் வார்த்தைகள் விளையாடின. அதிக மதிப்பெண் எடுத்த குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டிகளை சகோதரர்கள் Y.M.முஹம்மது ஸாலிஹ் மற்றும் சீனா எஸ்.ஹெச்.மொகுதூம்முஹம்மது முன்னின்று நடத்தினர்.

பின்னர் மக்ரிப் ஜமாஅத் தொழுகைக்குப்பின் சூடான தேனீரும் சுவைமிகு சாலா வடையும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

இக்காயலர் சங்கமத்தின் இடைவிடாத உற்சாக விளையாட்டினால் நேரமின்மையின் காரணத்தினால் முன்னேற்பாடு செய்து வந்த ஒரு சில போட்டிகள் நடத்த முடியாமல் ஆனது.

பரிசளிப்பு விழா :

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றோர், வெற்றிக்கு முனைந்தோர் என சிறார்களுக்கும், பெரியோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின் குழந்தைகள் வந்து பரிசுகளை ஆனந்தத்துடன் வாங்கி சென்றனர்.

















மேலும் இந்நிகழ்வை இனிதாக அமைத்து தந்த சகோதர்களுக்கும் உற்சாக மூட்டும் பரிசுகளும் மற்றும் கலந்து கொண்டவர்களை ஆர்வ மூட்டும் வகையில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பரிசுகளும் மற்றும் வருகை புரிந்த கைக்குழந்தைகள் முதல் மழலைகள் வரை அனைவருக்கும் மகிழத்தக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

















பம்பர் பரிசு குலுக்கல் :

இறுதியாக வருகை தந்து இறுதி வரை நிகழ்வில் இருந்த உறுப்பினர்களை உற்சாகமூட்டும் வண்ணம் குலுக்கல் முறையில் இந்நிகழ்வின் முத்தாய்ப்பான பம்பர் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. இம் மெகா குலுக்கலில் அதிர்ஷ்டசாலியாக புனிதமக்கா சங்கைமிகு ஹரம் ஷரீப் எதிரில் உள்ள புதிய ஹில்டன் டவர் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் காலை சிற்றுண்டி உணவுடன் டிலக்ஸ் அறை வசதியுடன் தலா இரண்டு நபருக்கு தங்கிட நல்லதோர் வாய்ப்பினை சவூதிக்கு வந்து ஒரு மாதமே ஆனா புதிய உறுப்பினர் சகோ பொறியாளர் அல்ஹாபிழ் எம்.ஹெச்.முஹம்மது அலி பெற்றுக்கொண்டார்.





இறுதியில் அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் உட்பட ஜித்தா, மக்கா மற்றும் யான்பு சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து மற்றும் இந்நிகழ்ச்சிக்கு நன்கொடை தந்தும், அனுசரணை அளித்தும் எல்லா வகையிலும் உழைத்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களை பாராட்டி அவர்களுக்காக பிரார்த்திக்கப்பட்டது.

காயலர்கள் அனைவரும் கவலைகள் மறந்து "ஓடி விளையாடு பாப்பாவாக" மாறிய இந்நாளை மறக்க முடியுமா? என்ற விடை தேடும் வினாவுடன் ஒரே நாளில் விமான பயணச்சீட்டு, கடவு சீட்டு, விசா இன்றி ஊர் சென்று திரும்பிய மன திருப்தியுடன் சந்தோசத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் மீண்டும் இது போன்ற இனியதோர் நாள் வர வேண்டும் என்ற நல்ல பிரார்த்தனையுடன் கலைந்து சென்றனர்.

இனிய இந்நிகழ்வான குடும்ப சங்கம ஒருங்கிணைப்பை. சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன், சகோ.சட்னி,எஸ்.எ.கே.செய்யது மீரான், சகோ.எம்.எ.செய்யது இபுராஹீம், சகோ.அரபி முஹம்மது ஷுஅய்ப், சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம், சகோ.சட்னி.எஸ்.எ.கே.முஹம்மது உமர் ஒலி ஆகியோர் மிக சிறப்புடன் செய்திருந்தனர்.அல்ஹம்துலில்லாஹ் !!!

தகவல் மற்றும் நிழற்படங்கள்;
காயல் நற்பணி மன்றம்,

ஜித்தா- சஊதி அரபிய்யா,
24-02-2015.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...jeddah
posted by hylee (colombo) [25 February 2015]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39373

அல்ஹம்துலில்லாஹ்,அருமையான நல்ல நிகழ்ச்சி வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாஷா அல்லாஹ்.....
posted by Faizal Rahman (Doha-Qatar) [25 February 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39375

மாஷா அல்லாஹ் எத்தனை போடோக்கள்.. நம் காயல் மக்களையும் நண்பர்கள் ஒன்ன்றாக பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோசம்..

வாழ்த்துக்கள் உங்கள் உதவிகள் நம் காயல் மக்களுக்கு எப்போதும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்..

இப்படிக்கு,

பைசல் ரஹ்மான்
தோஹா- கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்க ஜித்தா நல்மன்றம்,வளமுற்று ஓங்குக அதன் நற்பணிகள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [26 February 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39380

ஒரே மண்ணில் உதயமான அத்தனை உள்ளங்களும் ஓரிடத்தில் ஒன்றாக கூடி மகிழ்வது எப்படிப்பட்ட இன்பக்கூடல் என்பதை அங்கிருந்து பார்த்தவர்கள் அணுவணுவான ரசனையுடன் உணர்ந்தார்கள்!

அடே நீ எப்ப வந்தே,உங்களை பார்த்து எத்தனை வருசமாச்சு, இவங்க உங்களை தேடினாங்க,நீங்க இந்த கூடலுக்கு வருவீங்கன்னு முழுசா நம்பினேன் என்ற உரையாடல்கள் ஒருசேர ஒலித்துக்கொண்டே இருந்ததை நீண்ட நேரம் கேட்க முடிந்தது!,

இங்குள்ளவர்களுக்கு மட்டுமல்ல நம் ஜித்தா காயல் நலமன்ற ஒன்று கூடல் நிகழ்ச்சி,நம் தாயகத்திலுள்ளவருக்கு கூட மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த நிகழச்சியில் பங்கு கொள்ள ஆவலாக இருக்கிறது அன்றைய தினத்திற்கு எப்படியும் வர முயற்சிக்கிறேன் என்று ஒரு அன்பு சகோதரரும்,ஒரு இணையத்தளத்தில் முக்கிய பொறுப்பிலுள்ளவருமான அவர் கடந்த மாதம் என்னுடன் தொலைபேசியில் பேசி தன் பிரியத்தை வெளிபடுத்தினார்!

இந்த நிகழ்ச்சியில் மழலைகளின் மகிழ்ச்சிக்கி எல்லையே இல்லை..என்னமா விதவிதமாக விளையாடுகிறார்கள், வித்தை காட்டுகிறார்கள்.பார்ப்பதற்கறிய காட்சிகள் கொட்டிக்கிடந்தன.. விளையாட்டு வேடிக்கை எல்லாம் முடிந்த பின்னர் ஒரு விடலை பிஞ்சு கேட்டது,எல்லாம் முடிஞ்சுட்டோ இனிமே ஊட்டுக்குத்தானோ என்ற சோகம் கலந்த அந்த சொற்றொடர் இப்பொழுதும் என்காதுகளில் சுகமாக ரீங்க்காரித்துக்கொண்டே இருக்கிறது!

நற்பணிமன்ற புதிய நிர்வாகிகளின் தேர்வு நிலையில்தான் என்ன நிதானம்,என்ன நிதர்சமான உள்ளப்பூரிப்பு.ஒருவர் பெயரை சொன்னால் இல்லை என்னை விட்டுவிடுங்கள் என்ற பிடிவாதமான பெருந்தன்மை,ஒட்டு மொத்த காயல் உள்ளங்களும் ஒருமித்த கருத்தோடு ஒருதுளி மன பிசகில்லாமல் அத்தனை பொறுப்பாளர்களையும் அழகாக தேர்ந்தெடுத்த விதம் இருக்கிறதே,உண்மையிலேயே அது ஒர் உன்னத எடுத்துக்காட்டு.அல் ஹம்திலில்லாஹ்!

நான் ரியாதின் காயல் நல மன்றத்தில் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்,வளைகுடாவிலேயே முதன் முதலாக அனைத்து காயல் சகோதர குடும்ப சரிதமாக் ஓரிடத்தில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சியை"பெருநாள் கூடல்"என்று பெயர் சூட்டி ஒருமித்தோம். மற்றைய ஊர் அமைப்புகள் கூட மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் அளவிற்கு அந்த நிகழ்வுகள் நடந்தன.அதன் வழிவழியாக வந்த இந்த இன்ப கூடலை நம் ஜித்தா காயல் நலமன்றம் நணிசிறக்க செய்து கொண்டிருக்கிறது என்றால் அது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அணுக்கருணையும்,நம் அனைத்து காயல் உள்ளங்களின் உன்னதமான ஒற்றுமை உணர்வோடுகளும், ஊரார்களின் வாழ்த்துக்களுடனும் வெற்றியுடன் நடந்து முடிந்தது என்றால் அது மிகையல்ல!

அன்பு ஜித்தா நல மன்றத்தார்களே, இந்த நிகழ்ச்சயில் நமக்கு எவ்வளவு மன மகிழ்வு ஏற்படுகிறதோ அதே மகிழ்வு நம்மூர் வரியவர்களுக்கும்,ஏழை நோயாளிகளுக்கும்,எளிய மாணவ மணிகளுக்கும் ஏற்பட வேண்டுமென்று அவர்களுக்கு உதவி வழங்கி பார்ப்பதில் ஏற்படும் பேரானந்தம் தான் நிலையான ஆனந்தம்.அந்த ஆனந்தத்தை அடைய அத்தனை அங்கத்தினர்களும் ஆவலுடன் உங்கள் பங்களிப்பை அளித்து வருகிறீர்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குறிய பலனையும்,பாதிக்கப்பட்டோர்களுடைய துவாவையும் கபூல் செய்து நம்மனைவர்களையும் நலமுடன் வாழ வழி வகுத்தருள்வானாக ஆமீன்! .

வாழ்க ஜித்தா நல்மன்றம்,வளமுற்று ஓங்குக அதன் நற்பணிகள்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா..) [28 February 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39386

நாங்கள் சார்ந்த ஜித்தா மன்றத்தின் 33-வது பொதுக்குழுவான இனிய இந்நிகழ்விற்கு எல்லா வகைகளிலும் வழிகளிலும் உழைத்த உதவிய ,வாகனம் ஒத்துழைப்பு செய்தவர்கள், உணவு ,இடம் ,பரிசு,மற்றும் இதர பொருட்கள் அனுசரணை வழங்கியவர்கள் மக்கா,யான்பு,ஜித்தாவில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்வின் அனைத்து அம்சங்களையும் மிக அழகிய முறையில் செய்தியாக்கி தந்தவர்களுக்கும்,இப் புகைப்பட தொகுப்பை பல சிரமங்களுக்கு மத்தியில் சிரத்தையுடன் மிக நேர்த்தியாக வண்ணமயமாக வடிவமைத்து தந்த அன்பு சகோதரர் ஹில்டன் மக்கா ஓய்.எம்.முஹம்மது ஸாலிஹ் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்தும் நன்றியும்.

அனைத்து காயல் செய்தி இணையத்தளங்களில் இது சார்ந்த செய்திகளை பிரசுரித்தவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.

ஜசாக்குமுல்லாஹ் ஹைரா.

அன்பின் ,சட்னி செய்யது மீரான்,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved