Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:21 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16747
#KOTW16747
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 24, 2015
துணைத் தலைவர் தலைமையிலான கூட்டம் அக்டோபர் 20 அன்று நடைபெறவில்லை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4489 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி மூலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள 21.60 லட்ச ரூபாய் மதிப்பிலான தெரு விளக்குகள் பராமரிப்பு பணிகளுக்கான வேலை ஆணையை, மேலும் ஓர் ஆண்டிற்கு - 10 சதவீத உயர்வுடன் - நீட்டிக்க அனுமதி வழங்க கூட்டம் நடத்திட கோரி - தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் தொகுப்பு 3, விதிமுறை 3(2) படி, உறுப்பினர்கள் - நகர்மன்றத் தலைவருக்கு - அக்டோபர் 5 அன்று - கடிதம் அனுப்பியிருந்தனர்.





அந்த பொருள் சம்பந்தமாக முடிவெடுக்க நகர்மன்றத் தலைவர் கூட்டத்தினை கூட்டவில்லை என்றால், அக்டோபர் 20 செவ்வாய்கிழமையன்று, துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே - தெரு விளக்குகள் பராமரிப்பு பொருள் உட்பட 93 பொருட்கள் கொண்டு, அக்டோபர் 12 அன்று சாதாரண கூட்டம் நடத்திட நகர்மன்றத் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த தகவலையும், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு - நகர்மன்றத் தலைவர் - கடிதம் மூலம் - அக்டோபர் 7 அன்று அனுப்பியிருந்தார்.

உறுப்பினர்களுக்கு நகர்மன்றத் தலைவர் அனுப்பிய கடிதம்

7.10.2015

பெறுனர்
துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
காயல்பட்டினம் நகராட்சி.

நகர்மன்றத் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,

பொருள்: காயல்பட்டினம் நகராட்சியின் மன்ற கூட்டம் குறித்து
பார்வை: தங்கள் 5.10.2015 தேதிய கடிதம்
--------

தாங்கள் 5.10.2015 தேதிய கடிதத்தில், தெரு விளக்கு பராமரிப்பு பணியினை மேற்கொண்டுவரும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வேலை ஆணையை மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்க கோரி, வேண்டுகோள் கூட்டம் நடத்த கோரியுள்ளீர்கள்.

இந்த பொருள் - ஜூலை மாத கூட்டத்தின் 18 வது பொருளாகவும், ஆகஸ்ட் மாத கூட்டத்தின் 1வது பொருளாகவும் இடம்பெற்று, செப்டம்பர் மாத 22ம் தேதி சாதாரண கூட்டப் பொருளில் இணைக்கப்பட்டிருந்தது என்பதனை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். செப்டம்பர் 22 கூட்டத்தினை நடத்த விடாமல் பெருவாரியான உறுப்பினர்கள் தடுத்த காரணத்தால், இந்த பொருள் உட்பட 92 பொருள்கள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன.

எனவே - தாங்கள் தற்போது அனுப்பியுள்ள இப்பொருள் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து பொருட்கள், பருவ மழை கால அவசர நடவடிக்கைகள் குறித்த பொருள் ஆகியவற்றை இணைத்து, அக்டோபர் 12 திங்களன்று காலை 11 மணிக்கு சாதாரண கூட்டம் நடத்த அஜெண்டா விநியோகம் செய்ய, ஆணையருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

இவண்,

தங்கள் உண்மையுள்ள,

ஐ.ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.

இணைப்பு:

(1) பருவ மழை கால முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையருக்கு நான் அனுப்பிய 2.10.2015 ஈமெயில்
(2) சாதாரண கூட்டத்தினை அக்டோபர் 12 அன்று நடத்த ஏற்பாடு செய்ய கோரி ஆணையருக்கு நான் அனுப்பிய 6.10.2015 ஈமெயில்
(3) ஆணையரின் 5.10.2015 கடிதம்
(4) உறுப்பினர்களின் 5.10.2015 கடிதம்

நகல்:

(1) ஆணையர், காயல்பட்டினம் நகராட்சி
(2) நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், திருநெல்வேலி
(3) நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர், சென்னை
(4) நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர், சென்னை


இதற்கு - அக்டோபர் 9 தேதிய கடிதம் மூலம் பதில் வழங்கிய நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன், சாதாரண கூட்டம் குறித்த கடிதம் கிடைக்கபெற்றதை கடித்ததில் குறிப்பிட்டிருந்தாலும், அக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதை பற்றி எதுவும் தெரிவிக்காமல், அக்டோபர் 20 அன்று உறுப்பினர்களின் கோரிக்கை கூட்டத்திற்கு அழைப்பு விடப்படவேண்டும் என தெரிவித்திருந்தார்.



இதற்கிடையே - காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் அக்டோபர் 12 அன்று போதிய உறுப்பினர்கள் வராத காரணத்தால், நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 22 மற்றும் அக்டோபர் 12 ஆகிய இரு தேதிகளில் கூட்டப்பட்ட சாதாரண கூட்டப் பொருட்களில் தெரு விளக்கு பராமரிப்பு குறித்த பொருள் இருந்தும், அவற்றை நிறைவேற்றாமல் கூட்டங்களை புறக்கணித்து விட்டு, அக்டோபர் 20 அன்று துணைத் தலைவர் தலைமையினால் கூட்டம் நடத்தப்படுவது சட்டப்படி தவறு என நகர்மன்றத் தலைவர், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து - அக்டோபர் 20 அன்று துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெறவில்லை.

இதற்கு முன்னர் செப்டம்பர் 25 அன்று நான்கு கூட்டப் பொருட்களுடன், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் தொகுப்பு 3, விதிமுறை 3(2) படி, கூட்டம் நடத்திட உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த கூட்டமும் நடைபெறவில்லை என்பது குறுப்பிடத்தக்கது.

தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கூண்டோடு ராஜினாமா நாடகம்...
posted by N.S.E.மஹ்மூது (KAYALAPATNAM. - INDIA) [25 October 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42081

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

காயல்மாநகர மக்களே!

நமது நகராட்சியின் அலுவல்கள் விடாகொண்டன் , கொடாகொண்டன் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது – இதிலே எவரையும் நல்லவர்கள் என்று சொல்வதற்கு இல்லை – தலைவராகட்டும், உறுப்பினராகட்டும் ஏன் அரசு பணியாளர்களானாலும் சரி, எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

---------------------------------------

இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சுயனலன் பார்ப்பவர்களாகவே! இருக்கின்றனர் – யாருக்கும், எவருக்கும் மக்களை பற்றிய சிந்தனை இல்லை.

பணம் சம்பாதிக்க என்று சிலர் – உன்னை வெளியேற்றுவதே! எங்கள் நோக்கம், அதை எந்த வழியிலாவது செய்து காட்டுவோம் என்று பல வழிகளில் முயற்சி செய்கின்றனர் சிலர் – அதெல்லாம் முடியாது என்ன செய்தாலும் போகமாட்டேன் பதவிகாலம் முடியும் வரை என்று சிலர் இப்படியாக நகராட்சியை நகரவிடாமல் செய்துவிட்டனர்.

----------------------------------------

நான்கு வருடங்கள் உருண்டோடிவிட்டது – இந்த நான்கு வருடத்தில் தலைவர் முதல் உறுப்பினர்வரை எவருமே மக்களின் மதிப்பை பெறவில்லை.

நகராட்சி தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடம்தான் உள்ளது – இந்த ஒரு வருடமும் மிக விரைவாக ஓடிவிடும் – இந்த இடைக்காலத்தில் மக்களின் அனுதாபத்தைப் பெற பரவலாக நாடகங்கள் நடைபெறும் – அதிலே கூண்டோடு ராஜினாமா என்று பெறும்பாலான உறுப்பினர்கள் ராஜினாமா செய்து நாடகத்தை அரங்கேற்றுவர்.

அப்போதுதானே! நாங்களெல்லாம் நல்லவர்கள் – மக்களுக்கு சேவை செய்ய சென்ற போர்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தோம் – இப்போது எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள், எங்களை தேர்ந்தெடுங்கள் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்போம் என்று மக்களை மீண்டும் பைத்தியக்காரர்களாக ஆக்கமுடியும்.

--------------------------------------

ஆகவே! மக்கள், ராஜினாமா என்ற நாடகத்தை நம்பாதீர்கள் – அவர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றாலும்கூட அடுத்த தேர்தலில் எந்த பழைய உறுப்பினர்கள் போட்டியிட்டாலும் அவர்களை ஆதரிக்காதீர்கள் – தலைவர் முதல் உறுப்பினர்வரை எந்த பழைய மெம்பரும் வேண்டாம் நமது நகராட்சிக்கு.

இந்த மன்றத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல இதற்கு முன்பு இருந்தவர்களில் எவர் போட்டியிட்டாலும் சரியே! வேண்டவே வேண்டாம்.

-----------------------------------------

மக்களே!

இனி வரக்கூடிய காலம் , சூழல்கள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கும் – எனவே சிந்தித்து செயலில் இறங்க வேண்டும் – எனவே இப்போதே! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள்!!! – நலமான நகர்மன்றத்தினை உருவாக்க ஆயத்தமாகுங்கள்.

வல்ல அல்லாஹ்! துணை புரிவான் ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack sma (jeddah) [25 October 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42083

மாமா அவர்களின் கருத்து பதிவில் ஒட்டுமொத்த நகர்மன்றத்தையும் சாடி இருக்கிறார்கள் .சில வேலைகள் தலைவராலும் மற்ற வேலைகள் உறுப்பினர்களாலும் தடைபட்டுள்ளது என்றும் மொத்தத்தில் இரண்டு பக்கமும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதைதான் என்றும் , வரும் தேர்தல்களில் பழையவர்கள் எவரையும் தேர்ந்தெடுக்க வேண்டாமென்றும் அறிவுருத்துவதுபோல் உள்ளது கருத்துபதிவு .

நல்லவர்கள் என்று நீங்கள் நினைக்கும் நபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சொல்லுங்களேன் . அப்படியே நீங்கள் நினைக்கும் அந்த நல்ல நபரை தேர்ந்தெடுத்தாலும் அவர் நல்லவராகவே இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம் .?

தடைபட்ட வேலைகளுக்கெல்லாம் காரணகர்த்தா யார் என்று தெரியாமல் , ஒட்டுமொத்த நகர்மன்றத்தையும் குறைகூறினால் எப்படி ?

உதாரணத்திற்கு , bio gas plant தற்போதுள்ள இடத்தில் இயங்காமல் இருக்க தடையாணை வாங்கியது யார் ? தலைவியோ , நகர்மன்ற உறுப்பினர்களோ இல்லை . புதிது புதிதாக முளைத்திருக்கும் சமூக சேவை இயக்கங்களே இதற்கு காரணம் . தற்போதுள்ள இடத்தில் இந்த வேலை நடக்காமல் போனால் ஊரின் வேறு எந்த இடத்திலும் இந்த வேலை நடக்க விடமாட்டார்கள் . இதற்கு தலைவிக்கு பிடிக்காத உறுப்பினர்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள்தான் எதிர்ப்பு காட்ட வேண்டும் என்றில்லை . பொது ஜனங்கள் எதிர்பார்கள் . ஏனெனில் இந்த வேலைக்கு தடை உத்தரவு வாங்கியது ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற பொது ஜனம்தானே ! இதனுடைய எதிரொலி பப்பரப்பள்ளி குப்பை எரியூட்டும் புகையால் நாம் படும் அவஸ்தை . பப்பரப்பள்ளிக்கு மாற்று இடம் நிச்சயம் கிடைக்காது . ஏனெனில் மாற்று இடத்தில் வசிக்கும் மக்கள் இதை எதிர்பார்கள் . ஆக இதற்கு ஒரேவழி bio gas plant தற்போதுள்ள இடத்தில் இயங்குவதுதான் . இப்போ சொல்லுங்க மாமா , இந்த வேலைக்கு குறுக்கீடு எங்கிருந்து வருகிறது ?

இதுபோன்றுதான் ஊரில் உள்ள தெருக்களும் . எதையாவது ஒரு காரணத்தை சொல்லி நடக்க இருக்கும் வேலைகளுக்கு தடைகள் . இதனால் மக்களுக்கு பல வகையிலும் தொல்லைகள் .

லஞ்சம் எங்குதான் இல்லை . லஞ்சம் கொடுக்காமல் நம்முடைய வாழ்க்கை முறை உள்ளதா ? இல்லை என்பதுதான் உண்மை . ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் ஒருசிலதை பொறுத்துதான் போக வேண்டும் . Bio Gas plant , பழுதடைந்த சாலைகள் புதுப்பித்தல் மற்றும் பிற காரியங்கள் இவை அனைத்தும் ஏதோ தனிப்பட்ட நபர் அனுபவிக்க இருக்கும் காரியம் இல்லை . ஒட்டுமொத்த ஊர் ஜனங்களும் அனுபவிக்க இருப்பது . இப்படி அனைத்து வேலைகளையும் சமூக சேவை என்ற பெயரில் வரும் ஒரு சிலரால் தடைகள் . இதனால் ஊர் மக்கள் அனைவருக்கும் தொல்லைகள் . எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் எந்த காரியமும் நடக்காது .

இப்போ சொல்லுங்க மாமா , ஊரில் நடக்கும் இடர்பாடுகளுக்கு காரணம் யார் ? தலைவரோ , உறுப்பினர்களோ இல்லை . யார் என்பதை தேடிப்பிடித்து எழுதுங்கள் .

வரும் தேர்தல்களில் நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள அந்த நல்ல நபர் , அவர் வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது . வேலை நடக்கிறதா , மக்கள் பயனடைகிறார்களா என்பதை மட்டும் பார்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் குறுமழை!  (26/10/2015) [Views - 2532; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (23/10/2015) [Views - 2187; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (21/10/2015) [Views - 2540; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved