Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:23:28 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16348
#KOTW16348
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 2, 2015
கடற்கரையில் காயல் நல மன்றங்கள் வழிகாட்டலில், நகராட்சியுடன் இணைந்து பொதுமக்கள் துப்புரவு செய்யும் திட்டம்! ஆக. 01இல் துவங்கியது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4516 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையை - உலக காயல் நல மன்றங்களின் வழிகாட்டலில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து பொதுமக்கள் துப்புரவு செய்யும் திட்டம் நேற்று (ஆகஸ்ட் 01 சனிக்கிழமை) துவக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சியில் போதிய அளவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமையைக் காரணங்காட்டி, கடற்கரையில் துப்புரவு செய்யும் பணி என்றாவது ஒரு நாளில் மட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்களும் தம்மிடமுள்ள குப்பைகளை அங்கங்கேயே விட்டுச் செல்வதால், கடற்கரையின் மணற்பரப்பு முழுக்கவும் குப்பைகள் தேங்கி, பார்ப்பதற்கு மிகவும் அலங்கோலமாகக் காட்சியளித்தது.

கடற்கரையில் அன்றாடம் வந்து செல்லும் சமூக ஆர்வலர்களிடம், “என்னப்பா கடற்கரை இப்படி குப்பையாகக் கிடக்குது...? கவனிக்க மாட்டீங்களாப்பா...?” என்று “மிகுந்த அக்கறை”யுடன் கேட்கும் பொதுமக்களும், அங்கிருந்து எழுந்து செல்லும்போது, தாம் வாங்கி உட்கொண்ட தின்பண்டங்களைத் தாங்கிய காகிதத் தட்டுக்களையும், தேனீர் குவளைகளையும் அங்கங்கேயே விட்டுச் செல்வது அன்றாடம் எல்லா நேரமும் காணக்கிடைக்கும் காட்சிகள்.

இவ்வாறிருக்க, இனியும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு, ஊரை நாற விடக்கூடாது என்று கருதிய - ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றம், நகராட்சியுடன் இணைந்து பொதுமக்களின் ஒத்துழைப்புடன் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை முன்வைத்தது. சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நல மன்றம், கத்தர் காயல் நல மன்றம், தாய்லாந்து காயல் நல மன்றம் ஆகிய மன்றங்கள் துவக்கமாக அத்திட்டத்தின் கீழ் இணைய முன்வந்ததையடுத்து, 19.07.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 19.30 மணியளவில், துபை காயல் நல மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் விளக்கு தாவூத் ஒருங்கிணைப்பில், அவரது இல்லத்தில், இம்மன்றங்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



துபை காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரிவின் தலைவர் ராவன்னா அபுல்ஹஸன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஸலீம், அதன் மூத்த செயற்குழு உறுப்பினர் துணி உமர், அதன் பிரதிநிதி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், தம்மாம் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல், அதன் முன்னாள் தலைவர் டாக்டர் இத்ரீஸ், துணைத்தலைவர் எம்.ஐ.மெஹர் அலீ, அதன் அங்கத்தினரான ஷாதுலீ, என்.ஏ.முஹம்மத் நூஹ், பாங்காக் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹனீஃபா, ம.ஜஹாங்கீர், காயல்பட்டினம் நகரின் சமூக ஆர்வலர்களான எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம், எஸ்.கே.ஸாலிஹ், எம்.ஒய்.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



காயல்பட்டினம் நகராட்சியின் ஒத்துழைப்புடன் - கடற்கரையை, மாத ஊதிய அடிப்படையில் - சீருடையணிந்த 3 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு அன்றாடம் துப்புரவு செய்வதென்றும், கடற்கரை மணற்பரப்பில் வணிகம் செய்பவர்களால் அங்கு குப்பைகள் சேராமலும் - மணற்பரப்பு மாசு படாமலும் காப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, இதுகுறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக பின்வருமாறு பிரசுரம் அச்சிடப்பட்டு, 31.07.2015 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டது.



மேற்படி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் படி, கடற்கரை துப்புரவுத் திட்ட துவக்க நிகழ்ச்சி, கடற்கரை நுழைவாயில் அருகில், 01.08.2015 சனிக்கிழமையன்று 17.30 மணியளவில் நடைபெற்றது.



சமூக ஆர்வலர் ஏ.எம்.தவ்ஃபீக் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ தலைமையுரையாற்றினார்.





வெளிநாடுகளில் வசிப்போர், அங்கு தம் கைகளிலிருக்கும் குப்பைகளைக் கண்ட இடங்களில் எறியாமல், தம் வசமே வைத்துக்கொண்டு, குப்பைத் தொட்டியைத் தேடிச் சென்று போடும் நிலை உள்ளபோதிலும், அதே மக்கள் இங்கு வந்ததும் தம் குணத்தை மாற்றிக்கொள்ளும் நிலை வருந்தத்தக்கது என்றார் அவர். நகராட்சியின் இயலாமை, பொதுமக்களின் அலட்சியம் ஆகிய காரணங்களால் கடற்கரையில் குப்பைகள் தேங்கி அலங்கோலமாகக் காட்சியளிக்கும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து விருந்தாளிகளைக் கடற்கரைக்கு அழைத்து வரவே வெட்கமாக உள்ளதாகக் கூறிய அவர், இனியும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு வாளாவிருக்காமல், களத்தில் இறங்க வேண்டும் என்று கருதியே துபை காயல் நல மன்றம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், சில மன்றங்கள் இணைந்து செயல்படுவது போல, இதர அமைப்புகளும் இத்திட்டத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ராவன்னா அபுல்ஹஸன், விளக்கு தாவூத் ஆகியோர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.



தம்மாம் காயல் நல மன்ற தலைவர் எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக், அதன் துணைத்தலைவர் சாளை எஸ்.ஜியாஉத்தீன், முன்னாள் தலைவர் டாக்டர் இத்ரீஸ், தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய எஸ்.கே.ஸாலிஹ் திட்ட விளக்கவுரையாற்றினார்.







துபை, தம்மாம், கத்தர், தாய்லாந்து காயல் நல மன்றங்களின் வழிகாட்டலில், "CLEAN KAYAL - தூய்மை காயல்” எனும் தலைப்பின் கீழ் காயல்பட்டினம் கடற்கரையில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறினார்.

சீருடையணிந்த 3 துப்புரவுப் பணியாளர்கள் அன்றாடம் குப்பைகளைச் சேகரிப்பர் என்றும், பொதுமக்கள் வசதிக்காக, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே போதிய அளவுக்கு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவுள்ளதாகவும், வணிகர்கள் விறகு வைத்து அடுப்பு எரிப்பது தடுக்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரை சுற்றுச்சுவருக்கு வெளியிலேயே அவர்கள் தமது வணிகத்தைச் செய்வர் என்றும், இதற்கு கண்காணிப்பாளர்களாக எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஜஹாங்கீர், எம்.ஏ.இப்றாஹீம், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இருப்பர் என்றும், நகராட்சி நிர்வாக ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அதிகாரப்பூர்வமாக அவர்களின் கண்காணிப்பும் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அவரைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் பேசினார்.



நகராட்சியில் போதிய அளவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் அரசால் நியமிக்கப்படாததாலேயே - நகரையும், கடற்கரையையும் துப்புரவு செய்யும் பணியில் அவதிகள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என்றும் அவர் புகழ்ந்து பேசினார்.

இத்திட்டம் தொய்வின்றி செயல்படுத்தப்பட, காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் தன்னாலான அத்தனை ஒத்துழைப்புகளையும் செய்து தர ஆயத்தமாக உள்ளதாகக் கூறிய அவர், இத்திட்டத்தை முன்னெடுத்து செய்யும் தன்னார்வ அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் நகராட்சியின் சார்பில் நன்றி கூறினார்.

தனது விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையிலும், இந்நிகழ்ச்சிக்கு அழைத்தவுடன் வருகை தந்து உரையாற்றியமைக்காக அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர், கடற்கரை துப்புரவுப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள சீருடையணிந்த 3 துப்புரவுப் பணியாளர்களும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம், குப்பை சேகரிக்கும் தொட்டிகளை, துபை காயல் நல மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் துணி உமர், தம்மாம் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் இத்ரீஸ், காயல்பட்டினம் நகராட்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.







துப்புரவுப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், துபை காயல் நல மன்றத் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ ஊக்கத்தொகையை - அவர்களின் பொறுப்பாளர் எம்.ஜஹாங்கீரிடம் வழங்கினார்.



இத்தி்ட்டத்திற்காக, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் போதுமான அளவுக்கு குப்பை சேகரிக்கும் ப்ளாஸ்டிக் வாளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் தேவைப்பட்டாலும் வழங்கப்படும் என்றும், கடற்கரை சுகாதாரப் பணிகளுக்காக, “தூய்மை காயல்” குழுமம் கேட்கும் அனைத்து வசதிகளும் நகராட்சியின் சக்திக்குட்பட்ட அளவுக்கு செய்து தரப்படும் என்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் - பொதுமக்களும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.





தகவல் & படங்கள்:
“தூய்மை காயல்” குழுமத்திற்காக...
எஸ்.கே.ஸாலிஹ்


துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நலத்திட்ட நாயகர்களுக்கு வாழ்த்துக்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41506

மிகவும் சந்தோஷம் மன நிறைவு தரும் நிகழ்ச்சி நல திட்டம்.

நமதூர் கடற்கரையை பற்றி ராஜாஜி போன்ற மூதறிஞர்கள் சிலாகித்துக் கூறியுள்ளார்கள். சரித்திர காலங்களில் காயல்பட்டினம் கலங்கரை விளக்கங்கள் படகு கப்பல் போக்கு வரத்துக்கள் நடை பெற்றுக் கொண்டிருந்த காயல்பட்டினம் கடல்கரை இப்படி மாசுபட்டுக் கொண்டிருக்கிறதே இந்த அவல நிலை நீங்க ஏதாவது இந்த நகர் மன்றம் நடவடிக்கைகள் மேற்கொள்ளாதா என்ற ஆதங்கம் எல்லோர் உள்ளங்களிலும் இருக்கத்தான் செய்தது . ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று வழி தெரியாமல் இருந்தது.

காயல் நலமன்ற உறுப்பினர்கள் மாற்றி யோசிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பதால் இப்போது அது சாத்தியமாகி இருக்கிறது.

இன்று கடல்கரைக்கு சென்றபோது ஒரு புதிய தூய்மையான கடல்கரை உருவாகி இருப்பதை காண முடிந்தது. நண்பர் ஷமீமுல் இஸ்லாம் தனியாக எல்லோரையும் சந்தித்து நோட்டிஸ் கொடுத்து விவரங்களையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ''சுத்தம் ஈமானில் பாதி'' என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதிந்து விட்டாலே இந்த முயற்சிக்கு அதுவே பெரிய வெற்றியாக அமையும் .

நமதூர் கடல்கரைக்கு காற்று வாங்க வருபவர்கள் அநேகமானவர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்கள் . இலங்கை முதலிய நாடுகளில் குப்பையை வெளியே வீசி எறிவது ஒரு கூச்சமாகவே இருக்கும். மனம் அதை குற்றமாகவே நினைக்கும். அப்படி இருந்து பழகியவர்களும் இங்கு வந்த வுடன் மாறி விடுகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. இதற்கு நானும் விதி விலக்கு அல்ல.

எது எப்படியோ நல்ல விழிப்புணர்வுக்கு வழிவகுத்து தந்த காயல் நலமன்றங்களின் உறுப்பினர்களின் நல்ல எண்ணம் நல்ல பலனை கொடுக்கும். நகராட்சி துப்புரவு அதிகாரி அவர்களும் இதில் கலந்து கொண்டிருப்பதால் அவர்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவோமாக.

தூய்மை பாரதம் - தூய்மை காயல் - தூய்மை இல்லம் - தூய்மை உள்ளம். இவை எல்லாமே இனி தொட்டு விடும் தூரம்தான்.

நலத்திட்ட நாயகர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...அருனம
posted by Rizwan (Jeddah) [02 August 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41507

தூய்னம காயல் நண்பா்களூக்கு வஸ்ஷலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by omar abdullatheef (Riyadh) [03 August 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 41509

-we want to get it back our old & clean sandy beach which was used to be long back ,

- should be free from the commercial filthy , more crowded

- we want it to be free from tourism ,

- we want it to be free from outside non kayalite public who never care about our beach ,

But it so un fortunate since all it gone .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...நீண்ட நாள் கனவு
posted by soccer buhary (Bangkok) [03 August 2015]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 41510

தூய்மை காயல் ஒரு நீண்ட நாள் கனவு!இது ஒரு ஆரோக்கியமான கனவுத்திட்டம்.

தூய்மை சம்பந்தமான விழிப்புணர்வு விளம்பரங்கள்,நவீன குப்பைத்தொட்டிகள் அதிகம் அதிகம் பொதுமக்கள்,பள்ளி மாணவர்கள் கூடும் இடங்களில் காணப்பட்டால் பொதுமக்கள் சிந்தித்து செயல்பட மிகவும் உறுதுணையாகவும், உபயோகமாகவும் இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by zubair rahaman abu ubaidha (Doha-Qatar) [03 August 2015]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 41511

சிறந்ததொரு பணி தொய்வின்றி தொடர வல்லோன் அருள் புரியட்டும்,

களப்பணியாளர்கள் மட்டும் தூய்மை செய்து பயனில்லை மக்களும் இதனை தங்களுடைய சொந்த பணியாக நினைத்து செய்ய வேண்டும்.

மக்களிடையே தொடர் விழிப்புணர்வு இருந்துகொண்டே இருக்கும் வகையில் இடையிடையே துண்டு பிரச்சுரம் விநியோகம் செய்தாலே போதும் கடற்கரை மட்டுமல்ல ஊரின் உட்பகுதியும் தூய்மையுடன் இருக்கும்.

இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைத்து நல உள்ளங்களுக்கும் வல்லோன் அருபுரிவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. قال النبي صلي لله عليه وسلم
posted by M.S.Kaja Mahlari (Singapore) [03 August 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 41514

மாஷா அல்லாஹ் ! அருமையான முயற்சி ! இந்த ஏற்பாடுகள் தொடர வேண்டும் ! அதற்கு அணைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் ! "சுத்தம் ஈமானில் பாதி " எனும் நபிமொழியை கூறி பெருமை படும் நாம் அதனை அனைவரும் செயல்படுத்தி சந்தோசம் அடைய வேண்டும் !

வெளிநாடுகளில் சுத்தம் , சுகாதாரம் , என சட்டங்களை மதித்து ,செயல்படுபவர்கள் அனைவரும் ஊருக்கு வந்தாலும் அதே உணர்வோடு தாங்களும் , செயல்பட்டு , பிறரையும் அவ்விதம் செயல்பட உறுதுணை புரியவேண்டும் ! இதற்காக பாடுபடும் காயல்நல மன்றங்கள் , அணைத்து பொது நிருவண மன்றங்கள் என ஊர் நல அக்கறை கொண்ட அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலக சகல சவ்பாக்கியங்கள் அனைத்தையும் வாரி ,வாரி வழங்குவானாக ! ஆமீன் !!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [04 August 2015]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 41525

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அருமையான திட்டம் எல்லா காயல் நல மன்றம்களுக்கும் வாள்தூக்கள் ,

ஒரு சிறிய பணிவான வேண்டுகோள் ,

திட்டங்களை சுலபமாக ஏற்படுத்தீ விடலாம் ,அதை செயல் வடிவத்தில் கொண்டு வருவது தான் கடினம் , எல்லா நல மன்றங்கள் உடைய உறுபினர்கள் ஊருக்கு வரும் போலுது இது போன்ற திட்டங்கள் எவ்வாறு செயல் படுகிறது பளுதூ அடைந்து உள்ளதை பளுதூ பார்த்து வைப்பது , இப்படி செய்தால் கண்டிப்பாக வெற்றி காண்பீர்கள் , மக்களாகிய நாமும் அதில் பங்கு கொள்ள வேண்டும். வரட்டு கௌரவம் பார்க்காமல் எல்லோரும் ஒதுளைஉங்கள் அல்லாஹ் வெற்றியை தருவான்

இப்படிக்கு
செய்யது முஹம்மது (சேனா)
பாங்காக் - தாய்லாந்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [04 August 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41533

அஸ்ஸலாமு அலைக்கும்

என்ன சொல்வதென்றே தெரிய வில்லை ....நமது ஊர் அழகான ''கடற்கரையை '' தூய்மையாக்க நமது ஊரின் வெளியுலக ''காயல் நற்பணி மன்றங்களை ...& அதற்க்கு உற்ற துணையாக இருக்கின்ற அனைவர்களையும் சேர்த்தே '' மனதாரவே பாராட்டுகிறோம் .....நம் ஊர் கடற்கரையை மிக தூய்மையாக '' பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்து இருக்கிறோம் .....

இப்பணிகள் தொய்வின்றி '' தொடர்ந்து செயல்பட வேணும் என்பதே யாவர்களின் எண்ணம் .....காலம் கடந்த முயற்ச்சி என்றாலும் வெகுவாக மதிக்கத்தக்க ....பாராட்டுக்குரிய ஒரு செயல் .....

நமது ஊர் அழகான கடற்கரையை & நம் ஊர் மக்களையும் + பாதுகாப்பையும் ஒன்றாக சேர்த்து தான் ..... முழுமையாகவே நம்பி தான் பல வெளியூர் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள் ....

ஆனால் தற்போது நம் ஊர் அழகான கடற்கரையின் அழகை பார்ப்பதற்கு நமக்கே மன சங்கடமாக இருக்கிறது ...... எப்படி இருந்த நம் ஊர் கடற்க்கரை .....இப்போ இப்படியாகியது ......

முதலில் நம் கடற்கரையில் தொழில் பண்ணும் வியாபாரிகளை தான் விழிப்புணர்வுடன் இவர்களை சரி பண்ணனும் ....இவர்களால் தான் நம் ஊர் அழகு கடற்கரை இப்படியாகியது ......பொது மக்களும் கொஞ்சம் ஒத்துழைக்கனும் ....அப்போது தான் சரியாகும் ........

செயல்பட்டோடு இல்லாமல் கண்காணிக்கவும் வேணும் ....அப்போது தான் நன்றாக இருக்கும் ...காயல் கடற்க்கரை தூய்மையாகும் ......

விழிப்புணர்வு மக்களுக்கு ரொம்பவும் அவசியமே .....

இதற்க்கு முழுமையான முயற்ச்சி எடுத்த யாவர்களையும் அல்லாஹ் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாம்மா... மின்னல்! (?!)  (4/8/2015) [Views - 2788; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved