ஐக்கிய அரபு அமீரகத்தில் நாட்டில் 12.09.2016 அன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் பல்வேறு பள்ளிவாசல்களில் காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்
தேராவிலுள்ள ஈத்கா மைதானத்தில் 12.09.2016 காலை 06.15 மணியளயவில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினத்தின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் இஸ்மாஈல் உள்ளிட்ட காயலர்கள் உட்பட, ஆயிரக்கணக்கான பன்னாட்டு முஸ்லிம்கள் இத்தொழுகையில கலந்துகொண்டனர்.
![](/newsimg/199201664898.jpg)
![](/newsimg/199201664913.jpg)
![](/newsimg/199201664946.jpg)
![](/newsimg/199201665229.jpg)
![](/newsimg/199201665239.jpg)
![](/newsimg/199201665247.jpg)
![](/newsimg/199201665259.jpg)
தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். அவர்களுள் சிலர், இணைந்தமர்ந்து பெருநாள் உணவுண்டனர்.
![](/newsimg/199201664954.jpg)
![](/newsimg/199201664963.jpg)
![](/newsimg/199201664972.jpg)
![](/newsimg/199201664980.jpg)
வந்திருந்தோர் ஒருவருக்கொருவர் முகமன் கூறி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு, வெகு நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் கலைந்து சென்றனர்.
பின்பு அபூதபீ ஷேக் ஸாயித் மஸ்ஜித், Ferrari World ஆகிய முக்கிய இடங்களை, ரியாத் காயலர்களுடன் இணைந்து அமீரக காயலர்களும் பார்த்து ரசித்தனர்.
![](/newsimg/199201665002.jpg)
![](/newsimg/199201665013.jpg)
![](/newsimg/199201665032.jpg)
![](/newsimg/199201665042.jpg)
![](/newsimg/199201665050.jpg)
துபையிலிருந்து...
தகவல் & படங்கள்:
யஹ்யா முஹ்யித்தீன் & முஹம்மத் ஸிராஜுத்தீன் |