Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:33:50 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17063
#KOTW17063
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 28, 2015
“என் பெயர் பாலாறு“ ஆவணப்படம் காயல்பட்டினத்தில் திரையிடப்பட்டது! சமூக ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2486 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத்து மேடை மையம், தமிழ் நாடு அமைப்பின் சார்பில் நகரில் தொடர்ந்து ஆவணப்பட திரையிடல்களும் அதையொட்டிய விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.



இம்மாதத்திற்கான திரையிடல் நிகழ்வு கடந்த புதன் கிழமை அன்று (டிசம்பர் 23) காலை 10:30 மணிக்கு நகரின் பிரதான சாலையில் உள்ள துஃபைல் வணிக வளாகத்தில் உள்ள ஹனியா சிற்றரங்கில் நடைபெற்றது.

இதில் பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் எழுதி, இயக்கிய “என் பெயர் பாலாறு“ ஆவணப்படம் திரையிடப்பட்டது.

முன்னதாக படத்தின் இயக்குனர் பற்றி சிறு அறிமுகக்குறிப்பும் தரப்பட்டது. மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் அறிமுகத்தை வழங்கினார்.



பாலாறு நதியானது கர்நாடகத்தில் தோன்றி ஆந்திரத்தை கடந்து வட தமிழகத்தின் வேலூர் , திருவண்ணாமலை , சென்னை , செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்து கல்பாக்கம் அருகே உள்ள வாயலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது .

தோல் தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகள் வெளியேறல் , நகர மயமாக்கத்தின் பாய்ச்சலின் விளைவாக பெருகும் நில வணிகமும் பெருந்தொழில் நிறுவனங்களும் அதைத் தொடர்ந்து வரும் மணல் கொள்ளை நீர் கொள்ளை போன்றவற்றின் வழியாக பாலாறு கொலை செய்யப்படுவதை இந்த ஆவணப்படம் விரிவாக பதிவுசெய்கின்றது.

வெறும் ஒரு நதியின் இறப்பாக இதை சுருக்கிப்பார்க்காமல் அதன் உடன் விளைவாக எழும் சமூக பண்பாட்டு எதிர்விளைவுகளையும் கவனப்படுத்தியுள்ளதுதான் இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சம்.



திரையிடலுக்குப்பிறகு பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.



இதில் மன்னார் வளைகுடா, தாமிரபரணி நதியின் முகத்துவாரம் போன்ற நமது பகுதியின் மிகப்பெரும் நீர் நிலைகளில் கொக்கோ கோலா, வி,வி.மினரல்ஸ், டி.சி.டபிள்யூ வேதியியல் தொழிற்சாலை உள்ளிட்ட பெரும் தொழிற்சாலைகள் அடிக்கும் நீர் கொள்ளைகளையும், சட்டத்திற்கும் சூழலுக்கும் எதிரான கழிவு நீர் வெளியேற்றத்தையும் பற்றியும் விவாதிக்கப்பட்டது.









அத்துடன் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆற்று மணலுக்கு மாற்றாக கருங்கற் ஜல்லி தூள், M – SAND என்றழைக்கப்படும் சலித்த அல்லது தூள் செம்மண் போன்றவற்றை பயன்படுத்தலாம், கேரளாவில் சூழலுக்கு உகந்த எளிய நிலைத்து நிற்கக் கூடிய மரபு வழி கட்டிடக்கலை முறை கடைபிடிக்கப்படுகின்றது, விரும்பும் கட்டிடக்கலைஞர்களுக்கும் கட்டுமான வினைஞர்களுக்கும் இந்த துறையில் திருஸ்ஸூரில் உள்ள லாரி பேக்கர் பயிலகத்தில் இதற்கான இலவச பயிற்சியை பெறலாம் போன்ற தகவல்களும் விவாதத்தின் போது பரிமாறப்பட்டது .







சூழலுக்கு உகந்த, இயற்கையை சுரண்டாத எளிய அழகிய கட்டிடக்கலை முறை தொடர்பாக நமதூரின் கட்டிடத்தொழில் முனைவோருக்கு ஒரு பயிலரங்கு எற்பாடு செய்ய வேண்டும் எனவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.



இறுதியாக நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:.
posted by Moinudeen (Kayalpatnam) [29 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42652

அஸ்ஸலாமு அழைக்கும்...

இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தியாவை போல் வளர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நாடுகளில் உள்ள ஆறுகளிலும் இதே பிரச்னை உள்ளது. அல்லாஹ தனது வேதத்தில் அவன் படைப்புக்களை பற்றி சிந்தனை செய்யும் படி மனித சமூகத்தையும் குறிப்பாக முஸ்லிம்களையும் ஏவி உள்ளான். ஏன் என்றால் இவைகளுக்கும் நம் வால்முரைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் விளங்குவதற்காக. "நாம் வாங்களையும் பூமியையும் ஒரு உண்மையை கொண்டே படைத்துள்ளோம் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா???" மற்றும் "நாம் வானங்களையும் பூமியில் உள்ளவைகளையும் ஒரு உண்மையை வெளிபடுத்தவே படைத்துள்ளோம் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா ??? " என்பது போன்ற வசனங்கள் ஏராளம்.

அரபியில் "பில் ஹக் " மற்றும் "லில் ஹக்" என்று இரண்டு விதமான வார்த்தைகளில் வரும். இரண்டும் ஒரே அர்த்தத்தை கொண்டது என்றாலும் இவ்விரண்டில் ஒன்று மேலதிக விளக்கம் கொண்டது . ஒன்று "உண்மையை கொண்டு" மற்றொன்று "ஒரு உண்மையை வெளிபடுத்த " என்ற பதத்தில் வருவதாக சில தப்சீர் விரியுரையாளர்கள் கூறுவதாக நான் ஒரு ஆங்கில புத்தகத்தில் படித்துள்ளேன். அல்லாஹ வானங்களில் உள்ளவைகளையும் பூமியில் உள்ளவைகளையும் நமக்கு அவன் உதவியால் வாச படுத்தி தந்துள்ளதாக நமக்கு நியாபக படுத்தி உள்ளான். ரசூல் [ஸல்] நமக்கு எல்லா நிலைகளிலும் நம் இயற்கை மார்க்கத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கி விட்டு சென்றுள்ளார்கள். அந்த முறையின் படி நாம் வாழும் போது நாம் நம் வாழ்க்கையையும் இயற்கையையும் சீர் கொலைக்காமல் வாழ முடியும்.

இந்த பௌதீக உலகத்தில் மனிதர்களை தங்கள் தேவைக்கு மிஞ்சிய consumption தான் இவ்வாறான ஆறுகள் மாசு பட காரணம் என்று நான் நினைகிறேன். தண்ணீரை கூட நாம் தேவைக்கு மிஞ்சியே consume செய்கிறோம் .இஸ்லாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சொல்லியுள்ளது நமக்கு. ஏன் என்றால் சிக்கனம் தண்ணீரில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக தான். தண்ணீரின் முக்கியத்துவம் தெரியாமல் நாம் வீண் விரயம் செய்யும் போது, மற்றதை என்ன என்று சொல்ல...மற்ற தேவை இல்லாத செலவுகளும் அதிகரிக்கவே செய்யும்... சிந்திக்க வேண்டிய விடயம்...

நாம் இவ்வாறாக தேவைக்கு மிஞ்சிய சந்தை பொருள்களை வாங்குவதால் அதனை தயார் செய்யும் தொழிற்சாலைகள் அதற்கான செலவுகள் அதனால் ஏற்படும் wastages எல்லாவற்றையும் நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள படுவது இயல்பு. ஏன் என்றால் நாம் இயற்கை வாழ்க்கை முறையை மறந்து வாழ்ந்ததன் விளைவு. இந்த உண்மையை தான் அல்லாஹ் நமக்கு அவ்வப்போது வெளிபடுத்துகிறான். வாழ்கையில் எல்லா நிலைகளிலும் ஒரு உண்மை இருக்கும் எல்லா நிலைகளிலும் ஒரு உண்மை வெளிபடுத்த படும். இவ்வாறுதான் அல்லாஹ் படைத்துள்ளான்.

நான் சில மாதங்களுக்கு முன் ஒரு தமிழ் செய்திதாளில் படித்த செய்தி நினைவுக்கு வருகிறது. சென்னையில் மட்டும் 40000 apartments கெட்ட பட்டு vacant நிலையில் உள்ளது கடந்த 2 அல்லது 3 வருடமாக ... இப்படிப்பட்ட நிலைமை.

நம் ஊரை எடுத்து கொள்வோம். நம் ஊர்களில் வீடு கட்டுவது மிக பிரதான முக்கியமாக உள்ளது . வீட்டை மிக விசாலமாக பல வசதிகளோடும் கட்டும் சகோதரர்களும் உண்டு. ஒன்றுக்கு மேல் 2, 3 , 4 என்று கட்டி விட்டு வீடுகளை காலியாக வைத்துகொள்ளும் சகோதரர்களும் நம்மில் உண்டு. குறுகிய வாழ்கையில் வாழ்வதற்குத்தான் வீடு என்பது போய் நாம் நிரந்தரமாக வாழ போகும் வீடு என்ற பிரம்மையான நம்பிக்கைதான் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

எதற்கு இவைகளை சொல்ல வருகிறேன் என்றால் தேவைக்கு மிஞ்சிய வீடுகள் கட்டபடுவதால் அவைகளுக்கு தேவையான மணல்களின் தேவை அதிகமாகும்... தேவைக்கு ஏற்றாற்போல் தான் மணல் அல்ல வேண்டும் என்பதற்காக அரசு ஒரு அளவை நிர்ணயித்துள்ளது. அரசாங்கத்தில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் அரசு சார்ந்த அதிகரிகலானாலும் சரி இந்த too much consumption கு விதி விலக்கல்ல.

நிலைமை இப்படி இருக்க மணல் கொள்ளைகள் ஏற்படுவது இயல்புதான் . இவைகளை சொல்லி நமக்கு எந்த மாற்றமும் வர போவது இல்லை. அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரு கணக்கில் தான் படைத்துள்ளான் என்பது குரான் நமக்கு சொல்லும் போதனை.அந்த கணக்கு மீறப்படும் போது எதிர் வினைகள் ஏற்படும் என்பது அல்லாஹ் வெளிபடுதிகிற உண்மை. அதனை நாம் இப்போது சந்தித்து கொண்டு இருக்கிறோம்.

நாம் வாழும் வாழ்க்கை முறை மாறாத வரை இதற்கு தீர்வு எதுவும் கிடையாது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ! நாம் செய்யும் சிறு நன்மையானாலும் சரி சிறு அமலானாலும் சரி , நிச்சயமாக உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு மாற்றம் நிச்சயம் நிகழும். அந்த மாற்றம் நம் புலன்களுக்கு எட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. சில மாற்றங்கள் நாம் நம் கண்களால் பார்க்கலாம் . பல மாற்றங்கள் நம் புலன்களுக்கு எட்டாது. ஆதலால் மாற்றம் இல்லை என்ற நிலை இல்லை.

ஒரு நன்மை நாம் செய்தால் அல்லாஹ் 10 மடங்கு நன்மை தருவதாக வாக்களித்து உள்ளான். அந்த 10 நன்மைகள் பயனால் நிச்சயம் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். இது மறைவான விஷயம் . இதனை நம்பித்தான் நம் ஈமான் உள்ளது என்பதை நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.

இஸ்லாமிய வாழ்க்கை முறையை நாம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்குவோம்.. உலகம் தானாக மாறும்... அதை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியது இல்லை.

மாற தயாராகுவோம்... உலகம் நம்முடையது....

--மொய்னுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Information
posted by Bukhary (Abu Dhabi ) [29 December 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42659

நவம்பர் மாதத்திற்கு முன்புவரை சென்னைக்கு குடிநீர் வழங்குகிற அனைத்து ஏரிகளும் வற்றிப்போய் இருந்தன.சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று கூட்டம் போட்டுக்கொண்டிருந்த நிலையில்தான் நவம்பர் பாதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையானது, நிலைமையை தலைகீழாக புரட்டிப் போட்டது.

சென்னைப் பெருவெள்ள நிகழ்வானது,ஏரி,குளங்கள் பராமரிப்பு,ஆக்கிரமிப்பு குறித்த பரவலான விவாதத்தை எழுப்பினாலும்,நீர்நிலை ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை இவ்விவாதத்தை,செயற்பாட்டை தொடர்வதுதான்,நிரந்தரப் பாதுகாப்பிற்கான தீர்வாக இருக்க முடியும்.

அவ்வகையில் தண்ணீரை விற்பனைப் பண்டமாக சந்தையில் விற்பதற்கு எதிராகவும்,நீர் நிலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் முப்பதற்கும் மேற்பட்ட முற்போக்கு அமைப்புகளை இணைத்து உருவாக்கப்பட்ட “தண்ணீருக்கான பொது மேடை”சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை நோக்கிய தொடர் பயணத்தை முன்னெடுக்கிறது.

முன்னதாக இந்தியாவின் தண்ணீர் மனிதன் என்றழைக்கப்பட்ட ராஜேந்தர் சிங்கால் துவங்கிவைக்கபட்டு,தண்ணீர் விற்பனைக்கு எதிரான பிரச்சார நூல் வெளியீட்டோடு தொடங்கப்பட்ட தண்ணீருக்கான பொது மேடை,தொடர்ச்சியாக வணிக வளாகங்களில் இலவசமாக தண்ணீர் வைக்கக்கோருகிற துண்டறிக்கை பிரச்சாரங்களையும்,போரூர் ஏரி ஆக்கிரமிப்பிற்கு எதிராக,தண்ணீர் நடை மற்றும் சைக்கில் பேரணியையும் நடத்தியது.

பல்வேறு அமைப்புகள் நடத்திய போரட்டத்தின் விளைவாக இன்று போரூர் ஆக்கிரமிப்பு அகற்றுப் பட்டுவரும் நிலையில்,சென்னை முழுவதுமாக நீர்நிலை ஆக்கிரமிப்பிற்கு எதிராக இதை விரிவுபடுத்தும் விதமாக நாம் சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகள் நோக்கிய நடை பயணத்தை துவங்கவுள்ளோம்.

வருகிற ஞாயிறன்று செம்பரம்பாக்கத்தில் இருந்து,நீர் நிலைகளை காத்திட நமது பயணத்தை துவக்குவோம். தண்ணீருக்காக ஒன்றிணைவோம் ....

தொடர்பு:
9884831545,984165174
publicforumwater@gmail.com
செம்பரம்பாக்கம் ஏரிக்கரை.
As received (


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வீட்டு மனை நிலத்திற்கு பகரம் விவசாய நிலம் லாபம்
posted by Bukhary (Abu Dhabi ) [29 December 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42661

இருக்கும் நிலத்தை வீணாக்காம தோட்டம் செய்வோம் வாங்கும் நிலத்தையும் விவசாய நிலமாக வாங்குவோம் இனி எதிர் காலம் நல்ல வுனவிர்க்கும் தண்ணீருக்கும் தான் போட்டியாக இருக்கும் யாரிடம் விவசாய நிலம் வுள்ளதோ அவர்கள் சுதந்திரமானவர்கள் மற்றவர்கள் corporate கம்பெனிகளில் வரிசையில் காற்றை காசு கொடுத்து வாங்கும் அடிமைகளாக மாறுவார்கள்.

நபி மொழி இருந்து

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு முஸ்லிமின் செல்வங்களிலேயே ஆடு ஒன்றுதான் சிறந்த செல்வமாக மாறக்(கூடிய காலம் வரக்)கூடும். குழப்பங்களிலிருந்து தமது மார்க்க (விசுவாசத)த்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர் மலை உச்சிக்கும் மழைத்துளிகள் விழும் (கணவாய்கள்/ பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் சென்று வாழ்வார். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved