Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:22:53 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18145
#KOTW18145
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 4, 2016
காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2269 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அதைப் புறக்கணித்து மாற்றுப் பாதையில் செல்வதைக் கண்டித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், இதுவரை காணக்கிடைத்திராத பல பேருந்துகள் தற்போது காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கின்றன.

என்றாலும், இன்றளவும் பல பேருந்துகள் காயல்பட்டினத்தைப் புறக்கணித்து மாற்றுப் பாதையில் செல்வதும் வாடிக்கையாகவே உள்ளது.

இதனைக் கண்டித்து, திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 06.08.2016. சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.



இதில் பொதுமக்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சமூக ஊடகக் குழுமம்
posted by Zainul abdeen (Dubai) [04 August 2016]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44373

திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்- “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில்.....

இது தான் இப்போதைக்கு தலைப்பு செய்தியாக இருக்கின்றது நமதூர் இணையதளங்களிலும் மற்றும் நமதூர் வாசிகளின் முகப்புத்தகத்திலும்....

பேரணி, ஆர்ப்பாட்டம் என்று அடுக்கடுக்கா ஆக்கபூர்வமான செயல் பாடுகள். இதில் வியக்க தக்க விஷயம் என்னவென்றால் இது வெறும் சமூக ஊடகக் குழுமம் மூலம் செயற்படுத்தப்படும் ஒரு இயக்கமே அன்றி வேறில்லை (நான் அறிந்தவரை ).

இதெற்கு என்று தலைவரோ செயலாளரரோ, பொருளாளரோ இல்லை. ஒட்டுமொத்தமாக குழுவினர்களே இருக்கின்றார்கள். எது எப்படியோ ஊருக்கு நன்மை நடக்கின்றது . வாழ்த்துவோம் வளரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆக.6.அனைவர்களையும் காண துடிக்கின்றோம்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [04 August 2016]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 44375

சகோதரர் ஜெய்னுலாப்தீன் அவர்கள் சொன்னது போல் இந்த "நடப்பது என்ன"வாட்ஸப் குழுமத்திற்கு எந்த தலைவரோ ,செயளாலரோ, பொருளாலரோ,எந்த நாட்டாமையோ கிடையாது.இதில் அடி முதல் முடிவரையுள்ள அத்துணை உறுப்பினர்களுக்கும் அனைத்து உரிமைகளையும் கொடுக்கின்ற வெளிப்படையான, வெட்ட வெளிச்சமான நிர்வாகத்தினால் எடுக்கபடக்கூடிய தீர்மானத்தின் அடிப்படையில் நமதூருக்கான நன்மைகளை செய்யக்கூடிய ஒரு செயல்வடிவ அமைப்பு!

இந்தியாவிலோ,அல்லது நம் தமிழ்நாட்டிலோ எங்குமே இப்படி ஒரு வெளிப்படை தன்மையான அமைப்பு அதன் ஊருக்காக உழைத்து பல நன்மைகளை ஈட்டியுள்ளதா என்றால் அது கேள்விக்குறியே?

ஒரு இணையதளத்தின் மூலம் உலகத்திலுள்ள அனைத்து நண்பர்களையும் இணைத்து அந்த இனைய தளத்தின் தொடர்பின் மூலமாக அந்த ஊர் மக்களுக்காக பல புண்ணிய காரியங்களை செய்வதற்குறிய கொள்கை முடிவை மேற்கொண்டு,அதை சாதித்தும் வருகிறது என்றால்,எப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகள்,எப்படி மாத்தி யோசிக்கிறார்கள் எப்படிப்பட்ட ஒரு மகிமையின் வெளிப்பாடு,எப்படிப்பட்ட தொண்டுள்ள இதயங்களை ஈர்க்கின்றார்கள் இணைகின்றார்கள்!

இந்த "நடப்பது என்ன" வாட்ஸப் குழுமத்தைப்பற்றி நமதூர் சகோதரர்கள் மத்தியில் பிரதானமாக பேசுவதோடு மட்டுமல்ல, நம் பெண்டிலர்களின் கவனத்திற்கும் சென்று அவர்களும் இந்த அமைப்பைப்பற்றி அறியக்கூடிய ,தெரியக்கூடிய நிலைமைகள் நிலவி வருவதாக செய்திகள் வருகின்றன அல்ஹம்துலில்லாஹ்!

வெகுதூர ஊர்களிலிருந்து வரும் நமதூர் மக்களை நடுநிசியில் ஆறுமுகநேரியில் "அம்போ"வென்று இறக்கி விட்டு விட்டு அடைக்கலாபுரம் வழியாக தடம் மாறி தப்பித்து செல்லும் பேரூந்துகளைக்கண்டித்து நாளை மறுநாள் (ஆக.6-ந்தேதி) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இன்ஷா அல்லாஹ்!

பலமுறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனுகொடுத்தும் முழுமையான பலன் கிடைக்காத காரணத்தினால் இப்புண்ணிய போராட்டத்தில் குதித்துள்ளது இந்த "நடப்பது என்ன" வாட்ஸப் குழுமம்!

நமதூரின் மீதும்,நமதூர் மக்களின் இன்னல்கள் மீதும் உண்மையான அக்கறையுள்ள அனைத்து சகோதரர்களும் (அன்றைய தினம் தவிர்க்க முடியாமல் வர இயலாதவர்களைத்தவிர) மற்றைய சகோதரர்கள் ஒட்டுமொத்தமாக கலந்தது கொண்டு ,என்னால் இயன்ற நன்மையை இக்காயல் கண்மணிகளுக்காக செய்ய சித்தமாக இருக்கிறேன், நல்ல நோக்கத்தின் எதிரொலியாக திகழும் இந்த நல்ல காரியத்தை யார் முன்னெடுத்து சென்றாலும் சரிதான்!

அவர்களுடன் ஒத்துழைத்து ஒருங்கிணைபவனின் நானும் ஒருவன் என்று சொல்பவனே உண்மையான இவூரின் விசுவாசமிகு மண்ணின் மைந்தனாவான் என்பதே என்னுடைய எளிமைமிகு கருத்தாகும்! அப்படிப்பட்ட புண்ணியவான்கள் பூத்துக்குலுங்கும் கண்குளிர்ச்சியான குழுமத்தை ஆக 6-ந்தேதி காண காத்திருக்கிறேன் இதே இணையதளத்தின் வாயிலாக வல்லோனின் உதவியுடன்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [06 August 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44376

அஸ்ஸலாமு அலைக்கும்

வித்தியாசமான ஒரு அமைப்பின் ( “நடப்பது என்ன?” சமூக குழுமம் ) ,, ஒரு வித்தியாசமான செயல்வடிவத்தை பாராட்டுகிறோம் .......

தயவு செய்து '' நம் ஊரில் இருக்கும் அனைத்து மக்களும் இந்த போராட்டத்தில் அவசியம் கலந்து ,, நம் ஊர் மக்களின் வேதனைகளையும் ,, மன குமறல்களையும் ,, கண்ணியமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவோம் .... இப்போவாது தமிழக அரசின் இது சம்பந்தப்பட்ட அரசு பேருந்து அதிகாரிகள் விழித்து தக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்ப்போம் .....

இதிலாவது நம் ஊர் மக்கள் தங்களின் அனைத்து வேலைகளையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு ஒருங்கிணைந்து இதில் கலந்து கொள்வார்களா என்று பார்ப்போம் ......

இதிலும் கூட இது சம்பந்தப்பட்ட அரசு பேருந்து அதிகாரிகள் விழித்து ,,நடவடிக்கை எடுக்காவிடில் ....முறையாக உயர் நீதி மன்றத்தை தான் நாட தக்க நடவடிக்கை எடுக்க வேணும் ......அதற்க்கான செலவினங்களை “நடப்பது என்ன?” சமூக குழுமம் ஊர் மக்களிடமும் ,, உலகம் பூரா இருக்கின்ற ஊர் பொது நல அனைத்து மன்றங்களிடமும் பெற நடவடிக்கை எடுக்கலாம் ....இந்த விஷயத்தில் நிசசயம் நம் மக்கள் பரிபூரணமான முறையில் உதவுவார்கள் .....

இந்த கஷடம் என்பது யாவருக்கும் பொதுவானது அல்லவா ....

போராட்ட நேரம் தான் சரியான வெயில் சூடு பிடிக்கும் நேரம் .....நேரத்தை கொஞ்சம் ( 9 TO 11 ) முன்கூட்டியே வைத்து இருக்கலாம் .....

மேலும் இந்த தேவையான போராட்டத்தை >>> நமது ஊர் பேருந்து நிலையத்தில் ... வைத்தால் ஊர் மக்களின் கூட்டம் அதிகமாகலாம் ......

துளை தூரத்தில் இருந்து இரவில் ஊர் வரும் ,, ஊர் மக்கள் நடு இரவில் குழந்தை குட்டிகளுடன் பெண்மக்கள் , வயதானவர்கள் ,, ஆறுமுக நேரில் '' தவிப்பதை ....நினைத்து பார்த்தாலே நெஞ்சம் பக்கென்கிறது .....

இந்த போராட்டத்தில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தால் தான் தமிழக அதிகாரிகளின் கவனம் நம் பக்கம் திரும்பும் ...அனைத்து டிவி சேனல் / பத்திரிக்கை ...இவர்களுக்கும் முறையாக அழைப்பு விடுத்து இருக்கலாம் .....இவர்கள் தான் ரொம்பவும் முக்கியமானவர்கள் ...

இன்ஷா அல்லாஹ் ...நம் ஊர் மக்களின் இந்த மனா குமரலான போராட்டத்தில் முழுமையான வெற்றியை வல்ல நாயன் தந்தருள்வானாகவும் ஆமீன்.....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved