Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:50:33 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16344
#KOTW16344
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 1, 2015
முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு மகுதூம் ஜும்ஆ பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் ஙாயிப் ஜனாஸா தொழுகை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3600 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



இந்திய நாட்டின் தலைசிறந்த விஞ்ஞாணியும், முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய மாணவர்களின் தலைசிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம், 27.07.2015 திங்கட்கிழமையன்று 19.30 மணியளவில் காலமானார். அவரது உடல், 30.07.2015 வியாழக்கிழமையன்று - அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் - இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவை முன்னிட்டு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி ஆகிய ஜும்ஆ பள்ளிகளில் ஙாயிப் ஜனாஸா தொழுகை (மறைந்தவரின் உடல் இல்லாத இடங்களில் நடத்தப்படும் ஜனாஸா - பிரார்த்தனைத் தொழுகை) நடத்தப்பட்டது.

மகுதூம் ஜும்ஆ பள்ளியில், அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ தொழுகையை வழிநடத்தினார். முன்னதாக அவர் நிகழ்த்திய உரையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜெ.அப்துல் கலாமின் வாழ்க்கையிலுள்ள நல்ல அம்சங்களை நினைவுகூர்ந்து, புகழ்ந்து பேசினார்.

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் மனித சமூகத்திடம் தானும் கடைப்பிடித்து, மற்றவர்களையும் கடைப்பிடிக்கத் தூண்டிய நேர்மை, உண்மை, நீதி தவறாமை, பிறரைப் பாதிக்கும் சுயநலமின்மை, சமய நல்லிணக்கம், மனிதநேயம் உள்ளிட்டவற்றை தன் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் கலாம் அவர்கள் கடைப்பிடித்ததாக வரலாற்று நிகழ்வுகளுடன் விளக்கிப் பேசினார்.

பள்ளிவாசல்களில் அவர் மக்களோடு மக்களாக நின்று தொழுததையும் குறிப்பிட்டுப் பேசிய அவர், முஸ்லிம் சமூகம் மீது திட்டமிட்டு வெறுப்பேற்படுத்தப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், அந்த சமுதாயத்தில் ஒருவராக இருந்து, நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பை வகித்து, அனைத்து சமுதாயத்தவர்களாலும் விரும்பப்பட்ட நிலையில் வாழ்ந்து மறைந்துள்ளது, முஸ்லிம்கள் மீதான தவறான பரப்புரைகளுக்கு சரியான மறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறினார். இப்படி அவர் வாழ்ந்திருக்க, “இறந்தவர்களின் நல்லவற்றையே நினைவுகூருங்கள்” என்ற கருத்திலான நபிகள் நாயகத்தின் வழிகாட்டலுக்கு மாற்றமாக, அவரது சில செயல்பாடுகளை மட்டும் மேற்கோள் காட்டி சர்ச்சை செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில், மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ ஙாயிப் ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார்.

தகவல்:
காரீ A.T.முஹம்மத் அப்துல் காதிர் (AT ஹாஜியார்) - (மகுதூம் ஜும்ஆ பள்ளி)
ஹாஜி வாவு ஸித்தீக் - (பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி)


மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அழகிய முன்மாதிரி
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41498

மொகுதூம் ஜூம்மா மஸ்ஜிதிலும் பெரிய சம்சுதீன் வலியுல்லாஹ் மஸ்ஜிதிலும் மறைந்த அப்துல் கலாம் அவர்களுக்கு GHAAIB JANAAZAA தொழுகை நடத்தப் பட்ட செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைகிறது இந்த சமுதாயம்.

நமது முடிவுகள் நல்லதாக அமைய வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் து ஆ கேட்க வேண்டும் என்று சொன்ன நபிகள் நாயகம் ஒரு செய்தியை சொன்னதாக உலமாக்கள் நமக்கு சொல்லிக் காட்டுவார்கள். நபி தோழர் ஒருவர் ஒருவரை கொலை செய்து விட்டு நபிகள் நாயகம் அவர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கிறார். இந்த குறிப்பிட்ட நபர் எனக்கு பயந்து அல்லது நான் அவரை கொலை செய்துவிடுவேன் என்ற பயத்தில் கலிமா சொன்னார். அதற்காக நான் அவரை கொலை செய்து விட்டேன் என்று நபிதோழர் சொன்ன பொது, நீர் செய்தது பெரும் தவறு, அவரது உள்ளத்தை நீர் திறந்து பார்த்தீரா என்று கேட்டார்கள்.

இன்னொரு சம்பவம் இப்ராஹிம் நபி அவர்கள் ஒரு நெருப்பை வணங்குபவனிடம். நீ ஈமான் கொண்டால் உனக்கு உணவளிப்பேன் என்று கூறுகிறார். அவர் சென்ற பிறகு அல்லாஹ் நபி அவர்களுக்கு வஹீ அருள்கிறான். நபியே, நான் இந்த மஜூசிக்கு காலம் முழுவதும் உணவளித்து பாது காத்து வருகிறேன், அவன் மஜூசி என்பதும் எனக்கு தெரியும். ஆனால் நீர் ஒரு வேளை அவனுக்கு உணவளிக்க மறுத்து விட்டு அவரை விரட்டி விட்டீரே என்று கேட்டபோது மீண்டும் அந்த மஜூசியை நபி அவர்கள் தேடி சென்று அவரை வீட்டுக்கு அழைத்து வந்து வயிறார உணவளித்த போது அந்த மஜூசி கேட்கிறான், என்னை மீண்டும் உங்கள் வீட்டுக்கு அழைத்து வர சொன்னது யார்? அல்லாஹ் என்று நபி அவர்கள் பதில் அளித்தபோது, அந்த மஜூசி உடனே ஈமான் கொள்கிறார்.

இதுதான் நபி மார்களின் வழிமுறை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த மத நல்லிணக்கம். இந்த வழி முறைதான் மாற்று சமுதாயத்தினருக்கும் நம்மை பற்றிய நல்லெண்ணத்தை வலுப் படுத்தக் கூடியது. யாருடைய வெளி தோற்றத்தையும் வைத்து நாம் யாரையும் குற்றவாளியாக கருத முடியாது. அவரவர்கள் செய்தி அல்லாஹ்விடமே இருக்கின்றன என்பதையும் மறந்து விடைக் கூடாது. .

மறைந்தவர்களின் நல்லவைகளை பற்றி மட்டுமே பேசுங்கள் என்ற நபி வழியை பின்பற்றுவோர்கள் எல்லோரும் இதைதான் செய்வார்கள் அப்படி ஒரு அழகிய முன்மாதிரியை ஏற்படுத்திக் காட்டிய உலமா பெருமக்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. இந்த கருத்தில் உடன்படாத உலமாக்கள் யாரும் இருந்தால் அல்லாஹ் அவர்களுக்கு நல்ல விளக்கத்தை கொடுப்பானாக .

நாம் எத்தனை ஜனாசாக்கள் அவர்கள் கடன்காரர்கள் அட்டூழியம் செய்தவர்கள் தொழுகை நோன்பு இல்லாதவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துகிறோம். அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடுகிறோம். கலிமா சொன்ன எல்லோரையும் அவர்கள் செய்த எல்லா குற்றங்களையும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். அந்த பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் உஹத் மலையளவு பெரிதாக இருந்தாலும் அவன் கருணைக்கு முன்னால் அவை ஒரு தூசிதான்.

இந்த அழகிய முன்மாதிரியை நபிகள் நாயகம் அவர்கள் காட்டி தந்துள்ளார்கள். அவர்களின் வழி முறையில் நடந்து மறைந்த அப்துல் கலாம் அவர்களுக்காக து ஆ செய்வோம்.

''உங்களில் நல்லவைகளே செய்த ஒருவர் சுவர்க்கத்துக்கு ஒரு ஜான் அளவே இருக்கும்போது அவருடைய நன்மைகள் பாவங்களாக மாற்றப் பட்டு அவர் நரகம் செல்வார். உங்களில் தீமையே செய்தவர் ஒரு நரகத்துக்கு ஒரு ஜான் அளவே இருக்கும்போது அவர் பாவங்கள் மன்னிக்கபட்டு அவர் சுவர்க்கம் செல்வார்'' என்று இன்னொரு நபி மொழி கூறுகிறது.

கருணைமிக்க அல்லாஹ் நமது எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து அவற்றை நன்மைகளாக மாற்றி சுவர்க்க வாழ்வை நம் எல்லோருக்கும் அளிப்பானாக. ஆமீன். .. .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by nizam (india) [01 August 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41499

வாழ்நாளில் அன்பளிப்பை ஏற்காத அற்புதர் கலாம்: ஏன்? ஏன்? ஏன்?

(முக்கிய தகவல்-எல்லோரும் படியுங்கள்)

மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், தன் வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்காத அற்புத மனிதர். தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் அன்பளிப்புகள் தர வேண்டாம் என கூறி வைத்திருந்தார். அதையும் மீறித் தந்தாலும், அவற்றை அந்த இடத்திலேயே விட்டுவிடுவார். குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் வந்த எந்த அன்பளிப்பையும், ஓய்வு பெற்ற பிறகு தன்னுடன் தான் கொண்டு சென்று இரண்டு சூட்கேஸ்களில் தனது உடை மற்றும் புத்தகங்களை (தான் பணம் கொடுத்து வாங்கியவற்றை மட்டும்) எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

கலாம் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். பள்ளியின் சிறந்த மாணவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் வீட்டில் மின்சாரம் கிடையாது. ஒருநாள் வீட்டில் மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் சத்தமாகப் பாடம் படித்துக் கொண்டிருந்தார் கலாம். ராமேசுவரம் திருட்டுப் பயம் இல்லாத ஊர் என்பதால் கலாம் வீட்டுக் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. அபோது அம்மா தொழுகையில் இருந்தார். வீட்டுக்குள் ஒருவர் நுழைந்தார். கலாமிடம் அவர் தந்தை ஜைனுல்லாபுதீனைப் பற்றி விசாரித்தார். வீட்டுக்குள் கலாமின் அம்மா தொழுகையிலிருந்து பாதியில் எழ வழியில்லாத அளவுக்கு இறைவனை தொழுது கொண்டிருந்தார். வந்தவரின் கையில் ஒரு தாம்பூலத்தட்டு இருந்தது. ‘சரி, இந்தத் தாம்பூலத் தட்டை நீ வாங்கிக் கொள்' என்றார். யோசித்த கலாம், அம்மாவிடம் கேட்கலாம் என்றால் அவர் தொழுகையில் இருக்கிறார். வாங்காமல் போனால் வந்தவரை அவமானப்படுத்தும்படியாக ஆகிவிடும். வேறு வழியில்லாமல் கலாம் அந்தப் பரிசுப் பொருளை வாங்கிக் கட்டிலில் வைத்துவிட்டார். தாம்பூலத்தை கொண்டு வந்தவர் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்.

தாம்பூலத் தட்டில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு பாக்கெட் எல்லாம் இருந்தன. பஞ்சாயத்துத் தேர்தலில் கலாமின் தந்தை வெற்றி பெற்று பஞ்சாயத்து வாரியத் தலைவர் ஆனதால் அவருக்கு லஞ்சம் கொடுக்கவே அந்த மனிதர் கலாம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

இது தெரியாமல் கலாம் அவர் கொடுத்ததை வாங்கி வைத்துக் கொண்டார். தந்தை வீட்டுக்குள் வந்தபோது கலாம் நடந்ததைச் சொன்னார். அவ்வளவுதான். கலாமின் தந்தைக்குத் கொந்தளித்த கோபம் கலாமைத் தாறுமாறாக திட்டி தீர்த்தார். கோபம் அடங்காமல் முதுகில் ஓர் அடியும் அடித்துவிட்டார். அடி வாங்கிய கலாம் கலாம் அழ ஆரம்பித்தார்.

பின்னர் கோபம் தணிந்த தந்தை கலாமை அருகில் அழைத்து, இதுபோன்ற பரிசுப் பொருள்களைத் தருபவர்கள் ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறவர்கள். நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. வெகுமதிகள், பிரதிபலன் எதிர்பார்த்து நமக்குக் கொடுக்கப்படுகின்றன. இதுவே நீ வாங்கும் கடைசிப் பரிசுப் பொருளாக இருக்கட்டும், என்று அறிவுரை செய்தார். அன்று பிஞசு மூளையில் குடியேறிய அறிவுரை தான் உச்சத்தின் உயர்வில் இருந்து உறக்கத்திற்கு செல்லும் வரை கடைபிடித்தார் கலாம்.

தந்தையின் அறிவுரைப்படி நடந்ததால் மக்களின் குடியரசுத் தலைவராக போற்றப்பட்ட மகான் கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [01 August 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41503

மொக்தூம் ஜும்மா பள்ளி கத்தீப் தனது உரையில் மேலும் கூறியதாவது "முஸ்லிம்கள் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள் என்னும் ஒரு மாயையையும் அவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்ற மாயையையும் கலாம் உடைத்தெறிந்து முஸ்லிம்களிலும் நாட்டுப்பற்று மிக்கவர்களும், சாதாரண நகராட்சி பள்ளியில் பயின்று பெரிய அளவில் படிப்பில் அந்தஸ்த்து பெற்றவர்கள் இருக்கின்றாகள் என்றும் எளிமையாகவும் பொறுமையாகவும் வாழ தெரிந்தவர்கள் உண்டு என்றும், அதற்கு ஒரு உதாரணம்தான் மறைந்த கலாம் என்றும் அவர் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களை குறிப்பிட்டு கூறினார்.

உலக வாழ்வில் உயர் நிலை அடைந்து விட்ட அவரை மரணம் எப்போது அனைத்துக்கொண்டதோ அதன் பின் நடப்பவைகளுக்கு பொறுப்பு அல்லாஹ் ஒருவனே, இனி அவனுக்கும் அவருக்கும் இடையே உள்ளது,அவரை பற்றிய நல்லதை மட்டுமே பேச வேண்டுமே தவிர மற்றவைகளை பரப்ப வேண்டாம் என்றும் நாம் அவருக்காக செய்ய வேண்டியது துஆ மட்டுமே, இங்கு நடக்கப்போகும் நாயுப் ஜனாஸா தொழுகையின் நோக்கமும் அதுதான். எனவே அவரின் மக்பிரத்திர்காகவும்,பாவ மன்னிப்பிர்காகவும் அதிகம் துஆ செய்யுங்கள் என்றும் முடித்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved