Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:31:38 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18158
#KOTW18158
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 8, 2016
இறைவழி மருத்துவக் குழுமத்தின் கலந்துரையாடல் & அக்குபஞ்சர் சிகிச்சை முகாம்! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4022 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 10)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் “இறைவழி மருத்துவம் - தமிழ்நாடு” குழுமத்தால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் & அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முகாமில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, முகாம் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் அ.ர.ஹபீப் இப்றாஹீம் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-

காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில் இருக்கும் முஹ்யித்தீன் பெரிய கல் தைக்காவில், 31.07.2016 (ஞாயிறு) அன்று ”இறைவழி மருத்துவக் கலந்துரையாடல் மற்றும் சிகிச்சை முகாம்” நடைபெற்றது.



இந்நிகழ்வை ’இளைஞர் ஐக்கிய முன்னணி (Youth United Front, சுருக்கமாக YUF)’ மற்றும் ’நஹ்வியப்பா நற்பணி மன்றம்’ ஆகிய சமூக நல அமைப்புகளுடன் இணைந்து ’இறைவழி மருத்துவக் குழுமம் – தமிழ்நாடு’ ஏற்பாடு செய்திருந்தது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டிருந்த இம்முகாமை, இறைவழி மருத்துவக் குழுமத்தின் உறுப்பினரான பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஒய்.எஸ்.ஃபாரூக் வரவேற்புரையாற்றினார்.



இறைவழி மருத்துவக் குழும நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ், குழுமத்தின் செயல்பாடுகளையும், இம்முகாமின் நோக்கத்தையும் விளக்கியதோடு; ”உடலில் உள்ள கழிவுகளின் தேக்கமே நோய்கள்! அக்கழிவுகளை உடலே வெளியேற்றிட நாம் அனுமதிக்க வேண்டும்,” என்ற இறைவழி மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவத்தையும் வலியுறுத்திப் பேசினார்.

’கம்பம் அக்குபஞ்சர் கல்விச் சாலையில் (Cumbum Academy of Acupunture)’ பயிற்சி பெற்று, மருந்தில்லா மருத்துவ முறையில் சிறப்பறிவு வாய்த்த அக்குஹீலர்களான சக்தி பகதூர் (திருவண்ணாமலை), காஜா முஹ்யித்தீன் (சென்னை), ஹாஃபிழ் இம்தியாஸ் அஹ்மத் (சென்னை) ஆகியோரும், பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறப்பு ஆலோசனைகளை கூறவல்ல பெண் ஹீலரான கவ்ஸர் பானு (திருவண்ணாமலை) ஆகியோர் - தத்தம் அறிமுகங்களுடன், உடல் நலம் குறித்த சிற்றுரைகளை வழங்கினர்.







சிற்றுரைகளின் சாராம்சம்!

>>> உடலே மருத்துவர்: மனித உடல் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் ஆற்றலுடையது.

>>> உடலின் உள்ளுறுப்புகளில் தேக்கமடைந்துள்ள கழிவுகளும், சக்தி ஓட்டப் பாதையில் ஏற்படும் தடையுமே நோயாகும். அதை சரிசெய்யக் கூடிய புள்ளியைத் தூண்டுவதே இறைவழி மருத்துவத்தின் சிகிச்சை முறை ஆகும்.

>>> உடலின் இயல்பான தேவைகளாகிய பசி – தாகம் – தூக்கம் - ஓய்வு ஆகியவற்றை முறைப்படுத்தினாலே பிணிகள் இல்லாத உடல் ஆரோக்கியத்தை நிலைப்படுத்த முடியும்.



>>> பசித்துப் புசித்தல், தாகம் ஏற்படும் பொழுது நீர் அருந்துதல், இரவில் சீக்கிரமே தூங்குவது மற்றும் உடலின் தேவைக்கேற்ப ஓய்வு எடுத்தல் ஆகியவற்றை இம்முறையில் சிகிச்சை பெறுபவர் பேண வேண்டும்.

>>> ஒரு நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவு, அவரது நோயின் அறிகுறியே ஆகும். ஆங்கில (அலோபதி) மருத்துவ முறையில், இந்த அறிகுறியையே நோயாகக் கருதி சிகிச்சை அளிக்கின்றனர்; ஆனால், இறைவழி மருத்துவமோ - நோயின் மூல காரணத்தைக் கண்டறிந்து, அதனைச் சீராக்கி, பிணியை போக்குகிறது.

>>> நோயின் தொந்தரவுகளை நம் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் எட்டாதவாறு ஆங்கில மருந்துகள் தடுக்கின்றனவே தவிர, நோய்களை அவை குணப்படுத்தவில்லை.

>>> பக்க விளைவுகள் இல்லாத அலோபதி மருந்துகளே கிடையாது. அலோபதியின் எந்த மருந்துப் பொருளையும், www.drugs.com என்ற இணையதளத்தில் பெயரிட்டுத் தேடினால், அதன் பக்க விளைவுகள் குறித்த தகவல்களைப் பெற முடியும்.

>>> இரத்தக் கொதிப்பு (blood pressure, சுருக்கமாக BP) என்பது ஒரு நோயே அல்ல. ஏதேனும் ஒரு உறுப்பில் சேதம் ஏற்பட்டால், அதை நிவர்த்தி செய்ய இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆனால், இதனை ஒரு இருதயம் சார்ந்த நோயாகவே கருதும் ஆங்கில மருத்துவமோ, பழுதடைந்து வரும் ஒரு உறுப்பில் மேலும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

>>> சர்க்கரை நோயின் அடிப்படைக் காரணமான - தரம் குறைந்த குளுக்கோஸை இறைவழி மருத்துவ சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தினால், இன்சுலின் சுரப்பதை அதிகரிக்க முடியும்.

>>> தடுப்பு ஊசி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்காமல், அதனை பலவீனப்படுத்துகிறது.

>>> குழந்தை பாக்கியம் பெற்று கருவுற்றிருக்கும் ஓர் பெண்ணின் கர்ப்ப காலத்தை, ஆங்கில மருந்துகள் நோயுற்ற காலமாக மாற்றி, கருவுற்ற நாள் முதல் பிரசவ நாள் வரையும், அதற்குப் பிறகு பல மாதங்களும் அவர்களை அலோபதி மருந்துக்களை உட்கொள்ள வலியுறுத்துகிறது..

>>> தனது மனைவிக்கு வீட்டிலேயே நிகழ்ந்த சுகப் பிரசவ அனுபவத்தை அக்குஹீலர் இம்தியாஸ் பகிர்ந்து கொண்டார்.

>>> நோயினால் மரணம் ஏற்படுவதில்லை; மரணத்திற்கான காரணியாக சில நேரங்களில் நோய் அமையலாம்.

இவ்வாறாக, அக்குஹீலர்களது உரைகளின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.

பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்:

சிற்றுரைகளைத் தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்டவர்களின் பல்வேறு உடல்/மன நலம் சார்ந்த கேள்விகளுக்கு அக்குஹீலர்கள் விளக்கமாக பதிலளித்தனர். அவற்றில், இம்மருத்துவ முறை குறித்த அடிப்படை விஷயங்கள் குறித்துப் புரிய உதவும் ஒரு சில கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் வருமாறு:-

1) அக்குபஞ்சருக்கும் (Acupunture) அக்குப்ரஷருக்கும் (Acupressure) உள்ள வேறுபாடு என்ன?

இரண்டுமே ஒன்றுதான்! இது வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஒரே மருத்துவ முறையே ஆகும். தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புள்ளியை கையாலோ அல்லது ஊசியாலோ தொட்டு தூண்டுவது இதன் சிகிச்சை முறையாகும். இது சீனாவில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்குப் பரவியது.

2) இம்மருத்துவ முறையில், வெறும் 6 வினாடிகள் மாத்திரமே நோயாளியின் நாடியை பிடித்துப் பார்த்து, நோயின் தன்மையை அறிவது எவ்வகையில் சாத்தியமாகிறது?

உடலின் இராஜ உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான சக்தியின் தன்மை, நோயின் தன்மை மற்றும் அதனை சீர்செய்வதற்கு தூண்ட வேண்டிய புள்ளி ஆகிய விபரங்களை நாடிப் பரிசோதனை மூலம் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில், உடலின் சக்தி ஓட்டத்தை சீர்படுத்தி பிணியை களைக்கிறது, இந்த இறைவழி மருத்துவம்.

3) தொலைபேசி அழைப்பின் மூலமாக சிகிச்சை அளிக்கும் (Phone Healing) முறை, ‘வசியம் (hypnotism)’ செய்வது போன்றதா?

நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவுகளை தொலைபேசி அழைப்பிலேயே கேட்டறிந்து, அதன் மூலக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதைக் களைவதற்கு தொலைதொடர்பு வழி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது நிச்சயமாக வசியம் செய்வது அல்ல.

செயல்கள் யாவும் அவற்றின் எண்ணங்களைப் பொருத்தே அமைகிறது. அவ்வகையில், ஒருவர் நோயிலிருந்து மீண்டு வருவது அவரது நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகிறது.

4) முஹம்மது (ஸல்) அவர்கள் தேன், கருஞ்சீரகம் போன்ற உணவுப் பொருட்களை மருந்தாக பரிந்துரைத்தார்களே? ஏன் இறைவழி மருத்துவ முறையில் உணவு பரிந்துரைகள் எதுவும் செய்வதில்லை? உணவே மருந்தாகாதா?

ஒருவர் உண்ணும் உணவுப் பொருள் மற்றவருக்கு ஒவ்வாமல் போகலாம் என்பதால் அக்குஹீலர்கள் யாதொரு உணவையும் பரிந்துரைப்பதில்லை. இறைவழி மருத்துவ முறையில் பசி - தாகம் - தூக்கம் -ஓய்வு ஆகியவற்றை முறைப்படுத்தவே நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதில் வேறு பத்தியங்கள் எதுவும் கிடையாது. ஒருவருக்கு விருப்பமான, சத்தான இயற்கை உணவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவரே தேர்வு செய்து, பசித்துப் புசித்தல் சாலச் சிறந்தது.

முஹம்மது (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் எதுவும் சாப்பிடாமல் நோன்பு நோற்றதும், பேரீட்சம் பழத்தைப் புசித்து நாட்களை கழித்ததும், பல நாட்களுக்கு உண்பதற்கு ஏதும் இன்றி பட்டினி இருந்த செய்திகளையும் நம் வசதிக்கேற்ப மறந்துவிட்டு, அவர்களின் அழகிய வாழ்வில் நமக்கு சாதகமானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்.

பசித்திருத்தல் நோயை விரட்டும் என்பதற்கு அவர்களது வாழ்வே ஒரு சான்றாகும். அவ்வாறு வாழ்ந்தால், அவர்கள் கூறியது போல் உணவும் மருந்தாகும்.

நிகழ்வுகளை எஸ்.கே.சாலிஹ் நெறிப்படுத்த, நன்றியுரையுடன் நிறைவுற்றது கலந்துரையாடல்.

மருத்துவ சிகிச்சை முகாம்!

மாலையில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சை முகாமில் சுமார் 90 நபர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர். நிகழ்விடம் ஒரு பெண்கள் தைக்காவாக இருந்ததால் - அதிகமான மகளிர் இந்த சிகிச்சையைப் பெறுவதற்கு இலகுவாக இருந்தது எனலாம்.



சிகிச்சை முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கம்பம் புத்துயிர் பதிப்பகத்தின் ‘இந்திய அக்குபஞ்சர் - ஒரு வாழ்க்கை அறிவியல்’ என்னும் சிறு நூல் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நூல் இம்மருத்துவ முறை குறித்த அடிப்படை விஷயங்களை எளிதில் விளக்கவல்லதாக உள்ளது.

சுமார் 7 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை செய்வது நோயிலிருந்து விரைவாக குணமடைய வழி வகுக்கும் என்பதால், அடுத்தடுத்து சிகிச்சை முகாம்களை நடத்துவது குறித்து இறைவழி மருத்துவ Telegram குழுமத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும், தொலைபேசி மூலம் செவிவழி தொடு சிகிச்சையும் வழங்கப்படும் என்றும் முகாமில் பங்குபெற்றவர்களிடம் அறிவிக்கப்பட்டது.







முகாமிலும், சிகிச்சையிலும் சுமார் 20 ஆண்கள், 70 பெண்கள் என மொத்தம் 90 பேர் வரை கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இறைவழி மருத்துவ குழுமம்!

சுமார் 1.5 ஆண்டுகளுக்கு முன்னர் Watsapp செயலியில் ஆரம்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை (256 பேர்) பூர்த்தியானதால், 5000 பேரை ஒரு குழுமத்தில் உறுப்பினராக்கும் வசதியைக் கொண்ட - Telegram செயலிக்கு மாற்றப்பட்ட இந்த super group-யில், தற்போது 560-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடல் / மன நலம் குறித்து கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் குழுமத்தில் அங்கம் வகிக்கும் அக்குஹீலர்கள், (தங்களது அன்றாட வேலைப் பளுவிற்கு இடையிலும்) சளைக்காமல் பதில் அளிப்பது இக்குழுமத்தின் சிறப்பம்சமாகும்.

இறைவழி மருத்துவ ஆலோசனைகளை நேரடியாக Telegram செயலியில் எந்நேரமும் பெற ஆர்வமுள்ளவர்கள், https://tlgrm.me/joinchat/BTEgED6ZCacEDbt_S0-RAQ என்ற இணையதள முகவரியை தங்களது அண்ட்ராய்டு (Android) கைபேசியின் உலாவியில் (browser) திறந்து, ‘Join Group’ என்பதைச் சொடுக்கி இணைந்து கொள்ளலாம்:


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஹ்யித்தீன் பெரிய கல் தைக்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

நஹ்வியப்பா நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[செய்தி திருத்தப்பட்டது @ 08:12 / 09.08.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...உன்னதமான முயற்சி
posted by Husain Noorudeen (Abu Dhabi) [08 August 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44383

அருமையான ஒரு நிகழ்ச்சி, வாழ்வியல் மாற்றத்தின் தொடக்கத்திற்கான நல்ல ஒரு வாய்ப்பு. இதனை ஏற்பாடு செய்த SK சாலிஹ் மற்றும் தம்பி BS ஆகியோருக்கு அல்லாஹ் நன்மையை கொடுப்பானாக.

தொலை தூர பயணத்தையும் பொருட்படுத்தாது நம் ஊருக்கு வந்து சிறப்பான முறையில் சிகிச்சை மற்றும் அறிவுரைகள் வழங்கிய அக்கு ஹீலர்களுக்கு எத்துணை முறை நன்றி சொன்னாலும் நிறைவடையாது. தினமும் தங்களுடைய வேலைப்பளுவுக்கிடையிலும் டெலெக்ராமில் கேட்கப்படும் அத்துணை கேள்விகளுக்கும் ஒன்றை கூட நாளைக்கு என்று மிச்சம் வைக்காமல் ஏற்கனவே கேட்கப்பட்டு 100 முறை பதில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் 101 ஆவது முறையாக மீண்டும் கேட்கப்பட்டாலும் கொஞ்சம் கூட சலிப்படையாமல் பதில் கூறும் சகோதரர்கள் சக்தி பகதூர், இம்தியாஸ் மற்றும் ஹாஜா முஹியித்தீன் ஆகியோருக்கு வல்ல நாயன் எல்லா நன்மைகளையும் வழங்கி அருள் புரிவானாக.

இதற்கு பிறகு நம்மூர் மக்கள் இதனை எப்படி பின்பற்றப்போகிறார்கள் என்பதில் தான் நம் வரும் தலைமுறையின் ஆரோக்கியம் இருக்கிறது. இதனை நம்மக்கள் உணர்ந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAUI (RIYADH) [09 August 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44395

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ....நல்ல அருமையான ஒரு மருத்துவம் ......நமது ஊர் மக்கள் நிறைய பேர்கள் இந்த சிறப்பு மருத்துவத்தை கையாளலாம் ......ஆனால் செய்ய முன் வருவது இல்லை காரணம் என்னவோ .......

நம் மக்கள் நிறைய பேர்கள் '' அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை '' பற்றிய தன்மையை தெரிந்து கொள்ள வில்லை .....

இதற்கான விழிப்புணர்வை ....கொஞ்சம் அதிகரிக்க வேணும் .....பொது நல அமைப்புக்கள் இதற்கான விஷயத்தில் கவனம் செலுத்தலாம் .......

பொது மக்கள் தான் அதிகம் இல்லை .....நல்லவைகள் தான் விலை போகாதே ....அது போல தான் . நல்ல மருத்துவமும் .....மக்களை விரைவில் சென்று அடைவது கஸ்டமே .....

தொலைபேசி மூலம் செவிவழி தொடு சிகிச்சையும் உண்டா ..யப்பப்பா ...மேலும் .....சிறு நூல் இலவசமாக கொடுக்க பட்டதும் ''' பாராட்டப்படக்கூடியது .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Shahul Hameed BS (Kayalpatnam) [10 August 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 44407

அல்ஹம்துலில்லாஹ்... நல்ல முறையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

@Husain Noorudeen காக்கா... உங்களுடைய ஆர்வமும் நீங்கள் கொடுத்த ஊக்கமும் நிதி உதவிகளும் இதை நடத்த மிகவும் பிரயோஜனமாக இருந்தது. வல்ல நாயன் அல்லாஹ் அதற்க்கு நற்கூலி வழங்குவானாக ஆமீன்!

தூக்கம் பசியை பற்றி நமது மார்க்கத்தில் அதிகம் வலியுறுத்த பட்டுள்ளது. நாம் அதனை உன்னிப்போடு பின்பற்றினால் நோயில்லாத வாழ்க்கை வாழலாம்.

Cancer மிக கொடிய நோய் அல்ல ஆனால் அதற்கு Allopathy மருத்துவத்தினால் செய்யப்படக்கூடிய சிகிச்சை (chemotherapy, radiation, surgery etc) அந்த நோயாளியை விரைவில் துன்பப்படுத்தி கொன்று விடக்கூடியதாக இருக்கிறது.

இந்த Allopathy ல் கூட fasting நன்மைகள் பற்றி சிறிது கவனிக்கப்படுகிறது.

http://www.scientificamerican.com/article/fasting-might-boost-chemo/

எனவே பசி, தூக்கம் ஓரளவு பேணி நடந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

தூக்கம் உடலுக்கு சுகம் தரும் (வல்ல நாயன் அல்லாஹ் தனது திருமறையில் கூறுவது)

பசியை பற்றிய பயம் நமக்கு வேண்டாம் (அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகம் செய்தது).

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved