Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:29:53 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18151
#KOTW18151
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 6, 2016
காயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகள் இயக்க கோரி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு தொலைநகலி (FAX) அனுப்ப நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வேண்டுகோள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2376 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகள் இயக்க கோரி தமிழக முதல்வருக்கு தொலைநகலி (FAX) அனுப்ப நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:

காயல்பட்டினத்தை புறக்கணித்து அரசு பேருந்துகள் செல்வதை கண்டித்து - இன்று (ஆகஸ்ட் 6) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை - நடப்பது என்ன? சமூக ஊடக குழும ஒருங்கிணைப்பில் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு - நகரின் அனைத்து ஜமாஅத்துகளும், பொது நல அமைப்புகளும், ஊர் நல கமிட்டிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெளியூர்களில் இருக்கும் காரணத்திற்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாதவர்கள் - நமது கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தொலைநகலி (FAX) அனுப்ப வேண்டப்படுகிறார்கள்.

தொலைநகலி (FAX) எண்கள்:
044 - 2567 0930
044 - 2567 1441

மேலே உள்ள இரண்டு எண்களில் - ஏதாவது ஒரு எண்ணுக்கு மட்டும் தொலைநகலி (FAX) அனுப்பவும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய மாதிரி வாசகம்:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரினை அரசு பேருந்துகள் பல ஆண்டுகளாக புறக்கணித்து வருகின்றன. இது குறித்து - 1000 க்கும் மேற்பட்ட மக்கள், கையெழுத்திட்டு, போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து துறை அரசு செயலர், ஆறு அரசு பேருந்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை - கோரிக்கைகள் வழங்கியும், தொடர்ந்து அரசு பேருந்துகள் - 50,000 மக்கள் வாழும் காயல்பட்டினம் நகரை - புறக்கணிக்கின்றன.

இதனால் - பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் உட்பட பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வேறு வழியில்லாமல் - அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இன்று (ஆகஸ்ட் 6) காலை - திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைமைக்கு - பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே - இந்த விஷயத்தில் தாங்கள் தயவு கூர்ந்து, தனி அக்கறை செலுத்தி, எங்கள் ஊருக்கு வர வேண்டிய பேருந்துகள், எங்கள் ஊரை புறக்கணிக்காமல் - எங்கள் ஊர் வழியாக இயக்கப்பட உத்தரவிடும் படி, தங்களை கேட்டு கொள்கிறோம்.


மேலே உள்ள வாசகத்தை - கருத்து மாறாமல், தங்கள் அனுபவங்களை இணைத்தும் - நீங்கள் அனுப்பலாம்.

முடிந்த அளவு - ஒரு பக்கத்தில் அடங்கும் வகையில் அனைத்து கோரிக்கைகளையும், உங்கள் பெயர், விலாசம், கையெழுத்தையும் - இணைத்து அனுப்பவும்.

பல பேர் - ஒரே இடத்தில இருந்து அனுப்புவதாக இருந்தால், ஒரே FAX தகவலில், எல்லோரும் கையெழுத்திட்டு அனுப்பவும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வேரில் பிரச்னையை சரி பண்ண வேண்டும்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [06 August 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44377

நடப்பது என்ன குழுவினரின் சேவை மகத்தானது. ஆனால் நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு முக்கிய உண்மையை ஒன்றுமே தெரியாதது போல நாமெல்லோருமே மூடி மறைத்து நடிப்பது ஏன்.

பெரும்பான்மையான பேரூந்துகள் நம் ஊருக்குள்ள வருவதை தவிர்ப்பதற்கான அடிப்படை காரணம் நம்மவர்களின் தவறான நடவடிக்கைகளால் தான் என்பது தெரிந்தும் ஏன் அதைப்பற்றி முதல் அக்கறை காட்டாமல் இந்த போராட்டமும் கோஷங்களும்.

வேரில் உள்ள பிரச்னையை சரி பண்ணுவதற்கு வேண்டிய முயற்சிகளை முதலில் எடுப்போமே..... ஒரு வழிப்பாதையை மதிக்கவும் பஜாரில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்கவும் நம் மக்களை முதலில் தயார் படுத்துவதற்கு வேண்டிய முயற்சிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved