Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:20:34 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18019
#KOTW18019
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 1, 2016
முன்னறிவிப்பின்றி 10 மணி நேரம் மின்தடை! அலட்சியத்தில் மின்வாரியம்!! கொதிப்பில் பொதுமக்கள்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2428 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில், 01.07.2016. வெள்ளிக்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அந்நாளில், புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய பகுதிகளில், அன்று 09.00 மணி முதல் 14.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பம் என திருச்செந்தூர் மின்சார வினியோகப் பொறியாளர் அறிவித்துள்ளதாக, வாட்ஸ் அப் வழியே பெறப்பட்ட தகவலை, காயல்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில் தொடர்புகொண்டு உறுதி செய்த பின் காயல்பட்டணம்.காம் செய்தியாக வெளியிட்டது.

14.00 மணிக்கு மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில், 10 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 19.00 மணிக்கே மீண்டும் மின் வினியோகிக்கப்பட்டது.

சாதாரண நாட்களிலேயே இது பொதுமக்களுக்கு மிகுந்த அவதியை அளித்து வரும் நிலையில், தற்போது ரமழான் - நோன்பு காலமாக இருப்பதால், நோன்பு துறக்கும் நேரமான 18.30 மணி வரையிலும் மின் வினியோகம் இல்லாததால் காயல்பட்டினம் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி, கொதிப்பில் உள்ளனர்.

ஆண்டுதோறும் ரமழான் மாதத்தின் பல நாட்களிலும், பெருநாள் அன்றும் திட்டமிட்டே மின் வினியோகம் துண்டிக்கப்படுவதாகவும், அறவழியில் போராடி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், “நடப்பது என்ன?” என்ற வாட்ஸ் அப் குழுமம் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாகவும் தமது கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இதுகுறித்து, காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகம், ஆறுமுகநேரி துணை மின் நிலைய அலுவலகம் ஆகியவற்றைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது “Busy Status” குரல் பெறப்பட்டதே ஒழிய இணைப்பு கிடைக்கவேயில்லை. மின்வாரிய அலுவலர் ஒருவரைத் தொடர்புகொண்டு வினவியபோது, அடுத்த சில நிமிடங்களில் மின் வினியோகிக்கப்படும் என்று கூறிய அவர், 10 மணி நேர தாமதம் குறித்து காரணம் வினவியதற்கு விடையளிக்கவில்லை.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, நகரில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மாதாந்திர பராமரிப்பு மின்தடை தொடர்பான முந்தைய (ஜூன் 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. விழிப்புணர்வு கிழக்கிலிருந்து உதிப்பதாக உணர்கிறேன்
posted by N.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்) [02 July 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44146

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாதாந்திர பராமரிப்பு என்று ஒவ்வொரு மாதமும் மின் தடை செய்கிறார்கள் – என்ன அடிப்படையில் மின் தடை செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பராமரிப்புக்காக மின் தடை என்று அறிவிப்பு செய்யும்போது ஒவ்வொரு முறையும் (எல்லா மாதமும்) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றுதான் அறிவிப்பு செய்கிறார்கள்.

காலை 9 மணி என்பது 9.15 / 9.20 என்று தாமதமாக மின் விநியோகத்தை தடை செய்து ஏதோ மக்களுக்கு சலுகை செய்வது போல் நடந்து கொள்வார்கள் ஆனால் பராமரிப்பு முடிந்து சரியாக 5 மணி அல்லது 15 , 20 நிமிடம் தாமதமாகவோ மின் விநியோகம் செய்வார்களா! என்றால் அதுதான் இல்லை. எப்போதுமே 5 மணிக்கு மேல்தான் 5.30 அல்லது 6.00 மணிக்குதான் மின் விநினியோகமிருக்கும்.

மின் தடை 9 மணியிலிருந்து 2 மணி வரை என்று அறிவித்தவர்கள் சரியாக 2 மணிக்கு மின் தடையை நீக்க வேண்டும் – ஏதோ ஒரிருமுறை தவிர்க்க முடியாத காரணத்தால் கால தாமதம் ஏற்படலாம் – அதை குறை சொல்வதற்கில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் 5 அல்லது 6 மணிக்குதான் மின் தடையை நீக்குகிறார்கள் என்றால் நிச்சயமாக இது திட்டமிட்ட செயலே!

------------------------------

நேற்று மின் தடை முன் அறிவிப்பு இல்லாதது மற்றும் மிகவும் தாமதமாக இரவு சரியாக 7 மணிக்குதான் மின்சாரம் வந்தது – இதனால் காயல்பட்டணத்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் – நோன்பு பிடித்துக்கொண்டு, மின்சாரமில்லாமல் உறங்கவும் முடியவில்லை, ஓதவும் முடியவில்லை.

நோன்பு பிடிக்க, திறக்க தேவையான பொருட்களை ஐஸ் பெட்டியில் வைக்கவும் முடியவில்லை. பெருநாள் நேரம் நெருங்கிவிட்டதால் டெய்லர்கள் துணியை தைப்பதற்கு சிரமப்படுகிறார்கள் – ஒருநாள் மின் தடையினால் பல நூறு துணிகள் தேங்கிவிட்டதாக பிரபல்யமான டெய்லர்கடை அதிபர் சொல்கிறார்.

இன்று வெள்ளிக் கிழமை ஜும்மாவுக்கு போக்கூட துணிகளை அயர்ன் பண்ணமுடியவில்லை. மொத்தத்தில் காயல்பட்டணத்து மக்களின் கொதிப்பை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதாக தெரியவில்லை – மின்வாரியம் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த தடையை செய்திருந்தால் அதற்கான கூலியை அவர்களுக்கு இறைவன் விரைவில் கொடுப்பான்.

----------------------------

காயல்பட்டணத்து மின் வாரியத்தை பொறுத்தவரை (பிரத்தியேகமான) தனி சட்டங்களுடன் இயங்குகிறது. எப்படி ஜம்மு - காஷ்மீருக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்கள் பொருந்தாதோ! அதுபோல் தமிழ்நாடு மின்வாரியத்தின் 9 மண்டலங்களிலும் பின் பற்றுகிற சட்டம் காயல்பட்டணம் மின் வாரியத்திற்கு பொருந்தாது – ஏன் 9 மண்டலம், தூத்துக்குடி மின் பகிர்மான சட்டம் கூட, காயல்பட்டணம் மின் வாரியத்திற்கு பொருந்தாது. இது தனி அந்தஸ்து பெற்ற வாரியம் என்பது எத்தனை மக்களுக்கு தெரியும்?.

இந்த சட்டத்தை உடைக்க வேண்டுமானால் மக்களின் விழிப்புணர்வு அவசியம் தேவை – அந்த விழிப்புணர்வு கிழக்கிலிருந்து உதிப்பதாக உணர்கிறேன். அது வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அலட்சியம்.
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [02 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44152

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாத பராமரிப்பு என்று வழமையாக ஒரு குறிப்பிட்ட நேரம் முதல் ஒரு நேரம் வரை என்று சொல்லிவிட்டு ,அதிக நேரம் எடுப்பது வழமையாக ஆகிவிட்டது.

ஆனால் இந்நேரம் புனித ரமலான் நேரம் என்பது இவூரில் தொடர்ந்து பத்து ஆண்டுக்கு மேலாக பணி புரியும் மரியாதை கூறிய காயல்பட்டணம் துணை பொறியாளர் அவர்கள், மேல் அதிகாரிக்கு எழுத்து மூலம் தெரிவித்து இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.அல்லது நம் ஊர் சார்பாக,மாவட்ட கலக்டர்,இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,இந்த மண்ணின் மைந்தர் சமுதாய குரல் அண்ணன்அபூபக்கர் MLA அவர்கள்,மின்வாரிய அமைச்சர் அவர்கள் மூலம் மனு கொடுத்தும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்யலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack sma (jeddah) [02 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44171

என்ன பண்ணுவது . நம்மை நாமே நொந்துகொள்வதை தவிர வேறெதுவும் இல்லை .

ஊர் கூடி தேர் இழுத்தால்தான் உண்டு . ஊரில் உள்ள நலச்சங்கங்கள் , பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து " பிடிக்க " வேண்டிய ஆட்களை பிடித்து பேசினால்தான் ஏதாவது செய்வார்கள் . பெருநாளைக்கு அநேகம்பேர் ஊரில் இருப்பார்களே . செய்வார்களா ?

செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by nafeesa ( kayalpatnam) [03 July 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 44190

பெருநாள் இரவிலும் இது போன்ற மின்தடை ஏற்படாதவாறு இருக்க பொதுமக்கள் முயற்சி எடுக்க வேண்டும்.வெள்ளி கிழமைகளில் மாதாந்திர பராமரிப்பு இல்லாமல் வேறு நாட்களில் பராமரிப்பு நடைபெற முயற்சி எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved