Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:22:19 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16737
#KOTW16737
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 21, 2015
திருச்செந்தூர் பள்ளிவாசல் அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிடில் மக்கள் திரள் போராட்டம்! SDPI அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6603 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்செந்தூரிலுள்ள முஹ்யித்தீன் பள்ளிவாசல் அருகில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதை அங்கிருந்து அகற்றக் கோரி, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிடப்பட்டதாகத் தெரிகிறது. கடைசியாக, இது குறித்து - ஜூன் 27, 2015 அன்று, அக்கட்சியின் மாவட்ட பொது செயலாளர் எச்.ஷம்சுத்தீன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் IAS யிடம் மனு வழங்கியுள்ளார்.

பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார் [வழக்கு எண்: WP(MD) No.14816/2015].

வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 18, 2015 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,

இந்த உத்தரவு கிடைக்கபெற்ற 6 வாரங்களில், மனுதாரரின் ஜூன் 27 கோரிக்கையை பரிசீலனை செய்து, அதில் உள்ள விபரங்களை உறுதி செய்து, தகுதியின் அடிப்படையிலும், சட்டத்திற்கு உட்பட்டும் முறையான ஆணை பிறப்பிக்க - மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது

என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்நிலையில், பள்ளிவாசல் அருகிலிருந்து டாஸ்மாக் கடையை அகற்றாவிடில், மக்கள் திரள் போராட்டம் நடத்தப்போவதாக SDPI தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பின்வருமாறு அறிவித்துள்ளது:-



SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 3:00 pm / 21.10.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 October 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42064

அஸ்ஸலாமு அலைக்கும்

நீதிமன்றத்தால் நல்ல தீர்ப்பு தான் வந்து விட்டதே ...நம் மாண்புமிகு .மாவட்ட அதிகாரி அவர்கள் ..துரிதமான முறையில் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை ...பொது மக்களுக்கு உண்டு ......

பொதுவாகவே குழந்தைகள் / பெண்கள் அதிகம் நடமாடுகிற பக்கம் / மருத்துவமனை / அனைத்து மதத்தினர்களின் வழிபாடு தளங்கள் / பாடசாலைகள் ......இந்த இடங்களில் கண்டிப்பாக ''டாஸ்மாக் மதுக்கடைகளை '' வைக்க கூடாது என்பது நம் நாட்டின் விதி முறை...அதையும் மீறி இவர்கள் .. டாஸ்மாக் மதுக்கடை வைத்து உள்ளார்கள் என்றால் ..பெரிய இடத்து சம்பந்தங்கள் இணைந்து இருக்கலாம் ......

இருப்பின் ஒட்டு மொத்த மக்கள் இணைந்தால் ...எதுவும் முன்வராது .....சட்டத்தோடு இணைந்து நம் மக்களின் போராட்டம் தான் நிச்சயம் வெல்லும் .....

தற்போது இந்த டாஸ் மாக் மதுபான கடைகளை ஒழிக்க தமிழ் நாட்டில் பல கட்சிகள் போராடி வருகிறார்கள் ...மாநில மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு ..டாஸ் மாக் மதுபான கடைகளை முழுவதுமாக மூட நம் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கலாம் .....

இன்ஷா அல்லாஹ் ....மக்கள் போராடும் முன் நீதி மன்றத்தின் தீர்ப்பை மதித்து ...நம் மாண்புமிகு .மாவட்ட அதிகாரி அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் ....என்கிற முழுமையான நம்பிக்கை யாவர்களுக்கும் உண்டு .......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...எல்லோரும் குற்றவாளிகளே...
posted by mackie noohuthambi (colombo) [22 October 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42071

மது மதியைக் கெடுக்கும் குடி குடியை கெடுக்கும் என்று போர்டு எழுதி வைத்து விட்டு வகை வகையான மது பானங்களை விற்பனை செய்யும் அரசு, அதன் முதல்வர் அமைச்சர்கள், அதை விற்பனை செய்பவர்கள் அதற்கு கடையை வாடகைக்கு கொடுப்பவர்கள் எல்லோருமே இறைவனிடம் பெரும் குற்றவாளிகளாகவே கருதப்படுவார்கள். குடித்து விட்டு கும்மாளம் போட்டவன் ஒரு வேளை திருந்தி இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினால் இறைவன் அவனை மன்னிப்பான். ஆனால் அவன் இப்படி கேட்டு குட்டிசுவராவதற்கு வழி அமைத்துக் கொடுத்த குற்றவாளிகள் இவ்வுலகிலும் சரி மறு உலகிலும் சரி தக்க தண்டனையை அனுபவித்தே தீருவார்கள்.

தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்

புரட்சி தலைவிக்கு அவரது அரசியல் ஆசானின் இந்த வைர வரிகள் எப்படி ஞாபகம் இல்லாமல் போய் விட்டது.மறந்து விட்டீர்களா அல்லது ஆட்சி அதிகாரம் உங்களை மறக்கடிக்க செய்து விட்டதா....காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது.....ஜாக்கிரதை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [22 October 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42074

கட்சி பேதம் பார்க்காமல் மதுவுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம் அணிதிரண்டு ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வோம் - நமதூர் புதிய பேருந்து நிலையத்தில் மாலை / இரவு நேரத்தில் கவனம் செலுத்தினால் பல ஹராமான திடுக்கிடும் வியாபார சம்பவங்களை காண நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் மனமார்ந்த நன்றிகள்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [23 October 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42075

பொது மக்கள் நலம் நாடி நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றுள்ள SDPI அமைப்பினை சார்ந்த அனைத்து சகோதரர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.ஜசாக்கல்லாஹ் ஹைரா.

நல்லதோர் தீர்ப்பு வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற கிளையின் மாண்புமிகு நீதிவான்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் இதமழை!  (23/10/2015) [Views - 2112; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (21/10/2015) [Views - 2460; Comments - 1]
இரு நாட்களாக இதமழை!  (19/10/2015) [Views - 3342; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved