Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:19:47 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17407
#KOTW17407
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 5, 2016
மக்வா அமைப்பின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல்! 15 பேர் ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4059 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், 15 உறுப்பினர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் புதிய தலைவர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

புதிய செயற்குழு தேர்தல்:

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 28.02.2016. ஞாயிற்றுக்கிழமையன்று, கேரள மாநிலம் கோழிக்கோடு கோட்டப்பரம்பாவிலுள்ள நெய்னா காக்கா இல்ல மாடியில் நடைபெற்றது.

உறுப்பினர்கள் வருகை:

தேர்தலை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்தே துவங்கிவிட்டது. தேர்ந்தல் நாளுக்கு முந்திய இரவில் – மறுநாள் தேர்தல் விருந்திற்கான இறைச்சி தயாரிக்கும் பணிகள் துவங்கிவிட்டன. உறக்கம் தவிர்க்க தேனீர் (கட்டஞ்சாயா), தின்பண்டங்கள், காலை நாஷ்டா ஆகியன பொறுப்பாளர்களுக்குப் பரிமாறப்பட்டன.

முற்கூட்டி வருகை தந்து வாக்குப்பதிவு செய்யுமாறு உறுப்பினர்களுக்கு முன்னரே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, குறித்த நேரத்தில் உறுப்பினர்கள் நிகழ்விடத்தில் திரளாகக் குழுமியிருந்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்:

தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குப்பதிவு செய்வதற்கான வழிமுறைகள், தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் விபரங்களை உள்ளடக்கிய வாக்குப்பதிவு மாதிரி சீட்டு ஆகியன நிகழ்விட நுழைவாயிலிலேயே அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது.

சந்தா சேகரிப்பு:

வாக்குச் சாவடியின் கீழ் தளத்தில், உறுப்பினர் சந்தா நிலுவைத் தொகைகளை, மன்றத்தின் நடப்பு பொருளாளர் உதுமான் அப்துல் ராஸிக் வசூலித்துக் கொண்டிருந்தார்.

தேர்தல் துவக்கப் பணிகள்:

தேர்தல் துவக்கப் பணிகளை, எஸ்.ஐ.ஜலீல் தலைமையில், சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் ஆகிய தேர்தல் அதிகாரிகள் முனைப்புடன் செய்தனர்.



வாக்குச் சாவடி நுழைவாயிலில், வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணியை, தேர்தலில் போட்டியிடாத பொறுப்பாளர்கள் செய்து கொண்டிருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் வாக்குச்சாவடி நுழைவுச் சீட்டை வழங்கினர்.



வாக்குப் பதிவு:

10.30 மணிக்கு, திட்டமிட்ட படி வாக்குப்பதிவு துவங்கியது. துவக்கமாக தேர்தல் அதிகாரிகளும், அவர்களைத் தொடர்ந்து மன்றத்தின் நடப்பு நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

அனைத்து வாக்காளர்களுக்கும், வாக்குப்பதிவு செய்வதற்கான நடைமுறைகளை தேர்தல் அதிகாரிகள் விளக்கிக் கூறி, வாக்களிக்கச் செய்தனர்.

தவிர்க்கவியலாத காரணங்களால் வாக்குப் பதிவிற்கு நேரடியாக வரவியலாத உறுப்பினர்களின் தபால் வழி மற்றும் தொலைபேசி வழி வாக்குகளை, மன்ற உறுப்பினரல்லாதோர் - அந்தந்த வாக்காளர்களின் சார்பாக பதிவு செய்தனர்.

11.30 மணி வரை விறுவிறுப்புடன் சென்ற வாக்குப்பதிவு, அதற்குப் பிறகு சிறிது மந்தமானது. வாக்குப்பதிவு நேரம் நிறைவடையும் தருணத்தில் மீண்டும் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 01.30 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்றதாக, தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.

தேர்தல் விருந்தாக ஆம்பூர் பிரியாணி...

வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிகழ்விடத்தின் கீழ்ப்பகுதியில் தேர்தல் விருந்தாக ஆம்பூர் பிரியாணி சமைக்கும் பணிகள் பரபரப்போடு நடைபெற்றது.



தம் குடும்த்தினருக்காக முன்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, மக்வா பெயர் பொறிக்கப்பட்ட சிறப்புப் பாத்திரத்தில் பாத்திரத்தில் பவுத்தி சாப்பாடு வினியோகிக்கப்பட்டது.



வாக்குப் பெட்டி பாதுகாப்பு:

வாக்குப்பதிவு நிறைவுற்ற பின்னர், வாக்குப் பெட்டி, பூட்டிய அறைக்குள் தேர்தல் அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டது. மதிய உணவு ஏற்பாட்டுப் பணிகள் நிறைவுற்றதும், பாதுகாப்புப் பணியிலீடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகளுக்கு, அவர்களின் இருப்பிடத்திலேயே மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.





மதிய உணவு விருந்துபசரிப்பு:

மறுபுறத்தில், வாக்குப்பதிவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டம் நடைபெறும் - நெய்னாக்கா இல்ல மொட்டை மாடி வளாகத்தில் மதிய உணவு - ஆம்பூர் பிரியாணி சாப்பாடு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.





வாக்கு எண்ணிக்கை:

மதியம் 02.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தேர்தல் அதிகாரிகளுடன், மக்வா அழைப்பின் பேரில் காயல்பட்டினத்திலிருந்து வருகை தந்திருந்த ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், மக்வாவின் முன்னாள் செய்தி தொடர்பாளரும் - நடப்பு தேர்தலில் போட்டியிடாதவருமான செய்யித் ஐதுரூஸ் (சீனா), ஹாஃபிழ் செய்யித் அபூதாஹிர், மக்வா முன்னாள் துணைத்தலைவர் கே.எம்.முஹம்மத் ரஃபீக் (கே.ஆர்.எஸ்.) ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் துணைப்பணியாற்றினர். துவக்கமாக வாக்குப் பெட்டி தேர்தல் அதிகாரிகளால் முறைப்படி திறக்கப்பட்டது.





வாக்காளர்கள் தமது வாக்குச் சீட்டில், தேர்தலில் போட்டியிட்ட 21 பேரில் 15 பேருக்கோ, அதற்கும் குறைவாகவோ முத்திரையளித்து வாக்களிக்க வேண்டும்.. 16 அல்லது அதற்கும் மேற்பட்டு முத்திரையளித்தால் அது செல்லாத வாக்கு என விதிமுறை முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், 15க்கும் மேற்பட்ட முத்திரைகள் குத்தப்பட்ட ஒரேயொரு வாக்குச்சீட்டு மட்டும் கண்டறியப்பட்டு, அது செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.

அனைத்து வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டு, அதற்கென கணினி மென்பொருள் மூலம் வாக்கு எண்ணிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டது.

பதிவான வாக்குகள்:

மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 137
மொத்த வாக்குப்பதிவு: 98

அவற்றுள்,
நேரடி வாக்குப்பதிவு: 87
தொலைதொடர்பு வழி வாக்குப்பதிவு: 11

வாக்குப்பதிவு சதவிகிதம்: 71.53%

அடுத்து, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற மொத்த வாக்குகள் கணினியில் பதிவு செய்யப்பட்டவுடன், ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்த நிரலின் (Programme) படி, கூடுதல் வாக்குகளைப் பெற்ற 15 வேட்பாளர்களை கணினி தேர்வு செய்து பட்டியலிட்டது. அப்பட்டியல் தேர்தல் அதிகாரிகளால் இருமுறை சரிபார்க்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறைக்குள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்களைத் தவிர வேறெவரும் அனுமதிக்கப்படவில்லை.

தொழுகை & தேனீர்:

அஸ்ர் தொழுகைக்கான வேளை வந்ததும் ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொழுகை நிறைவுற்ற பின்னர் அனைவருக்கும் காயல்பட்டினம் முறைப்படி இஞ்சி கலக்கப்பட்ட தேனீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டம்:

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நெய்னாக்கா இல்ல மொட்டை மாடி வளாகத்தில் கூட்டத்திற்காக உறுப்பினர்கள் திரண்டமர்ந்திருந்தனர். 16.30 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் துவங்கியது.



மக்வா உறுப்பினர் சேட்டு மஹ்மூத் உடைய நான்கரை வயது மகள் உம்மு ஸல்மா ரைஹானா இறைமறை வசனங்களை தன் மழலைக் குரலால் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.



வரவேற்புரையைத் தொடர்ந்து, மற்றொரு தேர்தல் அதிகாரிகளான சாளை எஸ்.ஐ.ஜலீல், சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் - வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற விதம் குறித்து கூட்டத்தில் விளக்கிப் பேசினர்.



தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை பட்டியலையும், அதனைத் தொடர்ந்து, புதிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரின் பெயர் பட்டியலையும் - தேர்தல் அதிகாரி எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் முறைப்படி அறிவித்தார்.



புதிய செயற்குழு:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு:-

(01) என்.எம்.அப்துல் காதிர்
(02) எஸ்.இ.மொகுதூம் அப்துல் காதிர்
(03) எஸ்.ஷெய்க் ஸலாஹுத்தீன்
(04) என்.எம்.முஹம்மத் இஸ்மாஈல்
(05) என்.மொகுதூம் மீராஸாஹிப்

(06) எம்.இ.மஹ்மூத்
(07) எம்.ஏ.கே.முஹம்மத் உதுமான்
(08) எஸ்.நாகூர் மீரான்
(09) ஏ.எஸ்.ஐ.முஹம்மத் ஸிராஜ்
(10) எம்.ஏ.உதுமான் அப்துர்ராஸிக்

(11) எஸ்.எம்.மஸ்ஊத்
(12) டீ.எஸ்.ஸாஹிப் தம்பி
(13) எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ்
(14) எம்.ஐ.ஃபவ்ஸுர்ரஹீம்
(15) எம்.ஏ.கே.தாவூத்

புதிய நிர்வாகிகள் தேர்வு:

தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களும் தனியாக அமர்ந்து சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடத்த, அக்கூட்டத்தின் நிறைவில் பின்வருமாறு மக்வாவிற்கான புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க, அந்நிர்வாகிகளின் பெயர்களும், பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டன:-



தலைவர்:

எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ்

துணைத்தலைவர்:

எம்.ஏ.உதுமான் அப்துர்ராஸிக்

செயலாளர்:

என்.எம்.அப்துல் காதிர்

துணைச் செயலாளர்:

ஏ.எஸ்.ஐ.முஹம்மத் ஸிராஜ்

பொருளாளர்:

எஸ்.ஷேக் ஸலாஹுத்தீன்

தேர்தல் ஆவணங்கள் ஒப்படைப்பு:

பின்னர், தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், தேர்தல் அதிகாரிகள் மக்வாவின் புதிய தலைவர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ் வசம் ஒப்படைத்தனர்.

வாழ்த்துரை:

தேர்தல் அதிகாரிகள் சார்பில், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வாழ்த்துரை வழங்கினார்.



நடைபெற்ற தேர்தல் பதவிக்காக அல்ல; பொறுப்புகளைத் தலையில் சுமப்பதற்காகவே என்றும், அதனைப் புரிந்துகொண்டு, 15 பேர் பொறுப்பேற்க வேண்டிய இடங்களுக்கு 21 பேர் ஆர்வத்துடன் முன்வந்தது பாராட்டுக்குரியது என்றும் கூறி, திருக்குர்ஆன் - நபிகளாரின் பொன்மொழிகளிலிருந்து நிறைய மேற்கோள்களுடன் பல அறிவுரைகளை வழங்கினார்.

காயல்பட்டினத்திலிருந்து வந்து, வாக்கு எண்ணிக்கையிலும் ஈடுபட்ட ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.

மன்றத்தின் நகர்நலச் சேவைகளைப் பாராட்டிப் பேசிய அவர், தேர்தல் நடைபெற்ற விதத்தை தான் ஒவ்வொன்றாக அவதானித்ததாகவும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை என ஒவ்வொன்றுமே வழமை போல தனித்துவத்துடன் திகழ்ந்து, தன்னை பெரிதும் வியப்பிலாழ்த்தியதாகவும் புகழ்ந்துரைத்தார்.

மக்வாவின் கடந்த செயற்குழு குறித்து பல்வேறு கடுமையான விமர்சனங்களை வாட்ஸ் அப் மூலமாக சிலர் வெளியிட்டபோதிலும், விமர்சனத்தை வெளியிட்டவர்கள் மீது கோபம் கொள்ளாமல் பொறுமை காத்து, தேர்தல் களத்திற்கு அருகிலேயே அவர்கள் வெளியிட்ட கருத்துக்களைக் கூட - அது அவர்களின் கருத்துரிமை என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டமைக்காக உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டுவதாகக் கூறினார்.

ஓர் அமைப்பை உருவாக்குவதும், பல்வேறு அல்லல்களுக்கிடையே அதை நல்ல முறையில் நடத்துவது என்பதும் எத்தனை அவதிக்குரியது என்பதைத் தான் உணர்ந்துள்ளதாகவும், அப்படிப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் ஓர் அமைப்பை சீர்குலைக்க ஒரேயொரு சொல் போதும் என்றும், அப்படிச் செய்வோராக மக்வா அமைப்பினர் ஆகிவிடக் கூடாது என்றும் கூறிய அவர், அமைப்பின் செயல்பாடுகளில் விமர்சனம் உள்ளவர்கள், அதை அதற்கான முறைகளில் வெளிப்படுத்த சகல உரிமைகளும் உண்டு என்றும், அதைத் தாண்டி வேறு வழிகளைக் கையாள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் கூறியதோடு, தவறான புரிதல்களைக் கொண்ட அனைவருக்கும் இறைவன் சரியான விளக்கத்தை வழங்குவானாக என்று வாழ்த்தி துஆ செய்தார்.

காயல்பட்டினத்தில் இயற்கை வழியிலான வாழ்வியல் மீது பொதுமக்களுக்கு தற்போது ஈர்ப்பு ஏற்பட்டு வருவதாகவும், கத்தர் காயல் நல மன்றம் நடத்திய மாடித்தோட்டம் பயிற்சி முகாமும், சமூக ஆர்வம் கொண்ட எழுத்தாளர்கள் பலரின் கட்டுரைகளும், கருத்துக்களும் அதற்கு முக்கியக் காரணங்கள் என்றும் கூறிய அவர், “2020ஆம் ஆண்டிற்குள் ஆர்கானிக் (வேதிக்கலப்பற்ற) காயலை நோக்கி” எனும் முழக்கத்துடன் பயணிக்கவுள்ளதாகவும், மக்வாவும் அதற்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உரையை நிறைவு செய்தார்.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு:

மக்வாவில் முஸ்லிமல்லாத - காயல்பட்டினத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களுள் ஒருவரது உறவினரின் மருத்துவ விண்ணப்பம் தொடர்பாக மதரீதியான பாரபட்சத்துடன் மக்வா நிர்வாகம் செயல்பட்டதாகப் பெறப்பட்ட விமர்சனங்களுக்கு, மக்வாவின் முந்தைய தலைவர் எஸ்.எம்.மஸ்ஊத் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் தொடர்புடைய உறுப்பினர் குமார் என்பவரை மேடையில் நிறுத்திப் பேசிய அவர், நடந்த விபரங்களைத் தெளிவுற விளக்கிக் கூறினார்.

இதில் மதரீதியாக எந்தப் பாகுபாட்டையும் தான் பார்க்கவில்லை என்றும், முன்னாள் நிர்வாகி ஒருவர் வலியுறுத்தியதன் பேரிலேயே தான் இதுகுறித்து முறையிட்டதாகவும், தற்போது உரிய விளக்கம் பெறப்பட்டுவிட்டதாகவும் கூறிய உறுப்பினர் குமார், எனினும் தனிப்பட்ட முறையிலேனும் அந்நேரத்தில் யாராவது உதவியிருக்கலாம் என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

கோழிக்கோட்டைத் தவிர சுற்றுவட்டார ஊர்களிலிருந்து மக்வாவில் அங்கம் வகிப்போரை அரவணைக்கும் வகையில், அவர்களின் விகிதாச்சார அளவுப் படி, நியமன உறுப்பினர்கள் சிலரை செயற்குழுவில் இடம்பெறச் செய்யுமாறு, உறுப்பினர் செய்யித் இப்றாஹீம் கேட்டுக்கொள்ள, அக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் என புதிய நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

புதிய நிர்வாகிகள் ஏற்புரை:

அதனைத் தொடர்ந்து, புதிய செயற்குழுவினர் சார்பாக, மன்றத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்புரை வழங்கினர்.



மொத்த அமைப்பின் தலைமை என்ற இவ்வளவு பெரிய பொறுப்பை தன்னை நம்பி ஒப்படைத்தமைக்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இத்தனை விமர்சனங்களையும் தாண்டி, ஏற்கனவே பொறுப்பிலிருந்த தங்களை மீண்டும் நம்பித் தேர்ந்தெடுத்தமைக்காக, மன்றத்தின் முன்னாள் நிர்வாகிகளும் நன்றி தெரிவித்துப் பேசினர்.



சிறந்த வருகைக்குப் பரிசு:

மன்றத்தின் முந்தைய செயற்குழு பருவத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பெரும்பாலான கூட்டங்களில் தவறாமல் பங்கேற்ற உறுப்பினர்கள் சிலருக்கு - கூட்டத்தில் தனியார் அனுசரணையில் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.



குறுக்கு விசாரணைக்கு விளக்கம்:

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தனக்குப் பதிவான வாக்குகளை நேரில் பார்க்க வேண்டும் என்று முறையிட்டதையடுத்து, அவருக்குப் பதிவான வாக்குகளை தேர்தல் அதிகாரி காண்பிக்க, அதை அவர் ஏற்றுக்கொண்டார்.



கணக்கு ஒப்படைப்பு:

மன்றத்தின் நிதியாதாரக் கணக்குகளை, முன்னாள் பொருளாளரும் - நடப்பு துணைத்தலைவருமான உதுமான் அப்துர்ராஸிக், புதிய பொருளாளர் ஷேக் ஸலாஹுத்தீனிடம் முறைப்படி ஒப்படைத்தார்.



நன்றியுரையைத் தொடர்ந்து, அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.



திரளான உறுப்பினர்கள்...

இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, மன்ற நிர்வாகத்தினரும், துணைக்குழு பொறுப்பாளர்களும் விமரிசையாக செய்திருந்தனர்.

கூட்டத்தின் நிறைவில் புதிய செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.





அவர்களைத் தொடர்ந்து, கூட்டத்தின் நிறைவு வரை நிகழ்விடத்திலிருந்த மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.


இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி வடிவமைப்பு:
S.K.ஸாலிஹ்

படங்களில் உதவி:
செய்யத் ஐதுரூஸ் (சீனா)


மக்வாவின் முந்தைய தேர்தல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உளமார்ந்த வாழ்த்துக்கள்...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) [06 March 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43312

அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!

ஆருயிர் நண்பன் சிராஜ் உள்ளிட்ட அனைத்துச் சகோதரர்களும் ஓரணியில் நின்று நகர்ப்பணியை இறைப்பணியாகத் தொடர்ந்து செய்திட மனதார வாழ்த்துகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வாழ்த்துக்கள்
posted by செய்யது ஐதுரூஸ் (சீனா) (கோழிக்கோடு ) [06 March 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 43315

ஜனநாயக முறையில் புதிதாக மலபார் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மேலும் நம் நகர்நலப்பணி சிறக்க உங்களுடன் நானும் என்றும் இருப்பேன் இன்ஷா அல்லாஹ்

எங்கள் மன்றத்தின் அன்பான அழைப்பை ஏற்று இங்கு வந்து மிக சிறப்பான முறையில் செய்திகளை வடிவமைத்து இணையதளத்தில் வெளியிட்ட சகோதரர் SK ஸாலிஹ் அவர்களை நான் மனமார வாழ்த்துவதோடு இன்னும் அவர்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

செய்யது ஐதுரூஸ் (சீனா)
கோழிக்கோடு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...விளக்கம் மிக அருமை
posted by Abdul Razak (Chennai) [07 March 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 43319

-----------------------------
அருமை அருமை ,
-----------------------------

- இதில் உள்ள பல ஐயங்கள் இந்த செய்தியை படித்ததும் clear ஆகி உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

- பெரும்பான்மை ஒரு சமுதாயம் இருந்தும் மற்றவர்களும் இந்த அமைப்பில் இருப்பதை உணர்ந்து விமர்சனங்களை சம்மந்தப்பட்டவரை வைத்தே clear clarify பண்ணியது .

- ஆம்பூர் பிரியாணியும் இஞ்சி டீ combination , (ஆனால் டீ-யில் வெள்ளை சீனி, அதாங்க slow poison போட்டிருக்கும் :) ,அதையும் அடுத்த முறை தவிர்க்க பாருங்கள்)

-----------------------------
பொறுப்பு பொறுப்பு :
-----------------------------
SK சகோதரர்கள் சொன்னதை போல் ஒரு அமைப்பை உருவாக்குவதும் அதை முறையே கொண்டு செல்வதும் சாதாரண ஒரு விஷயமில்லை , அதுவும் பொது நல அமைப்பை நடத்தும்போது அவ்வளவு கவனமாக இருக்கணும் , பொறுப்புணர்வு மிகவும் முக்கியம் . பிறர் காசு நம் கையில் வந்து போகும் கை சுத்தம் , டென்ஷன் இல்லாத பொறுமை , பல்வேறு கருத்துக்களை உடைய மக்களை வழி நடத்தும் தலைமைத்துவம் என எல்லா பண்புகளும் இருக்கணும் ..

அல்லாஹ் இந்த அமைப்பு எந்த நல்ல நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ அது முழுவதுமாக நிறைவேற உதவி செய்வானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [08 March 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43323

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ...மக்வா அமைப்பின் இந்த முறையை வெகுவாக அனைவர்களாலும் பாராட்டபட கூடிய ஒரு செயல் .....பாராட்டுக்கள் ...தொடரட்டும் நம் ஊர் மக்களுக்கான நல்ல திட்டங்கள் ''....அல்லாஹ் தங்கள் யாவர்களையும் நோய் இல்லாமல் சிறப்பாக்கி வைத்து ,,தங்களின் தொழிலில் அதிகமான பரக்கத்தையும் ,, தங்கள் அனைவர்களுக்கும் மன வலிமையையும் ,, தந்தருள்வானாகவும் ஆமீன்.......

இது போன்று ...நமது ஊரின் அனைத்து நற்பணி மன்றகளும் '' முறையாக தேர்தல் வைத்து ...அனைத்து உறுப்பினர்களையும் தேர்வு செய்தால் ...நல்லது ,, இன்னும் புதியதாக வரகூடிய அன்பர்களின் திறமையால் நமது ஊர் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தலாம் .......நல்ல அனுபவம் உள்ளவர்கள் ,,புதியவர்களுக்கு அருகில் இருந்து தக்க நல்ல ஆலோசனைகளை வழங்கலாம்......

மக்வா புதிய உறுப்பினர்கள் யாவர்கள் அனைவர்களுக்கும் >> வாழ்த்துக்களுடன் ,, துவாவும் ..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:... வாழ்த்துகள்......
posted by செய்து அஹமது U.L ( கோழிக்கோடு) [08 March 2016]
IP: 107.*.*.* | Comment Reference Number: 43325

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அன்பு மலபார் காயல் நல மன்ற செயற்குழு உருப்பினர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு நம் மன்ற பணி சிறக்க முன்பு போல் எப்போதும் உங்களுடன் நானும் இருப்பேன் இன்ஷா அல்லாஹ்

செய்து அஹமது U. L
முன்னால் துணை தலைவர் MKWA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...best regards
posted by Mohammed Rafeek KM (Kozhikode/Kerala) [09 March 2016]
IP: 107.*.*.* | Comment Reference Number: 43334

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

எங்கள் மக்வா அமைப் பின் செயற்குழுவிற்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி இனிதே நடந்து முடிந்து நிர்வாக பொறுப்பிற்க்கும், செயற்குழுவிற்க்கும் ஆன புதிய அங்கத்தினர்கள் இனிதே தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டார்கள். அல் ஹம்துலில்லாஹ்.

தேர்ந்தெடுக்கபட்ட புதிய உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் முன்னால் செயற்குழு உறுப்பினராகிய என்னுடைய இனிய நல்வாழ்த்துக்கள் . "பாரக்கல்லாஹு ஃபீக்கும் "

ஆறு வருட காலமாக தொடர்ந்து மக்கள் பணியாற்றும் உங்கள் இந்த உயரிய பயணம் இனியும் தொடரட்டுமாக. ஆமீன்.

பயணம் என்பது எப்போதும் நமக்கு இனிமையாகவும், சந்தோஷமாகவும் இருக்காது. அதில் இன்னல்கள், இட யூறுகள், கஸ்டங்கள் , மன வருத்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொருமையோடு பிரயாணித்தால் தான் நம் பயணம் வெற்றி அடையும்.

நம் பயண இலக்கை நாம் அடைய முடியும்.இன்ஷா அல்லாஹ் உங்களுடைய இந்த நல்ல பயணம் வெற்றி அடைய உங்களை நெஞ்சார வாழ்த்தி தூஆ செய்தவனாக என்றும் மக்வாவின் நல விரும்பியான உறுப்பினர் K. M. Mohammed Rafeek/kozhikode


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved