Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:49:56 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18141
#KOTW18141
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 2, 2016
உரிமம் பெறாத இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதைக் கண்டித்தும், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமலிருக்க வலியுறுத்தியும் – “நடப்பது என்ன?” குழும ஏற்பாட்டில் காயல்பட்டினத்தில் பள்ளி மாணவர்கள் பேரணி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3341 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் அண்மைக் காலமாக - சில இளைஞர்கள் மத்தியில் இரு முக்கிய பிரச்சனைகள் நிலவுகின்றன.

(1) உரிமம் பெறும் வயதை எட்டாத மாணவர்கள், இரு சக்கர வாகனங்களை - தனியாகவோ, மூவராகவோ, நால்வராக அமர்ந்துகொண்டு – குறிப்பாக இரவு நேரங்களில் ரேஸ் ஓட்டுவது. இதனால் - விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகிறது. கடந்த மாதம் முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனம் மோதி இறந்துள்ளார்.

(2) சட்டத்திற்குப் புறம்பாக, நகரில் மதுபானம் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் விற்பனை நடப்பதால், இத்தீய பழக்கங்களுக்கு சில மாணவர்களும் அடிமையாகியுள்ளனர்.

இந்த இரு பிரச்சனைகளையும் கருப் பொருளாகக் கொண்டு, 02.08.2016. செவ்வாய்க்கிழமையன்று காயல்பட்டினத்தில் - பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

மாலை 04.00 மணிக்குப் பேரணி துவங்கியது. காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் இப்பேரணியில் அணிவகுத்து நடந்து சென்று, போக்குவரத்து விதிமுறைகளை மதித்தல், சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும், போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.











மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் பேரணி நிறைவுற்றது.

தொடர்ந்து, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.





“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார். எம்.ஏ.சி.முஜாஹித் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். எழுத்தாளர் ‘அன்பின்’ அலாவுத்தீன் வரவேற்றுப் பேசினார்.

எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதர் கான், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்புரையாற்றியதோடு, உறுதிமொழி வாசகத்தை முன்மொழிய மாணவர்கள் அதை வழிமொழிந்தனர். “நடப்பது என்ன?” குழும நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

பேரணியிலும், நிறைவு நிகழ்ச்சியிலும் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். அந்தந்தப் பள்ளிகளின் சார்பில் ஆசிரியர்களும், அலுவலர்களும் மாணவர்களை வழிநடத்தினர். கலைந்து செல்லும் முன் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இளைஞர்களின் பைக் ரேஸ்களால் குடும்பங்கள் சந்திக்கும் இழப்பைக் கருவாகக் கொண்ட "குருதியில் வழியும் பெருநாள்கள்!" என்ற தலைப்பில், வழக்கறிஞர் - எழுத்தாளர் எம்.எம்.தீன் எழுதிய சிறுகதை அனைத்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அதன் நிர்வாகிகளான பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, சாளை நவாஸ், எம்.என்.அஹ்மத் ஸாஹிப் உள்ளிட்டோரும், குழும அங்கத்தினரும் செய்திருந்தனர்.

“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. N E ???
posted by Zainul Abdeen (Dubai) [02 August 2016]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44365

நடப்பது என்ன ? குழுமம் , ஏற்படுத்திய விழிப்புணர்வு காயல் நகர் மக்களுக்கு பெரிதும் பயனளிக்க கூடியது என்பது மாற்றுக்கருத்து இல்லை.

அதே நேரத்தில் பேரணியோடு நின்று விடாமல் உரிமம் பெறாத இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதையம், , போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கும் வன்னம் முயற்சிகளை எடுக்க வேண்டும். நகர் மன்றம் மூலம் இதெற்கு தீர்வு காண வழிஉண்டுஎனில் கட்டாயம் நிலை நிறுத்த வேண்டும்.

காவல் நிலையம் இல்லை என்று நாம் பெருமை பேசி கொண்டு இருக்கிறோம் ஆனால் இதே போன்ற தப்புகளை தட்டி கேட்க தனி மனிதனுக்கு எண்டதை சட்டமும் இல்லை என்பதை யாரும் அறிவோம். குறைந்த பட்சம் வாகனம், மற்றும் பேருந்து போலீஸ் நமது ஊரில் வலம் வரவைத்தால் உரிமம் பெறாத இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓடுவதை ஓரளவு தடுக்க முடியும் என்பது என் கருத்து.

ஆனால் இது எங்களை போன்று அவ்வப்போது வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடஞ்சல்தான். .....

அது சரி, இது போன்ற பொது பிரச்சனைகளில் ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டும்தானே காண முடிகிறது ஏனோ?????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாணவ மணிகளின் மனம் கவரும் மல்லிகைகள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [02 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44367

மாலை வேளையில் மசங்கிய மனநிலையில் உடனே
வீடு திரும்பமாட்டோமா என்ற
எதிர்பார்ப்புகளையெல்லாம்
எடுத்தெறிந்துவிட்டு,

இன்று பூத்த ரோஜாக்களைப்போல் மலர்ந்திருக்கும்
மாணவ மணிகளின் முகங்களைப்பார்க்கிறேன்,

திடல் முழுவதும் தென்படுவது முகங்கள்தானா இல்லை,இல்லை

தாமரைத்தடாகத்தில் பூத்துக்குலுங்கும் தளிர்மிகு தாமரை கொத்துக்கள் தானா?

இன்று நீங்கள் மாணாக்கள் ஆனால் நாளை ஆள்பவர்களும்

நீங்களே, இந்த நாட்டின் தன்மானத்தலைவர்களும் நீங்களே !

நீங்களும்,உங்கள் நஞ்சுள்ளமற்ற நளின உணர்வுகள் மூலமாகவும்

எடுத்திருக்கும் அத்துணை உறுதிமொழிகளிலும அணுவளவும் பிசகாத்திருப்போமாக!

அதற்குறிய முன்னுதாரணமாகவும்
,முதன்மைமுத்துக்களாகவும்
நீங்கள் மின்னியவண்ணம் வருங்காலத்தில் வாழ்ந்து வெற்றிகளை ஈன்றுடுவீர்களாக, இறைவன் துணையுடன்!

நீங்கள் வாழ்நாளில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ,வளம்பெற வலிவுபெற்றோங்கிட

வல்ல அல்லாஹ்விடம் நான் முதல் நான் சார்ந்துள்ள "நடப்பது என்ன குழும" அனைத்து அன்புள்ளங்களும் அன்பொழுக இருகரம் ஏந்தி துவாசெய்கிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வாழ்த்துக்களுடன் ,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...பைக் கலாச்சாரமும் போதைபொருள் கலாச்சாரமும்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [02 August 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44368

கீழக்கரையில் ஏற்பட்ட பைக் விபத்தில் வபாத்தான மாணவர்கள்,கடையநல்லூர் பைக் விபத்தில் வபாத்தான மாணவர்கள் இவர்களின் உயிரின் விலை என்ன இவர்களை எவ்வளவு கனவுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் அவர்கள் பெற்றோர் அவர்களை வளர்த்து வாலிபமாக்கி சமுகத்தில் வலம் வர விட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் கனவுகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியத்துடன் தங்கள் வாழ்வுகளையும் சிதைத்துக் கொண்ட இவர்களை என்னென்று சொல்வது.

நமதூரில் அப்படி ஒரு நிகழ்வு இதுவரை ஏற்படவில்லை என்றாலும் நமதூரில் உள்ள தெருக்களின் இலட்சணம் பைக் கலாச்சாரமே இல்லாமல் சாதாரணமாக சென்றாலும் உருண்டு புரண்டு செல்வதாகத்தான் இருக்கிறது.

நல்ல சாலை வசதிகளை செய்து தர வேண்டிய பொறுப்பில் உள்ள நகர் மன்ற தலைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம். மற்ற உறுப்பினர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை.ஊரில் நல்லவிஷயங்களுக்கு குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்.வாட்சப் குழுமம் அவர்களை அழைக்கவும் வேண்டும்.

இன்று அடைக்கலாபுரம் ரோட்டில் காரில் பயணம் செய்தபோது ஒரு ஏழு வயதே நிரம்பிய சிறுவன் என்னை கேட்டான் ''ஏன் அப்பா, நமதூரில் இப்படி ரோடு இல்லை. ஒரே தூசியும் மண்ணும் கல்லும் நிறைந்து இருக்கிறது. இதே போல் சூப்பரான ரோடு நமதூரில் போட ஏலாதா''...என்று கேட்டான் நான் வாயடைத்து போய்விட்டேன். .

சமீப காலமாக பெருகி வரும் பைக் கலாச்சாரம் நம்மை சிந்திக்க வைக்கிறது காவல் துறை உதவியை நாடி நமதூரில் பைக் கலாச்சாரத்து ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும்.பொது நல சேவையில் ஈடுபட்டிருக்கும் சங்கங்கள், காயல் நல மன்றங்கள், கல்வி நிலையங்கள் இக்ரா kcgc போன்ற மாணவர்களின் மீது அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்கள், நமதூரில் உள்ள ஜமாத் பெரியவர்கள், இணைய தள நிறுவனர்கள் எல்லோரும் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தை கூட்டி இதுபற்றி பேசி ஒரு விதி வகுக்க வேண்டும்.

போதைப்பொருள் பற்றி கூற IT IS TOO EARLY அல்லாஹ் காப்பாற்றுவான் அப்படி ஒரு நிலை நம் ஊரில் இருப்பதாக நாம் கேள்விப் பட்டதில்லை.

இந்த மாதிரி கூட்டங்கள் நடக்கும்போது பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் அல்லது குறைந்த பட்சம் ஒரு ஆட்டோவில் அறிவிப்பு செய்தால் பொது மக்கள் அதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை சொல்வார்கள்.

வாட்சப் குழுமம் இப்படி கூட்டம் கூடுவதை தவிர்க்க நினைக்கிறதா என்பதும் தெரியவில்லை. அவர்கள் நிலைப்பாடு என்னவென்பதும் தெளிவாக அறிய முடியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விசுவாசமிகு மண்ணின் மைந்தன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [03 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44370

சகோதரர் மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்களுக்கு, எனக்கு தெரிந்த சிறு விளக்கத்தை பகிந்துகொள்ள விழைகிறேன்!

இந்த "நடப்பது என்ன" வாட்ஸப் குழுமம் பள்ளி மாணவர்களை வைத்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து செய்திருக்கிறது. இதில் நகராட்சி தலைவி அவர்கள் ஆர்வத்துடன் கலந்திருக்கிறார்கள்!

மற்றைய உறுப்பினர்கள் (சகோதரர் சம்சுதீன் அவர்களைத்தவிர )வேறு எவரும் ஏன் கலந்துகொள்ளவில்லை என்றால்,அவர்களுக்கெல்லாம் தெரியாமல் இருக்கலாம்.ஊர் நலனுக்காக ஓய்வின்றி உழைப்பதின் விளைவாக உரிய நேரத்தில் விஷயம் அவர்களை சென்றடைந்திருக்காது என எண்ணுகிறேன்!

அடுத்து,நமதூரில் ஒரு இரு சக்கர வாகனம் மோதி ஒரு முதியவர் மௌத்தான செய்தி தங்களுக்கு தெரியாது என நினைக்கின்றேன்!

இலைமறை காயாக போதை பழக்கங்கள் பைய,.பைய படமெடுத்து வருகிறது,அதன் பிடரி முள்ளைத்திருவி முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் இக்குழுமத்தின் நோக்கமாகும்!

அடுத்து வரும் 6-ந்தேதி நமதூர் வழித்தடம் பேருந்துகள் நமதூருக்கு வராமல் பாதை மாறி செல்லும் செயலை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு இந்த வாட்ஸப் குழுமம் தயாராகி வருகிறது.

ஊரிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பொதுவான அழைப்பை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.வரும் ஜும்மா அன்றும் கொடுக்க இருக்கிறார்கள்!

வெகுதூர ஊர்களிலிருந்து வரும் நமதூர் மக்களை நடுநிசியில் ஆறுமுகநேரியில் "அம்போ"வென்று இறக்கி விட்டு விட்டு அடைக்கலாபுரம் வழியாக தடம் மாறி தப்பித்து செல்லும் பேரூந்துகளைக்கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம்!

பலமுறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனுகொடுத்தும் முழுமையான பலன் கிடைக்காத காரணத்தினால் இப்புண்ணிய போராட்டத்தில் குதித்துள்ளது இந்த "நடந்தது என்ன" வாட்ஸப் குழுமம்!

நமதூரின் மீதும்,நமதூர் மக்களின் இன்னல்கள் மீதும் உண்மையான அக்கறையுள்ள அனைத்து சகோதரர்களும்(அன்றைய தினம் தவிர்க்க முடியாமல் வர இயலாதவர்களைத்தவிர) மற்றைய சகோதரர்கள் ஒட்டுமொத்தமாக கலந்தது கொண்டு ,என்னால் இயன்ற நன்மையை இக்காயல் கண்மணிகளுக்காக செய்ய சித்தமாக இருக்கிறேன், நல்ல நோக்கத்தின் எதிரொலியாக திகழும் இந்த நல்ல காரியத்தை யார் முன்னெடுத்து சென்றாலும் சரிதான்!

அவர்களுடன் ஒத்துழைத்து ஒருங்கிணைபவனின் நானும் ஒருவன் என்று சொல்பவனே உண்மையான இவூரின் விசுவாசமிகு மண்ணின் மைந்தனாவான் என்பதே என்னுடைய எளிமைமிகு கருத்தாகும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மேஸ்திரிகள்...
posted by S.K.Salih (Kayalpatnam) [03 August 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44371

இந்த “நடப்பது என்ன?” குழுமம் யாரோ சிலருக்குச் சொந்தமானது அல்ல. நமதூரின் அனைத்துப் பகுதி மக்களையும் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு இணைத்துக்கொண்டு, ஒவ்வொருவரின் மதிப்பிற்குரிய கருத்துக்களையும் தீவிரமாகப் பரிசீலித்து, நிறைவில் கருத்தொற்றுமை அடிப்படையில் நல்ல முடிவுகளைத் தீர்மானமாக்கி, அதனடிப்படையில் செயல்பாட்டில் இறங்கி வருவதை, இக்குழுமத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் அறிவர்.

இந்தக் குழுமத்தில் இணைய “தனி அடாப்பு” கிடையாது. “பொது அடாப்பு”தான்!

இதில் இருக்கும் அட்மின்கள் இக்குழுமத்திற்கு உரிமையாளர்களோ, தங்கள் மனவோட்டங்களை குழுமத்தில் திணிப்பவர்களோ அல்ல! மாறாக, குழுமத்தை மேலாண்மை செய்ய, வீதிகளை எடுத்தியம்பிட, விதீமீறல்கள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க மட்டுமே அட்மின்கள் இயங்கி வருகின்றனர்.

இத்தகவல்களை வாய்ப்பு கிடைக்கும் அனைத்து இடங்களிலும் நாம் பகிர்ந்துள்ளோம். “நடப்பது என்ன?” சார்பில் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் கூட்டத்திலும் இதுகுறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இத்தனையையும் நன்கறிந்திருந்தும், சிலர் திருமண விருந்துகளுக்கு அழைக்கப்படும் அடாப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இதுபோன்ற நகர்நலப் பணிகளுக்கு அளிக்காமல், என்ன நடக்கிறது என்பதை ஆய்ந்தறிய அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் பலர் இருந்தும், அவர்களின் தொடர்பு எண்களும் கையிலிருந்தும் ஆராய முற்படாமல், இதுபோன்று செய்திகளின் கீழ் பக்கம் பக்கமாக கருத்துக்களை எழுதி, “நீங்க அப்படி செய்யுங்க..?”, “நீங்க ஏன் இப்படி செய்யலை?” என மேஸ்திரி தொணியில் கேள்விகளை எழுப்புவதற்கு உரிமை இல்லை என்று சொல்ல நான் என்ன சட்டாம்பிள்ளையா?

எல்லோருக்கும் உள்ள உரிமை இவர்களுக்கும் உள்ளது. அவர்களுக்குத் தெரிந்ததை அவர்கள் செய்து வருகிறார்கள். எமக்குத் தெரிந்ததை யாமும் செய்வோம், இன்ஷாஅல்லாஹ்!

மகிழ்ச்சியுடன், எஸ்.கே.ஸாலிஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [04 August 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44374

அஸ்ஸலாமு அலைக்கும்.

“நடப்பது என்ன?” குழுமம் .... இவர்களின் செயல்வடிவம் தான் என்ன ?? தற்போது நமது ஊரில் நிறையவே .... WHATSAPP '' குரூப் என்று பரவலாகவே செயல்பட்டு ஒரே ஊர் செய்திகளாகவே வந்த வண்ணம் இருக்கிறது ....இதை கூட காலத்தின் முன்னேற்றம் என்றுகூட நாம் கணிக்கலாம் ....

ஆனால் “நடப்பது என்ன?” குழுமம் '' இவர்களின் கண்ணோட்டம் மற்றவைகளை போல நிசசயம் இருக்காது ....காரணம் நல்ல திறமையானவர்களும் ,, பண்பானவர்களும் ஒருங்கே இணைந்து இருப்பதால் தான் ....

மேலும் “நடப்பது என்ன?” அதன் நிர்வாகிகளான PMA . ஸதக்கத்துல்லாஹ் அவர்கள் ,, நம் தமிழன்’ முத்து இஸ்மாயில் அவர்கள் ,, AS .புகாரீஅவர்கள் & சாளை நவாஸ் அவர்கள் ,, MN .அஹ்மத் ஸாஹிப் அவர்கள் மற்றும் எங்கள் மரியாதைக்குரிய நண்பர்கள் SK . ஸாலிஹ் அவர்களும் இணைந்து இருப்பதால் ..... “நடப்பது என்ன?” குழுமம் ஊர் மக்களுக்காக சிறப்புடன் செயல் படும் இதில் சந்தேகமே கிடையாது ....

நமக்காகவும் ,, நம் ஊர் மக்களுக்காகவும் '' களம் இறங்குகின்ற '' இவர்களை போன்றவர்களை .நாம் ஊக்க படுத்த வேணுமே தவிர ....மற்றவைகளை சொல்லவோ ,, நினைத்து பார்க்கவும் கூடாது ....

நமது ஊரில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி..வருபவர்கள் மிக ,, மிக,, குறைந்த வயது சிறுவர்களே தான் ...இதை காலை எடுக்கவேணுமாயில் நம் காவல் துறை அதிகாரிகளின் சப்போட்டு அவசியம் தேவையே ....இடைவிடாது காவல் துறை அதிகாரிகள் ஒரேநாளில் அனைத்து மிக்கயமான பகுதிகளில் வாகன சோதனைகளை நடத்த வேணும் .....

குறிப்பாக நாமும் நம் சொந்த குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனத்தை கொடுக்கவே கூடாது ...முறையாகவே சென்று '' லைசன்சு '' எடுக்க சொல்லணும் ..... நாமும் காவல் துறை அதிகாரிகளுடன் ஒத்துழைத்து ....நம் குழந்தைகளையும் ,, பெரியவர்களையும் .....விபத்தில் இருந்து ( உயிர் ,, மன உளைசல் ) பாதுகாத்து கொள்வோமாக ......

குறிப்பாக >>>> நமது ஊருக்குள் வரும் பள்ளி கூட & ஆட்டோ ,, வாகனத்தின் வேகத்தையும் ,, முறையற்று ஓட்டும் வாகன ஓட்டுனர்களை ,,கண்டறிந்து முறையாக அறிவுரைகள் சொல்வோம் ...

சொல்கேட்காத பள்ளி கூட வாகன ஓட்டுனர்களை & ஆட்டோ ஓட்டுனர்களை கண்டறிந்து முறையான நடவடிக்கைகளை காவல் துறை அதிகாரிகள் மூலமாக செயலாற்ற வேணும் ....

இந்த இருவர்களை ( பள்ளி கூட வாகன ஓட்டுனர்கள் ,, ஆட்டோ ஓட்டுனர்கள் ) நினைத்தால் தான் பொது மக்களுக்கு பயமே .....

நமது ஊரில் தற்போது போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாகவே தென் படுவது குறிப்பிடதக்கது ...குறிப்பாக பெண்களும் இதில் ஈடு பாடு இருப்பதாகவும் அறிகிறோம்..... .காரணம் வெளியூர் மக்களின் நடமாட்டம் குறிப்பிட்ட காலத்தில் நம் ஊரில் அதிகமாகவே தென்படுவது தான் ....

அல்லாஹு தான் நம் மக்கள் யாவர்களையும் பாதுகாட்க வேணும் .....

இந்த பேரணி பாராட்டுக்குரியதே ....இதற்காக முனைந்த அமைப்பினர்களையும் ,, பள்ளி மாணவ கண்மணிகளையும் ,, பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டுகிறோம் ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved